Thursday, August 22, 2013

மாநிற அண்ணாவும் மாநிற எம்ஜிஆரும்......




டாகுடர் தலைவா ரிலீஸ் ஆகிவிட்ட களிப்பில்  நல்லா சாப்புட்டு மப்பும் மந்தாரமுமா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். அப்போ உள்ளே டைரக்டர் விஜய் வர்ரார்.

டைரக்டர் விஜய்: அண்ணே... அண்ணே...

டாகுடர்: வாங்கண்ணா... வணக்கங்கண்ணா எப்படிங்ணா இருக்கீங்க.. ?

டைரக்டர்: வணக்கம்ணே....உங்க புண்ணியத்துல நல்லாருக்கேண்ணே...

டாகுடர்: அப்புறங்ணா....?

டைரக்டர்: உங்களை வெச்சி இன்னொரு படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டு வந்திருக்கேண்ணே...

டாகுடர்: என்னாது உங்கூட இன்னொரு படமா? சரி விடுங்ணா, நாமல்லாம் என்ன தெய்வத்திருமகன் மாதிரி படத்துலயா நடிக்க முடியும்? என் பேர வெச்சிருந்தப்பவே நெனச்சேன் நீங்களும் டுபாக்கூராத்தான் இருப்பீங்கன்னு.... சரி கதைய சொல்லுங்ணா.......

டைரக்டர்: ஒப்பனிங் சீன், அது ஒரு வில்லேஜ், திருவிழா நடந்திட்டு இருக்கு, எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....

டாகுடர்: ஸ்டாப் ஸ்டாப், ஸ்டாப், இதெல்லாம் நானும் எங்க நைனாவும் பாத்துக்கிறோம், மொதல்ல நீங்க க்ளைமேக்ஸ் பைட் பத்தி சொல்லுங்ணா.....

டைரக்டர்: அது செம சீனுங்கண்ணா, உங்களுக்காகவே ஒரு மாசம் உக்காந்து யோசிச்சது...




டாகுடர்: அட சொல்லுங்ணா..........

டைரக்டர்: ஒரு பெரிய பில்டிங்க், 20-25 மாடி ரேஞ்சில புடிக்கிறோம். நீங்க வில்லனுங்க எல்லாரையும் அடிச்சி துவைச்சி தூக்கு கொண்டு போய் அந்த பில்டிங்கோட லிப்ட் முன்னாடி போடுறீங்க, எல்லாருக்கும் திக்கு திக்குங்குது, என்ன பண்ண போறீங்கன்னு...

டாகுடர்: செமையா இருக்கே..... அடிச்சு தூக்கி போட்டுட்டு அடுத்து என்னங்ணா பண்றேன்...

டைரக்டர்: அங்கதாண்ணே பெரிய டிவிஸ்ட்டே வெச்சிருக்கேன், ஹாலிவுட்டே அசந்திடுவானுங்கண்ணே.... இந்த சீனுக்காக நாம ஹாலிவுட் போய் எடுக்க வேண்டி இருக்கும்ணே, பெரிய ப்ரொடியூசரா போடுங்கண்ணே......

டாகுடர்: அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், நீங்க மேட்டருக்கு வாங்ணா....

டைரக்டர்: ஒவ்வொருத்தனா அடிச்சி, முடிச்சி கடைசில மெயின் வில்லனையும் அடிச்சு கொண்டு வந்து போடுறீங்க. லிப்ட் கதவை ஓப்பன் பண்ணி, எல்லாரையும் உள்ள தூக்கி போடுறீங்க, போட்டுட்டு உள்ள போய் டாப் ப்ளோர் பட்டனை அமுக்கிட்டு வெளில வந்துடுறீங்க....

டாகுடர்: ஆஹா........ சூப்பர்........ அப்புறம்.......



டைரக்டர்: லிப்ட் மேல போக முன்னாடி செம ஸ்பீடா படிக்கட்டுல ஏறி மொட்டமாடிக்கு போயி....

டாகுடர்: போயி........

டைரக்டர்:  லிப்டுக்கு நேர மேல இருக்க கூரையை உடைச்சி எடுத்துடுறீங்க, கீழ இருந்து செம ஸ்பீடா வர்ர லிப்ட் அப்படீயே மேல ராக்கெட் மாதிரி பறக்குது... 100 அடி ஹைட் போயி வெடிச்சி சிதறுது..... பின்னாடி தீப்பிழம்பு தெறிக்க ஸ்லோ மோசன்ல நீங்க உங்க வழக்கமான ஸ்டைல்ல கேமராவ பாத்து நடந்து வர்ரீங்க.. அப்படியே ப்றீஸ் பண்ணி படத்தை முடிக்கிறோம்... அந்த இடத்துல ஏதாவது நச்சின்னு கேப்சன் ஒண்ணு புடிச்சு போட்டுடலாம்.....

டாகுடர்: வாவ் செம சூப்பருங்ணா............ உடனே பூஜைய ஆரம்பிங்ணா...... விஸ்வரூபம்-2 கூட சேர்த்தே ரிலீஸ் பண்ணி கலக்குவோம்....

எஸ்.ஏ.சி: ஆங் டைரக்டர் தம்பி.. எல்லாம் நல்லாருக்கு பட் ஒரு விஷயம்.....

டைரக்டர்: சொல்லுங்கண்ணே.....

எஸ்.ஏ.சி: பட டைட்டில்ல மாநிற அண்ணா, மற்றும் மாநிற எம்ஜிஆர் வழங்கும்னு போடனும், ஓக்கேவா....?




டைரக்டர்: போயாங்க்........................ இதுக்கு நான் எங்கூரு பக்கமா போயி புண்ணாக்கு வித்து பொழச்சிக்குவேன், ஆளை விடுங்கடா சாமி..........



நன்றி: கூகிள் இமேஜஸ்!


Saturday, August 3, 2013

பதிவர் சந்திப்பில் பன்னியின் நூல் வெளியீடு...?

