நம்ம ஓலப்பட்டி ஒண்டிப்புலி புதுசா ஒரு பிட்டுப் படத்த சொப்பன சுந்தரிய வெச்சு சுத்திச் சுத்தி ராவோடு ராவா எடுத்து முடிச்சிட்டாரு. அவருக்கு ஒரு தீராத ஆசை, பிரபல பதிவருங்கள்லாம் படத்தப் பாத்துப்புட்டு ஒரு நாலு வார்த்த நல்ல வார்த்த எழுதுனாங்கன்னா நல்ல பேரு வாங்கி படத்த ஓட்டிப்புடலாமேன்னு… ! உடனே நம்ம சி.பி. செந்தில்குமார் சார கூப்புட்டு விஷயத்தச் சொல்லி பதிவர்கள் அனைவரையும் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரு. பிட்டுப் படம் அதுவும், ஓசிலேன்னா கேக்கவா வேணும், எல்லோரும் லீவு போட்டுட்டுச் சோறு தண்ணி கூட சாப்புடாமக் கெளம்பிட்டாய்ங்க.
தியேட்டர் டேமேஜர் கவுண்டரு வாசல்ல நின்னு ஒவ்வொருத்தரா வரவேற்கிறாரு. வாங்க நாமும் போயி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!
மொத.. ஆளா (?) மங்குனி அமைச்சர் தான் வரார்.
கவுண்டர்: வாங்க சார்…வாங்க அது என்ன ஏதோ வயர இழுத்துக்கிட்டு வரீங்க?
மங்குனி அமைச்சர்: அது இன்டர்னெட் கனெக்சன், நேரா எங்க வீட்ல இருந்து வருது, ஏன்னா நான் டெய்லி 6 மணிக்கு பதிவு போடனும். இல்லேன்னா சூனியம் வெச்சிடுவாய்ங்க… !
கவுண்டர்: (ஏற்கனவே எழெட்டுத் தடவ வெச்ச மாதிரிதான் இருக்கு…!) ஆங்… இங்க கக்கூசுலாம் நல்லாத்தானுங்க இருக்கும், நீங்க 6 மணி என்ன 7 மணி வரைக்கும் கூட இருந்துட்டுப் போகலாம்…!
மங்குனி அமைச்சர்: அய்யா நான் சொன்னது ஆயி அல்ல, பதிவு…! பதிவு சார் பதிவு….! அதுக்கு இன்டர்னெட் கனெக்சன் வேணும், அதுக்குத்தான் இந்த வயர் கனெக்சன்…!
கவுண்டர்: என்ன கருமமோ.. என்ன கனெக்சனோ…. படம் முடியற வர யாருக்கும் ஒண்ணும் ஆகாம இருந்தா சரி…..!
மங்குனி அமைச்சர்: அப்போ இந்தப்படம் பார்ப்பது சரியா தவறான்னு இந்த பட்டன அமுக்கி உங்க கருத்த பதிவு பண்ணுங்க சார்…
கவுண்டர்: சார், மொத ஆளா வந்திருகீங்க, பேசாம அப்பிடியே உள்ள போயிடுங்க சார்… இல்லே அப்புறம் வெட்டுக்குத்தாகிப் போயிடும் சொல்லிட்டேன்….!
...................................
பட்டாபட்டி: சார் படம் எந்த மொழில எடுத்திருக்காங்க?
கவுண்டர்: ஒலகத்துலேயே ஒரு பிட்டுப்படம் எந்த மொழின்னு கேட்ட மொத ஆளு நீதான்யா…!
பட்டாபட்டி: அதுக்கில்ல சார், இத்தாலி இல்ல கொலம்பியா மொழி, ரெண்டுல மட்டும் தான் நான் படம் பார்ர்ப்பேன், அதுனால தான் கேட்டேன். நல்லா ரோசன பண்ணிச் சொல்லுங்க…ஹி..ஹி..!
கவுண்டர்: யோவ்.. போஸ்டர பாக்கலே? இது தமிழ்ப் படம்யா…
பட்டாபட்டி: அப்போ நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன்…. சரி ஹீரோ யாரு..? வந்ததுக்கு அதாவது தெரிஞ்சிட்டுப் போறேன்…ஹி..ஹி….!
கவுண்டர்: (கருமாந்திரம் புடிச்சவனுங்க, பிட்டுபடத்துல போயி ஹீரோ யாருன்னு கேக்குறானுங்க, சே… !) அது வந்து… ஹீரோ.. யாரோ புதுமுகம் சார்… பேரு…. ராகுல்….
