Thursday, July 21, 2011

மூன்றை வைத்து பரவும் பதிவுலக வைரஸ்...



Photobucket
ஓடு..ஓடு.. நிக்காம ஓடு.... வேலாயுதம் வருதாம்...!

எழுதுவதற்கு சரக்கு (?)  கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தொடர்பதிவிற்கு அழைத்து வழிகாட்டிய சேட்டைக்காரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்
அ.  பீலா விடுதல்
ஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது
இ.  பஞ்சாயத்து பண்ணுதல்


2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. கையும் களவுமாக மாட்டுவதை
ஆ.பிட்டுப்படம் பார்ப்பது
இ. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் & டெம்ப்ளேட் ரிப்ளைஸ்


3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. தனியாக உக்காந்து தண்ணியடிப்பவர்கள்
ஆ. அநியாயத்துக்கு நல்லவனாக இருப்பவர்கள்
இ. விடாத பெரும்பேச்சு (நான் ரொம்ப அப்பாவிங்க...!)


4. புரியாத 3 விஷயங்கள்
அ. தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள்
ஆ. அழகான பெண்கள் பேசுவது
இ.  டிவி சீரியல்கள்


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மானிட்டர் (தண்ணி அல்ல)
ஆ. கீபோர்ட்
இ. மௌஸ்


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
அ.  மிஸ்டர் பொதுஜனத்தின் பப்ளிசிட்டி அராஜங்கள் 
ஆ. குறள் டீவி
இ. அப்பாடக்டர்ஸ் ஆஃப் டமில் சினிமா


7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
அ. மூச்சு விடுகிறேன்
ஆ. மானிட்டரை பார்க்கிறேன்
இ. இதை டைப் பண்ணுகிறேன்


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்
ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்
இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
அ. சமைத்தல்
ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்
இ.  பேப்பர் படித்தல்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
அ. பதிவு எழுத
ஆ. அல்லக்கைகளை வைத்து பராமரிக்க
இ. கடலை போட


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
அ. பொன்னி அரிசிச் சோறு
ஆ. காரக்கொழம்பு
இ. மாம்பழம்


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. வெட்டி நியாயம்
ஆ. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
இ. புதுசா காதலிக்கிறவனின் புலம்பல்கள்


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..
ஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...
இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...


14. பிடித்த 3 படங்கள்
அ. வில்லு
ஆ. வீராச்சாமி
இ. லத்திகா


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. உயிர்
ஆ. உடம்பு
இ.  உலகம்


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. சாம் ஆண்டர்சன்
ஆ. பவர் ஸ்டார் சீனிவாசன்
இ. டீ ஆர்


அது சும்மா காமெடிக்கு, மற்றபடி தொடர விருப்பமுள்ளவர் யாரும் தொடரலாம். 
!

Monday, July 18, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய வில்லன்ஸ்...


தமிழ்சினிமா பல்வேறு துறைகளில் வெகுவேகமாக வளர்ச்சி நடை போட்டாலும், இன்னும் கைவிடமுடியாமல் இருக்கும் சில விஷயங்கள் காதல், வில்லன், சண்டை, ஹீரோயிசம்! அதில் வில்லன்களை வைத்துக் கொண்டு நம்மவர்கள் பண்ணும் அநியாயங்கள் இருக்கே, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் அதைவிட வேறு காமெடியே தேவையில்ல.




ஒருகாலகட்டத்தில் வில்லன்களுக்கென்று தனி கெட்டப்புகள் இருந்தன. மொட்டைத்தலை, முரட்டு உடல்வாகு, கெடா மீசை, கோபமான முகம், குறுகுறுப்பான பார்வை, எகத்தாளச் சிரிப்பு, கர்ஜிக்கும் வசனங்கள் என்று அவர்கள் உலகமே வேறு. தற்போது வரும் வில்லன்கள் ஏதாவது ஒரு மேனரிசத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படி வில்லன்கள் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வைத்திருந்தும், ஏன் பிரம்மாண்டமாய் ஆறு அடி உயரத்தில ஆஜானுபாகுவாய் இருந்தாலும், காய்ந்த கருவாடு மாதிரி இருக்கும் ஹீரோக்களிடம் உருண்டு உருண்டு அடிவாங்கித்தான் ஆகவேண்டும், வேறு வழி? ஹீரோக்கள் தோற்க முடியுமா?


அப்புறம் நம் வில்லன்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கே, அப்பல்லாம் இவர்களுக்கு விதவிதமான ஆயுதங்கள் செய்வதற்கென்றே நிறையத் தொழிற்சாலைகள் இருந்திருக்கும் போல. 90-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள், ஹீரோ வழக்கம் போல தெனாவெட்டாக வந்து கையால் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மடிப்பு கலையாமல் செல்வார்.


