திரும்பிப்பார்த்தால்..... ? ஆமாங்க, திரும்பிப் பார்த்தா பின்னாடி என்ன இருக்குன்னு தெரியும் (உங்க பின்னாடி இல்ல சார், உங்களுக்குப் பின்னாடி). ஆனா நெறையப் பேருக்கு 2010 தெரியுதாம்ல.... ங்கொக்காமக்கா.. .! அதான்யா சினிமாவுல வானத்த பாத்துக்கிட்டே சொல்லுவானுகளே என்னது அது, ஆங்..... ப்ளாஷ்பேக்கு....... 10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு, படுவா இத வெச்சே பொழுத போக்கிக்கிட்டு இருக்கானுங்க. படுபாவிங்க, அப்படியே போக வேண்டியதுதானே, போற போக்குல மத்தவனுங்களையும் கோர்த்து விட்டுடுறானுங்கப்பா.... படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்? அட எழுதப்போறவங்களப் பத்தியாவது நெனச்சுப்பார்க்கலாம்ல? என்ன ஓலகம்யா இது............? இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா.... உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.
சரி மேட்டருக்குப் போவோம்...
ம்ம்..... என்ன தலைப்பு இன்னிக்கு.. ....ஆங்... திரும்பிப்பார்த்து என்னன்னு சொல்லனும்ல? திரும்பிப்பார்த்தே சொல்லிடுவோம்......!
2010ம் ஜனவரிலதான் ஸ்டார்ட் ஆச்சு, சோ நாமலும் அப்பிடியே ஸ்டார்ட் பண்ணுவோம்.....
(யார்ராவன்........... சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால....... எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !)
ஜனவரி:
ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?
பிப்ரவரி:
ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே..... ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!
மார்ச்:
மார்ச்லதாங்கோ ப்ளாக் பக்கமா மொத மொத தலைகாட்டுனேன். நெட்ல 'எதையோ' தேடிக்கிட்டு இருந்தப்போ சுறா சாங்ஸ் சூப்பர் ஹிட்டுன்னு வெளியூர்காரன் போட்ட பதிவு கண்ணுல சிக்குச்சு, ங்கொய்யால, இன்னுமா இப்பிடி ஆளுக இருக்காய்ங்கன்னு வந்துச்சு கோபம்....... துடித்தது புஜம்..... ஆனா..... எப்படி கமென்ட் போடுறதுன்னே தெரியல..... கொஞ்ச நேரம் பொட்டிய தட்டிக்கிட்டி, ஐடி ரெடி பண்ணிட்டேன் (அப்பவே பன்னிக்குட்டி ராம்சாமின்னு பேர் வெச்சுட்டேன், திட்டறதுக்கு வசதியா இருக்கட்டுமேன்னுதான் அந்த பேர சூஸ் பண்ணேன்). அப்புறம் போட்டேம்பாருங்க கமென்ட்டு...... 400ஐ தாண்டிடுச்சு.....
ஒரே நேரத்துல வெளியூரு, பட்டா, முத்து, கரிகலான், மங்கு எல்லாரையும் அடிச்சு ஆடுனேன், கும்மின்னா கும்மி மரணக் கும்மி........ இப்போ வரைக்கும் அப்படி ஒரு கும்மி அடிக்கவே இல்ல. 'பொதுநலன்' கருதி நெறைய கமென்ட்ச அதுக்கப்புறமா டெலிட் பண்ணிட்டோம். சும்மா ஆபீசுல உக்காந்து தினமலர் படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு இந்த கும்மி வெளாட்டு ரொம்ப புடிச்சுப் போச்சு, அப்பிடியே மத்த ஆளுக ப்ளாக் பக்கமும் போயி கமெண்ட் போட ஆரம்பிச்சேன். என்ன கொஞ்சம் ஓவரா போகுதோ, போனா என்னா, தொடர்பதிவுன்னா அப்படித்தான் இருக்கும். பேசாம படிக்கனும். சரி, இந்த மாசத்துக்கு இம்புட்டு போதும், மத்ததை அடுத்த மாசத்துல பார்ப்போம்.
ஏப்ரல்:
ஏப்ரல் மாசம் பூரா சும்மா கமென்ட்டுதான் போட்டுக்கிட்டு இருந்தேன், அதுவும் ஏடாகூடமா! ப்ளாக்கு வேற இல்லாததால, பதிலுக்கு என்ன திட்டமுடியாம எல்லோரும் கொஞ்சம் கடுப்பா இருந்தாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் வெளியூரு, பட்டா, மங்குனி ப்ளாக்குகள்ல பழைய பதிவுகள படிக்க ஆரம்பிச்சேன். அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது. தெரிஞ்ச ப்ளாக்ஸ் அட்ரஸ்களை மெயில்ல போட்டு வெச்சு அப்பப்போ ஓப்பன் பண்ணிப் படிப்பேன்.