பட்டாபட்டி: யோவ்… இத மொதல்ல சொல்லித்தொலைய வேண்டியதுதானே? என் தானைத்தலைவன் நடிச்சிருக்கான் அந்தப் படத்த நான் பாக்கலைன்னா எப்படிய்யா.. ? நான் இப்பவே உள்ள போறேன்…தானைத்தலைவன் ராகுல் வாழ்க, அன்னை சோனியா வாழ்க….!
கவுண்டர்: அடங்கப்பா சாமி….. நல்ல வேள ஹீரோ பேரு ராகுல்னு மாத்தி சொன்னேன்…. இப்போ உள்ள போயி ஹீரோ பேரு தொங்கபாலுன்னு தெரிஞ்ச உடனே என்ன பண்ணப் போறாரோ……?
...................................
சிரிப்பு போலீஸ்: சார், இந்தக்கேமராவப் புடிங்க… அப்பிடியே என்ன எடுங்க சார், கேட்டுல நிக்கிற மாதிரி, டிக்கட் வாங்குற மாதிரி, கக்கூஸ்ல போண்டா திங்கிற மாதிரி, கேன்டீன்ல ஆயி போற மாதிரின்னு வரிசையா எடுத்துத் தள்ளுங்க சார்…!
கவுண்டர்: ங்கொக்காமக்கா டேய்…போட்டோ எடுக்க இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா, இல்ல தாஜ்மகாலா? இது பிட்டுபடம் ஒடுற தியேட்டருய்யா.. இங்க வந்து போட்டோ புடிச்சு என்ன அயல் நாட்டுக்கு அனுப்பப் போறியா?
சிரிப்பு போலீஸ்: ஹலோ… உள்ள போடுற படத்த விட, வெளிய எடுக்குற இந்தப் படம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.. ஏன்னா இத வெச்சே… குறைஞ்சது 25 பதிவாவது போட்ருவேன்ல?
கவுண்டர்: அய்யோ ராமா, என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடவுலாம் கூட்டு சேக்குறே?.. டேய்… மரியாதையா உள்ள போயி கம்முன்னு படத்தப் பாரு.. மறுபடி இந்தக் கேமராவோட உன்ன எங்கேயாவது பாத்தேன்… படுவா கொள்ளிக்கட்டைய எடுத்து சொறிஞ்சு விட்ருவேன் ஆமா..!
.......................................
பனங்காட்டு நரி: சார் இந்த மந்திரப் புன்னகை பெசல் ப்ரிவியூ ஷோ இங்கதானே ஓடுது?
கவுண்டர்: அதெல்லாம் முடிஞ்சு அடுத்த ப்ரிவியூவும் போட்டாச்சு, என்ன ஒரு வாரமா ஜெயில்ல இருந்துட்டு வர்ரியா?
பனங்காட்டு நரி: அதுலாம் இல்ல சார். நான் அப்பவே கெளம்பிட்டேன், ஆனா இப்போதான் சார் தியேட்டர கண்டுபுடிச்சேன்…!
கவுண்டர்: சரி சரி வந்தது வந்த, இது பிட்டுப்படம்தான், சும்மா பாத்துட்டுப் போய்யா…!
பனங்காட்டு நரி: அடடா இந்தப் படத்த ஏற்கனவே (?) நான் பாத்துட்டேனே, சரி இருந்தாலும் இன்னொரு வாட்டி பாக்கிறேன். அப்புறம் இந்தச் சீட்ட வெச்சுக்குங்க, இதுல என் பேரு, அட்ரஸ் எழுதி வெச்சிருக்கேன். படம் முடிஞ்ச உடனே என்னக் கூப்பிட்டுக் கொடுங்க, இல்லேன்னா நான் யாரு எங்கே போகனும்னு மறந்திடுவேன்…!
கவுண்டர்: சரி சரி, இது தியேட்டர்னு மறக்க முன்னாடி உள்ள போயி உக்காரு!
....................................
கவுண்டர்: என்னய்யா உடம்பெல்லாம் காயம்.. ஹெவி டேமேஜா தெரியுதே?
கவுண்டர்: என்னய்யா உடம்பெல்லாம் காயம்.. ஹெவி டேமேஜா தெரியுதே?
