Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, October 28, 2016

பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்

பைரவா... யார்ரா அவன்...?


அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உப்புமா என்று எழுதி வைத்தால் அதன் கீழே பைரவா என்று யாரோ கிறுக்கி விட்டு ஓடிவிடுகிறார்கள். ஒவ்வொரு ஹோட்டலிலும் இது நடக்கிறது ஹோட்டல் ஓனர்கள் கொதிப்படைந்து அதை கண்டுபிடிக்க அடியாள்களை வைக்கின்றனர். ஆனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஊரே கூடி நின்று அதை பற்றி பேசுகின்றனர். அப்போது ஹோட்டல்கள் கூட்ட தலைவன் அது யார் என்று யாராவது தானா வந்து ஒத்துக்கொள்ளாவிட்டால் ஊரில் உள்ள எல்லா ஹோட்டல்களையும் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றான். ஊர் தலைவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அப்போது அண்ணா வந்து அது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறார். அது ஏன் அப்படி எழுதினார் என்று எல்லாரும் கேக்கும் போது அவரது நண்பனின் தம்பி ரவா உப்புமா கேட்டு கெஞ்சியதாகவும், அது கிடைக்காமல் அதற்கு பதிலாக ரவா தோசை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் அவன் அந்த ரவா உப்புமா ஏக்கத்திலேயே செத்துப்போய் விட்டதாகவும் அதிலிருந்து எல்லா ஹோட்டல்களிலும் ரவா உப்புமா மட்டுமே செய்ய வேண்டும் என்றே அப்படி எழுதி போட்டதாக கண்ணீர்மல்க சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் நெகிழ்கின்றனர். இனி ஹோட்டல்களில் ரவா உப்புமா மட்டுமே சமைப்போம் என்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் சபதம் எடுக்கின்றனர். அன்றில் இருந்து அண்ணாவை பைரவா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் அமைதியாக ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு லாரி ஓனர், அண்ணாவின் ஃப்ளாஷ்பேக்கில் மிகவும் நெகிழ்ந்து போய் அண்ணாவை தனது லாரி கிளீனராக நியமனம் செய்து தனது லாரியை கண்ணீர் மல்க ஒப்படைக்கிறார் . அண்ணாவும் சந்தோசமாக வரலாம் வா வரலாம் வா என்றூ பாடிக்கொண்டே வேலை செய்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஆட்டோக்காரன் பாடலை ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுத பூஜையன்று போடுவதைப் போல இனி இந்தியா முழுதும் லாரி ஸ்டேண்டுகளில் இந்த பாட்டுதான் ஒலிக்கப்போகிறது.

க்ளீனராக இருக்கும் அண்ணா படிப்படியாக முன்னேறி லாரி ஓட்டுனராக பதவியேற்கிறார். லாரி ஸ்டேண்டு முழுதும் அண்ணாவை தலைவராக கொண்டாடுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் சென்னைக்கு சரக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை வருகிறது. கொண்டு செல்லும் வழியில் ஒரு ரவுடி கேங் சரக்கைக் கைப்பற்ற முயல்கிறது, ஆக்ரோசமாக சண்டை போட்டு சரக்கை மீட்டுக் கொண்டு சென்னை விரைகிறார். சென்னை சென்றதும்தான் தெரிகிறது லாரியில் இருக்கும் சரக்கு ஒரு சர்வதேச போதை கும்பல் கைக்கு செல்ல இருக்கிறது என்று. அண்ணா சரக்கை அவர்களிடம் ஒப்படைக்காமல் லாரியோடு தலைமறைவாகிறார். போதை கும்பல் தலைவனிடம் தெரிஞ்ச எதிரியவிட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகம் இருக்கனும் என்று சவால் விடுகிறார்.



இதற்கிடையில் எதிர் கேங் அண்ணாவிடம் சரக்கு இருப்பதை அறிந்து பேரம் பேச வருகிறது. அண்ணா அவர்களை சண்டை போட்டு விரட்டி விடுகிறார். கோபமடையும் அந்த கும்பல் அண்ணாவை போலீசிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறது. அதை அறிந்த அண்ணா  கன்னத்தில் மறு வைத்து, தாடையில் தாடி வைத்து, தலையில் விக் வைத்து மாறுவேடத்தில் தண்ணீர் லாரி ஓட்ட ஆரம்பிக்கிறார். வழியில் கீர்த்தி சுரேஷுக்கு லிஃப்ட் கொடுத்து, அண்ணா லாரி ஓட்டும் அழகை பார்த்து கீர்த்திக்கு காதல் வந்து என்று தனியே ஒரு ரொமாண்ட்டிக் ட்ராக்கும் அழகாக வந்து போகிறது. போலீசையும், ரவுடி கேங்கையும், போதை கும்பலையும் சமாளித்து இறுதியில் கீர்த்தியை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதையில் வெள்ளித்திரையில் காண்க......




Friday, October 14, 2016

ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....




ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்போம்... 

இதுவர வந்த நிச்சயமான பொண்ண காதலிச்சு மனச மாத்துற படங்கள்ல அந்த மாப்பிள்ளைய கெட்டவனாக காட்டி, அது நியாயம்னு அழகா எடுத்து சொல்லி இருப்பாங்க... அதே மாதிரி ரெமோவுலயும் அந்த மாப்ள ஏற்கனவே ஓரு பொண்ண கழட்டிவிட்டுட்டு வர்ரதாதான் சொல்றாங்க... அதுவும் இல்லாம அவனை பாத்தா நமக்கே புடிக்கல... ஒரு புடவை விஷயத்துலயே அந்த பொண்ணு மனச நோகடிச்சிருக்கானே... அவனை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு நிம்மதியா வாழுமா...  க்ளைமேக்ஸ்ல கூட கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறான் அந்த மாப்ள. ஹீரோயினை காதலிச்சது மூலமா அவளுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கார் ஹீரோ. சோ படத்தை பத்தின நெகடிவ் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. 

படத்துல ஏகப்பட்ட லாஜீக் மீறல்கள் இருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. படத்துல நடிக்க சான்ஸ் கேக்கிறதுக்காக பொம்பள வேஷம் போடுறாரு சிகா. மொதோநாளு ஒரு வெள்ளக்கார தொர வந்து பொம்பள மேக்கப் போட்டுவிட்டாப்புல..... ஆனா அடுத்த நாளும் பொம்பள வேஷத்துல ஹீரோயின பாக்க போறாரு.... அப்போ யாருய்யா போட்டுவிட்டது.... சினிமா ஷூட்டிங்ல டெய்லி மேக்கப் போட காசு குடுத்து ஆள் வெச்சிருக்கானுங்களே அவனுங்க எல்லாம் கேனையனுங்களா...... அதுவும் தனக்குத்தானே மேக்கப் எப்படி அந்தளவுக்கு போட முடியும்? இதாவது பரவால்ல..  பர்த்டே விஷ் பண்ணும் போதும், க்ளைமேக்ஸ் ஃபைட் சீன்லயும் 10 செகண்டுல பொம்பள வேஷத்துல இருந்து ஆம்பளையா மாறுறாரு... அது எப்படி சாத்தியம்..... சும்மா வெறும் தண்ணில மூஞ்சிய கழுவவே 30 செகண்டாவது ஆகுமே? 

