Monday, November 29, 2010

(பிரபல)பதிவர்கள் பார்த்த பிட்டுப்பட பெசல் (ஃ)ப்ரிவியூ ஷோ...!


நம்ம ஓலப்பட்டி ஒண்டிப்புலி புதுசா ஒரு பிட்டுப் படத்த சொப்பன சுந்தரிய வெச்சு சுத்திச் சுத்தி ராவோடு ராவா எடுத்து முடிச்சிட்டாரு. அவருக்கு ஒரு தீராத ஆசை, பிரபல பதிவருங்கள்லாம் படத்தப் பாத்துப்புட்டு ஒரு நாலு வார்த்த நல்ல வார்த்த எழுதுனாங்கன்னா நல்ல பேரு வாங்கி படத்த ஓட்டிப்புடலாமேன்னு…  ! உடனே நம்ம சி.பி. செந்தில்குமார் சார கூப்புட்டு விஷயத்தச் சொல்லி பதிவர்கள் அனைவரையும் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரு. பிட்டுப் படம் அதுவும், ஓசிலேன்னா கேக்கவா வேணும், எல்லோரும் லீவு போட்டுட்டுச் சோறு தண்ணி கூட சாப்புடாமக் கெளம்பிட்டாய்ங்க.
தியேட்டர் டேமேஜர் கவுண்டரு வாசல்ல நின்னு ஒவ்வொருத்தரா வரவேற்கிறாரு. வாங்க நாமும் போயி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!
மொத.. ஆளா (?) மங்குனி அமைச்சர் தான் வரார்.
கவுண்டர்: வாங்க சார்…வாங்க  அது என்ன ஏதோ வயர இழுத்துக்கிட்டு வரீங்க?
மங்குனி அமைச்சர்: அது இன்டர்னெட் கனெக்சன், நேரா எங்க வீட்ல இருந்து வருது, ஏன்னா நான் டெய்லி 6 மணிக்கு பதிவு போடனும். இல்லேன்னா சூனியம் வெச்சிடுவாய்ங்க… !
கவுண்டர்: (ஏற்கனவே எழெட்டுத் தடவ வெச்ச மாதிரிதான் இருக்கு…!) ஆங்… இங்க கக்கூசுலாம் நல்லாத்தானுங்க இருக்கும், நீங்க 6 மணி என்ன 7 மணி வரைக்கும் கூட இருந்துட்டுப் போகலாம்…!
மங்குனி அமைச்சர்: அய்யா நான் சொன்னது ஆயி அல்ல, பதிவு…! பதிவு சார் பதிவு….! அதுக்கு இன்டர்னெட் கனெக்சன் வேணும், அதுக்குத்தான் இந்த வயர் கனெக்சன்…!
கவுண்டர்: என்ன கருமமோ.. என்ன கனெக்சனோ….  படம் முடியற வர யாருக்கும் ஒண்ணும் ஆகாம இருந்தா சரி…..!
மங்குனி அமைச்சர்: அப்போ இந்தப்படம் பார்ப்பது சரியா தவறான்னு இந்த பட்டன அமுக்கி உங்க கருத்த பதிவு பண்ணுங்க சார்…
கவுண்டர்: சார், மொத ஆளா வந்திருகீங்க,  பேசாம அப்பிடியே உள்ள போயிடுங்க சார்… இல்லே அப்புறம் வெட்டுக்குத்தாகிப் போயிடும் சொல்லிட்டேன்….!
 ...................................
பட்டாபட்டி: சார் படம் எந்த மொழில எடுத்திருக்காங்க?
கவுண்டர்: ஒலகத்துலேயே ஒரு பிட்டுப்படம் எந்த மொழின்னு கேட்ட மொத ஆளு நீதான்யா…!
பட்டாபட்டி: அதுக்கில்ல சார், இத்தாலி இல்ல கொலம்பியா மொழி, ரெண்டுல மட்டும் தான் நான் படம் பார்ர்ப்பேன், அதுனால தான் கேட்டேன். நல்லா ரோசன பண்ணிச் சொல்லுங்க…ஹி..ஹி..!
கவுண்டர்: யோவ்.. போஸ்டர பாக்கலே? இது தமிழ்ப் படம்யா…
பட்டாபட்டி: அப்போ நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன்…. சரி ஹீரோ யாரு..?  வந்ததுக்கு அதாவது தெரிஞ்சிட்டுப் போறேன்…ஹி..ஹி….!
கவுண்டர்: (கருமாந்திரம் புடிச்சவனுங்க, பிட்டுபடத்துல போயி ஹீரோ யாருன்னு கேக்குறானுங்க, சே… !)  அது வந்து… ஹீரோ.. யாரோ புதுமுகம் சார்… பேரு….  ராகுல்….
பட்டாபட்டி: யோவ்… இத மொதல்ல சொல்லித்தொலைய வேண்டியதுதானே? என் தானைத்தலைவன் நடிச்சிருக்கான் அந்தப் படத்த நான் பாக்கலைன்னா எப்படிய்யா.. ? நான் இப்பவே உள்ள போறேன்…தானைத்தலைவன் ராகுல் வாழ்க, அன்னை சோனியா வாழ்க….!
கவுண்டர்: அடங்கப்பா சாமி….. நல்ல வேள ஹீரோ பேரு ராகுல்னு மாத்தி சொன்னேன்….  இப்போ உள்ள போயி ஹீரோ பேரு தொங்கபாலுன்னு தெரிஞ்ச உடனே என்ன பண்ணப் போறாரோ……?
 ...................................
சிரிப்பு போலீஸ்: சார், இந்தக்கேமராவப் புடிங்க… அப்பிடியே என்ன எடுங்க சார், கேட்டுல நிக்கிற மாதிரி, டிக்கட் வாங்குற மாதிரி, கக்கூஸ்ல போண்டா திங்கிற மாதிரி, கேன்டீன்ல ஆயி போற மாதிரின்னு வரிசையா எடுத்துத் தள்ளுங்க சார்…!
கவுண்டர்: ங்கொக்காமக்கா டேய்…போட்டோ எடுக்க இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா, இல்ல தாஜ்மகாலா? இது பிட்டுபடம் ஒடுற தியேட்டருய்யா.. இங்க வந்து போட்டோ புடிச்சு என்ன அயல் நாட்டுக்கு அனுப்பப் போறியா?
சிரிப்பு போலீஸ்: ஹலோ… உள்ள போடுற படத்த விட, வெளிய எடுக்குற இந்தப் படம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.. ஏன்னா இத வெச்சே… குறைஞ்சது 25 பதிவாவது போட்ருவேன்ல?
கவுண்டர்: அய்யோ ராமா, என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடவுலாம் கூட்டு சேக்குறே?.. டேய்… மரியாதையா உள்ள போயி கம்முன்னு படத்தப் பாரு..  மறுபடி இந்தக் கேமராவோட உன்ன எங்கேயாவது பாத்தேன்… படுவா கொள்ளிக்கட்டைய எடுத்து சொறிஞ்சு விட்ருவேன் ஆமா..!
.......................................
பனங்காட்டு நரி: சார் இந்த மந்திரப் புன்னகை பெசல் ப்ரிவியூ ஷோ இங்கதானே ஓடுது?
கவுண்டர்: அதெல்லாம் முடிஞ்சு அடுத்த ப்ரிவியூவும் போட்டாச்சு, என்ன ஒரு வாரமா ஜெயில்ல இருந்துட்டு வர்ரியா?
பனங்காட்டு நரி: அதுலாம் இல்ல சார். நான் அப்பவே கெளம்பிட்டேன், ஆனா இப்போதான் சார் தியேட்டர கண்டுபுடிச்சேன்…!
கவுண்டர்: சரி சரி வந்தது வந்த, இது பிட்டுப்படம்தான், சும்மா பாத்துட்டுப் போய்யா…!
பனங்காட்டு நரி: அடடா இந்தப் படத்த ஏற்கனவே (?) நான் பாத்துட்டேனே, சரி இருந்தாலும் இன்னொரு வாட்டி பாக்கிறேன். அப்புறம் இந்தச் சீட்ட வெச்சுக்குங்க, இதுல என் பேரு, அட்ரஸ் எழுதி வெச்சிருக்கேன். படம் முடிஞ்ச உடனே என்னக் கூப்பிட்டுக் கொடுங்க, இல்லேன்னா நான் யாரு எங்கே போகனும்னு மறந்திடுவேன்…!
கவுண்டர்: சரி சரி, இது தியேட்டர்னு மறக்க முன்னாடி உள்ள போயி உக்காரு!
....................................


கவுண்டர்: என்னய்யா உடம்பெல்லாம் காயம்.. ஹெவி டேமேஜா தெரியுதே?
டெர்ரரு பாண்டியன்: ஆமா சார், இப்போதான் ஒரு பதிவு போட்டுட்டு வர்ரேன், அதான் சுத்தி வளைச்சிப் பின்னிப் பெடலெடுத்துட்டானுங்க…
கவுண்டர்: அடப்பாவி, பாத்தா லாரில அடிபட்ட மாதிரியே இருக்கே, ஆமா…அப்பிடி என்னதான்யா எழுதுனே?
டெர்ரரு பாண்டியன்: அது புரிஞ்சா நானே அதச் சொல்லி அடில இருந்து தப்பிச்சிருக்க மாட்டேனா?
கவுண்டர்: ஓஹோ… மேட்டர் அப்பிடியா… புரியாமத்தான் அடிச்சிருக்கானுகளா, அது ஒண்ணுமில்ல தம்பி, ஒட்டகம் மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாம, அதான்.
டெர்ரரு பாண்டியன்: ஆமாண்ணே…
கவுண்டர்: நீ எழுதுனத, தஞ்சாவூர் கோயில் பக்கத்துல ஒரு கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டு நீயும் பக்கத்துலேயே நின்னுக்க, நமக்குப் பின்னாடி வர்ர சந்ததிகள் பாத்துப் படிச்சி என்ன ஏதுன்னு வெளங்கி நடந்துக்கட்டும்…!
.....................................

அருண்பிரசாத்: சார் படம் நல்லாருக்கும்ல? ஏன்னா இதுக்காக நான் மொரீசியஸ்ல இருந்து வந்திருக்கேன்.
கவுண்டர்: ம்ம்ம்… ஓசில பிட்டுப் படம் போட்டா உகாண்டாவுல இருந்து கூட வருவீங்கடா…
ஆமா படம் நல்லா இல்லேன்னா என்ன பண்ணுவ?
அருண்பிரசாத்: ஏன் சார் இப்பிடி அபசகுனமா பேசுறிங்க? அப்புறம் அடுத்த புதிர் போட்டுடுவேன்….
கவுண்டர்: அப்போ படம் நல்லா இருந்தா?
அருண்பிரசாத்: அப்போவும் புதிர்தான்…!
கவுண்டர்: என்னது அதுக்கும் புதிரா, ஆள விடுரா சாமி…எனக்கு இன்னும் அந்த இன்னொரு வாழைப்பழத்துக்கே வெடை தெரியல… யம்மா……!
...................................