டெர்ரரு பாண்டியன்: ஆமா சார், இப்போதான் ஒரு பதிவு போட்டுட்டு வர்ரேன், அதான் சுத்தி வளைச்சிப் பின்னிப் பெடலெடுத்துட்டானுங்க…
கவுண்டர்: அடப்பாவி, பாத்தா லாரில அடிபட்ட மாதிரியே இருக்கே, ஆமா…அப்பிடி என்னதான்யா எழுதுனே?
டெர்ரரு பாண்டியன்: அது புரிஞ்சா நானே அதச் சொல்லி அடில இருந்து தப்பிச்சிருக்க மாட்டேனா?
கவுண்டர்: ஓஹோ… மேட்டர் அப்பிடியா… புரியாமத்தான் அடிச்சிருக்கானுகளா, அது ஒண்ணுமில்ல தம்பி, ஒட்டகம் மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாம, அதான்.
டெர்ரரு பாண்டியன்: ஆமாண்ணே…
கவுண்டர்: நீ எழுதுனத, தஞ்சாவூர் கோயில் பக்கத்துல ஒரு கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டு நீயும் பக்கத்துலேயே நின்னுக்க, நமக்குப் பின்னாடி வர்ர சந்ததிகள் பாத்துப் படிச்சி என்ன ஏதுன்னு வெளங்கி நடந்துக்கட்டும்…!
.....................................
அருண்பிரசாத்: சார் படம் நல்லாருக்கும்ல? ஏன்னா இதுக்காக நான் மொரீசியஸ்ல இருந்து வந்திருக்கேன்.
அருண்பிரசாத்: சார் படம் நல்லாருக்கும்ல? ஏன்னா இதுக்காக நான் மொரீசியஸ்ல இருந்து வந்திருக்கேன்.
கவுண்டர்: ம்ம்ம்… ஓசில பிட்டுப் படம் போட்டா உகாண்டாவுல இருந்து கூட வருவீங்கடா…
ஆமா படம் நல்லா இல்லேன்னா என்ன பண்ணுவ?
அருண்பிரசாத்: ஏன் சார் இப்பிடி அபசகுனமா பேசுறிங்க? அப்புறம் அடுத்த புதிர் போட்டுடுவேன்….
கவுண்டர்: அப்போ படம் நல்லா இருந்தா?
அருண்பிரசாத்: அப்போவும் புதிர்தான்…!
கவுண்டர்: என்னது அதுக்கும் புதிரா, ஆள விடுரா சாமி…எனக்கு இன்னும் அந்த இன்னொரு வாழைப்பழத்துக்கே வெடை தெரியல… யம்மா……!
...................................
நாகராஜசோழன் எம். ஏ: என்றா மணியா, இங்க வந்து சும்மா ஜம்முன்னு கண்ணாடியப் போட்டுக்கிட்டு நின்னுட்ட? பிட்டுப்படம் ஓசில போடுறாங்கன்னதும் சோறுகூடத் திங்காம ஓடிவந்துட்டே பாத்தியா?
நாகராஜசோழன் எம். ஏ: என்றா மணியா, இங்க வந்து சும்மா ஜம்முன்னு கண்ணாடியப் போட்டுக்கிட்டு நின்னுட்ட? பிட்டுப்படம் ஓசில போடுறாங்கன்னதும் சோறுகூடத் திங்காம ஓடிவந்துட்டே பாத்தியா?
கவுண்டர்: யோவ் மாப்பு, உன் நக்கலுக்கு அளவே இல்லையா? நான் இங்கதான் மேனேஜரா இருக்கேன்னு உனக்குத் தெரியுமில்ல?
நாகராஜசோழன் எம்.ஏ.: சரி விடு மாம்சு, என்ன இங்க யாரையுமே காணோம்?
கவுண்டர்: ஏன்யா… எவ்வளவு பேரு உள்ள போயிக்கிட்டு இருக்காங்க, தெரியலியா..? உனக்கு என்ன கண்ணு கிண்ணு தெரியாமப் போச்சா?
நாகராஜசோழன் எம்.ஏ.: யோவ்… நான் கேட்டது ஜிங்லீஸ்… என்ன… யாருமே வரலியா?
கவுண்டர்: நீ என்ன தெரிஞ்சுதான் கேக்குறீயா? இது பிட்டுபடம்யா, அவங்கள்லாம் வரமாட்டாங்க…!
நாகராஜசோழன் எம்.ஏ.: அட என்னய்யா மாம்சு நீ… அவங்கள்லாம் வராத எடத்துக்கு என்ன எதுக்கு கூப்பிட்ட? என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீயே..? சரி நான் வேற நல்ல பசையான எடமா பாத்து போய்க்கிறேன்..!