மே:
இப்படியே கமென்ட்டு போட்டுக்கிட்டு இருக்கும்போது மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க. நானும் ரொம்ப யோசிச்சுட்டு (பின்ன, ப்ளாக் ஆரம்பிச்சா ஏதாவது எழுதனுமே?) சரி போனா போகுதுன்னு படிக்கப் போறவங்க மேல பாரத்த போட்டுட்டு ப்ளாக் ஆரம்பிச்சேன். அதுவும் கரெக்டா மே மாசம் 31ம் தேதி. (எப்படி ஞாபகம் வெச்சிருக்கேன் பாத்தீங்களா?)
ஜூன்:
ப்ளாக்கு ஆரம்பிச்சதுமில்லாம, நானும் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சேன். அழகிகள், பிட்டுப்படம்னு ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும், நமக்கும் நல்லாத்தான் எழுத வருது போலேன்னு நான் பாட்டுக்கு கண்டமேனிக்கு எழுதிகிட்டு இருக்கேன் இன்னைக்கு வரைக்கும். நமக்கென்ன வந்துச்சு, அது படிக்கறவங்க பாடு.
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க. கமென்ட்டுன்னா எதையும் கண்டுக்காம மனசுல தோண்றத பட்டுன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அப்புறம் சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிக்க ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான். செம்மொழி மாநாட்டுல, இணையத்தமிழ் அரங்கத்துல ஒரு ஸ்டால்ல நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக்க அறிமுகப்படுத்துனாங்கன்னு படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். பெரிய பெரிய ஆளுக கூட பழகறோம்னு பெருமையா இருந்துச்சு... (பாருங்க எப்படி அப்பாவியா இருந்திருக்கேன்னு....!)
என்னை மாதிரியே வெறும் கமென்ட்டு கும்மின்னு வெளையாண்டுக்கிட்டு இருந்த ஜெய்யும் ப்ளாக்கு ஆரம்பிச்சார். கும்மிக்கு இன்னொரு எடம் கெடைச்சதுன்னு சந்தோசமா இருந்தேன். இப்போ தலைவரு எழுதுறதே இல்ல. ப்ளாக்கு பூரா கரையான் அரிச்சுக்கிடக்கு....!
ஜூலை:
இந்த மாசத்துலதான் ஊருக்குக் கெளம்புனேன், அதுனால ஒரே சந்தோசமா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். phantom பருப்பு மோகனும் நான் கெளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் சென்னை போறதா சொல்லியிருந்தார், அதுனால் எப்படியும் மீட் பண்ண்லாம்னு நெனச்சேன். ஆனா முடியல. அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.
ஆகஸ்ட்:
ஃபுல்லா ஊர்ல தான். அதுனால நோ பதிவு, அப்பப்போ கமென்ட்ஸ் அவ்வளவுதான். இந்தமாசம்தான் பிரபல பதிவர்கள் மீட்டிங் சென்னைல ஒரு புகழ் பெற்ற ஓட்டல்ல நடந்துச்சு. அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால, அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.
பேக் டூ ஊர்.... ஊர்ல பவர்கட் பிரச்சனையோட முழு தீவிரத்தையும் உணர்ந்தேன். ஆகஸ்ட்ல கிளைமேட் வேற வறுத்து எடுத்துடுச்சு, இனி இந்த டைம்ல ஊருக்குப் போறதில்லேன்னு முடிவு பண்ணியிருக்கேன், பார்ப்போம்! இந்த வருசம் எலக்சன் டைம்ல போகலாம்னு இருக்கேன், கரண்டு, ரோடு எல்லாம் நல்லா இருக்கும், டீவி, பேப்பரு, நீயூசுன்னு காமெடியா வேற பொழுது போகும்ல..... ?
செப்டம்பர்:
இந்த மாசம் ஏதோ கொஞ்சம் பதிவுகள் எழுதுனேன். ஊர்ல இருந்து சென்னைக்கு ஒரு வேலையா வந்தப்போ, சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம் எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட் பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை, அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். பரவால்ல, அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)
நம்ம பட்டிக்காட்டான் ஜெய், டெர்ரர் பாண்டியன், பனங்காட்டு நரின்னு (தில்லுமுல்லு) ரெண்டு பேர அறிமுகம் பண்ணி வெச்சாரு. நம்ம பசங்கதான் நல்லா கும்மியடிப்பானுங்க, பின்னாடி யூஸ் ஆகும்னாரு. நானும் நம்பி சேத்துக்கிட்டேன். இப்போ நாதாரிங்க ரெண்டு பேருமே கும்மியடிக்கிறத விட்டுட்டானுங்க. என்ன பண்றது? சரி பொழச்சி போறானுங்க பாவம், ஆப்பீசுல ஆணியாவது அடிக்கட்டும் (அதாவது, ஆப்பீசுல மத்தவங்க புடுங்கற ஆணிய இவனுங்க அடிப்பானுங்க சார்.... வேற ஒண்ணுமில்ல...!)