அப்புறம் நர்ஸ்னா டாக்டர் பின்னாடி போறதுதான் வேலையா... ஊசி போடாம எத்தன நாள்யா சமாளிக்க முடியும்..... டெம்பரேச்சர் பாக்கனும், பல்ஸ் பாக்கனும், பிரெசர் செக் பண்ணனும், கட்டுப்போடனும்..... இதுல நர்சிங் சூபர்வைசருக்கே சந்தேகம் வருது.... கூடவே இருக்க டாக்டர் ஹீரோயினுக்கு சந்தேகம் வராதா...? அந்த நர்சிங் சூபர்வைசர் ரெமோ நர்ஸ்தானானு செக் வேற பண்ணுது, அதான் அப்பவே சொதப்புறான்ல, அதுக்கப்புறம் அத என்னன்னு பாக்கவே மாட்டாங்களா.... படத்துல லாஜிக் மீறல் இருக்கலாம்.... ஆனா படமே லாஜீக் மீறலா இருந்தா எப்படி...? 

இது காமெடிப்படம்னு பரவலா எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆனா படத்துல ஒரு காமெடி சீன் கூட இல்ல..... தியேட்டர்ல கூட யாரும் சிரிக்கிற சத்தம் கேக்கல..... பட் க்ளைமேக்ஸ்ல காவியா நோவியான்னு ஒரு சாங் வருது.... அது படத்துல பாத்தீங்கன்னா சிரிப்புக்கு 100% கேரண்டி. காமெடி சீன் இல்லாத குறைய இந்த பாட்டுதுதான் போக்குது, தேங்ஸ் அனிருத். 


அம்மாவ வர்ர சரண்யா..... பாவம்... சிகா பண்ற ப்ராடு வேலைய பாத்து திட்டுறவங்க, கீர்த்தி சுரேஷ் அழக(?) பாத்ததும் அப்படியே சேஞ்ச் ஆகிடுறாங்களாம்... என்ன பிராடுத்தனம் பண்ணாலும் பரவால்ல, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க....  தியேட்டர்ல படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்....  சதீஷ் காமெடியனா வர்ராராம்... பட் படத்துல காமெடி சீனே இல்லாம எதுக்கு காமெடியனை போட்டிருக்காங்கன்னு புரியல... அவராவது பரவால்ல. மொட்டை ராஜேந்திரனும் கூடவே வர்ரார். அது அவருக்கே ஏன்னு புரிஞ்சிருக்காது. சோ அதை கேள்வி கேட்பது நியாயம் இல்லை. 

கல்யாணம் நிச்சயமான பொண்ண மனசை கெடுத்து காதலிக்கிறத புல்டைம் ஜாபா வெச்சிருக்கார் சிகான்னு கலாச்சார காவலர்கள் பலரும் இணையத்துல குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வெச்சிருக்கேன்... படத்துல ஹீரோயின் நிச்சயார்த்த மோதிரத்த கழட்டுற சீன்ல நச்னு வீணை மியூசிக் போட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாத்தையும் தனியாளா தூக்கி நிறுத்தி இருக்கார் நம்ம அனிருத்...  நம் கலாச்சார காவலர்கள் என்னதான் படத்தை திட்டினாலும் அட்லீஸ்ட் அனிருத்தையாவது பாராட்டி இருக்கனும்... 

ஹீரோயினை பத்தி எதுவுமே சொல்லலியான்னு கேக்குறீங்க அதானே..... படத்துல வர்ர யதார்த்தமான ஒரே கேரக்டர் அதுதான். ஹீரோயின் கேரக்டர் டாக்டராவே இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணத்தை மீறாம லூசுத்தனமாதான் காட்டி இருக்காங்க. அதுக்காக அவங்க கேரக்டரை டைரக்டர் பாத்து பாத்து செதுக்கி இருக்கார் போல. டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி கேனையா இருக்கேன்னு படத்துல ஒரு இடத்துல கூட நமக்கு தோனவே இல்ல... அதுவே இந்த கேரக்டரின் வெற்றி.... 

படத்துல இத்தனை லாஜிக்மீறல்கள், கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் கிளைமேக்ஸ்ல ஹீரோ, வில்லன்கூட நேருக்கு நேர் கையால சண்டை போட்டு ஜெயிப்பதை பார்ப்பது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..... கமர்சியல் சினிமாவுல கூட இப்படி வெகு யதார்த்தமான சீன் வைப்பது தமிழ்சினிமாவில் மட்டுமே சாத்தியம்....... 

மொத்தத்தில் ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு...!



(படம் பார்த்துட்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களா போட்டத ஒருங்கிணைத்து பட்டி டிங்கரிங் பண்ணி விமர்சனமா மாத்தி இருக்கேன்.... ஹி....ஹி..... )

Friday, September 19, 2014

கத்தி: கதை(?) விமர்சனம்...!




கதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட  ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்....! கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.

ஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும் ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.

கூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,

அதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா? காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்னு.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்...  டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.

வில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார்.  வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை...!  எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.

டாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்!

Thursday, September 18, 2014

ஐ (ai): திரை விமர்சனம்...!


தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவில் கூட இப்படி ஒரு கதையுடன் இதுவரை எந்தப்படமும் வந்திருக்காது. அப்படிப்பட்ட கதை, திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது ஐ படம். கதைக்காகவே பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்க இருக்கிறது இப்படம்.

விக்ரம் கிராமத்தில் மாட்டுவண்டி வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஹீரோயின் எமி ஜாக்சன் சுற்றுலாவிற்காக வந்தவர் மாட்டுவண்டியில் சவாரி செய்கிறார். அவரைப்பார்த்த விக்ரம் காதல்வயப்பட்டு அங்கேயே காதலைச் சொல்கிறார். கோபமடைந்த எமி அர்னால்டின் போட்டோவை காட்டி இந்த மாதிரி ஒருத்தனைத்தான் லவ் பண்ணுவேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைகிறார் விக்ரம். அர்னால்டின் போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு பயங்கரமாக எக்சர்சைஸ் செய்கிறார், ஒன்றும் முன்னேற்றமில்லை. ஏதாவது லேகியம் சாப்பிட்டு பார் என்று நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அவர்களை நம்பி சேலத்துக்கு செல்கிறார் விக்ரம். அங்கே வைத்தியரிடம் கிலோக் கணக்கில் லேகியம் வாங்கி வந்து உடல் முழுதும் பூசிக் கொண்டு படுக்கிறார். காலையில் பார்த்தால் அவரையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பனிக்கரடி போன்ற தோற்றத்தில் பயங்கரமாக உருவம் மாறி இருக்கிறது.  காட்சியைப் பார்க்கும் நமக்கு இது என்ன சினிமாதானா என்ற பிரமிப்பு எழுகிறது. அவரைப் பார்த்த எல்லாரும் பயந்து ஓடுகிறார்கள். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். லேகீயத்தில் தான் ஏதோ கோளாறு என்று வைத்தியரை பார்க்கச் செல்கிறார். வைத்தியரை கட்டி வைத்து அடித்து மிரட்டியதில் அவர் வில்லன்கள் வந்து மிரட்டி லேகீயத்தை மாற்றி கொடுக்க சொன்னதை சொல்லி விடுகிறார்.

