Monday, October 11, 2010

சந்தியா.. சந்தியா....!

இப்போ பதிவுலகத்துல காதல் வரும் பருவம் போல! நம்ம மங்குனி, வசந்த்னு எல்லாரும் ஒரே ரொமான்டிக் பதிவா போட்டு அசத்துறாங்க. அதப் படிச்சி படிச்சி நமக்கும் பீலிங்ஸ் ஸ்டார்ட் ஆயிடிச்சு! ஆனா இப்போ அதையெல்லாம் உக்காந்து எழுதுற அளவுக்கு பொறுமை இல்லை. ஆணிகள் நாந்தான் வந்து புடுங்கனும்னு கெஞ்சிக்கிட்டு இருக்கு. சோ, நான் ஏற்கனவே எழுதியிருந்த "சந்தியா.. சந்தியா" என்ற பதிவை ஒரு மீள்பதிவா போடுறேன். படிச்சிட்டு நீங்களும் பீல்(?) பண்ணுங்க! பாத்து...பாத்து! ரொம்ப பீல பண்ணி வீட்ல அடிவாங்கிடாதீங்க!




எச்சரிக்கை: இப்பதிவில் வரும் அனைத்தும் 'கற்பனையே!'






சந்தியா..சந்தியா....பாடல் மிதந்து வருகின்றது. காற்றில் வந்த மழைவாசம் பாடலோடு இணைந்து மூச்சில் கலந்து கொண்டிருந்தது. பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்? தெரியவில்லை. எதுவும் தெரியக்கூடாது என்றுதானே முகவரியோ, தொலைபேசி எண்ணோ வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது, தவிப்பு அடங்க மறுக்கின்றதே!


அவளைக் கடைசியாகப் பார்த்த அன்று காதலர் தினம்! காதலர்தினம்தான் காதலர்கள் பிரிவதற்கும் பயன்பட்டிருக்கிறது. அன்றுதான் அவள் மனம் திறந்தாள், அதற்கு அவசியமே இருக்கவில்லையென்றாலும்! ஒருவேளை பின்னர் அதுவே பெரிய தவிப்பாகிவிடும் என்றுதான் சொன்னாளா? நான் எதுவுமே பேசவில்லை, அவளும் கேட்கவில்லை. ஒருவேளை நானும் சொல்லியிருக்கலாமோ? எனக்கு ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை? அவளை பார்த்த நாளில் இருந்து அவளோடு ஒற்றை வார்த்தையாவது பேசிவிடவேண்டும் துடித்த எத்தனையோ பொழுதுகளும், அவள் பெயரை உச்சரித்தே வாழ்ந்த நாட்களும் என்னோடு இன்னும் சண்டை போடுகின்றன. அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டைரி என்னைத் தினமும் ஏளனம் செய்கிறது, நான் என்ன செய்வேன்? அவள் கீழே வீசிச்சென்ற கசங்கிய காகிதம் தினமும் என்னோடு பேசுகிறது.

அவள் பேசிய வார்த்தைகள்தான் காலத்துடன் சண்டைபோட்டு என்னை அவ்வப்போது மீட்டு வந்தன. ஆனால் அவளுடைய வார்த்தைகளை காலம் என் டைரிக்குள் போட்டுப் பூட்டிவிட்டது. நான் என்ன செய்வேன்? அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். அவள் பதிவு செய்து கொடுத்த பாடல் கேசட் பெட்டியில் உறங்கிகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு முறை எடுத்துப் பார்க்கும்போதும் மனம் நடுங்குகிறது. இங்குதானே அவள் தொட்டிருப்பாள், கேசட்டைத் தடவிப்பார்க்கின்றேன்.