நாகராஜசோழன் எம். ஏ: என்றா மணியா, இங்க வந்து சும்மா ஜம்முன்னு கண்ணாடியப் போட்டுக்கிட்டு நின்னுட்ட? பிட்டுப்படம் ஓசில போடுறாங்கன்னதும் சோறுகூடத் திங்காம ஓடிவந்துட்டே பாத்தியா?
கவுண்டர்: யோவ் மாப்பு, உன் நக்கலுக்கு அளவே இல்லையா?  நான் இங்கதான் மேனேஜரா இருக்கேன்னு உனக்குத் தெரியுமில்ல?
நாகராஜசோழன் எம்.ஏ.: சரி விடு மாம்சு, என்ன இங்க யாரையுமே காணோம்?
கவுண்டர்: ஏன்யா… எவ்வளவு பேரு உள்ள போயிக்கிட்டு இருக்காங்க, தெரியலியா..? உனக்கு என்ன கண்ணு கிண்ணு தெரியாமப் போச்சா?
நாகராஜசோழன் எம்.ஏ.: யோவ்… நான் கேட்டது ஜிங்லீஸ்…  என்ன… யாருமே வரலியா?
கவுண்டர்: நீ என்ன தெரிஞ்சுதான் கேக்குறீயா? இது பிட்டுபடம்யா, அவங்கள்லாம் வரமாட்டாங்க…!
நாகராஜசோழன் எம்.ஏ.: அட என்னய்யா மாம்சு நீ… அவங்கள்லாம் வராத எடத்துக்கு என்ன எதுக்கு கூப்பிட்ட? என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீயே..? சரி நான் வேற நல்ல பசையான எடமா பாத்து போய்க்கிறேன்..!
கவுண்டர்: நீ இன்னும் இந்தப் பழக்கத்த விடலையா? இவன் இப்பிடியே காலத்துக்கும் தெள்ளவாரியாத்தான்யா  இருப்பான்!
.....................................

அப்போ நம்ம கவிஞர் தினேஷ்குமார் வேக வேகமா கவுண்டர இடிச்சிட்டு உள்ள போறாரு….
கவுண்டர்: டேய்.. ஸ்டாப்…. ஒன் ஸ்டெப் பேக் மேன்…. என்ன அது கிளிங் கிளிங்னு சவுண்டு..?
தினேஷ்குமார்: ஒண்ணுமில்ல கவுண்டரே, அது சும்மா மனப்பிராந்தியா இருக்கும்..!
கவுண்டர்: பக்கத்துல வாய்யா, அது என்ன பிராந்தின்னு கண்டுபுடிக்கிறேன்……..      அடப்பாவி, என்னய்யா இது ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு ஸ்டாக் வெச்சிருக்கே…. என்ன ஏதாவது பிராந்திக்கடைய கொள்ளையடிச்சிட்டியா?
தினேஷ்குமார்: அதெல்லாம் ஒண்ணுமில்ல கவுண்டரே, வேணுங்கறத எடுத்துக்கிட்டு சீக்கிரம் ஆள விடுங்க, படம் போட்ர போறாங்க!
கவுண்டர்: ஓக்கே… யூ கோ….. உள்ள போயி பேசாம படத்தப் பாக்கனும், தண்ணி அடிச்சிட்டு தூங்கப்படாது… வெளிய வரும்போது படத்துல இருந்து கேள்வி கேப்பேன், என்ன தெரியுதா…  ஓக்கே…?
......................................

இம்சை அரசன்: செங்கல் வெலையெல்லாம் ஏறிப்போச்சு… ம்ம்  எப்படித்தான் இந்தத் தியேட்டர்லாம் கட்டுறாங்களோ…?
கவுண்டர்: டேய்…. ஸ்டாப்…. என்ன இது..  தனியா பொலம்பிக்கிட்டு வர்ர?
இம்சை அரசன்: அதவிடுங்க சார், இந்தத் தியேட்டர் என்ன ரேட்டுன்னு சொல்ல முடியுமா?
கவுண்டர்: தெரிஞ்சு என்ன பண்ணப் போற? வாங்கி பாக்கெட்டுல வெச்சுக்கப் போறியா? படுவா ஓசில பிட்டுப் படம் பாக்க வந்துட்டு லொல்லப்பாரு…. எகத்தாளத்தப் பாரு… ! டிக்கட்டு என்ன ரேட்டுன்னு கேளு சொல்றேன்…?
இம்சை அரசன்: நீங்க எந்த டிக்கட்ட சொல்றீங்க?
கவுண்டர்: (ம்ம்ம், இன்னமும் இந்த வேல ஒண்ணுதான் பாக்கி இருந்துச்சு, விட்டா அதையும் பண்ண வெச்சிடுவானுங்க போல….!) .. கண்ணு… அந்த டிக்கட்டுலாம் நம்ம ஒடம்புக்குத் தாங்காது ராஜா… மெள்ளமா… அப்பிடியே உள்ள போயி உக்காருமா…!
....................................

வெறும்பய: எங்கே அவள்…
கவுண்டர்: படமே பாக்கலே அதுக்குள்ள என்ன?
வெறும்பய: சும்மா பாடக்கூடதா?
கவுண்டர்: ஏன் இதோ இந்த தடியனத் தூக்கித் தலைல வெச்சிக்கிட்டு பாடுறது?
வெறும்பய: ஹி..ஹி.. அப்புறம்…. இந்தத் தியேட்டர் பேரு…என்ன?
கவுண்டர்: படுவா…..பிட்டுப் படம் ஓசில காட்டுறாங்கன்னா, தியேட்டரு பேரு கூட தெரிஞ்சுக்காம வந்துடுறீங்கடா…? இந்தத்தியேட்டர் பேரு, பறங்கிமலை ஜோதி…..!
வெறும்பய: நோ…… இந்தப் பேரு எனக்குப் புடிக்கல, நான் இந்தப் படம் பாக்கமாட்டேன்..
கவுண்டர்: புடிக்கலைனா போ…. அடங்கொன்னியா…… கொழுப்பப் பாத்தியா… படம் பாக்கமாட்டேன்னுட்டு நைஸா உள்ளே போறத….. வெளிய வரட்டும் பேசிக்கிறேன்…!
.......................................

(அப்போ மங்கி கேப் போட்டுட்டு ஒருத்தர் வரார்)
கவுண்டர்: எச்சூஸ் மி,  ப்ளீஸ்  ரிமூவ் தி கேப்…..!  
சௌந்தர்: இல்லே சார், எனக்கு ஏசின்னா ஒத்துக்காது அதான்… ஹி..ஹி… இருந்தாலும் உங்களுக்காகக் கழட்டுறேன்
கவுண்டர்:  என்னது கழட்டுனாலும் அப்பிடியேதான் இருக்கு? கருமம்… இதுக்கு நீ கழட்டாமயே இருந்திருக்கலாம்…!
சௌந்தர்: ஹி..ஹி…  சரி, இந்தப்படம் என்ன கான்செப்ட்ல எடுத்திருக்காங்க? சொல்லுங்க, தெரிஞ்சுக்காம நான் படம் பாக்கமாட்டேன்
கவுண்டர்: இந்தக் கான்செப்ட்டு… கத்திரிக்காவுலாம் எனக்குத்தெரியாது, இது பிட்டுப்படம் அவ்வளவுதான்.
சௌந்தர்: அப்படின்னா லிவிங் டுகெதெர வெச்சுதானே எடுத்திருப்பாங்க?
கவுண்டர்: சார், தயாரிப்பாளருக்கு ஏதோ கெட்ட நேரம், படம் எடுக்கனும்னு இப்பிடி வந்து மாட்டிக்கிட்டாரு. பாவம்..சார், விட்ருங்க, ஏதோ அப்பிடி இப்பிடி கொஞ்சம் நஞ்சம் கெடைக்கறதையும் கெடுத்துடாதீங்க சார்…!
சௌந்தர்: இது சரிப்பட்டு வராது, உங்களுக்கும் ஒரு கலாச்சார விருது கொடுத்தாத்தான்யா வழிக்கு வருவீங்க, இங்கேயே இருங்க, படத்தப் பாத்துட்டு வந்து அதப் பத்தி பேசுறேன்!
கவுண்டர்: என்னது பிட்டுப்படத்துக்குக் கலாச்சார விருதா? வெளங்கிரும்…….  ரொம்ப நல்லா டெவலப் ஆகியிருக்கீங்கப்பா….!
......................................

செல்வா: இது மொக்கப் படமா?
கவுண்டர்: இல்ல பிட்டுபடம்
செல்வா: அப்போ பிட்டுப்படத்துல மொக்கையே இருக்காதா?
கவுண்டர்: டேய்.. வேணாம்.. பேசாம உள்ள போயிரு….!
செல்வா: உள்ள போனா மொக்கை வருமா?
கவுண்டர்: இப்போ என் கைதான் வரும், உன் கன்னத்துக்கு…!  படுவா… முளைச்சு மூனு எல விடல அதுக்குள்ள பிட்டுப் படத்துக்கு வந்துட்டு பேச்சப் பாரு.. பிச்சிபுடுவேன் பிச்சி… மொதல்ல உன் வயசு என்ன? பர்த் சர்ட்டிபிகேட் எடு.. இல்லேன்னா உள்ள விடமாட்டேன்……
செல்வா: என்னண்ணே இதுக்குப் போயி கோவிச்சிக்கிட்டு.. ஹி… ஹி…. இது நல்ல பிட்டுப்படம், நீங்க ஒரு நல்லவரு…..  வல்லவரு…..  நாலும் தெரிஞ்சவரு… சரியாண்ணே?
கவுண்டர்: ம்ம்… இப்பிடி நல்லவிதமா நாலு வார்த்த பேசிப் பழகுற வழியப்பாரு…..! சரி போ உள்ள ….!
......................................

எஸ். கே.: மிக்க மகிழ்ச்சி!
கவுண்டர்: இன்னும் படமே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன மகிழ்ச்சி?
எஸ். கே.: இல்ல தியேட்டருக்கு வந்ததே மகிழ்ச்சிதான்.. சூப்பர்
கவுண்டர்: என்ன சூப்பர்? போஸ்டர சொல்றிங்களா?
எஸ்.கே.: இல்ல பொதுவாச் சொன்னேன், ஆள விடுங்க சார்… படம் போட்டுடப் போறாங்க நான் உள்ள போகனும்!
........................................
கவுண்டர்: யோவ் யாருய்யா நீய்யி… இந்தப் படத்து ஹீரோ(!) மாதிரியே இருக்கே?
 மாதவன்: ஹி..ஹி.. நான் ஆளு பாக்கத்தான் ஹீரோ மாதிரி இருப்பேன், ஆனா பேரு வேற..!
கவுண்டர்: இப்போ நான் உன் பேரக் கேக்கவே இல்லியே?
மாதவன்: நானும் சொல்லவே இல்லியே?
கவுண்டர்: சரி சரி, போய்யா போ.. சீக்கிரம் உள்ள போ… அப்புறம் நீதான் இந்தப் படத்து ஹீரோன்னு எவனாவது கலாச்சார ஆளுக வந்து மூஞ்சில தார் அப்பிட போறாய்ங்க!
.....................................