விக்ரம் ஆவேசத்துடன் வில்லன்களை தேட தொடங்குகிறார். ஆனால் பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை வில்லனை நெருங்கும் போதும் அரசியல்வாதிகள் வந்து லஞ்சம் கேட்டுக்  குறுக்கிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்களை எல்லாம் கடித்து வைக்கிறார் விக்ரம். லஞ்சம் ஒழிந்து ஊரே செழிக்கிறது, அனைவரும் பாராட்டுகிறார்கள். இப்படியே போய் கொண்டிருக்கையில் ஒருநாள் டீவில் எமியின் பேட்டியை பார்த்துவிட்டு கண்கலங்குகிறார். பனிக்கரடி உருவத்துடன் விக்ரம் காதல் சோகத்தில் கண்கலங்குவது அருமை. அப்படியே கனவில் பாடல் காட்சி வருவது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 2000 பனிக்கரடிகள் சூழ விக்ரம் எமியுடன் ஆடிப்பாடுகிறார். அண்டார்டிக்காவில் போய் ஐஸ் மலை செட் போட்டு எடுத்தார்களாம். ஒவ்வொரு ஐஸ்கட்டியும் ஒரு கலரில் மின்னுகிறது, எப்படி பெயிண்ட் அடித்தார்களோ தெரியவில்லை. டிக்கட்டிற்கு கொடுத்த காசு இதற்கே போதும். பாடல் முடிந்ததும் வில்லன்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகள் வழக்கம் போல பதற வைத்தாலும் ஹீரோவே ஜெயிப்பது வெகு யதார்த்தம்!

சண்டையில் மற்றவர்கள் தப்ப, ஒரே ஒரு வில்லன் மாட்டிக் கொள்கிறான். அவனும் வைத்தியர் கொடுத்தது லேகியம் இல்லை, பனிக்கரடி ஆயி என்று சொல்லிவிட்டு செத்துப்போகிறான். அதிர்ச்சியடைந்த விக்ரம், அதை சரி செய்வது எப்படி என்று குழம்புகிறார். துரத்திச் சென்று அடுத்த வில்லனை பிடிக்கிறார். அவன் இன்னொரு முறை பனிக்கரடி ஆயியை தடவினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செத்து விடுகிறான்.  பனிக்கரடி ஆயி வாங்க ஸ்காட்லாந்திற்கு கடலில் நீந்தியபடியே செல்கிறார் விக்ரம். பிரம்மாண்ட கப்பல்களை அவர் நீந்தியபடி கடந்துசெல்வது இதுவரை சினிமாவில் பார்த்தே இராத சீன். எப்படி செட் போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கு சென்று ஆய் வாங்கி தடவி, காலையில் பார்த்தால் முகமெல்லாம் கட்டிவந்த மனிதனாகி இருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன விக்ரம், வில்லன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று புரிந்து கொள்கிறார். எமி அந்த ஊரில் இருப்பதை தெரிந்து கொண்டு அதே தோற்றத்தோடு பார்க்கச் செல்கிறார். அங்கே எமியை வில்லன்கள் கட்டிவைத்து இருக்கிறார்கள். சண்டையிட்டு மீட்கிறார் விக்ரம். அவரைப் பார்த்து எமி யார் நீ என்று கேட்கிறார், அதைக் கண்டு மனசுடைந்த விக்ரம், தப்பி ஓடிய வில்லன்களை துரத்தி பிடித்து அடித்து உதைத்து தனக்கு மாற்றுமருந்து என்ன என்று கேட்கிறார். அப்போது அந்த வில்லன் நான் சொன்னால் நீ கேட்கமாட்டியே என்று திரும்ப திரும்ப மறுப்பது பரபரப்பைக் கூட்டுகிறது. கடைசியில் நல்ல அழகான வாலிபனின் ஆயியை எடுத்து பூசிக் கொண்டால் பழைய உருவத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டு அவனும் செத்துப் போகிறான். அடுத்து விக்ரம் என்ன செய்ய போகிறார் என்று ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறார்கள்.

ஊருக்கு வந்த விக்ரம் வில்லன் சொன்னபடி செய்கிறார். எதுவும் ஆகவில்லை. அதிர்ந்து போய் மறுபடியும் மறுபடியும் செய்து பார்க்கிறார் ஒன்றும் ஆகவில்லை. நமக்கோ பரபரப்பு உச்ச கட்டத்தை அடைகிறது. வில்லன் கும்பலின் தலைவன் அந்த ஊர் சந்தைக்கு வந்திருப்பதை பார்த்து அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து அடிக்கிறார் விக்ரம். இவ்வளவு நாளும் விக்ரமுக்கு  ஏற்பட்டது நிஜமான மாற்றம் அல்ல. அது வெறும் மேக்கப்தான் என்றும், இரவு நேரத்தில் தூங்கியவுடன் வந்து வில்லன் ஆட்கள் ரகசியமாக விக்ரமுக்கு அவருக்கே தெரியாமல் மேக்கப் போட்டு விட்டு போய்விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி விட்டு செத்துப் போகிறான் அந்த வில்லன் கும்பல் தலைவன். சஸ்பென்ஸ் உடைந்ததும் தியேட்டரே ஆடிப்போகிறது. அடுத்த காட்சியில் விக்ரம் குளியறைக்குள் சென்று மேக்கப்பை களைத்து விட்டு ஸ்மார்ட்டாக கம்பீரமாக வெளியே வருவதை பார்த்து தியேட்டர் முழுதும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..... எமி வெளியே விக்ரமுக்காக காத்திருக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வந்தும் படபடப்பு குறையவே இல்லை, பலநூறு படங்களை ஒரே நேரத்தில் பார்த்த எஃபக்ட்.......

ஸ்பெசல் எஃபக்ட்ஸ், சஸ்பென்ஸ் கதை, விக்ரம் நடிப்பு, ரஹ்மான் இசை, எமியின் அழகு..... இப்படி எல்லாத்துக்கும் ஒவ்வொரு வாட்டி படம் பார்க்கலாம்......!

ஆய்னு டைட்டில் வெச்சா கண்டுபுடிச்சிடுவாங்கன்னு ஐன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.... நாங்க சும்மா விடுவமா..... இங்கிலீஸ் டைட்டில் என்னான்னு செக் பண்ணி உண்மைய கண்டுபிடிச்சிட்டோம்ல....... ங்கொய்யால நாங்கள்லாம் யாரு.............!

Friday, July 11, 2014

ஜில்லா: ஒரு பின்தங்கிய விமர்சனம்...!