வர இருக்கிற பதிவர் சந்திப்புல பதிவர்கள்லாம் நூல் வெளியிடலாம்னு சொன்னதுல இருந்து வாசகர் கடிதங்கள் இருமடங்காகிடுச்சு. சொல்லி வெச்ச மாதிரி அத்தனை கடிதங்கள்லயும் நீங்க ஏன் இந்த பதிவர் சந்திப்புல ஒரு நூல் வெளியிடக் கூடாதுன்னு அடம்புடிக்கிறதாவே இருக்கு. இன்னும் சிலர் கட்டாயம் நீங்க ஒரு நூல் வெளியிட்டே ஆகனும்னு சொல்லிட்டாங்க. பட் நூல் வெளியிடனும்னா அதுக்கு முதல்ல நூல் தயாரா இருக்கனுமே? 

நம்ம பதிவுகள் எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா ஒரு நூலா வெளியிட்டுடலாம்னு ஒரு வாசகர் சொன்னார். ரொம்ப பெருசா வருமேன்னு கேட்டதுக்கு, ரெண்டு வால்யூமா போட்டுடலாம்னுட்டார். ரெண்டு வால்யூம்னா ரெண்டு வாட்டி வெளியிடனுமான்னு தெரியலை. கமெண்ட்டுகளையும் சேத்து வெளியிடனும், கமெண்ட்ஸ் இல்லேன்னா பதிவுகள் எதுக்குமே செல்ப் எடுக்காது. அப்படின்னா குறைஞ்சது பதினேழு வால்யூம் வரைக்கும் வரும்னு ஒரு நிபுணர் சொன்னார். அப்போ பதினேழு பதிவர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கும். அதுனால பதிவுகளை புத்தகமா வெளியிடுறதை பத்தி விவாதிக்க தனியா ஒரு வாசகர் சந்திப்பை நடத்தி அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

இப்போ பதிவர் சந்திப்புக்கு என்ன நூல் வெளியுடுறது? பேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாத்தையும் போட்டு ஒரு குறுநூல் வெளியிட்டுடலாமா? இல்ல, உக்காந்து கவிதையா எழுதி பக்காவா ஒரு நூலை ரெடி பண்ணிடலாமான்னு ஒரே குழப்பம். என்ன பண்ணலாம்னு நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்கிட்ட ஆலோசனை கேட்டேன். அவர் நல்லா யோசிச்சு ரெண்டு நாள்ல சொல்றேன்னு சொல்லிட்டார்.

சொன்ன மாதிரியே ரெண்டுநாள் கழிச்சு மெயில் பண்ணி இருந்தார். ஒண்ணு இல்ல, ரெண்டு நூலா ரிலீஸ் பண்ணிடுவோம். உங்களுக்கு புடிச்சிருக்கா பாருங்கன்னு நூல்களை அட்டாச் பண்ணி வேற அனுப்பி இருந்தார். பார்த்த உடனே எனக்கு பிடிச்சுட்டுது. உங்களுக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு நூல்களுக்கும் நல்ல பேர் வெச்சி பதிவர் சந்திப்புல என் சார்பாக நாய்நக்ஸ் நக்கீரனையே வெளியிட சொல்லிடலாம்னு இருக்கேன். 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


என்ன சார் நம்ம நூல்கள் உங்களுக்கு புடிச்சிருக்கா?


நன்றி: கூகிள் இமேஜஸ்

Thursday, July 25, 2013

கன்னி கணிணி அனுபவம்....





கன்னி கணிணி அனுபவம்னு ஒரு தொடர்பதிவு எழுதிக்கிட்டு வர்ராங்க. நம்மளைலாம் யாரும் கூப்புட மாட்டாங்க பட் அதுக்காக அப்படியே விட்ர முடியுமா? தன்கையே தனக்கு உதவவில்லை யெனில், முழங்கை கூட மதிக்காதுன்னு பாலமன் ஆப்பையாவே சொல்லி இருக்கறதால நானே என்னை கூப்டுக்கிட்டு நானே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். இண்டர்னெட் பிரபலமாகிட்டு இருந்துச்சு. கொஞ்சம் ப்ரீ டைம் கிடைச்சா போதும், ஆளாளுக்கு ஒரு பிகர தள்ளிக்கிட்டு போய்டுவானுங்க. நமக்கு போக்கிடமே இருக்காது. கேண்டீனுக்கு போனா எல்லா டேபிள்லயும் இவனுங்களே சிங்கிள் டீய வாங்கி வெச்சிக்கிட்டு ரெண்டு மணி நேரம் வறுப்பானுங்க, உக்காந்து வேடிக்க பார்க்க கூட இடம் கிடைக்காது, கிரவுண்ட் பக்கம் போனா வெட்டியா ஒரு பால், பேட்ட வெச்சிக்கிட்டு நாலு பேரு சீன் போட்டுட்டு இருப்பானுங்க. அவனுங்களும் வெளையாட மாட்டானுங்க அடுத்தவனையும் வெளையாட விடமாட்டானுங்க. அவனுங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு தஸ்புஸ்னு பேசுற நாலு பிகருக அங்க நின்னுக்கிட்டு ஹாய்யா போயா வாயான்னு அலப்பற பண்ணிட்டு இருப்பாளுக.

வெளில போய் டீக்கடைலயாவது உக்காரலாம்னா அங்க காலேஜ் வாத்தியாருங்க தொல்லை. சரி மிச்சம் மீதி இருக்க அல்லகைஸ் எவனையாவது ரெடி பண்ணிட்டு தியேட்டர் பக்கம் போகலாம்னா, அவனுங்க பிட்டுப்படத்த தவிர வேற படம் பாக்க மாட்டோம்னுட்டானுங்க. நாமலும் ஒரே படத்த எத்தன வாட்டிதான் பாக்குறது? இப்படி நம்ம பொழப்பு லோல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. 