ப்ரியமுடன் வசந்த்: இறகுகள், சிறகுகள், வானம், மானம்… கானம்…பானம்
கவுண்டர்: பார்ட்டி ஏதோ ஏரியா மாறி வந்துட்ட மாதிரி தெரியுதே? ஹல்லோ எச்சூஸ் மி, உங்களுக்கு என்ன வேணும்?
ப்ரியமுடன் வசந்த்: பதிவர்களுக்கு ஸ்பெசல் ஷோ போடுறாங்களே அது இங்க தானே?
கவுண்டர்: (பார்ட்டி வெவரமாத்தான் இருக்கு….) ஆமா இங்கதான், இது பிட்டுப் படம் தெரியுமில்ல?
ப்ரியமுடன் வசந்த்: தெரியும் தெரியும், எங்க இளையதளபதி விஜய்யே அசிங்கப்பட்டுடாரு..   இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நாங்களும் நல்லவன் மாதிரியே நடிக்கிறது? சரி சரி, இந்தத் தியேட்டர்ல மன்த்லி டிக்கட் கெடைக்குமா?
கவுண்டர்: நீங்க கேட்டா மன்த்லி என்ன, இயர்லியே கெடைக்கும் தம்பி,  உங்கள மாதிரி ஆளுகள நம்பித்தானே இந்த மாதிரி தியேட்டரே நடத்துறோம்… மொதல்ல படத்த பாத்துட்டு வாங்க, அப்புறம் உக்காந்து இதப் பத்தி டீட்டெயிலா பேசுவோம்!
......................................
தேவா: #%$^%^  &^*((*(*  &#$%#
கவுண்டர்: சார் என்ன கேட்டீங்க?
தேவா: @#$%$% ^ %&&@ # %$%^$
கவுண்டர்: (அய்யய்யோ என்னது இது,  இதுவரைக்கும் கேள்விப்படாத மொழியா இருக்கு?)
நல்லவேள… ஆளு அவரே…உள்ள போயிட்டாரு….!
......................................

கவுண்டர்: யோவ் வாட்ச்மேன்… என்னய்யா அது.. கன்டெயினர் லாரிலாம் உள்ள வருது?
வாட்ச்மேன்: யரோ உண்மைத்தமிழன்னு பதிவராம் அவருதுதாங்க அந்தக் கன்டெயினரு. அது புல்லா வெள்ளைப் பேப்பருங்களாம். இதே மாதிரி இன்னொரு கன்டெயினரும் வருதாம், அது புல்லா பேனாவாம்… சார்!

கவுண்டர்: ஆல் ப்ரோகிராம் கேன்சல்…. மேட்டர் ஓவர்! (அப்படியே மயங்கி விழுகிறார்!)

பி.கு.: ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரடியாகச் சென்று பார்த்து விமர்சனம் எழுதிவிட்டதால், நம்ம சி.பி. செந்தில்குமார் அவர்கள் இந்த பிட்டுப் பட ஸ்பெசல் ஷோவுக்கு வரவில்லை… !


!

Thursday, November 25, 2010

சார்... சார்... 'பின்''நவீன'த்துவம்னா என்ன சார்?

பன்னிக்குட்டி: என்ன அமைச்சரே ரொம்ப டல்லா இருக்கீங்க?

மங்குனி அமைச்சர்: ஆமாப்பா, நேத்துதான் ஊர்ல இருந்து ட்ரெய்ன்ல வந்தேன், ட்ரெய்ன்ல அப்பர் பெர்த்துதான் கெடச்சது. தூக்கமே வரல. ஒரே தலைவலி!

பன்னிக்குட்டி: இது ஒரு பிரச்சனையா? லோயர் பெர்த்துல இருந்தவங்ககிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?

மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு  இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!

........................................

மங்குனி அமைச்சர், சென்னைக்கு வந்த புதுசுல, நண்பரோடு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தார். அங்கே...

மங்குனி அமைச்சர்: இது என்ன?

நண்பர்: இது ஆரஞ்ச் ஜூஸ் மிக்ஸ்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா?

நண்பர்: அப்படின்னா... ஆரஞ்சு ஜூஸ் பவுடரு, தண்ணியோட கலந்தா ஆரஞ்ச் ஜூஸ் வரும்.

மங்குனி அமைச்சர்: ஓ.... சரி...சரி..,  இது என்ன?

நண்பர்: மில்க் பவுடரு....

மங்குனி அமைச்சர்: தண்ணில மிக்ஸ் பண்ணா மில்க் வரும் அதுதானே?

நண்பர்: ஆமா.. பரவால்லயே வெரி குட்...

மங்குனி அமைச்சர்: சரி, இது என்ன?

நண்பர்: இது பேபி பவுடர்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!


...................................................
சிரிப்பு போலீஸ்: நேத்து ஸ்பென்சருக்கு ஷாப்பிங் போயி ரொம்ப பேஜாராயிடுச்சுப்ப்பா...!

பன்னிக்குட்டி: ஏன் யாரையாவது கையப் புடிச்சி இழுத்திட்டீங்களா போலீஸ்கார்?

சிரிப்பு போலீஸ்: சேச்சே... இப்பல்லாம் அப்பிடி பண்றதில்ல... எஸ்கலேட்டர்ல போயிட்டு இருக்கும் போது திடீர்னு பவர் கட் ஆயிடுச்சு.

பன்னிக்குட்டி: அய்யய்யோ.. .. அப்புறம்?

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!

.......................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சிரிப்பு போலீச பின்னியெடுத்துட்டாங்களா.. ஏன்?

மங்குனி அமைச்சர்: நேத்து நைட்டு லேட்டா வந்திருக்கார். ஒரு கான்ஸ்டபிளு, பைக்க நிறுத்தி, யாரு நீங்க, எங்க போறீங்கன்னு கேட்டாராம். அதுக்கு இவரு பழக்கதோஷத்துல நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு, அவ்வளவுதான் அப்பிடியே தூக்கிட்டுப் போயி பட்டையக் கெளப்பிட்டானுங்க...!


....................................................
 
பன்னிக்குட்டி: அங்க என்னய்யா கலாட்டா?

சிரிப்பு போலீஸ்: ரேசன் கடை கியூவுல மொத ஆளா நின்னதுக்குப் போயி நம்ம செல்வா வடை குடுங்கன்னு அடம் பிடிச்சிருக்கான். அதான் அடிச்சிக்கிட்டு இருகாங்க.

பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!


..................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சி.பி. செந்தில்குமாரு சாரு அவசரமா கேரளா போயிருக்காரா... ஏன்?

சிரிப்பு போலீஸ்: ஆமா அவரு எழுதுன பிட்டுப்பட விமர்சனம் நல்லா இல்லேன்னு, அந்தப் பட டைரக்டரு, அடுத்த படத்துக்கு விமர்சனம் எழுத ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச்சொல்லிட்டாராம்!

பன்னிக்குட்டி: அடடடா....   நாமலும் போறதுக்கு ஏதாவது வழி இருக்கா...?

சிரிப்பு போலீஸ்: இது டூ லேட்..... நம்ம மங்குனி அமைச்சரு அல்ரெடி  சீக்ரெட்டா போயிட்டு  வந்திட்டாரு....

..........................................


செல்வா: நம்ம கேப்டன் தோனியில்ல, அவரு ஹர்பஜன் கிட்ட ரெண்டு பெப்சி வாங்கிட்டு வரச்சொன்னாரு. பெப்சி வங்கிட்டு வந்த ஹர்பஜன் தோனிகிட்ட போகாம, ஷேவாக் கிட்ட போனாரு ஏன்?

பன்னிக்குட்டி: ஏன்?

செல்வா: ஏன்னா... ஷேவாக் தானே ஓப்பனரு?

.........................................................
செல்வா: நம்ம டெர்ரரு ஆபீஸ் போகும்போதும் வரும்போதும், நடுவழிலே டிபன் பாக்ச ஓப்பன் பண்ணிப் பார்ப்பாரு, எதுக்கு?

பன்னிக்குட்டி: டிபன் பாக்ஸ் அவருது தானான்னு செக் பண்றதுக்காகப் பார்ப்பாரா..?

செல்வா:  இல்ல...  இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!

...........................................................

பன்னிக்குட்டி: நம்ம பனங்காட்டு நரி புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்காராமே?

டெர்ரரு பாண்டியன்: அட ஆமாய்யா... அவன் தொந்தரவு தாங்கமுடியல. பாஸ்வெர்ட் மறந்துபோனாக்கூட பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........!


........................................................


பன்னிக்குட்டி: பட்டா சார்.... பட்டா சார்... இந்த பின்நவினத்துவம்னா என்ன சார்?

பட்டாபட்டி: ம்ம்ம். அதுவா... வெஸ்டர்ன் டாய்லெட்டுல கக்கா போறதுதான் 'பின்''நவீன'த்துவம்!

பன்னிக்குட்டி: அப்போ முன்நவீனத்துவம்னா....?

பட்டாபட்டி:  #$^%^%$##@!^%^%$#@!!


(பதிவர்கள் நலன் கருதி பட்டாபட்டி அவர்களின் பதில் மட்டுறுத்தப்பட்டுள்ளது.  தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பணமாக 699 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும்!)

(இதுல சில ஜோக்ஸ் என்னோடது, சிலது சுட்டது, அத எழுதுனவங்க யாரா இருந்தாலும் என் நன்றிகள்!)

கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி





!

Monday, November 22, 2010

கலாச்சாரச் சீரழிவும் பதிவர்களும்: ஒரு சர்வே!