செப்டம்பர் மூணாவது வாரம்,. ரொம்ப வருத்தமா ஊர்ல இருந்து கெளம்பி வந்து சேர்ந்தேன். ஊர்ல இருந்து கெளம்புறதுன்னாலே வருத்தமாத்தான் இருக்கு, என்ன பண்றது?
அக்டோபர்:
அக்டோபர்ல நிறைய பதிவுகள், நிறைய அறிமுகங்கள்னு நல்லா போச்சு. வட்டத்தை விட்டு வெளிய வந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன் (இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன், முடியல). கும்மி நண்பர்கள் குழு செட் ஆக ஆரம்பிச்சது இந்த மாசம்தான். நல்ல நட்புகள், அலுவல டென்சனைக் குறைத்துக்கொள்ள அருமையான டைவர்சன். வலைதாண்டியும் நேசக்கரம் நீட்டி வளரும் நட்புகளில் பல ஆச்சர்யங்கள், பல படிப்பினைகள். ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் எழுதும் சுவராசியமே குறைந்து போகுமோ? (என்னைச் சொன்னேன்... ஏன்னா நானெல்லாம் இவ்வளவு நாளு எழுதுறேன்னு சொல்லி தாக்குப்பிடிக்கறதே அவங்களாலதானே...?)
நவம்பர்:
நவம்பர்ல கொஞ்சம் லீவு கெடச்சுச்சு, மத்த நாடா இருந்தா, ஊருக்குப் போயிட்டு வரலாம், இங்கே அதெல்லாம் சாத்தியமில்லைங்கறதால, சும்மா அங்க இங்க சுத்துனேன். நல்லா ரெஸ்ட்டு எடுத்தேன். வலைச்சரத்துல நண்பர்கள்லாம் எழுதுனாங்க. வழக்கம் போல அருமையான அறிமுகங்கள்னு பாராட்டினேன். என்னமோ தெரியல இதுவரைக்குமே வலைச்சரத்துல என்னை 2 தடவதான் அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஒரு வேளை நம்ம எழுதுறதப் பார்த்துட்டு பயந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன். நம்ம என்ன சமுதாயப்பணி செய்யவா எழுத வந்திருக்கோம், இல்ல இலக்கியம் பலக்கியம்னு எழுதி மெடலு குத்திக்கிட்டு நிக்கப் போறோமா? ஏதோ படிக்க ஆளு கெடைக்கற வரைக்கும் முடிஞ்சத எழுதுவோம்... இல்லேன்னா சத்தமில்லாம நைசா பொட்டியக் கட்டிடுவோம்.... அம்புட்டுதான்!
டிசம்பர்:
இந்த மாசம், என்னையும் வலைச்சரத்துல எழுத கூப்புட்டாங்க. கொஞ்சம் பயமா இருந்தாலும், முடியாதுன்னு சொல்லிட்டா இனி மறுபடி கூப்பிட மாட்டாங்களோன்னு உடனே ஒத்துக்கிட்டேன். பயங்கரமா தேடித் தேடி பதிவுகளைக் கண்டுபுடிச்சு அறிமுகப்படுத்துனேன். ஆனா பாருங்க, எல்லோரும் நான் அந்தப் ப்ளாக்குகளை ரெகுலரா படிக்கிறேன்னு நெனச்சுட்டாங்க. அதுனால கொஞ்சம் இமேஜு வேற கூடிப்போச்சா, நானும் சரின்னு விட்டுட்டேன். என்ன சரிதானுங்களே?
தமிழ்மணத்துல வேற விருதுகளுக்காக ஏதாவது பதிவுகளை சப்மிட் பண்ணுங்கன்னு கெஞ்சுனாங்க. சரி என்ன ஃப்ரீதானே, நாமலும் சப்மிட் பண்ணுவோமேன்னு, மூணு பதிவுகளை செலக்ட் பண்ணலாம்னு உக்கார்ந்தா, எதை செலக்ட் பண்றதுன்னு முடிவு பண்ணவே முடியல, அவ்வளவு அருமையா எழுதியிருக்கேன். அப்புறம் என்ன, வழக்கம்போல படிக்கப் போறவங்க மேல பாரத்தப் போட்டுட்டு சப்மிட் பண்ணேன்.
தொடர்பதிவுன்னு ஒரு மோசமான நோய் பரவ ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான்னு நெனக்கிறேன், இன்னும் முடியல. புதுசு புதுசு கெளப்பிக்கிட்டு இருக்கானுக. இதுக்கு ஏதாவது பண்ணனும்னு பார்க்குறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது சார். இருக்கட்டும், இருக்கட்டும், பின்னாடி ஏதாவது பெருசா பண்ணுவோம்.
எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.
இது தொடர்பதிவு என்றாலும், யாரையும் தொடர அழைக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கமென்ட்டில் தெரிவித்துவிட்டு தொடரலாம். (கமென்ட்டுல சொல்லாமல் தொடர்ந்தால், பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தில் பிராது கொடுக்கப்படும்)
புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!
!