ஒருநா இந்த மாதிரியான ஒரு நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியாம லைப்ரரில தனியா உக்காந்து பெரிய பெரிய பொஸ்தகங்களை வெச்சி வெட்டி சீன் போட்டுட்டு இருந்தப்ப ஒரு சுமாரான ஜூனியர் பிகரு, பேரு சுதா,  பக்கத்துல வந்துச்சு. வந்து சுத்திமுத்தி பாத்துட்டு,

சார், வந்து.....

சொல்லு சுதா.. என்ன வேணும்?

அது வந்து, நீங்கதான் கம்ப்யூட்டர்ல பெரியாள்னு சொன்னாங்க ...

"!!!!!!!" ( எவனோ நம்ம பசங்கதான் சொல்லி இருக்கனும், நம்ம பசங்க எப்பவும் இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் பண்ண மாட்டானுங்களே, இதுல எதுவும் சதி இருக்குதா?) எவனாவது ஒளிஞ்சிருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கானான்னு சுத்தி முத்தி பார்த்தேன்..... ஒரு பக்கியையும் கணோம்...

என்ன சார், யோசிக்கிறீங்க, நான் வேணா அப்புறம் வரவா?

...ம்ம் இல்ல இல்ல,. சொல்லு சுதா... ஏதாவது ப்ரோகிராம் இன்ஸ்டால் பண்ணனுமா?

இல்ல சார், பிரவுசிங் செண்டர் போய் ஈமெயில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன். 




அப்போ நெட்டு இருந்த ஸ்பீடுக்கு ஒரு ஈமெயில் செக் பண்ணவே அரை மணி நேரம் ஆகிடும். ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்றேன்னு ஆரம்பிச்சி வெச்சி கடலை வறுத்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் நல்லா போய்ட்டு இருந்துச்சு. அப்புறம்தான் கவனிச்சேன், அங்க ஒரு சூப்பர் பிகர் வேலைல இருக்குன்னு. இவ்ளோ பக்கத்துல இருக்கு, நமக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு. அதை கூப்புடனும்னா சிஸ்டத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னுதான் கூப்புட முடியும், நாமலோ பெரிய ஐடி அப்பாட்டக்கர் ரேஞ்சுக்கு ஈமெயில் அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டு இருக்கோம், கடலை வேற நல்லா போய்ட்டு இருக்கு, இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படனுமான்னு ஒரே யோசனை. பட் அதுக்காக இந்த பிகரையும் மிஸ் பண்ணவும் மனசில்ல.




கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பிரண்டு ஒருத்தன், பிகர் விஷயத்துல கரை கண்டவன், கண்டிப்பா நல்ல ஐடியா கொடுப்பான்னு நம்பி அவனுக்கு கால் பண்ணேன்.  நம்புன மாதிரியே செமையா ஐடியா கொடுத்தான். மச்சி காலேஜ் பிகர் கிணத்து தண்ணி மாதிரி, எப்ப வேணா கடலை போட்டுக்கலாம். பிரவுசிங் செண்டர் பிகர் ஆத்துத்தண்ணி மாதிரி, சான்ஸ் கிடைக்கிறப்பவே கடலை வறுத்துடனும்னு தெளிவா சொல்லிட்டான். சரின்னு சொல்லி கொஞ்சம் ஸ்பீடா ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணிக் கொடுத்து காலேஜ் பிகரை சீக்கிரமே அனுப்பி வெச்சிட்டேன், அது போனதும் சும்மா ரெண்டு வெப்சைட்ட ஓப்பன் பண்ணி வெச்சிட்டு, பிரவுசிங் செண்டர் பிகரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டேன். ரொம்ப நேரமா கூப்புடாத ஆள் கூப்பிடுறாரேன்னு அதுவும் வேகமா பக்கத்துல வந்துச்சு, வந்து...,

என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?




நன்றி: கூகிள் இமேஜஸ்!

Monday, July 22, 2013

தலைவா.... எனது பார்வையில்...!




எச்சரிக்கை: இது ஒரு முன் விமர்சனம்

ஓப்பனிங் சீன். சந்தானம், மனோபாலா மற்றும் பிற அல்லக்கைகள் எல்லாரும் எதற்கோ காத்திருகிறார்கள். அங்கே ஒரு புதியவர் வந்து பார்த்து எல்லாரும் காத்திருப்பதைப் பார்த்து திகைக்கிறார். ஏன் இப்படி காத்திருக்கீங்க ஏன்று திட்டுகிறார். அதற்கு சந்தானம் படத்துக்கு படம் பலவருசமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கோம் உங்களுக்கு தெரியாதா. ஏன்யா சினிமா எதுவும் பாத்தது இல்லையா...? ஸ்ட்ரெயிட்டா சென்ட்ரல் ஜெயில்ல இருந்து வர்ரியான்னு எகிற,  மனோபாலா எல்லாத்தையும் மூடிட்டு உக்காந்து வேடிக்கை பாரு தெரியும்னு சொல்ல, எல்லாருக்கும் பல்ஸ் பதறுது. தங்கச்சி கேரக்டர்ஸ் ரெண்டு பேரு எங்கண்ணன் இப்ப வந்துடும், இப்ப வந்துடும்னு சொல்லி சொல்லி தாய்க்குலங்களை தவியா தவிக்க வெக்கிறாங்க.  திடீர்னு ஒரு சத்தம், நாலஞ்சு பேர் தலைவா வந்துட்டார் தலைவா வந்துட்டார்னு கத்திக்கிட்டே தலைதெறிக்க ஓடிவாராங்க. அந்த இடம் முழுதும் ஒரே பதட்டமும்  பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.