கலாச்சாரம், கலாச்சாரம்னு பதிவுகலமே சீரழிஞ்சுக்கிட்டு இருக்கு.  கலாச்சாரத்தப் பத்தி நானும் ஏதாவது எழுதலேன்னா பெளாக்கு வெளங்காமப் போயிடும்னு, நம்ம காரமடை ஜோசியரு கனவுல வந்து குறி சொல்லிப்புட்டு போயிட்டாருங்கோ, அதுனால அந்தக் கருமத்த நானும் எழுதித் தொலைக்கிறேன்.
கலாச்சாரத்தப் பத்திப் பதிவர்கள் எவ்வளவு தூரம் வெவரமா இருக்காங்கன்னு  தெரிஞ்சுக்கிறதுக்காக ஒரு சிம்பிள் சர்வே வெச்சிருக்கேன்.  படிச்சிட்டு அவங்க அவங்க ஆன்சர  கமென்ட்ஸ்ல   போடுங்க. எல்லாமே மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின் தான். அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)

அனைத்துக் கேள்விகளுக்கும் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட சாய்ஸில் இருந்து மட்டுமே விடையளிக்கலாம்

1. கலாச்சாரம் என்றால் என்ன?
அ. கலாக்கா புதிதாகத் தொடங்கியிருக்கும் நடனப் பள்ளி
ஆ. டாஸ்மாக்கில் கிடைக்கும் புதிய சைடு டிஷ்
இ. மலையாள பிட்டுப் படத்தின் பெயர்
ஈ. டாகுடர் விஜயின் அடுத்த படம்

2. கலாச்சார சீரழிவு என்பது?
அ. கேர்ள் பிரண்ட்/பாய்பிரண்ட் இல்லாமலே ஸ்கூல்/காலேஜ் படித்துக் கொண்டிருப்பது
ஆ. பிகருங்க பின்னாடி 'சும்மா'வே சுத்தறது
இ. காதலித்த பெண்ணையே கஷ்டப்பட்டுத் திருமணம் செய்வது
ஈ. பறங்கிமலை ஜோதியில் போய் விருதகிரி படம் பார்ப்பது
உ. ஏதோ ஒரு புதுப்படத்தின் டைட்டில் லைன்

3. லிவிங் டுகெதெர் என்பது
அ. புதிதாக வந்துள்ள கொரிய மொழி உலகத் திரைப்படம்
ஆ. ஷிட்னி ஷெல்டன் எழுதியுள்ள நாவல்
இ. பாரின் சரக்கின் பெயர்
ஈ. நமீதா வீட்டிலுள்ள நாயின் பெயர்
உ. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர்

4. பண்பாடு என்றால் என்ன?
அ. கல்யாணத்திற்குப் போனால் மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்பது
ஆ. காரணம் சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்பே மைனஸ் ஓட்டுப் போடுவது
இ. மாறி மாறி கமென்ட்டும் ஓட்டும் போட்டுக்கொள்வது
ஈ. பிரபல பதிவர்கள் கமென்ட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது
உ. பொறுமையாக இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருப்பது (ஹி...ஹி...!)


5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?
அ. குடும்பத்தோடு மானாட மயிலாட கண்டு மகிழலாம்!
ஆ. சேலத்து டாகுடருகிட்ட நல்ல லேகியமா வாங்கி சாப்புடலாம்!
இ. டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டுக் கலாச்சாரத்தைப் பற்றி தினம் ஒரு உருக்கமான பதிவு எழுதலாம்.
ஈ. கலாச்சாரப் பதிவுகளில் மைனஸ் ஓட்டுகளைக் குத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.
உ. தினமும் ஒபாமா முதல் உள்ளூர் வரை அரசியல் பேசிவிட்டு, தேர்தல் வந்ததும், வாங்குவதை வாங்கிகொண்டு ஓட்டுப் போடலாம்


6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
அ. ரஞ்சிதா
ஆ. குஷ்பு
இ. கலாநிதி மாறன்
ஈ. எஸ்.ஏ. சந்திரசேகர்
உ. பிரபுதேவா

7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
அ. ரசிகன்
ஆ. நியூ
இ. சிந்துச் சமவெளி
ஈ. ............................... (இங்கு மட்டும் நீங்கள் விரும்பும் பதிலைத் தரலாம்)


சர்வே முடிவுகள்: பதிவுக்கட்டணம் செலுத்துபவர்களூக்கு சர்வே முடிவுகள்  அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே!




ஓக்கே, கொஸ்டின்லாம் ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும். ஒரு சின்ன வீடியோவப் பாத்து ரிலாக்ஸ் பண்ணிக்குங்க.





வேண்டுகோள்
பாசிட்டிவ் ஓட்டுப் போடுபவர்களுக்கு:
தாங்கள் போடும் ஓட்டை வைத்துதான் இந்த வாரம் நான் கூழோ கஞ்சியோ குடிக்க வேண்டும் என்பதால், தயவுசெய்து உங்கள் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல், கை ஆடிவிடாமல் மேலும் கீழும் உள்ள ஓட்டுப் பட்டைளில் அளிக்குமாறு வேண்டுகிறேன்!

நெகடிவ் ஓட்டுப் போடுபவர்களுக்கு:
ஒவ்வொரு நெகடிவ் ஓட்டிற்கும் என்னுடைய ஒரு முடி உதிர்ந்துவிடும் என்று காரமடை ஜோசியர் குறி சொல்லியிருப்பதால், தாராளமாக ஓட்டுப்போட்டு இந்த மாதம் என் முடிவெட்டும் செலவை மிச்சப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


!

Friday, November 19, 2010

நமீதாவின் வீடு!


தீடிர்னு கண்ணு முழிச்சிப் பாக்குறேன், ஏதோ வித்தியாசமா தெரிஞ்சது, உடம்பெல்லாம், வெயிட்டே இல்லாம லேசா இருக்கற மாதிரி, குனிஞ்சு பாத்தா, மெதந்துக்கிட்டு இருக்கேன். அய்யய்யோ.. டேய்.. என்னாங்கடா இது... என் கால வேற காணோம், திரும்பிப் பாத்தா நான் இல்ல இல்ல என் உடம்பு கீழே கெடக்குது, அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? அந்தப் பக்கமாப் பாத்தா, என் காதலியும் அவ சித்தப்பனும் போறாங்க, ஆங்.....இப்போ எல்லாம் ஞாபகம் வந்துருச்சு, என் காதலியே என்னை ஏமாத்தி இங்கே வரவெச்சி என்னை கொல்ல வெச்சிருக்காய்யா....!

ஆமாய்யா ஆமா நான் சுப்பிரமணியபுரத்துக்காரன்தான்யா...... இப்போ அதுவா முக்கியம்.....அவனுகள என்ன பண்ணலாம், சொல்லுங்கயா...  சும்மா விடாலாமா? விடக்கூடாதுல்ல? இப்போ என்ன பண்றேன் பாரு....  ங்கொய்யா, இதோ வந்துட்டேண்டா.....  உன் கழுத்த நெறிச்சி....என்னது இது அவன் கழுத்தப் புடிக்கவே முடியல, ஆவியாயிட்டா ஒண்ணும் பண்ண முடியாதா? அப்போ ஜகன்மோகினி படத்துல வந்தது எல்லாம் உண்மையில்லியா? என்ன கொடும சார் இது?

இது என்ன புதுசா ரெண்டு பனிமூட்டம் என்னை நோக்கி வருதுங்க, கையவேற  புடிக்கிறாங்க.

யேய்.... ய்ய்...  யாருப்பா நீங்க, என்ன எங்க தூக்குறிங்க,

அற்ப மானிடனே... நீ இறந்து விட்டாய். நாங்கள் உன்னைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறோம்.

என்னை விடுங்க, நான் இவனுகள பழிவாங்கனும்..

அதை கடவுளிடம் வந்து சொல்!

அங்க ஏன் என்னை கூட்டிட்டுப் போறீங்க? கடவுள் என்னை என்ன  செய்வார்... ?

கடவுள் உன் செயல்களுக்கேற்ப உன்னை சொர்க்கத்திற்கோ இல்லை நரகத்திற்கோ அனுப்புவார். அவ்வளவுதான்.. அதுவரை உன் ஊத்தை வாயை முடிக்கொண்டு வா!

அவங்க படுவேகமா என்னைத் தூக்கிகொண்டு பறந்தாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாம் இருட்டாயிடுச்சு... வேகம்.... வேகம்...படுவேகம்...... தூரத்துல தெரிஞ்ச ஒரு ஒளிப்புள்ளி நோக்கிப் போனோம். அது பக்கத்துல வந்த உடனே, இந்தப் பனிமூட்டைகள் என்னை அது முன்னாடி நிறுத்துனானுக!

வா மனிதா....

நீங்கதான் கடவுளா......? என்னை சீக்கிரமா பூமிக்கு திருப்பி அனுப்புங்க கடவுள் சார்.... ப்ளீஸ்.....  எனக்கு ஒரு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு!

இல்லை அற்பனே, நீ இறந்துவிட்டாய்...  பூமியில் நீ செய்த செயல்களுக்கு ஏற்ப நீ சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகலாம், இனிமேல் பூமிக்கெல்லாம்   போக முடியாது...

அப்போ எனக்கு சொர்க்கமா நரகமா? அதையாவது சொல்லுங்க!

ம்ம்... அப்படிக்கேள்...  உனக்கு நரகம்தான், உனக்காக ஒரு கொதிக்கும்  எண்ணைக்  கொப்பறை தயாராகிக் கொண்டுள்ளது. அது தயாரானதும்  அங்கே அழைத்துச் செல்லப்படுவாய்!

கடவுளே... கடவுளே.... இந்த மனிதனைத் தவறாக அழைத்துவந்து விட்டோம், இவனுக்கு இன்னும் வாழ்நாள் மீதி இருக்கிறது...

அடேய்... பனிமூட்டைகளா.....  என்ன சொல்கிறீர்கள்? தவறு எப்படி நிகழ்ந்தது? சரி.. சரி.... இப்போது இந்த அற்பன் முன்பு உங்கள் பஞ்சாயத்தைப் பேச வேண்டாம்... அதைப் பின்பு உங்கள் அப்ரைசலில் பார்த்துக் கொள்வோம்!

(ஆஹா... கரெக்டா சிக்கிட்டீங்கடி மாப்பு...!) கடவுளே, பார்த்தீங்களா? நீங்களே தப்புப் பண்ணியிருக்கீங்க, அதுக்காகவாவது இப்போ என்னை பூமிக்கு அனுப்பக் கூடாதா? நான் போயி ஜஸ்ட் என்னக் கொன்னவனுங்க டோட்டல் பேமிலியவும் போட்டுத்தள்ளிட்டு உடனே  திரும்பி  வந்திடுறேனே....!

மனிதா.. முதலில் இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியைக் கைவிடு!

ஆமா..இப்போ என்னை நரகத்துல போடப் போறேன்னு சொல்றிங்களே அது மட்டும் என்னவாம்?

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.............  முடியல....  சரி...   இப்போது என்னதான் வேண்டும் உனக்கு மனிதா?

கிழிஞ்சது...... இவ்வளவு நேரமா சொன்னது வெளங்கலிய்யா? நான் திரும்ப பூமிக்குப் போகனும்யா....!

சரி நீ பூமிக்குப் போகலாம்... ஆனால் மனிதனாக அல்ல, ஆவியாக...

அப்படின்னா.......?

நீ எல்லோரையும் பார்க்கலாம், உன்னை யாரும் பார்க்கமுடியாது. உன்னை யாரும் உணரமுடியாது, நீ யாரையும் தொடவும் முடியாது

வெளங்கிரும்.... (இந்தக் கருமத்துக்கு நான் எண்ணைக் கொப்பறையிலேயே பர்மனென்டா செட்டில் ஆய்டுவேனே?) கடவுளே, நம்ம விட்டலாச்சார்யா படத்துல வர மாதிரி பழிவாங்குற சக்தியுள்ள ஆவியா என்ன மாத்தி அனுப்பப்படாதா?

அது முடியாது மானிடா!

அல்லோ.... மிஸ்டர் கடவுள், உங்க ஆளுக என்னத் தப்பா சாவடிச்சு தூக்கிட்டு வந்திருக்காங்க, அது ஞாபகம் இருக்கட்டும்!