ஓப்பனிங் சீன்ல மோகன்லால் வந்து சண்டை போடும் போதே தெரிஞ்சுடுது படம் எப்படின்னு. ஒரு மாசு பத்தாதுன்னு ரெண்டு மாசு காட்டி இருக்காங்க. சின்ன வயசுல அப்பனை கொன்னவனை பாத்து வெறியாகி அவனை பழிவாங்குற கதைதான், என்ன அது கொஞ்சம் வித்தியாசமா இந்த படத்துல வில்லன் சைடுல வருது. ஹீரோ & அல்லக்கைஸ் எல்லாரும் அந்த வில்லன் அப்படி பழிவாங்கிடாம தடுக்கிறாங்க. வழக்கம் போல ஒரு பெரிய தாதா. வழக்கம் போல அவருக்கு ஒரு விசுவாசமான அல்லக்கை. ஒரு சண்டைல உயிரை தியாகம் பண்ணிடுறார். தாதாவும் அந்த அல்லக்கையோட புள்ளைய தன் புள்ளையா நெனச்சு வளர்க்கிறார். அவர் தான் ஹீரோ. அவருக்கு கல்லால குறிபாத்து அடிக்கிற கலை(?) யை சின்ன வயசுல இருந்தே கத்துக் கொடுத்துடுறாங்க. அத வெச்சே அவரு பெரிய ரவுடியா ஃபார்ம் ஆகி தாதா மோகன்லாலோட ஆல் இன் ஆல் ஆக இருக்காரு. 




ரவுடி கும்பல் வந்து ஆஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றானுங்கன்னு போலீஸ்,கீலீஸ்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு கடைசியா மோகன்லால்கிட்ட வந்து கெஞ்சுறாங்க. அவரும் ஃபர்ஸ்ட் 50 பேரை அனுப்பி அடிவாங்கிட்டு, அப்புறம் டாகுடரை அனுப்பி வெக்கிறார். எதிர்பார்த்த மாதிரியே டாகுடர் போய் எல்லாரையும் அடிச்சு தொம்சம் பண்ணி வெரட்டி விடுறார். என்ன ஃபைட்டுல ஆஸ்பிட்டலுக்குதான் சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தியாகிடுது. சரி விடுங்க அது தயாரிப்பாளர் பிரச்சனை. எப்படியோ ஒரு வழியா ஓப்பனிங் சீன் சடங்க முடிச்சு கதைய(?) ஸ்டார்ட் பண்றாங்க. 




கதைல ஹீரோன்னு இருந்தா ஹீரோயினும் இருக்கனும்,. ஹீரோயின் இருந்தா காதலும் இருக்கனும் இல்லியா? அதுக்காகவே பலமாசம் உக்காந்து யோசிச்சு ஒரு சூப்பர் சீன் வெச்சிருக்காங்க. அதாவது லஞ்சம் வாங்குற பொம்பளை போலீசை ஹீரோயின் காஜல் வந்து கன்னத்துல அறையிறாங்க. பாத்த உடனே ஹீரோவுக்கு காதல் வந்துடுது. சாதா காதல்னா ஹீரோயின் பின்னாடியே போய் ஈவ் டீசிங் பண்ணி ஹீரோயின் மனசை மாத்தி காதலிப்பாங்க. இது தாதா காதலாச்சே, அதான் ஸ்ட்ரைட்டா ஹீரோயின் வீட்டுக்கே போய் பொண்ணு கேக்குறாங்க. ஹீரோயினோட அப்பாவும் பெரிய எடம் வந்திருக்குன்னு பவ்யமா பொண்ணை கூப்புடுறார். பொண்ணு போலீசாம். காக்கி யூனிபார்ம்ல வந்து நிக்குது. நம்ம ஹீரோவுக்குத்தான் காக்கி யூனிபார்ம்னாலே அலர்ஜி ஆச்சே, தெறிச்சு ஓடுறார். அனேகமா காமெடி சீனா ட்ரை பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நல்லா வந்திருக்கு.




ஹீரோவ போலீசாக்கனும்னு ஆசை டைரக்டருக்கு. அதுக்காகவே செம ட்விஸ்ட்டு ஒண்ணு வெச்சிருக்கார். மதுரைக்கு புது போலீஸ் கமிசனர் வர்ரார். வந்தவர் நேரா மோகன்லால்கிட்ட வந்து அரஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போய் தனியா ஆள் இல்லாத ஏரியாவுல வெச்சி ரவுடிய விட போலீஸ்தான் பெருசுனு பஞ்ச் பேசி அங்கேயே ஒத்தையா விட்டுட்டு வந்துடுறார். அத வெச்சி ரவுடிய விட போலீஸ்தான் பெருசுன்னு மோகன்லாலுக்கு புரியுது. கமிசனரை பழிவாங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு ஹீரோவை போலீசாக்கிடலாம்னு முடிவு பண்ணிடுறார். நம்ம ஹீரோவும் ஆரம்பத்துல பிகு பண்ணிட்டு அப்புறம் போனா போகுது அப்பா ஆசப்படுறார்னு போலீஸ் ஆகிடுறார். அதுவும் அசிஸ்டண்ட் கமிசனரா அவங்க ஏரியாவுக்கே வர்ரார். 

இப்படியே போனா படத்த எப்படி முடிக்கிறதுன்னு யோசிச்ச டைரக்டர், இன்னொரு ட்விஸ்ட்ட வெச்சிருக்கார். இவ்ளோ நாளும் பண்ணிக்கிட்டு இருந்த அராஜகம் எல்லாம் போலீசாகின உடனே தப்பா தெரிய ஆரம்பிக்குது நம்ம ஹீரோவுக்கு. அவங்க ஆளுகளையே பின்னி பெடலெடுக்கிறார். யூனிபார்ம போட்டுக்கிட்டு மோகன்லாலை பாக்க போறார். கொஞ்ச நேரம் தனியா உக்காந்து பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க ட்ரை பண்ணலாம். ஆனா இண்டர்வல் சீன் வரனும்றதுக்காக சம்பந்தமே இல்லாம மாறி மாறீ பஞ்ச் டயலாக் பேசுறானுங்க. ஒருவழியா இண்டர்வல்னு போட்டு கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறானுங்க. 

இண்டர்வல் முடிஞ்சதும், நம்ம வில்லன் ஹீரோ கிட்ட மாட்டிக்கிட்டு எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு வாக்குமூலம் கொடுக்கிறான். சின்ன வயசுல இருந்து 20 வருசமா மோகன்லாலை கொல்ல ட்ரை பண்ணிட்டு இருக்கானாம். அதுவும் மோகன்லாலை வேற எவனும் கொல்லவிடாம இவரே கொல்லனும்னு 20 வருசம் கூடவே இருக்கார்னு ஒரு ஃப்ளாஷ்பேக் காட்டுவாங்க பாருங்க பாத்துட்டு இன்னும் மெய்சிலிர்த்துக்கிட்டு இருக்கேன்....  வழ்க்கம் போல இவர்தான் வில்லன்னு மோகன்லாலுக்கு தெரியாம நம்ம டாகுடரை தப்பா நினைக்க, டாகுடரோ தம்பிய காப்பாத்தனும்னு அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் ஒளிச்சு வைக்கிறார். வில்லன் ஏன் அவ்ளோ நாள் சும்மா இருந்தான்னு தெரியல. ஒருவழியாக எல்லா சண்டையும் முடிஞ்சு கடைசில சுபம். என்ன தம்பியதான் காவு கொடுத்துறாங்க. தாதா படம்னா ஹீரோ சைடுலயும் ஏதாவது காவு கொடுக்கனும்ல, இல்லேனா லாஜிக்கா (?) இருக்காதுல, அதான்! 