80-களில் வந்த எல்லாப்படத்துலேயும் இந்தக் காட்சி தவறாம இருக்கும், வில்லன் தன் பரிவாரங்களுடன் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பார். அங்கே சென்று வில்லன்களை ஒழிக்க திட்டமிடும் ஹீரோ, கதாநாயகி அல்லது கவர்ச்சி நாயகியின் உதவியோடு கூத்தாடிகளை போல வேசம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கவர்ச்சி ஆட்டம் போடுவார். அதுவும் நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, அது ஹீரோ, ஹீரோயின்தான்னு தியேட்டரில் இருக்கும் எல்கேஜி பையனுக்கு கூட விளங்கும், ஆனா உள்ளூர் மற்றும் சர்வதேச போலீசிற்கு தண்ணி காட்டிட்டு கள்ளக் கடத்தல்களில் ஈடுபடும் வில்லன்கள் ஒருத்தனுக்கும் தெரியாதாம். பாவம்யா வில்லனுங்க, இவ்வளவு கேவலமாவா காட்டறது? இது ஏதோ ஒரு படத்தில் எடுத்திருந்தால்கூட பரவாயில்லை, டைரக்டர் யோசிக்க (?) டைம் இல்லாம எடுத்துட்டாருன்னு விட்ரலாம், ஆனா எத்தனை படங்களில் இதே காட்சிய வெச்சி டார்ச்சர் பண்ணாய்ங்க தெரியுமா?




அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார். நாமும் கிளைமாக்ஸ் சுவராசியத்தில் பெரிதாக கண்டுகொள்ளமாட்டோம்.


சிலபடங்களில் வில்லன்களுக்கு திடீரென்று ஒரு பெரிய விஐபியை போட்டுத்தள்ள வேண்டி வரும். உடனே அவர்கள், எத்தனை அல்லக்கைகளை வைத்திருந்தாலும், மும்பையில் இருந்து ஒரு விஷேசமான கொலையாளியை வரவழைப்பார்கள் (அந்த கேரக்டரையும் இதுவரை ஒரே நடிகர்தான் பெரும்பாலான படங்களில் பண்ணி இருக்கிறார்). அவர் மெயின் வில்லனை பார்த்து ஸ்பாட் கேஷ் பேமெண்ட் வாங்கிக் கொண்டு, முடித்துக் காட்டுகிறேன் என்று சவால் வேறு விட்டுவிட்டு வேலையை தொடங்குவார்.  அந்த விஐபி வரும் வழியில் ஒரு கட்டிடத்தில் ஏறி தன் அதிநவீன(?) ஆயுதங்களை பொறுத்தி வெகுநேரமாக ஜூம் பண்ணிக் குறிபார்த்துக் கொண்டே காத்திருப்பார். ஆனால் பாவம் என்ன பண்றது, நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? ரொம்பக் கேசுவலாக வந்து விஐபியை காப்பாற்றி விடுவார்.




சில சண்டைக்காட்சிகளில் ஹீரோவும் சைடு வில்லனும் ஆக்ரோசமாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள், சுற்றி நிற்கும் வில்லனின் அல்லக்கைகள் எதிரி மாட்டிக் கொண்டான் என்று எல்லாரும் சேர்ந்து போட்டுத்தள்ளுவார்களா, அதைவிட்டுவிட்டு ஏதோ மெரினா பீச்சில் மீன் பொறிப்பதை எச்சி ஒழுக வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, அல்லக்கைள் எல்லாரும் சேர்ந்து ஹீரோவை அடிக்கும் போது எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக போய் அடிக்க மாட்டார்கள். சொல்லி வெச்ச மாதிரி கியூவில் நின்று ஒவ்வொருத்தனாகத்தான் போய் அடிப்பார்கள். ஹீரோ ஒருத்தனை அடித்து முடித்துவிட்டு அடுத்தவனுக்கு வெயிட் பண்ணுவார். போய் வரிசையாக அடிவாங்கி சரிவார்கள். ஆனால் பாருங்க கம்பி, உருட்டுக்கட்டைனு எக்குத்தப்பா அடிவாங்கினாலும் திரும்ப திரும்ப ஹீரோவிடம் வந்து அடிவாங்கி கதறியபடி பறந்து சென்று விழுவார்கள். கொடுத்த காசிற்கு என்ன ஒரு விசுவாசம் பார்த்தீர்களா?