ஓ...... (பன்னாட எப்பிடி நேரம் பாத்து அடிக்குது பாரு?) சரி, அப்போ... உனக்கு மட்டும் ஒரு விஷேஷ சக்தியை அளிக்கின்றேன். நீ விரும்பும் நேரத்தில் உணர்வுகளைப் பெறலாம். அப்போது   மற்றவர்களும் உன்னைப் பார்க்கவும் உணரவும் முடியும்.  இதை நீ ஒரே ஒருமுறை மட்டுமே செய்யலாம், அதுவும் 3 மணிநேரத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். பின்பு மறுபடி நீ ஆவியாக  மாறி இங்கு வந்துவிடுவாய்!

ஓக்கே, தேங்க்ஸ் கடவுளே!

சரி மனிதா நீ போகலாம்.

அப்பாடா என்னையப் போகச் சொல்லிட்டு, கடவுள் போயிட்டாரு...

சரி, இந்த பனி மூட்டைங்க எங்கே? எச்சூஸ் மி... பனிமூட்டைஸ்... கடவுள் சொன்னதக் கேட்டீங்கள்ல? அப்பிடியே பூப்போல என்னத் தூக்கிட்டுப் போயி, அதே எடத்துல எறக்கி விட்டுடுங்க!

அதெல்லாம் முடியாது, மனிதா.... நீ தனியேதான் திரும்பிப் போகவேண்டும்

இது அநியாயம், அக்கிரமம், கூப்புடுங்கய்யா கடவுள, நான் அவருகிட்டேயே பேசிக்கிறேன், நான் மட்டும் தனியா போகனுமா?

பொறு மனிதா... ஏன் கோபப்படுகிறாய்....  அதோபார், உங்க பூமிதெரியுதுல்ல..  அப்பிடியே போ.. கூகிள் எர்த் தெரியுமில்ல, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ மனிதனே!

இது ஆவுறதில்ல... 

அப்போ என்ன பண்ணலாம்.....ம்..ம்ம்..    ஒன்று செய்... இந்த நோக்கியா மொபைல் போனை வைத்துக்கொள்....  இதில் மேப் வசதி உள்ளது. பயன்படுத்திக்கொள். ஆனா திரும்ப கட்டாயமாக் கொண்டு வந்து கொடுத்திடனும் மானிடனே...

இதெல்லாம் உங்களுக்கு எப்பிடிய்யா கெடச்சது?

அதுவா, இப்போ சாகுரவனுங்கள்லாம், செல்போன வெச்சிக்கிட்டேதான் சாகுறானுங்க, அதுலேயும் ஒருத்தனோட ஆவிய செல்பொன கூட சேத்து தூக்குனதுக்கப்புறம்தான் பாடிய விட்டு வெளியே வந்துச்சு. அவனை எண்ணைக் கொப்பரைல தள்ளிட்டு, செல்போன நாங்க வெச்சிக்கிட்டோம் அவ்வளவுதான். சரி நீ மொதல்ல் இங்கிருந்து கெளம்பு!

ஒகே... பனிமூட்டைஸ்.... .....  வர்ட்டா....


நமக்கு வேண்டியது கெடச்சிடுச்சு.... பரவால்ல, கடவுள்கிட்டேயே பேசி ஜெயிச்சுட்டோம்... திரும்ப வந்து அப்பிடியே பேச்சப் போட்டு சொர்க்கத்துக்குப் போயிட வேண்டியதுதான். இல்ல இந்திரலோகத்தில நா. அழகப்பன் மாதிரி ஏதாவது பண்ணமுடியுமான்னு பாப்போம்....
பூமிக்கிப் போனதும் சீக்கிரமா எல்லாரையும்  போட்டுத்தள்ளிடனும்... மூணுமணி நேரம் தான் இருக்கு... எல்லாத்தையும் வரிசையா நிக்க வெச்சி சுட்டுடலாமா.... என்ன பண்ணலாம்.....

என்னது இது ஏதோ கெட்ட நாத்தம் அடிக்கிது.... நமக்குப் பழக்கமான வாடையா வேற இருக்கு...  அட....... நம்ம சென்னை. எதை எதையோ நெனச்சுக்கிட்டே இங்கே வந்துட்டேம்போல.... சரி வந்தது வந்தோம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டுப் போவோம்... இது என்ன ஏரியா? ..... இது....   கோடம்பாக்கமுங்கோவ்.....  ஆஹா  சினிமாக்காரங்க ஏரியாவாச்சே இது......

இங்கே.......   ஹை....  ஐடியா.......    ங்கொக்கா மக்கா...... இன்னைக்கு இருக்குடி வேட்டை.....   ரொம்ப நாளு ஆசைய இன்னைக்கி நிறைவேத்திட வேண்டியதுதான்....... செல்போனை எடுத்து மேப்பில் தேடுபொறியை இயக்கி, அவசரம் அவசரமாய் 'நமீதாவின் வீடு' என்று டைப் செய்தேன்........    .... 
என்னது இது என்னென்னமோ காட்டுது, ஒண்ணும் புரியல.....  மண்டை காயுது..  சே.....  இப்போ எப்பிடி அங்க போறது?

எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!



!

Sunday, November 14, 2010

அறியாப் பூனைகளின் தெரியா விளையாட்டு!

ஒரு ஊர்ல ஒரு மன்னரு ரொம்ப இம்சையா ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு.  பல கேடிப்பசங்களும் மன்னருக்கு கொடுக்க வேண்டியதக் கொடுத்து நிம்மதியா தொழில் பண்ணிட்டு இருந்தாங்க. திடீருனு நாட்டுல எலித்தொல்ல ரொம்ப அதிகமாயிடுச்சு. அதுவும் ஒரே ஒரு எலியால!  கேடிப்பசங்களால வழக்கம் போல தொழில் பண்ண முடியாம  சிரமப்பட்டாங்க. உடனே மன்னருகிட்ட போயி முறையிட்டாங்க. மன்னரும் அமைச்சர கூப்புட்டு எலித்தொல்லைய உடனே ஒழிங்கன்னு உத்தரவு போட்டாரு. அப்போ அமைச்சருகிட்ட நாலு பூனைகள் வேல பாத்துக்கிட்டு இருந்துச்சு.  இந்த நாலு பூனைகள வெச்சித்தான் ஓட்டுமொத்த நாட்டு நிர்வாகத்தையும் (?) பண்ணிக்கிட்டு இருந்தாரு அமைச்சரு.

மன்னரோட உத்தரவக் கேட்டுப்புட்டு, ஒரே யோசனையா ரெண்டு நாளு சுத்துனவருக்கு திடிர்னு அந்த ஐடியா(?) வந்துச்சு.  நாமதான்  நாலு பூனைகள  தண்டமா வெச்சிருக்கோமே, அதுகள இதுக்கு பயன்படுத்திட்டா என்னன்னு!  உடனே மன்னர்கிட்டேயும் போயி சொன்னாரு. மன்னர் கேட்டுபுட்டு ரொம்ப ஆச்சர்யப் பட்டாரு. அந்தப் பூனைகள பார்க்கனும் உடனே ஏற்பாடு பண்ணுங்கன்னு  சொல்லிப்புட்டாரு!

இதக் கேட்டதும் அமைச்சருக்கு ரொம்ப பயமா போச்சு, பூனைங்க மன்னரு முன்னாடி ஏதாவது பண்ணி மானத்த வாங்கி பதவிக்கு வேட்டு வெச்சிட்டா என்ன பண்றதுன்னு! அதுனால பூனைகள தயார் பண்ண முடிவு பண்ணி எல்லாத்தையும் கூப்புட்டாரு, அதுங்க உடனே வராம அங்கே இங்கே துள்ளிக்கிட்டு இருந்துச்சுங்க. அமைச்சருக்கு பொசுக்குன்னு கோவம் வந்து சாட்டையத் தூக்குனாரு. உடனே எல்லாப் பூனையும் வரிசையா பம்மிக்கிட்டு வந்து உக்காந்துச்சு!



ஒரு எலி ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கு, அத உங்கள்ல யாராவது போயி புடிச்சிக்கிட்டு வரனும் முடியுமான்னு பூனைகளப் பாத்து அமைச்சரு கேட்டாரு. பூனைங்களுக்கு ரொம்ப நாளு கழிச்சி நல்ல இரை கெடைக்கப் போவுதுன்னு ஒரெ சந்தோசம், நாந்தான் போவேன், நாந்தான் போவேன்னு ஒரே சண்டை, கூக்குரல்...! சைலன்ஸ்........... என்று அமைச்சர் கத்தியதும் பூனைகள் தத்தம் இடங்களில்  போய் பவ்யமாக அமர்ந்தன.  சரி உங்கள் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பேன்,  யாரு திறமைய நிரூபிக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் எலி என்றார் அமைச்சர்.

அது கேட்டு பூனைகளுக்கு சிறிது தயக்கம். இருந்தாலும் சரி நாங்கள் தயார் என்றன. முதல்   பூனையை அழைத்து உன் திறமையக் காட்டு என்றார் அமைச்சர். உடனே அது சென்று பெரிய பேப்பர் ஒன்றை எடுத்து வந்து விதவிதமான கெட்ட வார்த்தைகளை எழுதியது. எலியை  நாராசாரமாகத்  திட்டி எழுதியது. அதைப்  பார்த்து  மற்ற  பூனைகளும்  சந்தோசமாகக் ஆரவாரமிட்டன.

அடுத்து என்றார் அமைச்சர். அடுத்த பூனை வந்தது, கிச்சனுக்குப் போயி 12 வடைகள எடுத்துக்கிட்டு வந்து சரியா நாலு நாலா, மூணு பங்கு வெச்சுச்சு, அமைச்சர் உதட்டைப் பிதுக்கினார். மூன்றாவது பூனை முன்னே வந்தது, அது மதுக்கூடத்துக்குப் போயி ஒரு புல் பாட்டில் ரம்மை தூக்கிட்டு வந்து அதை சரியாக ஒரு ஒரு லார்ஜாகப் பிரித்துக் கிளாசில் ஊற்றியது ஒரு துளி கூட சிந்தாமல்! அமைச்சர் முகத்தில் திருப்தியில்லை. அடுத்து என்று தலையசைத்தார். நான்காவது பூனை வந்தது, சுற்றும் முற்றும் பார்த்தது, ஓடிப்போயி, வடையை எடுத்துத் தின்றது, வடையைத்தின்று கொண்டே ஒவ்வொரு லார்ஜாக உள்ளே இறக்கியது, எல்லாம் முடிந்ததும், முதல் பூனை எழுதி வைத்த பேப்பர் மேல் கக்கா போனது. பின்பு அப்பிடியே ஒரமாகப் போயி படுத்துக்கிட்டு காலை ஆட்டியபடி அமைச்சரைப் பார்த்து கண்ணடித்தது.

அமைச்சருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!  இன்னும் சிறிது நேரத்தில் பூனைகளை பார்க்க மன்னர் வந்துவிடுவார். என்ன நடக்கப் போகிறதோ என்று அமைச்சர் தீவிர யோசனையில் ஆழ்ந்தார். பூனைகள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வழக்கம்போல் துள்ளி ஓடியாடின. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு விளையாடின. இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது? யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!

பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!

!

Saturday, November 13, 2010

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்ஸ்.......தொடர் பதிவு!

 சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் என்றாலே, முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்ப்பது, கட் அவுட்டிற்கு பால் ஊற்றுவது, சூப்பர் ஸ்டாரின்  முதல்  சீனுக்கு  விசிலடித்து பேப்பர் தூவுவது போன்றவைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் எங்களைபோன்று, வாய்ப்புக் கிடைக்கும்போது படம் பார்த்து, விசிலடிக்காமல், பால் ஊற்றாமல் அமைதியாக, சூப்பர் ஸ்டாரை ரசித்த ரசிகர்களும் இருக்கிறார்கள்.  சூப்பர் ஸ்டாரின் படங்களைத் தரவரிசைப் படுத்தும் அளவுக்கு சினிமா ஞானம் எனக்கில்லை. இருந்தாலும், நண்பர்களின் தொடர்பதிவுகளில் ஒரு சங்கிலியாக என்னையும் இணைத்துவிட்ட நண்பர் தேவா அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க,  இதோ என்னுடைய வரிசைப்படுத்தல்........


10. பில்லா
ரஜினியின் ஸ்பெசல்களில் ஒன்று அவருடைய வில்லத்தனம் கலந்த நடிப்பு. ஸ்டைலிசான வில்லத்தனம் சூப்பர் ஸ்டாருக்கு அற்புதமாக வரும். அது இதுவரை வெகுசில படங்களிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  அவற்றில் பில்லாவும் ஒன்று. இப்படத்தில் ரஜினி பெட்ரோல் பங்கிலிருந்து தப்பும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.





9. மூன்று முகம்
மறக்க முடியுமா எந்தப் பக்கம் உரசினாலும் பற்றிக்கொள்ளும் அலெக்ஸ் பாண்டியன் டிஎஸ்பியை! இந்தக் காட்சிகள் படத்தில் சிறிது நேரமே வந்தாலும், பார்ப்பவர்களுக்கு, திடீரென முழுவேகத்தில் சென்று கொண்டிருக்கும் புல்லட் டிரெய்னில் ஏறிவிட்ட உணர்வை ஏற்படுத்தும். காதுகளில் இன்னமும் ரீங்காரமிடும்... மந்தாரச் செடி ஓரம்.........




8. ஜானி
இந்தப்படத்தில் ரஜினி-ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி வெகு அற்புதமாக இருக்கும்.
முடிவெட்டும் ரஜினி கேரக்டரின் ஓப்பனிங் சீன் சான்சே இல்ல, (அந்த கெட்டப்புக்கே ஒரு தனி விருது கொடுக்கலாம்) சோபாவில் படுத்து தூங்கிட்டு இருப்பார். வீடுமுழுக்க கோழிகள் அது இதுவென நிறைந்திருக்கும். அப்போது ஒரு கோழி முட்டையிடும். தலைவர் அப்பிடியே கேசுவலாக எடுத்து உடைத்துக் குடிப்பார்.  வேறு யார் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ஃபீல் வருமா என்பது தெரியவில்லை.

இந்த கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களே அப்பின்னா  என்னான்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தீங்களே மக்கா, இந்த வீடியொவ பாருங்க, அதப் பத்தி பாடமே எடுத்திருக்காங்க!





7. தளபதி
ரஜினியும் மணிரத்தினமும் இணைந்த படம். இப்போது எந்திரன் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை, தளபதிக்கு அப்போது ஏற்பட்ட எதிர்பார்ப்பு! தாய் என்று  தெரியாமலே  ஸ்ரீவித்யாவைச்  சந்திக்கும் நேரங்களில் ஏற்படும் ஒரு இனம் புரியாத வலியயை, உணர்வை   அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் சூப்பர் ஸ்டார்.  சின்னத்தாயவள் தந்த ராசாவே......




6. எஜமான்
நாட்டாமை என்றாலே தொள தொள சட்டை, முதிர்ச்சியான தோற்றம், கோயம்புத்தூர் பேச்சு என்று இருந்த வழக்கத்திற்கு முற்றிலும் நேர் மாறாக சிம்பிளாக நடித்துக் கலக்கியிருப்பார் ரஜினி. வெறும் துண்டை வைத்துக்கூட ஸ்டைல் பண்ண ரஜினியால் மட்டுமே முடியும். வானவராயனின் கம்பீரத்தில் எஜமான்!


5. ஆறிலிருந்து அறுபது வரை
அனைத்து ரஜினி ரசிகர்களும், விமர்சகர்களும் பார்த்தே தீர வேண்டிய படம்! ரஜினி வெகு இயல்பான நடிப்பால் படத்தை தூக்கி சுமந்திருப்பார். இப்படியும் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்று பார்த்துப் பார்த்து வியந்த படம் இது.


4. படையப்பா
வழக்கமாக வில்லன் கேங், அடியாட்கள் சண்டை என்று இல்லாமல், நீலாம்பரி என்ற ரஜினியை விரும்பும் கேரக்டர் மூலமாகவே படம் நகர்வதும், ரஜினியின் ஸ்டெயிலிஷான பதிலடிகளும்  படத்தையும்  ரஜினியையும்  ரொம்பவே ரசிக்க வைத்தது. 


3. தம்பிக்கு எந்த ஊரு
காதலின் தீபம் ஒன்று பாட்டில் வரும் ரஜினிக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். வெகு இயல்பான, எளிமையான நடிப்பால் பார்ப்பவர்களைக் கட்டிப் போட்டுவிடுவார் சூப்பர்ஸ்டார். எப்போதும் ரசித்துப் பார்க்க  உகந்த அருமையான காதல் படம்!


2. சந்திரமுகி
வேட்டைய மகாராஜா..... மிக மிகக் குறைவான நேரமே வந்தாலும், மறக்க  முடியாத கேரக்டர், ரஜினியால் மட்டுமே சாத்தியம்! கேரக்டரை மீறாமல்  டாக்டராக வரும் ரஜினி, இக்கால டாகுடர் நடிகர்களுக்கு ஒரு பாடம்! இப்படத்தில் வரும் காட்சிகள் ரஜினியும் துப்பறியும் கேரக்டரில் நடித்தால் என்ன என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது! ரஜினி ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை, என்ன சொல்றிங்க நண்பர்களே?




1. பாட்ஷா
ரஜினி இனி எத்தனை படத்தில் நடித்தாலும் பாட்ஷா போல வருமா என்று தெரியவில்லை. பாட்ஷாவுக்கு நிகர் பாட்ஷாதான். அதிலும் அந்த பர்ஸ்ட் பைட் காட்சியை எத்தனை தடவை வேணுமென்றாலும் பார்க்கலாம். பர்ஸ்ட் பைட் ஆரம்பிக்கும் முன் ரஜினி பாட்சாவாக மாறுவாரே அப்போது முகத்தைப் பார்க்கனும்.... சான்சே இல்லை.....
நான் ஒருதடவ சொன்னா......





போனசாக (?) சூப்பர் ஸ்டாரின் பாடல்களையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

10. மாசி மாசம்தான் (ஊர்க்காவலன்)
9. அடி ஆடு பூங்கொடியே (காளி)/மீனம்மா மீனம்மா (ராஜாதிராஜா)
8. உன்னைத்தானே (நல்லவனுக்கு நல்லவன்)
7. காதலின் தீபம் ஒன்று (தம்பிக்கு எந்த ஊரு)
6. பொன்னோவியம் (கழுகு)/மலைகோவில் வாசலிலே (வீரா)
5. ஒருநாளும் உனை மறவாத (எஜமான்)
4. கண்மணியே காதல் என்பது (6லிருந்து 60வரை)
3. சினோரிட்டா ஐ லவ் யூ (ஜானி)
2. தென்மதுரை வைகை நதி (தர்மத்தின் தலைவன்)
1. அக்கரைச் சீமை அழகினிலே (ப்ரியா)
.

பெஸ்ட் வில்லன்
ரகுவரன் அண்டு ரகுவரன் ஒன்லி!


ரஜினியின் பெஸ்ட் ஹீரோயின்
இத உங்க சாய்சுகு விட்டுடுறேன்!

இதைத் தொடர நான் அழைக்கும் இரு நண்பர்கள்
1. பனங்காட்டு நரி
2. நாகராஜசோழன் M.A
(என்னோட வேண்டுகோளை ஏத்துக்குங்க மக்கா..... உங்களுக்கு ஒருவாரம் தான் டைம்! வேண்டுகோள ஏத்துக்கிறதுக்கில்ல, தொடர்பதிவு போடுறதுக்கு!)

இந்தத் தொடர்பதிவில் ஏற்கனவே பதிவிட்ட நண்பர்கள்
1. அருண் பிரசாத்
2. சிரிப்பு போலீஸ் ரமேஷ் ரொம்ப கெட்டவன் (சாரி ஒரு ஃப்ளோவுல வந்துடுச்சி) ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா)
3. LK
4. தேவா
தகவல் தந்து உதவிய விக்கிபீடியா, வீடியோ தந்த யூ டியூப், மற்றும் வீடீயோ அப்லோட் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

!

Tuesday, November 9, 2010

ஆவியோடு எனது அனுபவங்கள்.....!

ஆவின்னாலே எல்லாருக்கும் ஒரு பயம், திகில். சண்டைக்கு பயப்படாதவங்க  கூட பேய்க்கு பயப்படுவாங்க. நம்மில் பலருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய அனுபவம் கண்டிப்பாக இருக்கும். விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவியோடு பேசுவது பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு மாதப் பத்திரிக்கையும் நடத்தி வருகிறார்.  ஆவிகளை பற்றிய என்னுடைய அனுபவங்கள இங்கே பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.
நண்பர்கள் எஸ்.கே வும் மாதவனும் ஆவிகளைப்பத்தி பதிவு போட்டிருந்தாங்க, அதப்படிச்சிட்டு எனக்கு சில சம்பவங்கள் ஞாபகம் வந்தது.  அதப்பத்திதான் எழுதியிருக்கேன். இவை நேரடியாக நான் கேட்டு அறிந்தவை.

முதல் அனுபவம் எனது பெரியப்பாவிற்கு நேர்ந்தது. அவர் இளைஞராக இருக்கும் போது நடந்த சம்பவம் எப்படியும் 35 வருடங்களூக்கு முன்பு இருக்கலாம். அப்போது இரவில், வீட்டின் ஹாலில் அவரும் தாத்தாவும் தூங்கிக் கொண்டிருந்து இருக்கிறார்கள். திடீரென எழுந்து கொண்ட பெரியப்பா எதோ தெரிவதைப் போல தோன்ற என்னவெனக் கவனித்து இருக்கிறார். அது அங்கே இருந்த மேசையின் மேல் தோன்றிய ஒரு போர்ட்ரெயிட் அளவிற்கான மனித உருவம். அதிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு முக்காடு போட்டிருந்தது. மேலும் அது தாத்தாவையே உற்று நோக்கியபடி இருந்திருக்கிறது. அதன் பார்வையின் வீச்சு தாங்கமுடியாமலோ என்னவோ தாத்தா உசும்பி புரண்டு, புரண்டு, பின்னர் எழுந்து வெளீயே சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது சற்று மறைந்த அவ்வுருவம், அவர் வெளியே சென்றவுடன் மீண்டும் தோன்றியிருக்கிறது. அது கண்டு, அது தாத்தாவைத் தாக்கக்கூடும் என்று அஞ்சிய பெரியப்பா, டேய்..என்று கத்தியபடி அதன்மேல் பாய்ந்திருக்கிறார். அது உடனே மறைந்து விட்டது.  பின்பு அவரும் தாத்தாவின் பின்னாலேயே சென்று  எங்கும்  பார்த்து  விட்டு  வந்தாராம்.