குடும்ப கோஷ்டிகளையும் கவர் பண்ணனும்னு நடுவுல கொஞ்சம் தங்கச்சி செண்ட்டிமெண்ட் வேற வெச்சிருக்காங்க. இவரு பிரிஞ்ச போன உடனே தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாகி, கல்யாணமும் ஆகுது. ஹீரோ ஆபீஸ்கே வந்து அவரைத்தவிர எல்லாரையும் இன்வைட் பண்றாங்க. ஹீரோ தங்கச்சி எப்படியும் போன்லயாவது கூப்பிடும்னு உருகுறார். கடைசில பாத்தா கல்யாண விருந்துல ஒரு பக்கமா உக்காந்து எதையும் கண்டுக்காம சாப்புட்டு இருக்கார். சாப்புட்டு வந்து ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் பாருங்க, தங்கச்சி கல்யாணத்துல அண்ணன் கை நனைக்கனும்னு..... 

அண்ணன்-தங்கச்சி பாசத்துக்கு இப்படி ஒரு சீன் தமிழ் சினிமாவுல சமீபத்துல வந்திருக்காது. அனேகமா பாசமலருக்கு அடுத்த ரேங்க்ல இத வைப்பாங்கன்னு நினைக்கிறேன். படம் பார்க்க வர்ர யூத்துகள் இந்த செண்டிமெண்டால கடுப்பாகிட கூடாதுன்னு டாகுடரு தங்கச்சியா சூப்பர் பிகரை போட்டிருக்காங்க, படத்துல உள்ள ஒரே நல்ல விஷயம் இதுதான். விமர்சனம் எழுதுன யாரும் இதை பத்தி எழுதாம விட்டதை கடுமையா கண்டிக்கிறேன். பின்ன என்னய்யா விமரசனம்னா எல்லாத்தையும் கவர் பண்ணி எழுத வேணாமா? 




நன்றி: கூகிள் இமேஜஸ்...!

Tuesday, August 14, 2012

ஏழாம் அறிவு: ஒரு ஏழரை விமர்சனம்....



படம் வந்து ஒரு வருசம் ஆச்சே, என்ன இவ்ளோ லேட்டா விமர்சனம்னு பார்க்கிறீங்களா? என்ன பண்றது நான் இப்பத்தானே அந்த படத்த பார்த்தேன்...! (இது அந்த பிரபல பதிவருக்கு உள்குத்து அல்ல...!)

சமீபத்துல  7-ம் அறிவு படத்த கட்டாயமா பார்க்க வேண்டிய சூழ்நிலை. படம் வந்த புதுசுல டமிளர், பெருமை அது இதுன்னு சத்தம் அதிகமா இருந்துச்சேன்னு உள்ளுக்குள்ள கொஞ்சம் ஆர்வம் வேற... சரி கழுதைய பாத்து தொலைப்போமேன்னு பார்த்துட்டேன்....  பிரபல பதிவர்கள்லாம் படம் பார்த்தா உடனே தாறுமாறா வெமர்சனம் எழுதனுமாமே, அதான் இப்போ இப்படி ஒரு பதிவு. விமர்சனம்னு நினைக்காம சும்மா படிங்க.



படம் துவக்கத்துல போதி தர்மர் பத்தி சீன்ஸ் கொஞ்ச நேரம் வருது, படத்தை அப்படியே முடிச்சிருக்கலாம். டமிலனின் மிச்சம் மீதி இருக்கும் பெருமையாவது மிஞ்சி இருக்கும். படத்த கண்டினியூ பண்ணி மானம், மருவாதின்னு எதையும் மிச்சம் வெக்காம உருவி விட்டுட்டானுங்க.

ஸ்ருதி ஜெனிடிக் எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்டாம். ஆராய்ச்சி பண்றாங்களாம். நேரா சூர்யா கிட்ட போய் மேட்டரை எடுத்து சொல்லி கூட்டிட்டு போக வேண்டியதுதானே? அத விட்டுட்டு ஆயிரத்தெட்டு லோலாய் பண்ணிக்கிட்டு இருக்குது. ஆக்சுவலா ஹீரோயின் அண்ட் கோ எல்லாரும் சூர்யாவை வெச்சு ஆராய்ச்சி பண்ற நோக்கத்துல இருக்காங்க. ஆனா சூர்யா தீம்பார்க்ல அவங்களை பார்த்து ஃபாலோ பண்றார்னு கோவப்படுற மாதிரி சீன் வருது. டைரக்டர் சார் என்னதான் சொல்ல வர்ரீங்க?

இதெல்லாம் தேவையா...?

ஒருவழியா சூர்யா லவ் பண்ணி ஃபெய்லியர் ஆகி (க்க்ர்ர்ர் த்தூ......!) எல்லாரும் மேட்டருக்கு வந்து சேர்ராங்க. வில்லன் சீனாவாம். அதுனால நல்லவேள பஞ்ச் டயலாக் இல்ல. அது ஒண்ணுதான்யா படத்துல ஆறுதல். அப்புறம் அது என்னய்யா நோக்கு வர்மம்? ஏதோ மெஸ்மெரிசம், ஹிப்னாடிசம் மாதிரி சமாச்சாரம் போல தெரியுது. அத வெச்சி அடுத்தவனை கண்ட்ரோல் பண்றது கூட ஓகே, பட் அவங்களும் எப்படி வில்லன் மாதிரியே பறந்து பறந்து  சண்ட போடுறாங்க? மனசு சரி, உடம்பு ஒத்துழைக்க வேணாமாய்யா? அவ்ளோ பலம், வலிமை சும்மா எப்படிய்யா வரும்? இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போம்னு டைரக்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை?

ஹீரோயின் ஜெனிடிக் ஆராய்ச்சிய பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாங்க பாருங்க, முடிலடா சாமி. போதி தர்மருக்கும் சூர்யாவுக்கு  83% ஜீன் மேட்ச் ஆகுதாம். மனுசனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் உள்ள ஜீன் ஒற்றுமை 96%, ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் இடையே உள்ள ஜீன் ஒற்றுமை 99%. முருகதாஸ் இது என்னமோ புளி, மொளகா கணக்கு மாதிரி குத்துமதிப்பா 83% மேட்சிங்னு அடிச்சி விட்டுட்டார் போல. இத வெச்சிக்கிட்டு ஜீன் ஸ்டிமுலேசன் வேற பண்றாங்களாம் அதுவும் 12 நாள்ல...!