அவள் எனக்காக எழுதிய வாழ்த்து அட்டை படபடக்கிறது. படிக்க தெம்பில்லை. கீழே சட்டை, அது அவளோடு முதல் முதலாகப் பேசியபோது அணிந்திருந்தது, அப்படியே இருக்கிறது துவைக்காமல், பொக்கிசமாக! எடுத்து அணைத்துக்கொள்கிறேன். அவள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. சட்டையை கீழே வைக்கிறேன், சட்டைதான் என்னைப்பார்த்து சிரிக்கிறது. வேகமாக டைரியை எடுக்கிறேன். அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே, இடையே இடையே அவள் கையெழுத்துக்களும், டைரியைத் திறக்கமுடியவில்லை.டைரியை வைத்துவிட்டு எப்போதும் போல நினைத்துக் கொள்கிறேன், என்றாவது ஒருநாள் அவள் வருவாள், வந்து அவளே படித்துக்காட்டுவாள்.



அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!





இப்பதிவு காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும் சமர்ப்பணம்!

76 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nanpendaa vadai enakku

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு பயலையும் காணோம். காதலிக்க போயிட்டாங்களா?

Anonymous said...

ஆஹா..அண்ணாத்தைக்கும் லவ் மூடா..

Anonymous said...

அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள்.//
என்ன ஒரு ஃபீலிங் ..டச்சிங் ஆயிடுச்சி

Anonymous said...

ஒரு பயலையும் காணோம். காதலிக்க போயிட்டாங்களா//எல்லாம் உங்க பிளாக் ல இருக்காய்ங்க..போய் விரட்டி வுடுங்க..

Anonymous said...

பாவானா படமே ஆயிரம் கவிதை சொல்லுதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒரு பயலையும் காணோம். காதலிக்க போயிட்டாங்களா//எல்லாம் உங்க பிளாக் ல இருக்காய்ங்க..போய் விரட்டி வுடுங்க..//

அங்கயும் யாரும் இல்லியே. கடை ஒனரக் கூட காணோம்

Anonymous said...

அங்கயும் யாரும் இல்லியே. கடை ஒனரக் கூட காணோம்//அப்ப நிஜ போலிச் கிட்டதான் சொல்லனும் ஹஹா

எஸ்.கே said...

என்னங்க இது படம் ஆரம்பிச்சு இண்டர்வல்ல நிறுத்திட்டீங்க... ஹீரோ, ஹீரோயின் சேர்ந்தாங்களா இல்லியா?

Anonymous said...

// இப்பதிவில் வரும் அனைத்தும் 'கற்பனையே!'//
நாராயணா.. இவரு தொல்ல தங்க முடில நாராயணா..

செல்வா said...

//படிச்சிட்டு நீங்களும் பீல்(?) பண்ணுங்க! பாத்து...பாத்து! ரொம்ப பீல பண்ணி வீட்ல அடிவாங்கிடாதீங்க!//

பீல் பண்ணலேன்னா அடிப்பீங்களா ..?

NaSo said...

///பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்?///
எங்கிருந்தாலும் கண்டிப்பா நல்லா இருக்கணும்..


///அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!///

நானும் அதற்காகத்தான் அலைகிறேன்.


///இப்பதிவு காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும் சமர்ப்பணம்! ///

அப்ப நீங்க அண்ணே?

செல்வா said...

//அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். //

அருமைங்க .,

மொக்கராசா said...

பன்னிகுட்டி சார் உங்க பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்கும் நான் நினைக்கவேயில்லை.

அழுவாதிங்க,அழுவாதிங்க....... அப்புறம் நான அழுதிடுவேன்.

பொன் மாலை பொழுது said...

அட கிறுக்கு புள்ளங்களா .......லவ்வா பண்நூறீங்க லவ்வு............
இங்க போயி பாருங்க மக்கா.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/10/blog-post_10.html --

karthikkumar said...

காதல் மழைல நனைய வெச்சுடீங்க சீக்கிரமே கவிதையும் எழுதுவீங்கன்னு நெனைக்கிறேன் பாராவின் பக்கங்கள் அப்டின்னு ஒரு புக் கூட போடுங்களேன்

மங்குனி அமைச்சர் said...