அப்புறம் வேறு எங்கும் அது தென்படவில்லை. அது பற்றி பலதடவை என்னிடம் கூறியிருக்கிறார்.  இத்தனைக்கும் என் பெரியப்பா ஒரு கடுமையான நாத்ததிகவாதி.  அறிவியல்  ஆர்வம்  மிகுந்தவர்.  ஐன்ஸ்டைன்  தியரிகளை கை தேர்ந்த விஞஞானிகள்  போல விளக்கும்  திறன் படைத்தவர் (இன்றும் எனக்குப் பல விஷயங்களில் ரோல் மாடலாக இருப்பவர்!).  அந்த ஆவியைப் பார்த்த போது அவர் செய்த பரிசோதனைகள் பற்றி சொல்லச் சொல்ல வியப்பாக இருக்கும். என் தாத்தாவும் அவரும் படுத்திருந்தது 90 டிகிரி ஆங்கிளில். இவர் அந்த உருவத்தை பார்த்தது அதன் இடது பக்கதில் இருந்து. எனவே அந்த உருவத்தால் இவரை நேருக்கு நேராகப் பார்க்க முடிந்திருக்காது. அந்த உருவத்தால் ஒருவர் விழித்துக் கொண்டு இருப்பதையும் அதைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் உணர (பார்க்க முடியவில்லை என்றாலும்)  முடிகிறதா என்று அறிய,  அவர் படுத்துக் கொண்டே காலையும் பின்னர் கையையும்  மெல்ல ஆட்டியிருக்கிறார். ஆனால் அந்த உருவம் அவர் டேய் என்று சத்தமிடும் வரைக்கும் அவரை உணரவில்லை! அது மறைந்த பின்பு அது நின்ற இடத்தில் ஏதும் சூடு அல்லது குளிர்ச்சி தெரிகிறதா என்று தடவிப் பார்த்திருக்கிறார். அந்த நள்ளிரவிலும் வீட்டைச் சுற்றி  (வெளியே  தெருவிலும்)  வந்து ஏதேனும் தெரிகிறதா என்று தேடியும் இருக்கிறார். எந்த ஒரு அடையாளமோ தடையங்களோ  கிடைக்கவில்லை. இதுவரைக்கும் அதன் மர்மமும் விளங்கவில்லை....!

இரண்டாவது அனுபவம் என் மாமாவின் நண்பருக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு நேர்ந்தது.  அப்போது அவர் வெளியூரில் வேலை செய்து கொண்டு இருந்தார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வருவார். அப்படி ஒருமுறை வரும்போது தாமதமாகி இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டுத் திண்ணையில் வழக்கமாக ஒரு வயதான் பெண் படுத்திருப்பார் (அந்தப் பாட்டி வழக்கமாக அங்கே தான் தூங்குவார்). அன்றும் அந்த்ப் பாட்டி திண்ணையில் இருந்து கொண்டு இவரைப் பார்த்து என்ன இப்போதான் வரீங்களான்னு கேட்டிருக்காங்க! இவரும் ஆமா பஸ்ஸு கொஞ்சம் லேட்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மனைவியிடம் எதேச்சையாக அந்தப் பாட்டி கேட்டதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் அவர் மனைவி அம்மாடி என்று அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். அந்தத் பாட்டி இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்! அந்த நபருக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல்!

இப்பிடி இரண்டு மறுக்க முடியாத அனபவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும் எனக்கு ஆவிகள் பற்றி பெரிதாக நம்பிக்கை இல்லை. இப்படித்தான் ஒரு நண்பனிடம் ஆவிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் வந்துவிட்டது.  தானும் ஆவியைப் பார்த்திருப்பதாக நண்பன் கூறீனான். நானோ  ஆவியயை நானே பார்த்தால்தான் நம்புவேன் என்று  சொல்லிவிட்டேன்.  நண்பன் சற்று யோசித்துவிட்டு அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.  அடுத்த வாரமே போவோம், நான் போன் பண்ணிக் கூப்பிடும் போது வந்தால் போதும் என்றான்.

வீம்புக்காக சரி பாத்துடுவோம் என்று சொல்லிவிட்டாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருக்கவே செய்தது. அந்த வாரம் முழுவதும் நண்பன் எப்போது கூப்பிடுவானோ என்று நடுக்கத்திலேயே கழிந்தது. சரியாக 8வது நாள், இரவு 9 மணி இருக்கும், நண்பனின் தொலைபேசி அழைப்பு. பயந்து கொண்டே எடுத்தேன். உடனே கெளம்பி வா என்றான். நான் இந்த நேரத்திலேயா என்று தயக்கத்துடன் கேட்டேன். அவன் இதான் சரியான நேரம் என்று கூறிவிட்டான்.

அவன் என்னை மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்றான். கொஞ்சம் இங்கேயே இரரு வந்திடுறேன்னுட்டுப் போயிட்டான். எனக்கு திக்கு திக்குன்னு இருந்தது. சரி கூட நண்பந்தான் இருக்கானே, ஆவி ஒருவேளை இருந்தாலும் அது அவனுக்குத் தெரிந்த ஆவியாகத்தான் இருக்கும் அதனால் பிரச்சனை ஒன்றும் வந்துவிடாது என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். அதற்குள் அவனும் வந்து விட்டான். கையில் என்னமோ வைத்திருந்தான்.

அதை என் கையில் கொடுத்து ஆவி பாக்கனும்னியே இந்தா பாரு என்றான். வாங்கிப் பார்த்தால்.....
..
..
அது...............


ஆனந்த விகடன்........!



(மக்கா..... இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன், அதுனால நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ்........   மீ பாவம்ல?)

!

Monday, November 8, 2010

இந்தி கத்துக்குங்க சார்... இந்தி...!

எல்லாரும் நல்லபடியா தீபாவளி கொண்டாடி இருப்பிங்க. நெறையப் பேரு பலகாரம், பட்சணங்கற பேருல வீட்டுக்கார அம்மணியோட பல பரிசோதனை முயற்சிக்கு ஆளாகி இன்னும் தெளிஞ்சிருக்க மாட்டீங்க. சரி சரி.....  சின்ன விசயத்துக்குலாம் இப்பிடி கவலப்பட்டா எப்பிடி? கண்ணத் தொடைங்க! நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க, இப்போ நாம இந்தி கத்துக்கப் போறோம். கத்துக்கிட்டு எங்கேயோ போகப் போறோம், இனி நம்ம ரேஞ்சே வேற!

இந்திதான் தேசிய மொழின்னு 80 கோடி இந்திவாலாக்கள் நம்புறாங்க, சொல்றாங்க. ஒரு ஜனநாயக நாட்டுல, மெஜாரிட்டி கருத்துக்கு மரியாத கொடுக்குறதுதானே முறை? ஆகவே நம்ம ஜனநாயகத்தக் கட்டிக் காக்க நாமலும் இந்தி கத்துக்கப் போறோம் மக்கா. இந்தியக் கத்துக்கிட்டுப் போயி நாமல்லாம் யாருன்னு இந்திவாலாக்களுக்குக் காட்டறோம், சென்ட்டர்ல ஆச்சியப் புடிக்கிறோம்.

இவ்வளவு சொல்லியும் இந்தி கத்துக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றவங்களுக்காக, நாம எல்லோரும் இந்தி கத்துக்கறதுனால என்னென்ன நன்மைகள்னு வெளக்கமா ஒரு பட்டியல் போட்ருக்கேன். அதப் பாத்தாவது திருந்ததுற வழியப் பாருங்கப்பு!

  1. தமிழ்நாடுங்கற பேர டமில் ப்ரதேஷ் அப்படின்னு மாத்தி உடனடியா தேசிய நீரோட்டத்துல ஓடிப்போயி தொபுக்கடீர்னு குதிச்சிடலாம்!
  2. ஒரு தமிழன் பிரதமரா வர்ரதுக்கு உடனடி வாய்ப்பு (அது அஞ்சாநெஞ்சனான்னு முந்திரிக்கொட்ட மாதிரிக் கேக்கப்படாது!)
  3. இனி நம்ம மீனவர்கள இலங்க்கை கடற்படை தாக்குனா, நம்ம இந்தியக் கடற்படை பெரும் போர் நடத்தி காப்பாத்தும்  (ஏன்னா இதுவரைக்கும், மாட்டிக்கிட்ட நம்ம மீனவர்கள், தமிழ்ல காப்பாதுங்கன்னு கத்தினது நம்ம கடற்படைக்குப் புரியல, இப்போ இந்தி கத்துக்கிட்டு, இந்தில காப்பாத்துங்கன்னு கத்தலாம், உடனடி உதவி நிச்சயம்!)
  4. காவிரில தண்ணி தினந்தோறும் திறந்துவிடப்படும், திறக்க மறுக்கும் கர்னாடக அரசு உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்! (இதப்பத்தி நம்ம மொதல்வரு, தமிழ்ல கடிதம் எழுதுனதுதான் தப்பு! என்ன எழுதியிருக்குன்னு புரியாம, பிரதமர் அய்யா, நடவடிக்கை எடுக்க முடியாமப் போச்சு! இனி இந்தில கடிதம் எழுதி காரியத்த கச்சிதமா முடிப்போம்ல?)
  5. கேரளாவில் முல்லைப்பெரியார் அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு தடை செய்து இருக்கும் அணையைத் தமிழகத்திடம் ஒப்படைக்கும்! அதே போல் அந்திராவிலும் பாலாற்று அணைக்குத்தடை!
  6. சுப்ரீம் கோர்ட் கிளை உடனடியாக சென்னைக்குக் கொண்டுவரப்படும் (இனி தைரியமா டெல்லில இருந்து வந்து இந்திலயே வாதாடலாம்ல?)
  7. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வை முழுக்க முழுக்க இந்தியிலேயே நடத்தி சாதனை படைப்பார் தமிழினத் தலைவர்!
  8. சன் டிவி ஒரு முழுநேர இந்திச் சேனல் ஆரம்பித்து நமக்குப் பேரானந்தம் அளிக்கும்! (சன்டிவியே பாத்துப் பாத்துப் பழகியவர்கள், இனி இந்தி சன்டிவியைப் பார்த்து பெருமிதம் அடையலாம்!)
  9. தமிழ்ப் படங்களுக்கு குறைந்தது 10 தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும்! அதைப்பத்தி கமல் இந்தியிலேயே பேட்டி அளிப்பார் (பயப்படாதீங்க, வழக்கம்போல யாருக்கும் புரியாத மாதிரிதான்!)
  10. டாகுடர் விஜய்யின் ஐம்பெருங்காப்பியங்களான ஆதி, வில்லு, குருவி, வேட்டைக்காரன், சுறா படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு சரித்திரம் படைக்கும், அதைத் தொடர்ந்து டாகுடர் மும்பை ஜூஹூவில் பெரிய பங்களா வாங்குவார் (உடனே ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்து எல்லோரும் மும்பையில் வீடு வாங்கும் நல்ல நிலை(?) ஏற்படும்!)
  11. அது கண்டு மிரளும் அமிதாப்பும், ஷாருக்கானும் சென்னைக்கு ஓடிவந்து ஆளுக்கொரு பங்களா வாங்கிவிடுவார்கள் (தமிழர்கள் இனி தினமும் அவர்களைக் கண்டு மனமாறத் தரிசித்து இன்புறலாம்!)
  12. தமிழ் சினிமாவின் அழகுப் பதுமைகள் இனி சௌகர்யமாக இந்தியிலேயே பேட்டி கொடுத்து நம்மை மகிழ்விப்பார்கள் (ரொம்ப முக்கியம்! நமீதா மச்சான்ஸ்... ரசிகர்கள் சாரி வெறியர்கள் மன்னிப்பார்களாக!)
  13. அம்பானிகள், டாட்டாக்கள் சென்னையில் பாதிக் கம்பெனிகளை (பாதிச் சென்னையையும்தான்) வாங்கிவிடுவார்கள். நாமும் அவர்களுக்கு நம் புது விசுவாசத்தை இந்தியில் காட்டி மகிழலாம்!
  14. மாறன் அன் கோ, இனி அமிதாப்பை வைத்து எந்திரன் - 2 எடுக்கும்! (அப்போ எந்திரன் -3 கோவிந்தாவ வெச்சான்னுலாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது!)
  15. அன்பு அண்ணன் அஞ்சாநெஞ்சர் தலைமையில் மதுரையில் மாபெரும் ஒலிம்பிக்ஸ் நடத்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் (அதையும் கல்மாடி அண்ணனே நடத்திக் கொடுப்பாரு!)
  16. தமிழகம் இந்தியாவின் 37வது மாநிலமாக இணைக்க்படும் (என்னது ஏற்கனவே அங்கேதான் இருக்கோமா, சாரி சாரி, டங்க்... சே.... கையி...ஸ்லிப்பு ஆய்டுச்சி, இத யாரும் படிக்காதீங்க!).