போதிதர்மர் எழுதுன பொஸ்தகத்துல உள்ளத படிச்சிட்டு அதை நேரடியா மனுசன் கிட்ட ஆராய்ச்சி பண்ண ப்ளான் பண்றார் ஸ்ருதி. இதையாவது ஒரு பேச்சுக்கு ஒத்துக்கலாம். பட் ஜீன் ஸ்டிமுலேசன்னு சொல்லி பீலா விடுறாரு பாருங்க. சைன்ஸ் ஃபிக்சனாம். அண்ணே முருகதாசண்ணே உங்களுக்கு மனசாட்சியே இல்லியா? ஜீனை தூண்டுறது இருக்கட்டும், ஆனா ஒருத்தர் தன் வாழ்நாள்ல கத்துக்கிற விஷயங்கள்லாம் ஜீனுக்குள்ள எப்படிண்ணே போகும்? கற்பனைக்கும் ஒரு அளவு வேணாம்? அதுவும் இப்படி ஒரு டுபாக்கூர் கற்பனைய போதி தர்மர் மேல தாறுமாறா ஏத்தி விடுறீங்களே இது நியாயமாண்ணே?

அதுக்கப்புறம், டி.என்.ஏ வ அப்படியே மைக்ராஸ்கோப்ல பார்க்கிற மாதிரி காட்டுறாங்களே....  எப்படித்தான் செட்டு போட்டு எடுத்தாங்களோ? அனேகமா படத்தோட 80 கோடி பட்ஜெட்ல பாதி இந்த சீனுக்கே போயிருக்கும். இந்த மாதிரி சைன்ஸ் சமாச்சாரங்கள் பத்தி படம் பண்ணும் போது கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணனும்ணே. டமிலன், பெருமை, வெங்காயம்னு பேசனும்னா இப்படி இஸ்கோல் பசங்க கணக்கா எடுக்கப்படாதுண்ணே....

சீனாக்காரன் ஸ்ருதிய கொல்றதுக்காக வந்தானாம்.வந்த உடனே போய் சத்தமில்லாம அத பண்றத விட்டுப்புட்டு படத்தோட 80 கோடி பட்ஜெட்டுக்கும், வாங்குன காசுக்கும் பாக்குற ஆளுகளைலாம் பறக்க வைக்கிறான், போட்டுத்தள்றான்.

யாருக்குமே தெரியாத லேப்னு சென்னை ஐஐடிக்குள்ள இருக்கற லேபை சொல்றாங்கப்பா.....! சிரிக்க கூட முடியல சார். ஒருவழியா எல்லாம் முடிஞ்சு...... ஹீரோவும் வில்லனும்  நேரடி சண்டைய தொடங்குறாங்க. (தக்காளி என்னத்த கிழிச்சி படம் எடுத்தாலும், கிளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேரா கைச்சண்டை போடனும்கற இந்த கருமாந்திரம் புடிச்ச செண்டிமெண்ட்ட மட்டும் விடமாட்டேங்கிறானுங்களே....?).

வில்லன்  துப்பாக்கி, பைப்பு ஊசின்னு என்னென்னமோ ஆயுதங்கள் வெச்சிருந்தான். பட் ஹீரோ கூட கிளைமாக்ஸ் சண்ட போடுறப்போ (வழக்கம் போல) எதையும் காணோம். வில்லன் நோக்கம் என்ன, ஹீரோவ கொல்லுறது, அப்படியே கழுத்த நெரிச்சி கொல்லுவானா.... அதவிட்டுட்டு தொம்மு தொம்முன்னு அடிச்சி தூக்கி போட்டுட்டு வேடிக்கை பார்க்கிறான், பறந்து பறந்து குதிக்கிறான் (பின்ன ஸ்டண்ட் மாஸ்டர்கிட்ட காசு கொடுத்த அளவுக்கு வேலை வாங்க வேணாமா?). எப்படியும் ஹீரோதான் ஜெயிக்க போறாங்கிறதால ஒரு அளவுக்கு மேல சண்டைய பார்த்து ரசிக்க முடியல. சூர்யாவுக்குள்ள திரும்ப போதிதர்மா வர்ரதெல்லாம் என்னது அப்பளம் நமுத்துப்போச்சான்னு கேட்கற மாதிரித்தான் இருக்கு...!

அப்புறம் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒரு விஷயம் மியூசிக். யப்பா சாமி ஹாரிசு.... ஆள விடுரா சாமி... எல்கேஜி பசங்க படிக்கிற ரைம்ஸ கூட விட்டு வைக்காம...... ஏன்யா இப்படி? போதிதர்மா சீன் பூரா பேக்ரவுண்டுல ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்ட கொஞ்சம் டெம்போ குறைச்சு ஸ்லோவா ஹம்மிங் பண்றாங்க...... அண்ணன் காப்பி அடிக்கிறதெல்லாம் அடிச்சி முடிச்சி எல்கேஜி லெவலுக்கு வந்துட்டாரே, இதுவும் முடிஞ்சிட்டா இனி என்ன பண்ணுவாரோ?

போதிதர்மர் நமக்கு பெருமையான விஷயமா இருக்கலாம். ஆனா இந்தப் படம் சத்தியமா இருக்காதுங்க. வேற எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ.


ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!

நன்றி: கூகிள் இமேஜஸ்

Thursday, February 23, 2012

துப்பாக்கி (எ) டுப்பாக்கி: ஒரு உன்னத அனுபவம்




பதிவர்களுக்காக பழைய டாகுடர் படங்களைத் தீவிர ஆய்வு செய்து டாகுடரின் புதுப்பட விமர்சனங்களை நாம் முன்கூட்டியே தருவது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இப்போது உங்களுக்காக டுப்பாக்கி. 

இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடந்ததென்று டைரக்டருக்கும் டாகுடருக்கும் மட்டுமே தெரியும்.  இருந்தாலும் ரசிகப் பெருமக்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியை போக்கவும், ஒருவேளை படம் தடைபட்டாலும் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தினாலும் இந்த விமர்சனத்தை உடனடியாக வெளியிடுகிறோம். பரபரப்பான இக்கதையை சஸ்பென்சாக திரையரங்கில் சென்று கண்டுகளிக்க விரும்புபவர்கள் உடனே ப்ளாக்கை விட்டு அப்பீட் ஆகிக் கொள்ளவும்.

ஓப்பனிங் சீன். அது ஒரு அழகான கிராமம். திருவிழா நேரம். முக்கியமான நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. டாகுடரின் தங்கை, நண்பர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாயத்து பெருசுகள் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெருசு என்னய்யா டைம் ஆகிட்டே இருக்கு, இன்னுமா பூமி வர்ராரு? சீக்கிரம் ஆரம்பிங்கய்யா என்று அங்கலாய்க்கிறது. எல்லோரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் நமக்கும் படபடப்பாக இருக்கிறது. வழக்கமான டாகுடர் படங்கள் போல் இல்லாமல் மிகவும் பரபரப்பாகவும் வித்தியாசமாகவும் இந்த ஓப்பனிங் காட்சியை எடுத்ததற்கு இயக்குனருக்குப் பாராட்டுக்கள். ஹேட்ஸ் ஆஃப்...!