வில்லன்களிடம் ஏகப்பட்ட நவீன மெசின்கன்கள் இருக்கும், ஹீரோவைக் குறிவெச்சு சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார், எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு அல்லக்கை செத்து விழுவான். ஹீரோ தன்னிடம் துப்பாகி இருந்தாலும்,  வெறும் கையாலேயே (?) பலரை போட்டுத் தள்ளிவிட்டு கடைசியில் மெயின் வில்லனிடம் வந்து சேர்வார். தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு எழுதப்படாத சட்டம். வில்லனிடம் எத்தனை அல்லக்கைகள் இருந்தாலும், ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேர் மோதாமல் படம் முடியாது. அதுவும் அவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றார்கள் என்றால் கையால்தான் சண்டை போடுவார்கள். அதுவரை வைத்திருந்த ஆயுதங்கள் எங்கே போகும் என்றே தெரியாது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு தங்கள் பலத்தை காண்பிப்பார்கள். அதுவரை அடியே வாங்காமல் இருக்கும் ஹீரோவும் ஓரிரண்டு அடிகள் வாங்குவார். இரத்தம் கூட வரும்.




பழைய படங்களில் பெரும்பாலும் கிளைமாக்சில் சண்டை முடிந்தவுடன் போலீஸ் வந்து யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மிஸ்டர் கந்தசாமி என்பார்கள். இடைக்கால, மற்றும் தற்கால படங்களில் சண்டை முடிந்து ஹீரோ வில்லனை கொல்ல முயன்றுவிட்டு வேண்டாம் என்று ஆயுதத்தை கீழே அதுவும் வில்லனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் விட்டுச் செல்வார். உடனே வில்லன் அதை எடுத்துக் கொண்டு ஹீரோவைக் கொல்ல ஓடிவருவார்.  இந்த இடத்தில் ஏதாவது செகண்ட் ஹீரோயின் என ஏதாவது கேரக்டர் இருந்தால் அதை ஹீரோவை காப்பாற்ற வைத்து பலி கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றால், வில்லனை ஹீரோவே தடுத்து நிறுத்தி மிக நீண்ட வசனம் ஒன்று பேசுவார். அந்த நொடிவரை ஆயிரத்தெட்டு அடிவாங்கியும் திருந்தாமல் இருக்கும் வில்லன், இந்த வசனத்தை கேட்டதும் உடனே ஹீரோவை கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீரோடு திருந்தி நிற்பான். படமும் முடியும், மக்களும் கண்ணீரோடு தியேட்டரில் இருந்து எந்திரிப்பார்கள். இதற்கு அந்த வசனத்தை படம் ஆரம்பிக்கும் போதே பேசித் தொலைத்து இருந்தால், இத்தனை பிரச்சனைகள் வந்திருக்காது, நாமும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்திருப்போம்.... இல்லையா?

(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட....  பதிவா போச்சு... !)

நன்றி: திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்ற பேச்சுக்கள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ்  கட்டுரை இப்பதிவிற்கு உதவியாக இருந்தன.
!

Thursday, July 14, 2011

இருட்டில் வந்த அந்த உருவம்....!





உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்த்தால் ஏதோ நின்று கொண்டிருந்தது. பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது. அமைதியாகப்படுத்தான். அது நெருங்கி வந்து முகத்தில் கையை வைத்து வருடியது. அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. மயக்கம் வருவது போல் உணர்ந்தான். அந்த உருவம் சற்று நிறுத்தி பின் மறுபடி வருட ஆரம்பித்தது. 


கணேஷ் இப்போது அரைமயக்க நிலையில் இருந்தான். மெல்ல நினைவு வருவது போலும் இருந்தது. யார் நீ, என்ன செய்கிறாய் என்று கேட்க நினைத்தான் வாயை அசைக்க முடியவில்லை. அதற்குள் அந்த உருவம் பயப்படாதே, நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம் சற்று பொறுத்துக்கொள் என்று அவன் மனதில் பதிய வைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். அதற்குள் அவனும் அது போலவே மாறி இருந்தான்.



இனி வேறு வழியில்லை, எழுந்து வெளிய ஓடிவிடலாம் என்று முடிவு செய்து எழ முயன்றான், ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த உருவம் அசையவே முடியாத அளவுக்கு அவனை உறையவைத்துவிட்டது.. ஆற்றாமையோடு எரிச்சலும் சேர்ந்து கொள்ள கோபமாய் அந்த உருவத்தைப் பார்த்தான். அது எக்காளமிட்டு சிரித்தது. கணேஷிற்கு கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது. 