இரு படிச்சிட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

என்னா நைட்டு சரக்கு பத்தலையா ? இல்லை ஓவரா போயிடுச்சா ? பழைய டைரிஎல்லாம் எடுத்து புரட்டி இருக்க , இம் .............. இது வீட்டுக்கு தெரியுமா ? முக்கியமா உன் பொண்டாட்டிக்கு தெரியுமா ? கடைசியா அவ காதலர் தினத்தன்று என்னதான் சொன்னாள் ? வாங்குன காச திருப்பி அவ கேட்டதுக்கு பயந்து இப்படி வெளிநாட்டுக்கு ஓடிப்போயிட்டியே அவ விற்றுவான்னு நினைக்கிறியா ? இம்ம்ஹும் அருவாளோட ஏர்போர்ட் வாசல்ல கண்ணகி மாதிரி காத்துகிட்டு இருக்கா இந்த பக்கம் வந்துடாதே

மங்குனி அமைச்சர் said...

பன்னிகுட்டி உண்மையிலேயே நைஸ் , வெரிகுட் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிற , வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

கன்பார்ம்டு... அதே தான் ரமெஷ் கூட போலிஸ் ஆகனும் போலிஸ் ஆகனும்னு 2 வருஷமா சொல்லிட்டு திரிஞ்சாரு, ஒரு வழியா கீழ்ப்பாக்கம் போய் சரி பண்ணி கூட்டியாந்தாங்க... அட்ரஸ் வாங்கி தரேன், போய்டு வாங்க, கைராசியான டாக்டர் அவரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

கன்பார்ம்டு... அதே தான் ரமெஷ் கூட போலிஸ் ஆகனும் போலிஸ் ஆகனும்னு 2 வருஷமா சொல்லிட்டு திரிஞ்சாரு, ஒரு வழியா கீழ்ப்பாக்கம் போய் சரி பண்ணி கூட்டியாந்தாங்க... அட்ரஸ் வாங்கி தரேன், போய்டு வாங்க, கைராசியான டாக்டர் அவரு//

அருண் சொன்னா சரிதான் எனக்கு ரெகமண்டேசன் பண்ணினது அவருதான். அவருக்கும் சீக்கிரம் குணமாயிடுச்சாம். அவரே சொன்னாரு...

சிவசங்கர். said...

Thanks for the samarppanam!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி நண்பர்களே, இன்னிக்கு பாத்து செமத்தியா ஆணில மாட்டிக்கிட்டேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 23 சாரி நண்பர்களே, இன்னிக்கு பாத்து செமத்தியா ஆணில மாட்டிக்கிட்டேன்!//

கட்சூ வாங்குங்கோ கட்சூ வாங்குங்கோ அப்டின்னு எத்தன தபா சொல்லிருப்பேன். வாங்கிருந்தா ஆணில மாட்டிருப்பியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரு பயலையும் காணோம். காதலிக்க போயிட்டாங்களா?///

எல்லாரும் வீக்கெண்டு அடிச்சதுல இருந்து இன்னும் தெளிஞ்சிருக்க மாட்டானுங்க டேமேஜரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா..அண்ணாத்தைக்கும் லவ் மூடா..///

ஆமாங்கோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள்.//
என்ன ஒரு ஃபீலிங் ..டச்சிங் ஆயிடுச்சி/////


டச்சிங்மா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
பாவானா படமே ஆயிரம் கவிதை சொல்லுதே///

ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
என்னங்க இது படம் ஆரம்பிச்சு இண்டர்வல்ல நிறுத்திட்டீங்க... ஹீரோ, ஹீரோயின் சேர்ந்தாங்களா இல்லியா?///

யாருக்குத்தெரியும் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Balaji saravana said...
// இப்பதிவில் வரும் அனைத்தும் 'கற்பனையே!'//
நாராயணா.. இவரு தொல்ல தங்க முடில நாராயணா..///


ஒரே குஷ்டமப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//படிச்சிட்டு நீங்களும் பீல்(?) பண்ணுங்க! பாத்து...பாத்து! ரொம்ப பீல பண்ணி வீட்ல அடிவாங்கிடாதீங்க!//

பீல் பண்ணலேன்னா அடிப்பீங்களா ..?///

இல்லே நம்ம டீஆரு வீடியோவ மெயில்ல அனுப்பி வெப்பேன் அவ்வளவுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
///பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்?///
எங்கிருந்தாலும் கண்டிப்பா நல்லா இருக்கணும்..


///அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!///

நானும் அதற்காகத்தான் அலைகிறேன்.


///இப்பதிவு காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும் சமர்ப்பணம்! ///

அப்ப நீங்க அண்ணே?///

நானா....! காதலில் விழுந்து எழுந்தவனப்பா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். //

அருமைங்க .,///

நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சரவணக்குமார் said...
பன்னிகுட்டி சார் உங்க பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்கும் நான் நினைக்கவேயில்லை.

அழுவாதிங்க,அழுவாதிங்க....... அப்புறம் நான அழுதிடுவேன்.////


லாலே லாலலி லாலா.....லா......!
கண்ணத் தொடச்சிக்க மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
அட கிறுக்கு புள்ளங்களா .......லவ்வா பண்நூறீங்க லவ்வு............
இங்க போயி பாருங்க மக்கா.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/10/blog-post_10.html --//


பாத்துடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
காதல் மழைல நனைய வெச்சுடீங்க சீக்கிரமே கவிதையும் எழுதுவீங்கன்னு நெனைக்கிறேன் பாராவின் பக்கங்கள் அப்டின்னு ஒரு புக் கூட போடுங்களேன்///

இப்போதைக்கு இவ்வளவுதான் தம்பி, அடுத்து எப்போ பீலிங்ஸ் ஸ்டார்ட் ஆகுதோ?
என்னது புக்கா? சரி எவனாவது இ. வா. பப்ளிஷர் கெடைச்சா சொல்லுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
என்னா நைட்டு சரக்கு பத்தலையா ? இல்லை ஓவரா போயிடுச்சா ? பழைய டைரிஎல்லாம் எடுத்து புரட்டி இருக்க , இம் .............. இது வீட்டுக்கு தெரியுமா ? முக்கியமா உன் பொண்டாட்டிக்கு தெரியுமா ? கடைசியா அவ காதலர் தினத்தன்று என்னதான் சொன்னாள் ? வாங்குன காச திருப்பி அவ கேட்டதுக்கு பயந்து இப்படி வெளிநாட்டுக்கு ஓடிப்போயிட்டியே அவ விற்றுவான்னு நினைக்கிறியா ? இம்ம்ஹும் அருவாளோட ஏர்போர்ட் வாசல்ல கண்ணகி மாதிரி காத்துகிட்டு இருக்கா இந்த பக்கம் வந்துடாதே///


என்னா ஒரு வில்லத்தனம்? எப்பிடி போனாலும் கேட் போடுவாய்ங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிகுட்டி உண்மையிலேயே நைஸ் , வெரிகுட் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிற , வாழ்த்துக்கள்///

நன்றி அமைச்சரே!

அஞ்சா சிங்கம் said...

ஐயோ சாமீ இந்த பண்ணிகுட்டிகும். மங்குனி அமைச்சருக்கும் .
என்னமோ ஆய்டுச்சி .கொலையா கொல்றாங்களே .
ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குதே .
கிரர்ர்ர்ருகுதே ....
தர்ர்ரர்ர்ர்ருகுதே........
புர்ர்ர்ரர்ர்ர்ருங்குதே ......
இந்த வகுறு வேற சரியல்ல ....

அஞ்சா சிங்கம் said...

எசூச்மி .யாரவது இருக்கீங்களா ?.
all student's absend போட்ருவேன் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மண்டையன் said...
எசூச்மி .யாரவது இருக்கீங்களா ?.
all student's absend போட்ருவேன் .//


மண்டையா வேணாம்யா, விட்ருய்யா, ஏதோ தெரியாத்தனமா இந்த மாதிரி எழுதிட்டேன்!

Chitra said...

கனவோ - கற்பனையோ - ரொம்ப நல்லா இருக்குதுங்க.... இப்படியும் அடிக்கடி எழுதுங்க....

சாமக்கோடங்கி said...