அப்போது திடீரென புலி உறுமும் சத்தம் கேட்கிறது. எல்லாரும் பதறிப்போய் திரும்பி பார்க்கிறார்கள். நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. பயங்கரமான உறுமலுடன் ஒண்டிப் புலி கெட்டப்பில் டாகுடர் எங்கிருந்தோ பறந்து வந்து நடுவில் குதித்து, அப்படியே சைடில் திரும்பி கேமராவை பார்த்து புன்னகைக்கிறார். உடனே தடதடவென ஓப்பனிங் சாங் ஆரம்பிக்கிறது. பாடல் முடியும் வரை நம்மால் சீட்டில் உக்காரவே முடியவில்லை. அட, நாமும் நம்மையறியாமல் டான்ஸ் ஆடி விடுகிறோம் என்று சொல்கிறேன். 

பாடல் முடிந்ததும் வழக்கம் போல் இல்லாமல் மிக வித்தியாசமாக டாகுடர்  வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்து குறும்புச் சேட்டைகளில் ஈடுபடுவது, தங்கையுடன் செல்லமாக சண்டை போடுவது என்று காட்சிகள் வைத்தது நல்ல ஐடியா. குறிப்பாக தங்கையுடன் வரும் பாச காட்சிகளில் டாகுடரின் நடிப்பில் புதிய பரிமாணம் மின்னுகிறது. தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.

தங்கை பாசமுடன் வாங்கிக் கேட்ட ரிப்பனை காசு கொடுத்து வாங்க முடியாமல் திருடிக் கொண்டு வருவதும், மாட்டிக் கொண்டு அடிவாங்குவதும் அற்புதம். அந்தக் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் அடிவாங்கியதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த ரிப்பனை தங்கச்சிக்கு கொடுக்க முடியவில்லையே என்று அவர் அழுவது பிரமாதமான நடிப்பு. ஒரு ஆக்சன் ஹீரோ செண்டிமெண்ட் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று பாடமே நடத்தி இருக்கிறார் டாகுடர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த வருடம் சிறந்த நடிகருக்கான அனைத்து விருதுகளையும் அள்ளப் போவது டாகுடர் தான். பாராட்டுக்கள்.  

இப்படி பாசமாக இருந்த தங்கை டவுனில் இருந்து வந்த ஒருவனை விரும்புகிறாள். டாகுடருக்கு இது தெரிய வந்ததும், தங்கச்சிக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்து அவன் ஒரு தீவிரவாதி என்று கண்டுபிடிக்கிறார். குளத்தங்கரை, சந்தை, தென்னந்தோப்பு, பஸ் ஸ்டாப்பு என்று மிக ஆபத்தான இடங்களில் ஒளிந்திருந்து வில்லனைப் பற்றி கண்டுபிடிக்கும் காட்சிகளை மிக மிகத் திரில்லிங்காக படமாக்கி இருக்கிறார்கள். டாகுடரும் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அந்தக் காட்சியை படமாக்கிய விதமும், கேமரா கோணங்களும் தமிழ் சினிமாவுக்கே புதுசு. வழக்கமாக டாகுடர் படங்களில் வருவது போல இல்லாமல் தனியாகவே சென்று வில்லனுக்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதையும், அவர்கள் சென்னையில் ஒரு பெரிய பேங்கை கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டுவதையும் கண்டுபிடிப்பது, அதை போலீசிடம் சொல்வது என்று டாகுடர் கலக்கியெடுத்திருக்கிறார். இப்படம் டாகுடர் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே கொண்டாட்டம் தான். 




போலீஸ் வழக்கம் போல் மெத்தனமாக இருந்து விடுகிறது. அந்த ஸ்டேசனில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருக்கிறார். அவர் டாகுடரை தனியாக தாய்லாந்தில் இருக்கும் ஒரு பாரில் சந்திக்கிறார். வில்லனிடம் இருக்கும் அரசியல் பேக்ரவுண்ட் பற்றி சொல்லி போலீசால் வில்லனையும் அவன் கும்பலையும் எதுவும் முடியாது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். வில்லனை ஒழித்துக் கட்டும் வேலையை டாகுடர் தான் செய்ய முடியும் என்று அந்த போலீஸ் ஆபீசர் கெஞ்சுகிறார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு டாகுடரும் சம்மதிக்கிறார். போலீஸ் ஆபீசர் தன்னிடம் உள்ள ஸ்பெசல் ராசி டுப்பாக்கியை எடுத்து டாகுடரிடம் கொடுத்து சென்னை சென்று எல்லாவற்றையும் முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார். போலீஸ் வரும் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக தத்ரூபமாக அமைந்திருப்பது படத்திற்கு கை கொடுக்கிறது. 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். இவர் இனி தமிழ் சினிமாவில் போலீசாக ஒரு ரவுண்டு வருவார் எனலாம். அந்த பார் சீன் முழுவதும் கழுதை கத்துவது போன்று வரும் பின்னணி இசையில் இசையமைப்பாளரின் உழைப்பு தெரிகிறது. நல்ல ஒலிசேர்ப்பு. 

இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று தீவிரவாத கும்பலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்கான காட்சிகளின் நீளத்தை இயக்குனர் சற்றுக் குறைத்திருக்கலாம். சென்னைக்கு வந்து முதல் நாளே டாகுடர் வில்லனை பின்பற்றிச் சென்று உடனே அவர்களின் இடத்தை தெரிந்து கொள்கிறார். ஆனால் பின் ஏன் எதுவும் செய்யாமல் சவால் விட்டுவிட்டு திரும்பி விடுகிறார் என்றுதான் புரியவில்லை. பின்னர் வரும் காட்சிகளில் டாகுடரும் வில்லன் ஆட்களும் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் எல்லாம் தீப்பொறி பறக்கிறது. ஆனால் சண்டையைத் தொடங்காமல் ஏய்ய் ஏய்ய் என்று சிறிது நேரம் மாறி மாறி கத்திவிட்டு சென்றுவிடுவது பரபரப்பின் உச்சகட்டம். அனைத்துமே பார்ப்பதற்கு திகிலாக மிகவும் அருமையாக வந்திருக்கிறது. 

டாகுடர் போலீஸ் ஆபீசர் கொடுத்த அந்த ஸ்பெசல் டுப்பாக்கியை அடிக்கடி எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துக் கொள்ளும் காட்சி ஏ ஒன் ரகம். நடுவே  டெல்லியில் இருந்து வரும் ஒரு உளவுத்துறை அதிகாரி டாகுடரை வந்து பார்த்து சென்னையை தீவிரவாதிகளிடம் இருந்து டாகுடர்தான் காப்பாற்ற வேண்டும் உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார். இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார். பரபரப்பான காட்சியாக வந்திருக்க வேண்டியது, செண்டிமெண்ட் காட்சியாகிவிட்டது, ஆனால் டாகுடரின் நடிப்பில் அதுவும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. 