அந்த உருவம் மறுபடியும் அவன் அருகில் வந்து அவன் முகத்தில் கைவைத்துத் தடவியது. அதே கெட்ட வாடை. நெஞ்சில் ஏதோ கரிப்பது போல் இருந்தது. ஏப்பம் வேறு வந்தது போல் உணர்ந்தான். அதில் ஏதோ புளித்த வாடை, மெல்ல இருமினான். அந்த உருவம் இப்பொது அவன் முகத்தில் இருந்து இறங்கி வயிற்றில் கைவைத்து அழுத்தத் தொடங்கியது. நெஞ்சுக்குள் என்னமோ பந்தாய் மேலே உருண்டு வந்தது. 


பயந்து போய் அந்த உருவத்தை பரிதாபமாக பார்த்தான் கணேஷ். அதைப் புரிந்து கொண்ட அந்த உருவம் குடல்வழியாக உனது ஆத்மாவை வெளியே எடுக்க போகிறேன் என்று அவன் மனதில் பதிய வைத்தது. என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் பொலக் என்று வெளிய வந்து விழுந்தது அவன் குடல், மறுபடியும் ஓங்கரித்தான்.... 


டேய்ய் என்று கதறீயபடி முதுகில் ஓங்கி அறைந்தது அந்த உருவம்.கணேஷ் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். பார்த்தால், அருகில் தலையை பிடித்தபடி ரூம் மேட் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். ஏன்டா எழவெடுத்தவனே, இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...? எத்தனை தடவடா எழுப்புறது?




இது டெரர் பாண்டியன் அவர்களின் பதிவிற்கு (கலி முத்தி போச்சி..) எதிர் கவிதை.. ச்சே.. எதிர் கதை என்று மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...! (இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)

படத்திற்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

Thursday, July 7, 2011

கக்கூஸ்ல உக்காந்து பேசாதீங்க....!





நம்ம டெரர் பாண்டி ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தாரு. காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால, அவசரமா கக்கா போக வேண்டியதா போச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டு அங்கே இங்கே அலைஞ்சு ஒருவழியா டாய்லெட்ட தேடி கண்டுபுடிச்சாரு. அங்க வரிசையா அஞ்சாறு டாய்லெட்ஸ் இருந்துச்சு, அதுல காலியா இருந்த ஒண்ணுல போய் அப்பாடான்னு உக்காந்தாரு.

அப்போ திடீர்னு பக்கத்து டாய்லெட்ல இருந்து ஒரு குரல்.

என்னப்பா எப்படி போய்ட்டு இருக்கு?

டெரருக்கு ஆச்சர்யம்... ஒரு செகண்ட் யோசிச்சிட்டு பதில் சொன்னாரு,

இன்னிக்கு கொஞ்சம் பரவால்ல சார், அவ்வளவு மோசமில்ல...

கொஞ்ச நேரம் சைலண்டா இருந்துச்சு.. திடீர்னு மறுபடி அதே குரல்,

அப்புறம் எல்லாம் முடிஞ்சதா?

டெரருக்கு ரொம்ப சந்தோசம், கக்கூஸ் போகும் போது கூட மக்கள் இம்புட்டு பாசமா இருக்காய்ங்களேன்னு, உடனே பதில் சொன்னாரு,

இதோ முடிஞ்சிட்டே இருக்கு சார்...!

உடனே மறுபடியும் அதே குரல், கோபமா....

சாரிடா மாப்ள அப்புறமா கால் பண்றேன், இங்க ஒரு பன்னாடை எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்கான்....

டெரர்: ?!?!?!?!


********


பறங்கிமலை ஜோதிக்கு கெளம்பி வாடா, இன்னிக்கு ஸ்பெசல் ஷோ இருக்குன்னு செல்வாவுக்கு போன் பண்ணி கூப்பிட்டார் சிரிப்பு போலீசு. அந்த நேரம் பார்த்து செல்வா கைல காசு கம்மியா இருந்துச்சு, என்ன பண்றதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்ச செல்வா, ஒரு முடிவுக்கு வந்தவரா பறங்கிமலை ஜோதி போற ஒரு பஸ் பின்னாடி ஓட ஆரம்பிச்சார்.

தியேட்டர் போய் சேர்ந்த உடனே,

சிரிப்பு போலீஸ்: ஏன்டா இப்படி வேர்த்து மூச்சு வாங்கிட்டு வர்ர? என்னடா பண்ணே?

