Showing posts with label பெண்குரல். Show all posts
Showing posts with label பெண்குரல். Show all posts

Thursday, December 23, 2010

எனது ரசனையில்: பெண்குரல் பாடல்கள்........




இதை ஒரு தொடர்பதிவாக பலரும் எழுதிவருவது தெரிந்ததே. என்னையும் இந்தத் தொடர்பதிவிற்கு நண்பர்கள் பலரும் அழைத்திருந்தனர். பிடித்த பாடல்களை வெறும் பத்தில் அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்களை ஒன்றாக வகைப்படுத்துவதிலும் எனக்குச் சம்மதமில்லை. அதனால் பாடல்களை என்பது, தொண்ணூறு மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளில் வந்தவை எனப் பிரித்திருக்கிறேன். பாடல்களைத் தரவரிசைப் படுத்தவில்லை. ரேண்டமாகவே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலுக்கும் சிறு குறிப்பு எழுத ஆசைதான் ஆனால், ஒரே பதிவிற்குள் அது சாத்திய்மில்லை என்பதால் விட்டுவிட்டேன்.


(இடமிருந்து வலமாக: எஸ்.ஜானகி, சுனந்தா, ஜென்ஸி)




(இடமிருந்து வலமாக:  உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா, சித்ரா)


80s:


1. புத்தம் புதுக் காலை…பொன்னிற வேளை…. எஸ். ஜானகி (அலைகள் ஓய்வதில்லை)

2. கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்… எஸ். ஜானகி (ரெட்டைவால் குருவி)

3. அழகிய கண்ணே…………எஸ். ஜானகி (உதிரிப் பூக்கள்)

4. ராசாவே உன்ன நம்பி…. எஸ்.ஜானகி (முதல் மரியாதை)

5. ஊரு சனம்… தூங்கிடுச்சு…. எஸ். ஜானகி (மெல்லத் திறந்தது கதவு)

6. ஒரு இனிய மனது…….. ஜென்ஸி (ஜானி)

7. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்…எஸ். ஜானகி (மங்கை ஒரு கங்கை)

8. சின்னச் சின்ன வண்ணக்குயில்…….. எஸ். ஜானகி (மௌனராகம்)

9. குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்… சித்ரா (மெல்லத் திறந்தது கதவு)

10. தெய்வீக ராகம்…. ஜென்ஸி (உல்லாசப் பறவைகள்)

11. ஆசைய காத்துல தூது விட்டு……..எஸ்.பி.ஷைலஜா (ஜானி)

12. ஆனந்த ராகம்……….உமாரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)

13. பன்னீரில் நனைந்த பூக்கள்………….. எஸ்.ஜானகி (உயிரே உனக்காக)

14. மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ…… எஸ்.ஜானகி (மந்திரப் புன்னகை)

15. என் வானிலே ஒரே வெண்ணிலா……..ஜென்ஸி (ஜானி)

16. சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ…… எஸ்.ஜானகி (ஜப்பானில் கல்யாணராமன்)

17. அழகு மலராட……………..எஸ். ஜானகி (வைதேகி காத்திருந்தாள்)

18. செண்பகமே செண்பகமே…. சுனந்தா (எங்க ஊரு பாட்டுக்காரன்)

19. ரோஜாப்பூ ஆடிவந்தது….. ஜானகி, கோரஸ் (அக்னி நட்சத்திரம்)



90s:

1. மாலையில் யாரோ மனதோடு பேச…. சுவர்ணலதா (சத்ரியன்)

2. கற்பூர பொம்மை ஒன்று….. பி. சுசீலா (கேளடி கண்மணி)

3. வந்ததே ஓ…ஓ..குங்குமம்…. சித்ரா (கிழக்கு வாசல்)

4. மன்னவா மன்னவா…..சுனந்தா (வால்டர் வெற்றிவேல்)

5. கொஞ்சம் நிலவு…… அனுபமா (திருடா திருடா)

6. ஊரடங்கும் சாமத்திலே…. சுஜாதா, உமா ரமணன் (புதுப்பட்டி பொன்னுத்தாயி)

7. ராசாவே உன்னை விட மாட்டேன்….. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

8. வான்மதியே… வான்மதியே…. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

9. நீதானே நாள்தோறும்… சுவர்ணலதா (பாட்டு வாத்தியார்)

10. அதிகாலைக் காற்றே நில்லு… எஸ். ஜானகி (தலைவாசல்)

11. கண்ணி ரெண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே…. பெண்குரல் கோரஸ் (அவதாரம்)

12. நிலா காய்கிறது……ஹரிணி (இந்திரா)

13. மார்கழிப் பூவே…….ஷோபா (மே மாதம்)

14. என்னுள்ளே என்னுள்ளே…….. ஸ்வர்ணலதா (வள்ளி)

15. அன்பென்ற மழையிலே….. அனுராதா ஸ்ரீராம் (மின்சாரக் கனவு)

 16. குயில்பாட்டு............ஸ்வர்ணலதா (என் ராசாவின் மனசிலே)


2000s

1. மயில் போல பொண்ணு ஒண்ணு… பவதாரிணி (பாரதி)

2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)

3. ஒன்றா ரெண்டா ஆசைகள்…… பாம்பே ஜெயஸ்ரீ (காக்க காக்க)

4. இதுதானா……சித்ரா (சாமி)

5. திருமணமலர்கள்……… ஸ்வர்ணலதா….. (பூவெல்லாம் உன் வாசம்)

6. நினைத்து நினைத்து……. ஷ்ரெயாகோசல் (7G ரெயின்போ காலனி)

7. விடிகின்ற பொழுது…… மதுமிதா (ராம்)

8. அனல்மேலே பனித்துளி……. சுதா ரகுநாதன் (வாரணம் ஆயிரம்)

9. மருதாணி…….சாதனா சர்கம் (சக்கரக்கட்டி)


சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை, எனவேதான் அவை சற்றுக் குறைவாகவே உள்ளன.  மேலே உள்ள பாடல்கள் எதுவும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம். ஈமெயிலில் அனுப்பித்தருகிறேன்.

அனேகமாக அனைவரும் இந்தத் தொடர்பதிவை எழுதிவிட்டனர்.  இருந்தாலும் இரு பிரபல பதிவர்கள் இதை இன்னும் சட்டை செய்யாமலே இருக்கின்றனர். எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு  அழைக்கிறேன்.


 !