ஹேய்.. வாட் எ ப்யூட்டி யங் கேர்ள்... இந்த மாதிரி டயலாக் உட்டுகிட்டு திரிஞ்ச ஷில்பாகுமார் (அதாம்ப்பா பன்னிகுட்டி ராம்சாமி )இப்படி எல்லாம் கிறுக்கு புடிச்சு திருஞ்சு இருக்காருன்னு நினைக்கும்போது மனசு வருத்தமா இருக்கு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Chitra said...
கனவோ - கற்பனையோ - ரொம்ப நல்லா இருக்குதுங்க.... இப்படியும் அடிக்கடி எழுதுங்க....///


ரொம்ப நன்றி சித்ரா! கண்டிப்பா முயற்சி செய்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஹேய்.. வாட் எ ப்யூட்டி யங் கேர்ள்... இந்த மாதிரி டயலாக் உட்டுகிட்டு திரிஞ்ச ஷில்பாகுமார் (அதாம்ப்பா பன்னிகுட்டி ராம்சாமி )இப்படி எல்லாம் கிறுக்கு புடிச்சு திருஞ்சு இருக்காருன்னு நினைக்கும்போது மனசு வருத்தமா இருக்கு..///

வாங்க சார், உண்மைதான் இது ஒரு கிறுக்குத்தான்! எல்லாம் அந்தந்த வயசுக்கு வர்ரதுதானே சார்! நன்றி!

geethappriyan said...

நண்பா
இனி தொடர்ந்து வரேன்.
சாரை கட் பண்னுங்க,ரொம்ப அதிகம் எனக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
நண்பா
இனி தொடர்ந்து வரேன்.
சாரை கட் பண்னுங்க,ரொம்ப அதிகம் எனக்கு.///

நண்பா.. நன்றி!

Sheikmohamed said...

"காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும் சமர்ப்பணம்! "
சமர்ப்பணமா இல்ல எப்படி இருந்த பன்னிக்குட்டி அண்ணனே இப்படி ஆயிட்டாரே பார்த்து சூதனமா இருந்துக்கப்பு என்ற எச்சரிக்கையா

Unknown said...

ullen ayya

present sir

Unknown said...

50 ok epothan happya erukku

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Nickyjohn said... 48
"காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும் சமர்ப்பணம்! "
சமர்ப்பணமா இல்ல எப்படி இருந்த பன்னிக்குட்டி அண்ணனே இப்படி ஆயிட்டாரே பார்த்து சூதனமா இருந்துக்கப்பு என்ற எச்சரிக்கையா //

எச்சரிக்கையெல்லாம் ஒண்ணுமில்ல பாஸ்! சும்மா பீலீங்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///siva said...
50 ok epothan happya erukku///

வாங்க சிவா!

Unknown said...

மீள் பதிவு போடுற அளவுக்கு சந்தியா அவ்வளவு அம்சமா தல ?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே.ஆர்.பி.செந்தில் said...
மீள் பதிவு போடுற அளவுக்கு சந்தியா அவ்வளவு அம்சமா தல ?...///

இது சினிமா நடிகை சந்தியா இல்லிங்ணா!

Anonymous said...

அதான பாத்தேன்..
என்னடா இன்னும் பன்னிக்குட்டிக்கு எதுவும் நடக்கலயேனு பாத்தேன்.
நடந்திடுச்சு. நடத்திட்டீங்க.

S.முத்துவேல் said...

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறங்க !

வெரி சூப்பர் சார் .அப்படியே கவுண்டமனி பேசின எப்படி இருக்குமோ அப்படியே இருக்கு .

அந்த போட்டோ மிக அருமையாக இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி சார் !

வளர்க்க ...

அப்புறம் அந்த கவுண்டமனி உக்காந்துன்னு இருக்கிற போட்டோ பார்த்தவே சிரிப்பு தாங்க முடியல !!!...


இன்னும் பல பதிவுகளை எழுதி

வாழ்க வழமுடன் பல்லாண்டு.

logu.. said...

hayyo... vada pocheeyyyyyyy...