கவுண்டர்: நீ இன்னும் இந்தப் பழக்கத்த விடலையா? இவன் இப்பிடியே காலத்துக்கும் தெள்ளவாரியாத்தான்யா இருப்பான்!
.....................................
அப்போ நம்ம கவிஞர் தினேஷ்குமார் வேக வேகமா கவுண்டர இடிச்சிட்டு உள்ள போறாரு….
அப்போ நம்ம கவிஞர் தினேஷ்குமார் வேக வேகமா கவுண்டர இடிச்சிட்டு உள்ள போறாரு….
கவுண்டர்: டேய்.. ஸ்டாப்…. ஒன் ஸ்டெப் பேக் மேன்…. என்ன அது கிளிங் கிளிங்னு சவுண்டு..?
தினேஷ்குமார்: ஒண்ணுமில்ல கவுண்டரே, அது சும்மா மனப்பிராந்தியா இருக்கும்..!
கவுண்டர்: பக்கத்துல வாய்யா, அது என்ன பிராந்தின்னு கண்டுபுடிக்கிறேன்…….. அடப்பாவி, என்னய்யா இது ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு ஸ்டாக் வெச்சிருக்கே…. என்ன ஏதாவது பிராந்திக்கடைய கொள்ளையடிச்சிட்டியா?
தினேஷ்குமார்: அதெல்லாம் ஒண்ணுமில்ல கவுண்டரே, வேணுங்கறத எடுத்துக்கிட்டு சீக்கிரம் ஆள விடுங்க, படம் போட்ர போறாங்க!
கவுண்டர்: ஓக்கே… யூ கோ….. உள்ள போயி பேசாம படத்தப் பாக்கனும், தண்ணி அடிச்சிட்டு தூங்கப்படாது… வெளிய வரும்போது படத்துல இருந்து கேள்வி கேப்பேன், என்ன தெரியுதா… ஓக்கே…?
......................................
இம்சை அரசன்: செங்கல் வெலையெல்லாம் ஏறிப்போச்சு… ம்ம் எப்படித்தான் இந்தத் தியேட்டர்லாம் கட்டுறாங்களோ…?
இம்சை அரசன்: செங்கல் வெலையெல்லாம் ஏறிப்போச்சு… ம்ம் எப்படித்தான் இந்தத் தியேட்டர்லாம் கட்டுறாங்களோ…?
கவுண்டர்: டேய்…. ஸ்டாப்…. என்ன இது.. தனியா பொலம்பிக்கிட்டு வர்ர?
இம்சை அரசன்: அதவிடுங்க சார், இந்தத் தியேட்டர் என்ன ரேட்டுன்னு சொல்ல முடியுமா?
கவுண்டர்: தெரிஞ்சு என்ன பண்ணப் போற? வாங்கி பாக்கெட்டுல வெச்சுக்கப் போறியா? படுவா ஓசில பிட்டுப் படம் பாக்க வந்துட்டு லொல்லப்பாரு…. எகத்தாளத்தப் பாரு… ! டிக்கட்டு என்ன ரேட்டுன்னு கேளு சொல்றேன்…?
இம்சை அரசன்: நீங்க எந்த டிக்கட்ட சொல்றீங்க?
கவுண்டர்: (ம்ம்ம், இன்னமும் இந்த வேல ஒண்ணுதான் பாக்கி இருந்துச்சு, விட்டா அதையும் பண்ண வெச்சிடுவானுங்க போல….!) .. கண்ணு… அந்த டிக்கட்டுலாம் நம்ம ஒடம்புக்குத் தாங்காது ராஜா… மெள்ளமா… அப்பிடியே உள்ள போயி உக்காருமா…!
கவுண்டர்: படமே பாக்கலே அதுக்குள்ள என்ன?
வெறும்பய: சும்மா பாடக்கூடதா?
கவுண்டர்: ஏன் இதோ இந்த தடியனத் தூக்கித் தலைல வெச்சிக்கிட்டு பாடுறது?
வெறும்பய: ஹி..ஹி.. அப்புறம்…. இந்தத் தியேட்டர் பேரு…என்ன?
கவுண்டர்: படுவா…..பிட்டுப் படம் ஓசில காட்டுறாங்கன்னா, தியேட்டரு பேரு கூட தெரிஞ்சுக்காம வந்துடுறீங்கடா…? இந்தத்தியேட்டர் பேரு, பறங்கிமலை ஜோதி…..!