அப்போ க்ளோசப்ல ஒரு வலது பக்க ஷூவ மட்டும் (காலோடுதான்யா) காட்டுறாங்க. அதுல நாலாபக்கமும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. இடது பக்க ஷூவையும் காட்டுறாங்க அதுலயும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேமராவ மேல தூக்குறாங்க. டாகுடர் எதுக்குன்னே தெரியாம ஆக்ரோஷத்தோட வர்ராரு. முகத்துல இருந்தும் நெருப்பு பொறி அங்கங்க தெரிச்சு விழுது. பக்கத்துல வந்ததும் முகம் டக்குன்னு சாந்த்தமா மாறுது, உடனே க்ளோசப்ல காட்டுறாங்க. அப்படியே கைய மேல தூக்கி வணக்கம் வைக்கிறார் பாருங்க, சான்சே இல்ல, பட்டாசு கிளப்பும் சீன். பின்னால தலிவா... ச்சே தலைவா தலைவான்னு கோசம் வேற விண்ணை முட்டுது. பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது. இதுவரை எந்த படத்துலயும் வந்திராத ஓப்பனிங்  சீன்ன்னு கண்ணு, வாயி, மூக்குன்னு எல்லாத்தையும் மூடிட்டு சொல்லலாம். இப்படி ஒரு வழியா ஓப்பனிங் சீன்  முடிஞ்சு ஓப்பனிங் சாங் ஆரம்பிக்குது. சாங்னா சாங் அப்படி ஒரு சாங். விஜய் யார், என்ன செய்றாரு, என்ன செய்ய போறாரு, எப்படி செய்ய போறாரு, அவருடைய திறமை, புகழ், பெருமைன்னு எதையும் விட்டு வைக்காம நம்மளை திக்குமுக்காட வெக்கிறாங்க, ஒரே பாட்டுல இவ்ளோ விஷயத்தையும் எப்படி கொண்டுவந்தாங்கன்னு திகைப்பா இருக்கு. ஒண்டர்புல் ஜாப்.




குட்டிசுவத்து மேல டாக்டர் விஜய் தன் நண்பர்களோட உக்காந்து ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருக்கார். அப்போ சைடு வில்லன் & கோ குவாலிஸ், ஸ்கார்ப்பியோ சகிதமா கத்திக்கிட்டே தாறூமாறா வர்ராங்க. கைல அருவாள வேற வெச்சி சுத்திக்கிட்டே இருக்கானுங்க (அப்பதானே அவங்க அருவா வெச்சிருக்கறது நமக்கு தெரியும்?) நம்ம ஹீரோ & கோ அதை கண்டுக்காம அலட்சியமா அரட்டைல பிசியா இருக்காங்க. வில்லன் குரூப்ல இருந்து ஒரு வண்டி அவங்க பக்கத்துல நிக்குது, அதுல இருந்து கரடுமுரடா ஒருத்தன் இறங்கி நேரா இவங்கள நோக்கி வந்து பக்கத்துல வந்த உடனே விலகி  அருகிலேயே ஒண்ணுக்குப் போறான். அவன் இறங்கி வர்ரதும், ஒதுங்கி ஒண்ணுக்குப் போறதும் பரபரப்பின் உலகத்தரம். அதைப் பார்த்து நமக்கே கோவம் கோவமா வருது.

ஆனா டாக்டர் விஜய், அதையும் கண்டுக்காம அலட்சியமா ஒரு லுக் விட்டுட்டு அரட்டையை கண்டினியூ பண்ணுவது செம கெத்து சீன். அந்த கரடுமுரடு பார்ட்டி ஒண்ணுக்கடிக்கும் போது வேணும்னே ஹீரோ கோஷ்டியோட அல்லக்கை கால் மேல தெரிக்கிற மாதிரி அடிக்கிறான். அதை பார்த்ததும் விஜய் அவன் சட்டைய புடிச்சு இழுத்து ஏண்டா இப்படி பண்றே என்று கேக்கிறார். அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான். அதைக் கேட்டதும் விஜய் சூறாவளியா கெளம்பி வேட்டையாடுறாரு பாருங்க, சான்சே இல்ல. தமிழ் சினிமாவுல இப்படி ஒரு சண்டைய பாத்து எத்தன வருசமாச்சுய்யா. 

சண்டை போட்டு முடிஞ்சதும்தான் தெரியுது அந்த வில்லன் & கோ ஏதோ வில்லங்கமான வேலைக்காகத்தான் போய்ட்டு இருக்காங்கன்னு. அவங்களோட எல்லா கார்களையும்  நிறுத்தி பரபரன்னு செக் பண்றார். நமக்கும் திக் திக்னு இருக்கு. அதுல ஒரு கார்ல அமலா பால் கட்டி வைக்கப்பட்டிருக்கார். விஜய் உடனே அவரை விடுவிக்கிறார். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறாங்க. உடனே நம்ம டாக்டர் வழக்கம் போல ஸ்டைலா வாய்க்குள்ள கோலிக்குண்டை குதப்புறார். அப்படியே செமத்தியா ஒரு டூயட் சாங்க். செம பீல் குட் எபக்ட்.




பாட்டு முடிஞ்சதும் டாக்டர் விஜயோட தேடுதல் வேட்டை ஆரம்பிக்குது. வில்லன் கும்பல்ல எல்லாரும், அடிக்கடி தேவையில்லாம அழுகுறாங்க. அதை நோட் பண்ணி, அவங்க கடத்துறது சாம்பார் வெங்காயம்தான்னு கண்டுபிடிப்பது சபாஷ் போட வைக்கிறது. அந்த வில்லன் கும்பல் சென்னைல இருந்துதான் சாம்பார் வெங்காயத்தை கடத்திட்டு வர்ராங்கன்னும் கண்டுபுடிக்கிறார். நண்பர்கள்லாம் இது ரொம்ப பெரிய இடம் வேணாம்னு சொல்லும் போது பதிலுக்கு அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் இனி பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன்  சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும், அதை டாக்டர் விஜய் அந்த விஞ்ஞானிகள் மூலமாகவே தடுப்பதும் செம ஹைடெக். இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப எல்லாமே பேஸ்புக்கிலேயே நடப்பதாக காட்டி இருப்பது மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