செல்வா: இல்லண்ணா கைல காசு கம்மியா இருக்கு, அதுனால பஸ் பின்னாலேயே ஓடிவந்து 5 ரூபாய மிச்சம் பண்ணிட்டேன்.. எப்படி என் டெக்குனிக்கு?

சிரிப்பு போலீஸ்: போடா ராஸ்கல், டாக்சி பின்னாடி ஓடி வந்திருந்தா 500 ரூபாய மிச்சம் பண்ணி இருக்கலாம்ல?


********




நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட்டு ஒரு ஆபீஸ்ல ஆபீஸ் பாயா வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள் மேனேஜரு கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வா அப்படின்னார். வெங்கட்டும் எடுத்துட்டு வந்தார். 

வெங்கட்டு ரொம்ப சீக்கிரம் எடுத்துட்டு வந்துட்டாருன்னு மேனேஜருக்கு ஒரே சந்தோசம்,  உடனே பாராட்டுனாரு, இதுவரைக்கும் இங்க வேல செஞ்ச எந்த ஆபீஸ் பாயும் இவ்வளவு ஸ்பீடா தண்ணி எடுத்துட்டு வந்ததே இல்லப்பா.... வெரி குட்....

இப்படியே கொஞ்சநாள் போச்சு, ஒருநாள் வெங்கட்டு தண்ணி எடுத்துட்டு வர ரொம்ப டைம் ஆகிடுச்சு, மேனேஜரு பயங்கர கோபமா கத்த ஆரம்பிச்சிட்டார். சவுண்ட கேட்டுட்டு வெங்கட்டு கையில் வெறும் கிளாசோட பயந்துக்கிட்டே வந்தார்.

யோவ் இன்னிக்கு என்னய்யா ஆச்சு, இவ்வளவு டைம் ஆகியும் ஏன்யா வெறும் கிளாசோட வந்திருக்க?

சார், நான் டெய்லி தண்ணி எடுத்துட்டு வர்ர தண்ணித் தொட்டி மேல யாரோ உக்காந்து கக்கா போய்ட்டு இருக்காங்க சார்.... இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியும் இன்னும் அவங்க வெளிய வரல, அதான் இன்னும் தண்ணி எடுக்கல சார்..!

மேனேஜர்: ^(#@;(#@#$$%%




இப்போ ஒரு புதிர் (?):
மூணு எறும்புகள் வரிசையா போய்ட்டு இருந்துச்சாம், மொத எறும்பு கிட்ட போய் உனக்கு பின்னாடி எத்தனை பேருன்னு கேட்டா, அது சொல்லுச்சாம்,
எனக்கு பின்னாடு ரெண்டு எறும்புங்க வருது

ரெண்டாவது எறும்பு,
எனக்கு முன்னாடி ஒண்ணும் பின்னாடி ஒண்ணும் வருது,


மூணாவது எறும்பு,
எனக்கு பின்னாடி ரெண்டு எறும்பு வருதுன்னு சொல்லுச்சாம், ஏன்? 


கண்டுபுடிங்க...


ஏன்...
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.????


அது பொய் சொல்லிருக்கு.....!




படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!
ஜோக்குகள் மெயிலில் வந்தவையே!


!

Tuesday, July 5, 2011

வேலாயுதம் கதை கேட்ட கவுண்டமணி!


இது நியாயமா?


நம்ம சின்ன டாகுடரோட அடுத்த படமான வேலாயுதம் பரபரப்பா தயாராகிட்டு இருக்கும் நிலையில் ஒருநாள் நம்ம கவுண்டர் பார்ல உக்காந்து அடிச்சிட்டு இருக்கும் போது அங்கே எசகுபிசகா சின்ன டாகுடரை மீட் பண்ண வேண்டியதா போச்சு. கவுண்டரு பொங்கலுக்கே வெடி வெடிப்பாரு, தீவாளின்னா சும்மா விடுவாரா?

டே வீங்குன வாயா... இன்னிக்கு எப்படியும் அவனை ரெண்டுல ஒண்ணு பாத்துடுறேண்டா....



படத்த ஓட்டுறதுக்கு உன்னத்தாம்மா நம்பி இருக்கேன், கைவிட்ர மாட்டியே?



நைனா இவங்க எல்லாத்துக்கும் ஓட்டு இருக்காம், நல்லா செக் பண்ணிட்டேன்...


குளுகுளு பார், இரவு நேரம் ஒன்பதரை:

கவுண்டர்: அடடடா..... இந்த தனியா உக்காந்து தண்ணிய்டிக்கிற சொகம் இருக்கே..... என்ன கொடுத்தாலும் கெடைக்காதுப்பா..... என்னமா ஏறுதுய்யா....