பாத்திங்களா மக்களே எம்புட்டு நன்மைகள் நம்மத் தேடி வருதுன்னு? இதுக்கு மேலேயும் இந்தி கத்துக்காம இருக்கலாமா? அது தப்பில்லையா? அநியாயமில்லையா?

சரி, ஏழுகழுத வயசாயிடுச்சு இதுக்கு மேல எங்கே போயி இந்தி கத்துக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? நான் இருக்கும் போது நீங்க இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்குலாம் தயங்கலாமா? பயப்படாம வாங்க நான் கத்துதரேன், அதுவும் இலவசமா!

ஓக்கே, ஸ்டார்ட்!

பர்ஸ்ட்டு, நம்பர் சொல்றது,
கையில ஏதாவது கர்லாக் கட்ட இருந்தா தூக்கிகிடுங்க (ஏதாவது உருட்டுக்கட்டயா இருந்தாலும் பரவால்ல! ) இப்போ வரிசையா சொல்லுங்க பாப்போம்!
ஏக்கு, தோவ்வு, தீனு, சாரு (பிச்சிபுடுவேன், இது அந்தச் சாரு இல்ல!), பாஞ்ச்சு.....!
அட என்ன சார் நீங்க இதக் கூட சரியா சொல்ல மாட்டேங்கிறீங்க? சரி சரி, கோச்சுக்காதீங்க, கக்கூசுல கக்கா போவும்போது இன்னொரு வாட்டி சொல்லிப் பாத்துக்கிடுங்க போதும்! இனி நாம அடுத்த பாடத்துக்குப் போவோம்!


ஒருவழியா நம்பர் சொல்லக் கத்துக்கிட்டீங்க, அதே மாதிரி இனி பேசுறது எப்படின்னு பாப்போம். பக்கத்துல ஏதாவது மிக்சர், பக்கோடா, காராச்சேவு ஏதாவது வெச்சுக்குங்க! (எதுக்குன்னு வெளக்கெண்ண கேள்வியெல்லாம் கேக்கப்படாது!)

மிக்சர கைநெறைய அள்ளி வாயில போட்டுக்குங்க, இப்ப நான் சொல்லச் சொல்ல நீங்க திருப்பி சொல்லனும் (இது பார்த்திபன் மாதிரி திருப்பி இல்ல!)

ஏக் காவுன் மே....... (கவுனு இல்ல காவுன்...    கா....   வு....    ன்.....!)


ஏக் கிஸான்......


ரக தாதா.....!


எங்க இன்னொரு வாட்டி சொல்லுங்க

ஏக் காவுன் மே..............    ஏக் கிஸான்................    ரக தாதா...... ரக.,... ரக..... ரக தாதா......

என்ன சார் இப்பிடி சொதப்புறீங்க, இது சரிப்படாது, இன்னும் கொஞ்சம் மிக்சர் வாய்ல அள்ளிப் போட்டுக்கிட்டு, இன்னொரு வாட்டி இந்த வீடியோவப் பாத்து அதே மாதிரி டிரை பண்ணுங்க!




சரி பாடம் படிச்சாச்சு, இனி டெஸ்ட்டு. கீழே இருக்க கேள்விகளுக்கு பதில் சொன்னா அதிரடி பரிசுகள் உண்டு!


1. "ஏக் மார் தோ துக்கடா" என்றால் என்ன?


2. "கலத் காம் மத் கர்": சிறு குறிப்பு வரைக.


சரியாக விடையளிக்கும் முதல் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு,

முதல் பரிசு:
மங்குனி அமைச்சர் ராப்பகலாக எழுதிக்கொண்டிருக்கும் 'இந்தி டிக்சனரி' என்ற அதிர வைக்கும் திரில்லர் நாவல்!

இரண்டாம் பரிசு:
பட்டாஜி அவர்கள் இத்தாலி மொழியில் எழுதியுள்ள 'அன்னையின் ஆணை' குணச்சித்திர நாவல்!

மூன்றாம் பரிசு:
சிரிப்பு போலீஸ் சிங்கை லக்கி பிளாசாவில் தோழிகளுடன் அமர்ந்து கொலம்பியா மொழியில் எழுதிய 'பழைய காதலி' என்ற மனதை மயக்கும் காதல்கதை!

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நம்ம டீஆர் இந்தியில் நடித்துக்கொண்டிருக்கும் புதிய தமிழ்ப்படத்தின் DVDக்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்!

Wednesday, November 3, 2010

எங்கே போறீங்க? (கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்!)


ஒரு பிரபல பதிவரு வேலை விசயமா சிங்கப்பூரு கெளம்புனாரு (சிரிப்பு போலீசு இல்லீங்கோ!). ஆபீசுல இருந்து வந்து அவசரம் அவசரமா எல்லாத்தையும் பேக் பண்ணி ஆரம்பிச்சாரு. அப்பிடியே வீட்டுக்கார அம்மாகிட்ட, போயிட்டு வர்ரேன், பாத்து பத்தரமா இருந்துக்கோன்னு சென்டிமென்ட்டா மூஞ்சிய சோகமா (?) வெச்சுக்கிட்டே  சொன்னாரு . அப்போ அதே சென்டிமென்ட்டோட வீட்டுக்காரம்மாவும்  சில கேள்விகளைக் (?)கேட்டாங்க. அதக் கேட்டவருதான்.......டோட்டல் புரோகிராமையும் கேன்சல் பண்ணிட்டாரு. இனி அவரு பக்கத்து பெட்டிக்கடைக்குகூட போகமாட்டாரு போல.... நெலம அம்புட்டு மோசமா இருக்கு!

எச்சூஸ் மி, எங்கே எஸ்கேப் ஆகுறீங்க? அவரு வீட்டுக்காரம்மா என்ன கேட்டாங்கன்னு தெரிஞ்ச்சுக்க வேணாமா? (அப்போதானே நாளப் பின்ன உங்களுக்கும் உபயோகமா இருக்கும்?)

  1.  எங்க போறிங்க?
  2. யாருகூட போறிங்க?
  3. ஏன் போறிங்க?
  4. எப்படிப் போறிங்க?
  5. எங்க தங்குவீங்க?
  6. அங்க போயி என்ன பண்ன போறிங்க?
  7. ஏன், நீங்க போறீங்க?
  8. எப்ப திரும்ப வருவீங்க?
  9. நைட்டு சாப்புட வந்துடுவீங்களா?
  10. நான் குடுக்குற சாப்பாடத்தான் கொண்டு போயி சாப்புடனும்!
  11. என்ன வாங்கிட்டு வருவீங்க?
  12. நீங்க வேணும்னே இப்படி கெளம்பிப் போறிங்க?
  13. ஏன் பொய் சொல்றிங்க?
  14. என்னையும் கூட்டிட்டுப் போகனும்?
  15. போனவாட்டியும் இப்பிடித்தான் பண்ணிங்க?
  16. ஏன் இந்த மாதிரி டூர் புரோகிராம் ஏற்பாடு பண்ணீங்க?
  17. அடிக்கடி இந்த மாதிரி கெளம்பிடுறிங்க?
  18. அப்பிடி என்ன ஆபிஸ் வேல இருக்கு அங்க?
  19. அந்த வேலைய இங்கேயே பாக்க வேண்டியதுதானே?
  20. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்!
  21. திரும்ப வர மாட்டேன்!
  22. என்னைத் தடுக்கக் கூட மாட்டீங்கிறீங்களே?

  1. எங்கே போறிங்க? (ஒண்ணுமில்ல அடுத்த செசன் ஸ்டார்ட் அவ்வளவுதான்!)


படிக்கிற நமக்கே இப்பிடி இருக்கே, பாவம்யா அந்தப் பிரபலப் பதிவரு!


எச்சரிக்கை: ஆகவே மெஸேஜ் என்னன்னா, கல்யாணம் ஆகாத பசங்கள்லாம் (தலைப்புல என்ன போட்டாலும் நீங்கதான் மொத வருவீங்கன்னு தெரியும்!) ) எங்கெங்கே ஊரு சுத்தனுமோ, சுத்திப் பாக்கனுமோ எல்லாத்தையும் இப்பவே எஞ்சாய் பண்ணிடுங்க! அப்புறம் பொட்டிக்கடைக்குப் போகனும்னாலும் ஒரு நீயா நானா நடத்த வேண்டி வரும்!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

லீவு கெடச்சிடுச்சுன்னு எங்கேயும் ஊர் சுத்தாம,குடும்பத்தோட சந்தோசமா கொண்டாடுங்கப்பு!