சென்னைல உள்ள அவங்க நெட் ஒர்க்கை கண்டுபுடிச்சி மெயின் வில்லனை அழித்து ஒழிக்கறதுக்காக சென்னை கிளம்புறார். அவர் சென்னை செல்லும் அந்த பாட்டு சீன்கள் ஜோரா வந்திருக்கு. அமலா பாலும் சென்னைக்கு வருவது, அவரை வில்லன்கள் கடத்த முயற்சிப்பது எல்லாம் கிளாஸ்.  சென்னைல அவர் ஒவ்வொரு தாதாவா தனித்தனியா ஸ்கெட்ச் போட்டு, பஞ்ச் டயலாக் பேசி(யே)  போட்டுத்தள்ளும் சீன்கள் ஏ ஒன் ரகம். செம விருவிருப்பு. கடைசில அவர் மெயின் வில்லனை நேருக்கு நேரா சந்திச்சு கேள்விகள் கேக்குறது செம பஞ்ச். அவற்றை உலகில் உள்ள தாதாக்கள் அனைவரையும் கேக்க வைத்தால் அவர்கள் அனைவரும் அந்த நிமிடமே திருந்திவிடுவார்கள்.  அவ்வளவு கருத்துக்களும், தத்துவங்களும் அவற்றில் பொதிந்திருக்கின்றன.  சமூக ஆர்வலர்கள் முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் தலைவா பட்டாசு கிளப்புகிறான்.

நன்றி: கூகிள் இமேஜஸ்!

Friday, June 21, 2013

ஐடி கம்பேனியும் டாஸ்மாக் பாரும்.......



ஐடி கம்பெனி
டாஸ்மாக்/பார்
1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

1) டாஸ்மாக் வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக தள்ளுவண்டி பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்
2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .
2) எல்லா நேரமும் ஒரு ஐந்து பேர் , வாசலுக்கருகே மப்பில் கிடந்து கொண்டு தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள்
3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 ஆட்கள் எப்போதும் வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.
4) வரும் அனைத்து நபர்களின் பர்சுகளும் காலியாகும். இருந்தும் அவர்கள் பாக்கெட்டுக்கு அடியில் எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.
5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.
5) அலுவலத்தில் இருந்து வருபவர்கள் அடையாள அட்டையோடு பந்தாவாக உள்ளே வருவார்கள்.
6 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.
6 ) கிச்சன் முதல் கக்கூஸ் வரை (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை மஞ்சள் பூத்த வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.
7) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.
7) அங்கே இருக்கும் தொலைகாட்சியில் குத்துப் பாட்டு மட்டுமே ஓடும்.
8) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .
8) சர்வீஸ் – இவர்களை எப்போது அழைத்தாலும் உடனே வரவே மாட்டார்கள் .
9) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .
9) இலவசமாக அறிவுரை கிடைக்கும் .
10) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.
10) உள்ளே போய் சிறிது நேரத்திலேயே வெளியே போகும் வழி மறந்துவிடும்
11) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.
11) சில வெளிநாட்டு சரக்கு பாட்டல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.
12) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .
12) ஒரு மூலையின் கண்டிப்பாக ஒருவன் எப்போது வேணுமின்னாலும் வாந்தி .வந்துவிடும் கண்டிசனில் இருப்பான்.
13) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .
13) எப்போதும் துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா டேபிளில் இடம் பிடிக்க வேண்டும் .
14) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.
14) பெசல் ஐட்டங்கள் ஆடர் பண்ணா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்.
15) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .
15) குடிக்க மட்டும்தான் அனுமதி என்றில்லை, வேடிக்கை பார்க்கவும் செல்லலாம்.
16) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .
16) தலையில் துண்டு போட்டு கவர் பண்ணிய ஒரு ஆள் எப்படியும் இருப்பார் .
17) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .
17)உள்ளே போனதும் இங்கிலீஷ், தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .
18) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .
18) உள்ளே.சென்றாலே கப் அடிக்கும் .
19) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”
19) சர்வர் நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “என்ன சார் வேணும்”
20) ஒரு ATM இருக்கும்.
20) காசு வாங்கும் கல்லாப்பெட்டி டேபிள் இருக்கும்.
21) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .
21) வாந்தி எடுக்க தனி அறை கிடையாது .

Tuesday, June 18, 2013

ராத்திரி நேரத்து டீவியும் பின்னே நானும்........!



முன்னிரவு நேரம். ஊர் அடங்கி இருந்தது. எல்லாரும் குடும்ப(?) சீரியல்கள், குத்துப்பாட்டு, காமெடி நியூஸ் என்று பார்த்துப் பார்த்து களைத்துப் போய் தூங்கி கொண்டிருக்க வேண்டும். எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. எழுந்து உக்கார்ந்தேன். என்ன செய்யலாம், மறுபடியும் டீவியை போட்டேன். இன்னேரம் ஏதாவது ஒரு சேனலில் தாட்டியான பெண்மணிகள் குலுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்ற நப்பாசையில் ரிமோட்டை சுழட்டினேன். சட்டென ஒரு சேனலில் போய் நின்றது. கெட்டவார்த்தைகளில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார். வைத்தியராம். கோபத்துடன் மிகுந்த அக்கறையாக பேசிக்கொண்டிருந்தார். இவருக்குத்தாம் நம் இளைஞ்சர்களின் மீது எவ்வளவு கவலை? மற்ற சேனல்களில் இன்னேரம் வந்து கொண்டிருக்கும்  குலுங்கல்களைப் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு உடனடியாக பயன்படும் விதமாக இந்த சேனலில் பொருத்தமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் போல. நல்ல சிந்தனைதான். வைத்தியரை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று மறுபடியும் ரிமோட்டை சுழற்ற ஆரம்பித்தேன். 