டாகுடர்: ங்ணா வணக்கம்ணா....

கவுண்டர்: டேய்ய்.. யார்ராவன்... இங்க வந்து....  ஓ நீய்யா? வணக்கம் சொல்ற இடமாடா இது?

டாகுடர்: சும்மா ஒரு மரியாதைக்குங்ணா....

கவுண்டர்: அது என்ன சும்மா மரியாத.... சொமந்துகிட்டு மரியாத.....! சரி சரி வந்தது வந்தே, உக்காரு... சேந்தே அடிப்போம்

டாகுடர்: இல்லீங்ணா.. அது வந்து....

கவுண்டர்: ஆமா நீங்கள்லாம் எங்க கூட அடிக்க மாட்டீங்கள்ல?

டாகுடர்: அப்படிலாம் இல்லீங்ணா...... 

கவுண்டர்: அப்ப ஒழுங்கா அப்படி உக்காந்து அத எடுத்து அடி......

(கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் அடிக்கிறாங்க.....)

கவுண்டர்: ம்ம்.... அப்புறம் தம்பி அடுத்த படம் எப்படி வந்துட்டு இருக்கு?

டாகுடர்: வேலாயுதத்த பத்தி கேட்குறீங்களாங்ணா...? சூப்பரா போயிட்ருக்குங்ணா....

கவுண்டர்: என்ன.. ஷூட்டிங்லாம் சூப்பராத்தான் போகும், படம்தான் படுத்துக்கும்.... அதெல்லாம் இருக்கட்டும், கதை என்ன? (அய்யய்யோ.... இவன் படத்துல போயி கதைய பத்தி கேட்டுட்டேனே? இன்னிக்கு என்னாகப்போகுதோ?)


இந்த தடவ அந்த மாதிரி எஸ்.எம்.எஸ்லாம் வராது சார், தைரியமா இருங்க...!


டாகுடர்: அப்படி கேளுங்ணா, இந்தப் படத்துல மொத தடவையா இதுவரைக்கும் யாருமே எடுக்காத ஒரு கதைய வெச்சி எடுக்குறோம்ணா...

கவுண்டர்: அது என்ன யாருமே எடுக்காத கதை?... என்ன ஆப்பிரிக்கா கரடிய ஜோடியா வெச்சு எடுக்குறியா?

டாகுடர்: அட அது இல்லீங்ணா, மொதல்ல நீங்க கதைய கேட்டுப்பாருங்க, அப்படியே புல்லரிச்சி போய்டுவீங்க... 

கவுண்டர்: இந்த புல்லரிக்கிறது, புளுத்து போய் அரிக்கிறதெல்லாம் இருக்கட்டும் தம்பி... நீ மொதல்ல கதைய சொல்லு...

டாகுடர்: அதாவதுங்ணா கதைப்படி ஹீரோ டீக்கடை வெச்சிட்டு, அமைதியா தங்கச்சி கூட வாழ்ந்துட்டு இருக்கான். அவளுக்கு பணக்கார பையன் ஒருத்தனோட காதல் வந்துடுது, 

கவுண்டர்: டேய்ய் பெருச்சாளி மண்டையா.....  இதுதான் யாருமே எடுக்காத கதையாடா? படுவா...தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...! இத உன் படத்துலேயே நாலஞ்சு தடவ எடுத்திருக்கியேடா ....?

டாகுடர்: ங்ணா.. பொறுமையா கேளுங்ணா இன்னும் நிறைய இருக்கு,  அவன் அவளை ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சி போயிடுறான். இங்கதான் ஒரு பயங்கரமான சீன் வெச்சிருக்கோம், பயப்படாம கேளுங்க

கவுண்டர்: கருமாந்திரம் கருமாந்திரம்.... உன்கிட்ட போய் கத கேக்கறதுன்னு உக்காந்தாச்சு, இதெல்லாம் பாத்தா முடியுமா? சரி, இன்னொரு ரவுண்டு அடிச்சிட்டு  நீ பயப்படாம சொல்லு!

டாகுடர்: ஹி..ஹி... அப்படி பொறுமையா கேளுங்ணா, இனிமேத்தானே ட்விஸ்ட்டே வெச்சிருக்கோம், அவனைத்தேடி நானும் வெளிநாட்டுக்கு போறேன், அங்க ஒரு தமிழ் பொண்ண பாத்து எனக்கு லவ் வந்துடுது, அப்பிடியே அங்க ரெண்டு டூயட் சாங்ஸ் எடுக்குறோம்.