வெறும்பய: நோ…… இந்தப் பேரு எனக்குப் புடிக்கல, நான் இந்தப் படம் பாக்கமாட்டேன்..
கவுண்டர்: புடிக்கலைனா போ…. அடங்கொன்னியா…… கொழுப்பப் பாத்தியா… படம் பாக்கமாட்டேன்னுட்டு நைஸா உள்ளே போறத….. வெளிய வரட்டும் பேசிக்கிறேன்…!
.......................................
(அப்போ மங்கி கேப் போட்டுட்டு ஒருத்தர் வரார்)
(அப்போ மங்கி கேப் போட்டுட்டு ஒருத்தர் வரார்)
கவுண்டர்: எச்சூஸ் மி, ப்ளீஸ் ரிமூவ் தி கேப்…..!
சௌந்தர்: இல்லே சார், எனக்கு ஏசின்னா ஒத்துக்காது அதான்… ஹி..ஹி… இருந்தாலும் உங்களுக்காகக் கழட்டுறேன்
கவுண்டர்: என்னது கழட்டுனாலும் அப்பிடியேதான் இருக்கு? கருமம்… இதுக்கு நீ கழட்டாமயே இருந்திருக்கலாம்…!
சௌந்தர்: ஹி..ஹி… சரி, இந்தப்படம் என்ன கான்செப்ட்ல எடுத்திருக்காங்க? சொல்லுங்க, தெரிஞ்சுக்காம நான் படம் பாக்கமாட்டேன்
கவுண்டர்: இந்தக் கான்செப்ட்டு… கத்திரிக்காவுலாம் எனக்குத்தெரியாது, இது பிட்டுப்படம் அவ்வளவுதான்.
சௌந்தர்: அப்படின்னா லிவிங் டுகெதெர வெச்சுதானே எடுத்திருப்பாங்க?
கவுண்டர்: சார், தயாரிப்பாளருக்கு ஏதோ கெட்ட நேரம், படம் எடுக்கனும்னு இப்பிடி வந்து மாட்டிக்கிட்டாரு. பாவம்..சார், விட்ருங்க, ஏதோ அப்பிடி இப்பிடி கொஞ்சம் நஞ்சம் கெடைக்கறதையும் கெடுத்துடாதீங்க சார்…!
சௌந்தர்: இது சரிப்பட்டு வராது, உங்களுக்கும் ஒரு கலாச்சார விருது கொடுத்தாத்தான்யா வழிக்கு வருவீங்க, இங்கேயே இருங்க, படத்தப் பாத்துட்டு வந்து அதப் பத்தி பேசுறேன்!
கவுண்டர்: என்னது பிட்டுப்படத்துக்குக் கலாச்சார விருதா? வெளங்கிரும்……. ரொம்ப நல்லா டெவலப் ஆகியிருக்கீங்கப்பா….!
கவுண்டர்: இல்ல பிட்டுபடம்
செல்வா: அப்போ பிட்டுப்படத்துல மொக்கையே இருக்காதா?
கவுண்டர்: டேய்.. வேணாம்.. பேசாம உள்ள போயிரு….!
செல்வா: உள்ள போனா மொக்கை வருமா?
கவுண்டர்: இப்போ என் கைதான் வரும், உன் கன்னத்துக்கு…! படுவா… முளைச்சு மூனு எல விடல அதுக்குள்ள பிட்டுப் படத்துக்கு வந்துட்டு பேச்சப் பாரு.. பிச்சிபுடுவேன் பிச்சி… மொதல்ல உன் வயசு என்ன? பர்த் சர்ட்டிபிகேட் எடு.. இல்லேன்னா உள்ள விடமாட்டேன்……
செல்வா: என்னண்ணே இதுக்குப் போயி கோவிச்சிக்கிட்டு.. ஹி… ஹி…. இது நல்ல பிட்டுப்படம், நீங்க ஒரு நல்லவரு….. வல்லவரு….. நாலும் தெரிஞ்சவரு… சரியாண்ணே?
கவுண்டர்: ம்ம்… இப்பிடி நல்லவிதமா நாலு வார்த்த பேசிப் பழகுற வழியப்பாரு…..! சரி போ உள்ள ….!
கவுண்டர்: இன்னும் படமே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன மகிழ்ச்சி?
எஸ். கே.: இல்ல தியேட்டருக்கு வந்ததே மகிழ்ச்சிதான்.. சூப்பர்
கவுண்டர்: என்ன சூப்பர்? போஸ்டர சொல்றிங்களா?