இப்போது போய் நின்றது இன்னொரு சேனலில். அங்கே கோட்டுசூட்டு போட்ட ஒருவர் ஒரு போர்டில் பெயர்களை எழுதி நம்பர் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். நம்பர்களை வைத்தே பெயர்களை அருமையாக டிங்கரிங் பண்ணுகிறார். புதுப்பெயர் பழைய பெயர் போலவே இருக்க அவர்கள் மெனக்கெடுவதை பார்க்க திகைப்பாக இருக்கிறது. பெயர்கள் எல்லாம் பிரெஞ்சு, ஸ்பானிஷ் ரேஞ்சிற்கு மாற்றப்படுகிறது. பெயர் மாற்றப்பட்டவுடன் அனைவரும் உடனடியாக புதுப்பொலிவடைகிறார்கள். எல்லாமே மாறிவிடும், காசு கொட்டோ கொட்டென்று கொட்டும், வீட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு காசை அள்ளலாம் என்கிறார்கள். நம்பமுடியவில்லை ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார். அருமையாக பேசுகிறார். எந்தவித தயக்கமோ தடுமாற்றமோ இல்லை. தொலைக்காட்சியில் வந்து பேசுகிறார். பொய்சொல்பவர், ஏமாற்றுபவர்கள் தொலைக்காட்சிக்கு வருவார்களா? எத்தனையோ பேர் தொலைக்காட்சியை பார்க்கிறோம், யார் யாரோ பெரிய பெரிய படிப்பாளிகள், விஞ்சாணிகள், மேதாவிகள் எல்லாம் பார்க்கிறார்கள் எல்லாரையும் ஏமாற்றிவிட முடியுமா என்ன? நாளைக்கே சென்று இவரை பார்த்து பெயரை மாற்றிவிடவேண்டும் என்று முடிவு செய்தவனாக அவருடைய முகவரி, போன் நம்ப்ரை குறித்துக் கொண்டேன். மறுபடியும் ரிமோட்டை கையிலெடுத்தேன்.




இன்னொரு சேனலில் ஏதோ கல்லை வைத்து உருட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறுத்தினேன். சிறிய கல் ஒன்று வைத்திருக்கிறார்கள், அதை மோதிரத்தில் வைத்து அணிந்து கொண்டால் பணம் அதுபாட்டுக்கு நம்மை தேடி வரும் என்கிறார்கள். அதிசயமாக இருக்கிறது. ஒரு சிறு கல்லுக்கு இத்தனை எஃபக்டா என்று யோசிக்கும் போதே இவரும் கோட்டு சூட்டு போட்டிருப்பதை கவனிக்க நேர்ந்தது. பெயருக்கு பின்னால் இரண்டு வரிகள் வரும் அளவுக்கு டிகிரிகள் வாங்கி இருக்கிறார். மெத்தப்படித்தவர். ஏமாற்ற மாட்டார். டிவியில் வேறு சொல்கிறார். வாங்கியவர்கள் ஏமாந்திருந்தால் இன்னேரம் பிரச்சனை ஆகி இருக்காதா? ஏற்கனவே பெயர் மாற்றம் வேறு செய்யப் போகிறோம், கல்லை வேறு வாங்கி அணிந்து கொண்டால் பணம் டபுள் மடங்காக கொட்ட தொடங்கி விடும். இதையும் பார்த்தது நல்லதாக போயிற்று, நாளைக்கு பேரை மாற்றியதும், உடனடியாக நல்ல கல் ஒன்றும் வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும்.

பணம் சேர்வதற்கான வழியை பார்த்தாகிவிட்டது. இனி எஞ்சாய் பண்ண வேண்டும். ஏதாவது குலுங்கல் பக்கம் போகலாம் என்று தேட ஆரம்பித்தேன். ஒரு சேனலில் பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் எவனோ ஏமாற்றிவிட்டானாம். அதற்கு டீவியில் வந்து ஏன் அழுகிறார் என்று புரியவில்லை. இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் நன்றாக இருந்ததால் சிறிது நேரம் பார்த்தேன். யார் யாரை ஏமாற்றினார்கள் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை என்றாலும், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏன் சொந்தக்காரனிடம்  கூட சொல்ல தயங்கும் பல விஷயங்களை அங்கே சர்வசாதாரணமாக போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியை நடத்துபவரும் தன் பங்குக்கு தாறுமாறாக கேள்விகளை அள்ளி வீசி கொண்டிருந்தார். இதையெல்லாம் கோர்ட்டிலோ, போலீஸ் ஸ்டேசனிலோ வைத்து விசாரித்தால் மனித உரிமை மீறல் என்று போராட்டமே நடத்தி ஒரு காட்டு காட்டி விடுவார்கள். டீவியில் வைத்து நடத்துவதால் அதே போல் பேச நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இத்தனை தொலைக்காட்சிகள் வந்ததில் கிடைத்த நல்ல வளர்ச்சி. 

மறுபடியும் ரிமோட்டை எடுத்தேன். திடீரென ஒரு சேனலில் அரையிருட்டாக என்னமோ ஓடிக் கொண்டிருந்தது. ஆஹா நம்ம மேட்டர் இதுதான்யா என்று பார்க்க ஆரம்பித்தேன். ஒரு தாட்டியான பெண் அரையிருட்டில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். முகம் அடையாளம் தெரியாதவறு கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. (தெரிந்தாலும் ஒரு எழவும் ஆகிவிட போவதில்லை என்றாலும் அப்படி மறைத்தால் தான் பார்க்கிறவனுக்கு ஒரு இது வருமாம்...). புருசனுக்கு ஒண்ணுமே முடியலையாம், ஏதோ ஒரு கேப்சூலாம் ஃபிரண்டு சொன்னாராம். அதை வாங்கி புருசனுக்கு கொடுத்து இப்போ சந்தோசமா இருக்காராம். அதற்கு ஆதாரமாக ஒரு வயதான தம்பதியை எசகுபிசகாக காட்டினார்கள். தலையில் அடித்துக் கொண்டேன். அங்கே இளைஞ்சர்களை குறி வைத்து ஒரு வைத்தியர், இங்கே பெண்மணிகளை குறிவைத்து ஒரு கேப்சூல். ஆனா பாருங்க எல்லாத்தையும் ஆண்கள்தான் தின்று தொலைக்க வேண்டி இருக்கு. என்ன ஒரு பெண்ணாதிக்கம்?