கவுண்டர்: க்க்க்ர்ர்ர்..... க்க்க்ர்ர்ர்..... த்த்தூ............ இதுதான் உங்க ட்விஸ்ட்டா... வெளங்கிரும் அந்த படம்..... !

டாகுடர்: சரி அத விடுங்ணா... கெட்டப்ப பத்தி நீங்க கேக்கலியே...? இந்தப்படத்துல இதுவரைக்கும் எந்தப் படத்துலயுமே வராத ஒரு கெட்டப் போட்டிருக்கேன்.... பாத்தா அப்படியே அசந்துடுவீங்ணா....

கவுண்டர்: நீ மேக்கப் போடாம வந்தா போதுமே, அதுவே இதுவரைக்கும் யாருமே பாக்காத கெட்டப்பா இருக்குமே?

டாகுடர்: உங்களுக்கு ரொம்பக் குறும்புனா.....!

கவுண்டர்: சரி அந்த கெட்டப்பு கருமத்த சொல்லித்தொலை....!

டாகுடர்: மீசைய எடுத்துட்டு, கன்னத்துல ரெண்டு பக்கமும் மரு வெச்சிட்டு பயங்கரமா வர்ரேனுங்ணா... அதுல....

கவுண்டர்: %^&%$#$#$*&*&............ டேய் எவண்டா பார் மேனேஜரு.. இங்க வாடா.... இவனுக்கு குதிரைக்கு ஊத்துற ரம்மு இருந்தா கொண்டு வந்து கொடுங்கடா.... அய்ய்யோ... சொகமா முட்ட பரோட்டாவும் சிக்கன் கறியும் தின்னுக்கிட்டு இருந்தேன்... பன்னாட எல்லாத்தையும் கெடுத்துட்டானே......

டாகுடர்: ங்ணா என்னங்ணா.... இன்னும்முழுக்கதையவும் சொல்லலியே.... அதுக்குள்ள இப்படி உணர்ச்சி வசப்பட்டா எப்படி?

கவுண்டர்: டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து தண்ணியடிச்சிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா? இனி மூணுநாளு கண்ணுமுழிச்சி உக்காந்து தண்ணியடிச்சாலும் இந்தக் கேவலமான ஃபீலிங் மாறாதேடா....

டாகுடர்: ங்ணா உங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல போல... அ..து ...ச்ச்சே மூடு சரியில்ல போல அதுனால..... நான் அப்பாலிக்கா வந்து கத சொல்றேனுங்ணா....

கவுண்டர்: அடேய்ய் எலிப்புழுக்க வாயா.... ஒருதடவ நாலு வரி கத கேட்டதுக்கே என்னைய இப்படி ஆக்கிட்ட, இதுல மறுக்கா வேற வந்து சொல்லுவியா? படுவா அதுக்கு உன் படத்தையே நாலுதடவ பாத்துடுவேனே.....

டாகுடர்: சரிங்ணா இன்னும் 10 நிமிசத்துல சங்கவி வந்துடும்ணா, நான் கெளம்பறேன்.....

கவுண்டர்: அடங்கொன்னியா.... இன்னும் இந்த பழக்கத்த நீ விடலியா? அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடைகளோட கோர்த்து விடுற.....? சே.. என்ன எழவுடா இது..... இன்னிக்கு ஆல் ப்ரோகிராம் கேன்சல்......!


அய்யா சாமிகளா இந்தாளு பேச்ச கேட்டுக்கிட்டு படத்துக்கு மட்டும் வராம இருந்திடாதீங்கய்யா.......


படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!

Saturday, July 2, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பிகருங்கள கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. இதே மாதிரி சினிமாக்காரங்களால கண்டுக்காம வீணாக்கப்பட்ட, சில பல  அம்சமான நடிகைகள் லிஸ்ட்ட ஏற்கனவே ஒரு பதிவுல போட்டிருந்தேன் (பழைய பதிவு ஒண்ண படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு?). அதப் படிச்சிப்புட்டு அப்பவே பல பேரு கதறி அழுதாய்ங்க. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகைகள கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)


1. சிந்து மேனன்




அழகுன்னா அழகு குடும்பப்பாங்கான அழகு, அப்படி ஒரு அழகான முகம், அதில் வரும் அத்தனை நளினமான உணர்ச்சிகள், பார்த்துட்டு எல்லாரும் கொஞ்சம் கிறங்கித்தான் போவாங்க. ஆனா என்ன பிரயோசனம்? அங்கொண்ணும் இங்கொண்ணும் சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க. சமீபத்துல ஈரம்னு ஒரு படத்துல நடிச்சிருந்தாங்க, அந்தப் பாட்டுல கூட ரொம்ப நல்லா இருப்பாங்க சிந்து. நம்ம மாங்கா மண்டைசுக்கு அப்படியும் புடிக்கல...!