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

சுடிதார் ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

தாவணி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

காதலில் விழுந்துட்டீங்களா? நீங்களுமா?உங்களை ரொம்ப அப்பாவினு நினைச்சனே

சி.பி.செந்தில்குமார் said...

ஓஹ்ஹோ,இந்த ஃபீலிங்கை மறைக்கத்தான் கூலிங்க் கிளாஸ்?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராமசாமி,நைட் 1 மணிக்கு பதிவா?

Anonymous said...

ஹே!!! அண்ணனுக்கு ஒரு ஒட்டு, பிளஸ் இந்த பதிவுக்கு ஒரு கள்ள ஒட்டு. ஐ ஆம் பீலிங் லவ் மூட் யா!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
அதான பாத்தேன்..
என்னடா இன்னும் பன்னிக்குட்டிக்கு எதுவும் நடக்கலயேனு பாத்தேன்.
நடந்திடுச்சு. நடத்திட்டீங்க.///

ஆமாங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.முத்துவேல் said...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறங்க !

வெரி சூப்பர் சார் .அப்படியே கவுண்டமனி பேசின எப்படி இருக்குமோ அப்படியே இருக்கு .

அந்த போட்டோ மிக அருமையாக இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி சார் !

வளர்க்க ...

அப்புறம் அந்த கவுண்டமனி உக்காந்துன்னு இருக்கிற போட்டோ பார்த்தவே சிரிப்பு தாங்க முடியல !!!...


இன்னும் பல பதிவுகளை எழுதி

வாழ்க வழமுடன் பல்லாண்டு.///

ரொம்ப ரொம்ப நன்றி சார்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

அடங்கொன்னியா இவ்ளோ அழகா எழுதியிருக்க மாம்ஸ் சூப்பர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
அடங்கொன்னியா இவ்ளோ அழகா எழுதியிருக்க மாம்ஸ் சூப்பர்!///

தேங்க்ஸ் மாப்பு, எல்லாம் உங்கள மாதிரி ஆளுக கொடுக்கிற யானைப்பால்தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////logu.. said...
hayyo... vada pocheeyyyyyyy...///

:(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
காதலில் விழுந்துட்டீங்களா? நீங்களுமா?உங்களை ரொம்ப அப்பாவினு நினைச்சனே////

ஆஹா நாமலாத்தான் உளரிட்டோமா?(அப்பிடியே இமேஜ (?) மெய்ன்டெயின் பண்ணியிருக்கலாமோ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ஓஹ்ஹோ,இந்த ஃபீலிங்கை மறைக்கத்தான் கூலிங்க் கிளாஸ்?////

கூலிங் கிளாஸ் போட்டது ஒரு குத்தமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராமசாமி,நைட் 1 மணிக்கு பதிவா?////

ஆமாங்ணா, பீலிங்ஸுக்கு டைம் ஏதுங்ணா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குவைத் தமிழன் said...
ஹே!!! அண்ணனுக்கு ஒரு ஒட்டு, பிளஸ் இந்த பதிவுக்கு ஒரு கள்ள ஒட்டு. ஐ ஆம் பீலிங் லவ் மூட் யா!!!///

சேம் பீலிங்!!!

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் மீள்பதிவுக்கு இவ்வளவு மறுமொழிகள் - ஆமா அருண் அப்புறம் ரமேஷ் - இவங்கல்லாம் குணமாயிட்டாங்களாம் - நீங்களும் போய்ட்டு வரது தானே ! ஆல் த பெஸ்ட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////cheena (சீனா) said...
ம்ம்ம்ம் மீள்பதிவுக்கு இவ்வளவு மறுமொழிகள் - ஆமா அருண் அப்புறம் ரமேஷ் - இவங்கல்லாம் குணமாயிட்டாங்களாம் - நீங்களும் போய்ட்டு வரது தானே ! ஆல் த பெஸ்ட்//////

ஹி...ஹி... நீஙகளும் கும்மில கலந்துடடீங்க போல...!

ப்ரியமுடன் வசந்த் said...

Nice feel...!