எஸ்.கே.: இல்ல பொதுவாச் சொன்னேன், ஆள விடுங்க சார்… படம் போட்டுடப் போறாங்க நான் உள்ள போகனும்!
........................................
கவுண்டர்: யோவ் யாருய்யா நீய்யி… இந்தப் படத்து ஹீரோ(!) மாதிரியே இருக்கே?
மாதவன்: ஹி..ஹி.. நான் ஆளு பாக்கத்தான் ஹீரோ மாதிரி இருப்பேன், ஆனா பேரு வேற..!
மாதவன்: ஹி..ஹி.. நான் ஆளு பாக்கத்தான் ஹீரோ மாதிரி இருப்பேன், ஆனா பேரு வேற..!
கவுண்டர்: இப்போ நான் உன் பேரக் கேக்கவே இல்லியே?
மாதவன்: நானும் சொல்லவே இல்லியே?
கவுண்டர்: சரி சரி, போய்யா போ.. சீக்கிரம் உள்ள போ… அப்புறம் நீதான் இந்தப் படத்து ஹீரோன்னு எவனாவது கலாச்சார ஆளுக வந்து மூஞ்சில தார் அப்பிட போறாய்ங்க!
.....................................
ப்ரியமுடன் வசந்த்: இறகுகள், சிறகுகள், வானம், மானம்… கானம்…பானம்
ப்ரியமுடன் வசந்த்: இறகுகள், சிறகுகள், வானம், மானம்… கானம்…பானம்
கவுண்டர்: பார்ட்டி ஏதோ ஏரியா மாறி வந்துட்ட மாதிரி தெரியுதே? ஹல்லோ எச்சூஸ் மி, உங்களுக்கு என்ன வேணும்?
ப்ரியமுடன் வசந்த்: பதிவர்களுக்கு ஸ்பெசல் ஷோ போடுறாங்களே அது இங்க தானே?
கவுண்டர்: (பார்ட்டி வெவரமாத்தான் இருக்கு….) ஆமா இங்கதான், இது பிட்டுப் படம் தெரியுமில்ல?
ப்ரியமுடன் வசந்த்: தெரியும் தெரியும், எங்க இளையதளபதி விஜய்யே அசிங்கப்பட்டுடாரு.. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நாங்களும் நல்லவன் மாதிரியே நடிக்கிறது? சரி சரி, இந்தத் தியேட்டர்ல மன்த்லி டிக்கட் கெடைக்குமா?
கவுண்டர்: நீங்க கேட்டா மன்த்லி என்ன, இயர்லியே கெடைக்கும் தம்பி, உங்கள மாதிரி ஆளுகள நம்பித்தானே இந்த மாதிரி தியேட்டரே நடத்துறோம்… மொதல்ல படத்த பாத்துட்டு வாங்க, அப்புறம் உக்காந்து இதப் பத்தி டீட்டெயிலா பேசுவோம்!
......................................
தேவா: #%$^%^ &^*((*(* &#$%#
கவுண்டர்: சார் என்ன கேட்டீங்க?
தேவா: @#$%$% ^ %&&@ # %$%^$
கவுண்டர்: (அய்யய்யோ என்னது இது, இதுவரைக்கும் கேள்விப்படாத மொழியா இருக்கு?)
நல்லவேள… ஆளு அவரே…உள்ள போயிட்டாரு….!
......................................
கவுண்டர்: யோவ் வாட்ச்மேன்… என்னய்யா அது.. கன்டெயினர் லாரிலாம் உள்ள வருது?
கவுண்டர்: யோவ் வாட்ச்மேன்… என்னய்யா அது.. கன்டெயினர் லாரிலாம் உள்ள வருது?
வாட்ச்மேன்: யரோ உண்மைத்தமிழன்னு பதிவராம் அவருதுதாங்க அந்தக் கன்டெயினரு. அது புல்லா வெள்ளைப் பேப்பருங்களாம். இதே மாதிரி இன்னொரு கன்டெயினரும் வருதாம், அது புல்லா பேனாவாம்… சார்!
கவுண்டர்: ஆல் ப்ரோகிராம் கேன்சல்…. மேட்டர் ஓவர்! (அப்படியே மயங்கி விழுகிறார்!)
பி.கு.: ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரடியாகச் சென்று பார்த்து விமர்சனம் எழுதிவிட்டதால், நம்ம சி.பி. செந்தில்குமார் அவர்கள் இந்த பிட்டுப் பட ஸ்பெசல் ஷோவுக்கு வரவில்லை… !
!