2. வேகா (ஷோபிக்கண்ணு)


பசங்க படத்துல ஷோபிக்கண்ணுவா நடிச்ச வேகாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் (எனக்கு மட்டுமா?). பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி தோற்றம், உணர்ச்சிக் குவியலாய் முகம், தெளிந்த நீரோடை போல் நடிப்பு. அதிலும் அந்த புருவங்கள மேலும் கீழுமாய் அசைச்சி பார்க்குமே ஒரு பார்வை... சான்ஸ்லெஸ்..... ! பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க, வேற என்ன சொல்றது?
ஷோபிக்கண்ணுவுக்காகவே இந்த ஒருவெட்கம் வருதே வருதே பாட்ட எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்.




3. சஞ்சனா


ரேணிகுண்டா படத்துல அடக்க ஒடுக்கமா சீரியசா வருவாங்க, ஆனா அதுலல்லாம் ஒண்ணுமில்லீங்கோ, கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்......... (மேல போட்டிருக்க படம்தாங்க கெடச்சதுலேயே கொஞ்சம் டீசண்ட்டு... ஹி.. ஹி...)


4. மல்லிகா கபூர்



மென்மையான அழகு, அற்புதத்தீவு படத்துல இளவரசி வேடத்துல நிஜமாவே ஒரு இளவரசி மாதிரி இருந்தாங்க, அத்தனை அழகு.......! அழகான ஸ்ட்ரக்சர், அதற்கேத்த சூப்பர்ப் முகவாக்கு, ம்ம்...... யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ? நாம அட்லீஸ்ட் படத்துலேயாவது பாத்து ரசிக்கலாம்னா நமக்கு அதுக்கும் கொடுத்து வெக்கலியே?


5. விமலா ராமன்



செமகட்டைன்னு சொல்லுவாங்களே, அப்படின்னா என்னன்னு தெரியனும்னா இவங்க ஸ்டில்ச பாருங்க. என்ன ஒரு கட்டை? ஹோம்லி முகம், கவர்ச்சியான உடல்வாகுன்னு வெரி டேஞ்சரஸ் காம்பினேசன், என்ன இருந்தும் என்ன பயன்,வழக்கம் போல (?) மனவாடுகள் அள்ளிட்டு போய்ட்டாங்க, இப்போ தெலுங்குல கலக்கிட்டு இருக்காங்க............ ! 


6. சமிக்‌ஷா 



அறிந்தும் அறியாமலும் படத்துல, பாவாடை தாவணியோட ஒரு காட்சில, அப்புறம் மாடர்ன் மங்கையா படம் பூரா.. சும்மா சொல்லக்கூடாதுங்க, நல்லாத்தாங்க இருந்துச்சு. நல்ல ஸ்லிம் பாடி, அதற்கேற்ற முக அழகு வேற என்னங்க வேணும்? ஆனா ஏன் நம்மாளுங்க படத்துல போட மாட்டெங்கிறானுங்க? ஒண்ணுமே புரியலியே?


7. அபிதா



சேது படத்த மறக்க முடியுமா, இல்ல அதுல நடிச்ச அபிதாவத்தான் மறக்க முடியுமா? எப்படி ஒரு ஹோம்லி அழகு? அபிதாவோட முகத்துக்கே எவ்வளவு வேணாலும் கொட்டி கொடுக்கலாம். அம்மிணி ஒரே ஒரு எக்குத்தப்பான மலையாள படத்துல நடிச்சிருச்சுங்க, அதுவும் சேது வரமுன்னாடி சான்ஸ் தேடிட்டு இருந்தப்ப நடிச்சதாம் அது.  சேது ஓடுனதுக்கப்புறம் அந்தப் படத்த தூசிதட்டி எடுத்து ரிலீஸ் பண்ணி அபிதாவ டோட்டலா காலி பண்ணிட்டானுங்க ராஸ்கல்ஸ்....! (அது என்ன படம்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, தனிமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.. கட்டணங்கள் தனி.... ஹி.. ஹி...)

ஓகே லிஸ்ட் பெருசாகிட்டே இருக்கு, இத்தோட முடிச்சுக்குவோம். கருத்து ஜொள்றவங்கள்லாம் வரிசையா வந்து ஜொள்ளிட்டு போங்க....!