ஹீரோயின் சைடு வில்லனின் தங்கையாக வருகிறார். சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். டிக்கட்டே எடுக்காமல் பஸ்சில் சென்று வரும் அவரை டாகுடர் எதேச்சையாக டிக்கட் செக்கிங்கில் இருந்து காப்பாற்றுகிறார். டிக்கட் செக்கர்களுக்கும் அவருக்கும் நடக்கும் சேசிங் விறு விறு ரகம். பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். அங்கிருந்து உடனடியாக ஹீரோவும் ஹீரோயினும் டூயட்டுக்கு சென்றுவிடுவது நம்மை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது.

அதன்பிறகு டாகுடர் எவ்வாறு வில்லன்களை ஒழித்துக்கட்டி சென்னையை காப்பாற்றுகிறார் என்பதையெல்லாம் வெண் திரையில் காண்க. படம் எப்படியும் 2012-ல் வந்துவிடும். உங்கள் ஊரில் உள்ள ஏதாவது நல்ல தியேட்டரில் சொந்தக்காசில் டிக்கட் எடுத்துப் பார்க்கவும். 

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான். கிளைமாக்சிலாவது டாகுடர் வில்லனை பேசி திருத்தி தங்கச்சியுடன் சேர்த்து வைப்பது போல் காட்சி வைத்திருக்கலாம். வில்லன் கும்பல் நவீனரக மெசின் கன்கள் வைத்திருந்தும், அதை கடைசிவரை அவர்கள் பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாகுடரிடம் இருக்கும் அந்த டுப்பாக்கியைப் பார்த்து அனைவருமே பயப்படுவது போன்று வைத்திருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு. அதே போல் இடைவேளைக்குப் பிறகு ஹீரோ கழுத்தில் ஒரு கேமராவை தொங்க விட்டபடியே வருவது இயக்குனரின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.




டுப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ படம் நெடுக ஒரு டுப்பாக்கியை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அது பயன்படுத்தப்படவே இல்லை. இயக்குனர் டுப்பாக்கியை பின்நவீனத்துவ குறியீடாக பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார். நல்ல முயற்சி. இப்படியான முயற்சிகள் தமிழ்சினிமாவில் வருவதை அனைவரும் வரவேற்க வேண்டும்.

பாடல்கள் அனைத்துமே நன்றாக வந்திருக்கின்றன. டாகுடர் ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த ஓப்பனிங் சாங்தான் இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப் போகிறது. படம் நெடுக வரும் டாகுடரின் பஞ்ச் வசனங்கள் நெஞ்சில் இடியாய் இறங்குகிறது.  வசனகர்த்தா தன் பொறுப்பை உணர்ந்து எழுதி இருக்கிறார். டாகுடர் இந்தப் படத்திலும் வாயில் கோலிக்குண்டை உருட்டியபடியே வருவது உலகத்தரம்.

சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும், டாகுடரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறார்கள். படம் பார்க்கும் நாமும் நிஜமாவே கலங்கித்தான் போகிறோம். படம் முடிவதற்குள் மூன்று, நான்கு முறை வயிற்றையும் கலக்கி விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம். சுலபமாக தினமும் ரெண்டு ஷோ பார்த்து விடலாம். ஏற்கனவே நிற்காமல் போய்க் கொண்டிருப்பவர்கள் செலவு பார்க்காமல் நல்ல டயாப்பர் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு தியேட்டருக்குச் செல்வது உத்தமம்.

மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும்  தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

நன்றி: கூகிள் இமேஜஸ், சினி சவுத்

Tuesday, January 17, 2012

நண்பன்: எனது விமர்சனம், முதல் முறையாக...




முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதலாம் என்றவுடன் எனக்கு கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. பின்னே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சும் இடத்தில் கத்துக்குட்டிகள் நுழைவதற்கு கொஞ்சம் அப்படித்தானே இருக்கும்? நல்ல தெளிவான மனநிலையுடன் விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு அமர்ந்தேன், அப்போதுதானே எல்லா முக்கியமான விஷயங்களையும் சரியாக நினைவில் வைத்து கோர்வையாக எழுதலாம்?

நம்ம பிரண்டு ஒருத்தன் விஜய் ரசிகன். ரொம்ப நல்ல பையன், கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான், ஆனா ஊமைக்குசும்பு அதிகம். திடீர் திடீர்னு ஏதாவது வில்லங்கமா பண்ணிட்டு வந்து நிப்பான். அப்பல்லாம் நாங்க வீக்கெண்ட்ஸ்ல ஈவ்னிங் ஏதாவது படத்துக்கு போவோம், ஷோ முடிஞ்சு வந்த உடனே நல்லதா ஒரு ஹோட்டலுக்கு போய் செமயா சாப்பிடுவோம். சாப்பாடு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை. அதனால ஹோட்டல்கள்ல வெரைட்டியா ஆர்டர் பண்றதுக்கு ஈசியா இருக்கும்.

அப்படித்தான் அவன்கூட பல படங்களுக்குப் போனேன். இந்த மாதிரி பசங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க விஷயம் இருக்கு பாருங்க, அதைவிட ஒலகத்துலேயே கொடுமையான விஷயம் கிடையாதுங்க. ஏதாவது புதுப்படம் வந்தா போதும், இவனுங்க அத பாத்துட்டு வந்து மூணு நாளைக்கு நம்மளையும் தூங்க விடமாட்டானுங்க, சாப்பிட விடமாட்டானுங்க. இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாலு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு லாடம் கட்டிட்டு வந்துடலாம்.

இப்படி போய்ட்டு இருந்தப்போதான் நண்பன் படம் ரிலீஸ் ஆகுச்சு. படம் வேற ரொம்ப நல்லா இருக்கறதா பேச்சு வந்துடுச்சா... நான் கொஞ்சம் கலங்கிட்டேன். பயலை சமாளிக்கிறதுக்குள்ள பெரும்பாடா போச்சு. தினம் ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே வந்து ஆளை. கொஞ்சம் கொஞ்சமா நார்மலாக்கி, அப்புறம் படத்துக்கு போகலாம்னு ப்ளான். இதையெல்லாம் அப்படித்தான் டீல் பண்ணனும் என்ன சரிதானே?

எப்படி இருக்கு என் நண்பன் விமர்சனம்? இருங்க இருங்க நீங்க எந்த நண்பன் விமர்சனம்னு நெனச்சீங்க? நண்பன் பட விமர்சனம்னா? நான் என்ன நண்பன் படம் விமர்சனம்னா சொன்னேன், நண்பன் விமர்சனம்னுதானே சொல்லி இருக்கேன், எங்கே டைட்டிலை மறுக்கா படிச்சுப் பாருங்க?

ரூம் போட்டு அழ விரும்புபவர்கள் உடனே பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்!

நன்றி: கூகிள் இமேஜஸ்!