அடுத்த சேனலுக்கு தாவினேன். அங்கு ஒருவன் வடைசுடும் சட்டியை மூவாயிரம் ரூவாய்க்கு விற்றுக் கொண்டிருந்தான். அடேய் மூவாயிரம் ரூவாய வெச்சி ஒருத்தன் வாழ்க்கை பூரா வடை சாப்பிடலாமேடா என்று எண்ணிகொண்டேன் சீக்கிரம் தூங்க வேண்டும். நாளைக்கு போய் பெயர் மாற்ற வேண்டும், கல் மோதிரம் வாங்க வேண்டும். அதற்கு அப்புறம் வந்து கொட்டப் போகும் பணத்தை எங்கே போட்டு வைப்பது? மறுபடியும் சேனலை மாற்றினேன். அதிலே சென்னைக்கருகில் நிலம் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிப்போட்டால் பலமடங்கு உயருமாம். பணம் வந்தவுடன் பல்க்காக நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டு  செட்டில் ஆகிவிட வேண்டியதுதான். ஆகவே நண்பர்களே இரவு 11 மணிக்கு மேல் டீவி பாருங்கள், இனி எல்லாமே உங்கள் கையில்.........




நன்றி: கூகிள் இமேஜஸ்

Friday, May 31, 2013

வாசக மொண்ணைகளின் கடித மொண்ணைகள்....


ஒருவழியாக ஜெயிலுக்குள் வந்து செட்டில் ஆகி 10 நாட்களாகி விட்டிருந்தன. மணியடித்த உடன் பசிக்க தொடங்கும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தேன். நான் எழுத்தாளன் என்பது சிறையில் இருந்த பலருக்கும் சவுகர்யமாக போய்விட்டது. வீட்டிற்கு, கள்ளக்காதலிகளுக்கு, அடியாட்களுக்கு கடிதம் எழுதுபவர்கள் அனைவரும் என்னிடமே வந்தனர். நானும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சளைக்காமல் எழுதி குவித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது. 


அன்புள்ள மொக்கைச்சாமி,
நீ சிறைக்கு சென்ற பின் நம்ம ஊரே நிம்மதியாக இருக்கிறது. டீக்கடையில் நீ வந்துவிடுவாய் என்ற பயம் இல்லாமல் எல்லாரும் சுகமாய் டீ குடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல வியாபாரம் என்று டீக்கடை நாயர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நீ எங்கேயோ திருடி விட்டு ஜெயிலுக்கு போய்விட்டாய் என்று கேள்விப்பட்டதும் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று உன் பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார். மேலும் ஏதாவது செய்துவிட்டு உள்ளேயே இருக்குமாறு சில நண்பர்கள் உன்னிடம் தெரிவிக்க சொன்னார்கள். உன் முடிவு என்ன?

மொண்ணைச்சாமி



அன்புள்ள மொண்ணைச்சாமி
1. சிறைச்சாலையின் பதினைந்து கழிவறைகளை தினமும் சுத்தம் செய்யும் அருமையான பணி எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனக்கானவற்றை அன்றி வேறெதையும் கழுவுவது மட்டும் அல்ல, உள்ளே போகக்கூட என்னால் முடியாது. ஏனென்றால் அவ்வளவு கூட்டம் இங்கே. கக்கூசில் பினாயிலை ஊத்தி அது சுகந்தமாக உள்ளே பரவும் அற்புதக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். இத்தகைய மகிழ்ச்சிகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது இந்த சிறைச்சாலை. வெட்டியாக பேப்பர் படிக்கும் அந்த டீக்கடை கூட்டத்தால் நிறைந்தது அல்ல எனது உலகம்.

2. நாள் முழுதும் டீக்கடையில் உக்கார்ந்து பேசும் எழுத்தாளர்கள் நம்மிடம் மிகச்சிலரே இருக்கிறார்கள். அத்தகைய ஆளுமைகளின் மீது என்றைக்கு இப்படி பேச ஆரம்பித்து விட்டார்களே இனி அந்த டீக்கடை எனக்கானது அல்ல. வெளியில் வந்ததும் அடுத்த தெரிவில் இருக்கும் அண்ணாச்சி டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக்கிக்  கொள்வேன். அதுவே என்னைப் போன்ற மாட்சிமைமிக்க எழுத்தாளர்களுக்கு இயல்பு

3. நான் எப்பொழுதும் எனக்கான டீக்கு காசு கொடுத்தே வந்திருக்கிறேன். பிரச்சனை என்று வரும் போது அதுவே பாதுகாப்பு. ஆனால் எப்போதும் ஒரு டீயைவிட அதிகமாக காசை சுமந்தலைவதில்லை.  யாரும் புதிதாக வந்து டீ வாங்கிக் கேட்டால் கடனுக்கு வாங்கிக் கொடுப்பதே என் வழக்கம். (அப்போதுதான் மறுபடி வாங்கி கேட்க மாட்டார்கள்)

4. இந்த டீக்கடை விவகாரம் பற்றி பேசுபவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்? காலையில் எழுந்த உடன் பல்லு கூட விளக்காமல் டீக்கடைக்கு சென்று எவனாவது ஓசி டீ வாங்கித்தருவானா என்று காத்திருக்க வேண்டியது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா? இவர்கள் மக்களைச் சந்தித்து எத்தனை நாட்களாகிறது? நான் மக்களோடு மக்களாக வாழ்பவன். பக்கத்து வீட்டுக்காரனுக்கு நான் ஒரு பக்கத்து வீட்டுக்காரன். இதை யாரும் எனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. 



பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட வக்கில்லாதவர்கள் இன்று டீக்கடையில் டீ குடிப்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள். நான் பிச்சைக்காரனோடு பிச்சைக்காரனாக பிச்சை எடுத்து அவர்களோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கான முறை டீக்குடித்திருக்கிறேன். எனக்கு இந்த அரைவேக்காடுகள் எப்படி டீ குடிக்க வேண்டும் அறிவுரை சொல்கிறார்கள். பாண்டிச்சேரிக்காரனுக்கு சரக்கு அடிக்க சொல்லித்தருவதை போல. அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  டீக்குடிப்பவர்களுக்கு மூளையில்லை என்று டீ மாஸ்டருக்கு தெரிந்தாலும் டீ போடுகிறார். அதுதான் வியாபார நுண்ணரசியல். ஆனால் அதற்காக யாரும் டீ குடிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று ஆய்ந்தறிவதுதான் ஒரு தரித்திர எழுத்தாளனின் இயல்பு.

5. எழுத்தாளனும், டீ மாஸ்டரும் ஒன்று என்று எந்த நல்ல டீக்கடைக்காரனும் சொல்ல மாட்டான். ஏனென்றால் எழுத்தாளர்களால் டீக்கடை வருமானம் பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். நம்மூர் டீக்கடை ஜந்துகளுக்கு சுயமாக டீயும் குடிக்க முடியாது, வருபவனுக்கு வாங்கி கொடுக்கவும் முடியாது எபோதும்.

நான் ஜெயிலுக்கு போனபின் என்ன பேசுவார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஜெயிலுக்கு போவதற்கும், சிறைக்கு போவதற்கும் வேறுபாடு தெரியாத கும்பல் அது அவர்களால் டீக்கடை அரசியலில் இருக்கும் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு டீ மாஸ்டரை அங்கே டீ குடிக்க வருபவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்ற மொள்ளமாரித்தனத்தைத்தானே எழுதி இருக்கிறேன். அதனால் அவர்கள் திட்டுவது அத்தனையும் அவர்களுக்கேதான்.

இவர்கள் இப்படி சொல்லி அனுப்பியதன் மூலம் டீக்கடையில் என்னால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள். என்னால் எதுவுமே விளங்காது என்றிருந்ததை இப்போது இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
மொக்கைச்சாமி


Tuesday, May 28, 2013

நானும் எனது வாசகரும்.....



என்னுடைய தீவிர (?) வாசகர் ஒருவர் என்னை பார்க்க வேண்டும் என்று நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்பதற்காகவே நிறைய கேள்விகளை தயாரித்து வைத்திருப்பதாக வேறு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அவர் ஊர் பக்கமாக வேலை இருந்தது. அந்த ஊர்ப்பக்கம் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லுவார்கள். அன்று மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். எல்லாம் திட்டமிட்டபடி சரியாகவே நடந்தது. சரியாக 1 மணிக்கு சென்று விட்டேன். அப்போதுதானே கண்டதையும் பேசாமல் உடனே சாப்பிட முடியும்? முகவரியை கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு சென்றேன். அங்கே வீட்டு வாசலில் அசிங்கமான பன்னாடை ஒருவன் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தான். எனக்கு கோபம் வந்து விட்டது. ராஸ்கல் ஒரு எழுத்தாளன் வரும் வழியில் நிற்பதா என்று ஓங்கி ஒரு அப்பு விட்டேன். அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை போல, அதிர்ச்சியுடன் என்னை முறைத்து பார்த்தபடி நின்றான். போடா என்று குச்சியை எடுத்து அடித்து விரட்டினேன். ஒருவழியாக தயக்கத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான். 

வீட்டிற்குள் நுழைந்தேன். யாரையும் காணவில்லை. அங்கே ஒரு விருந்து சாப்பாடு நடக்க இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வியப்பாக இருந்தது. ஏதாவது அறைகளுக்குள் யாரும் இருப்பார்கள் என்று எண்ணி குரல் கொடுத்தேன். ஒரு தாட்டியான பெண்மணி வெளியே எட்டிப்பார்த்தார். யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், நான் பெரிய எழுத்தாளர், மதியம் விருந்திற்காக வந்திருக்கிறேன் என்றேன். உடனே அந்த பெண்மணி அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாதே, எழுத்தாளர்னா நீங்க பத்திரம் எழுதுறவரா என்று கேட்டார். எனக்கு இதில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் எனது வாசகர்கள் தங்கள் மனைவிக்குத் தெரியாமல் தான் எப்போழுதும் என் எழுத்தை படிப்பார்கள். நானும் அவரிடம் நான் அந்த எழுத்தாளர் இல்லைங்க  வலைப்பதிவு எழுத்தாளர் என்றேன்.

குழப்பத்துடன் அப்படியா என்று கேட்டு விட்டு உள்ளே போய்விட்டார். சற்று நேரம் கழிந்தது. வெளிப்புறமாக கதவுகள் சாத்தப்படும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று பார்த்தேன். அதற்குள் அனைத்து கதவு, ஜன்னல்களும் பூட்டப்பட்டு விட்டன. என்ன நடக்கின்றது என்றே எனக்கு புரியவில்லை. மறுபடியும் குரல் கொடுத்தேன். ஒருவேளை அந்த தாட்டியான பெண்மணிக்கு நம்மை பிடித்து போய் விட்டதோ என்ற கிளுகிளுப்பும் வந்து போக தவறவில்லை. அப்படியே மெய்மறந்து நின்ற போது திடீரென பின்புறமாக வந்து யாரோ பிடித்தார்கள். இரும்புப்பிடியாக இருந்தது, ஒரு வினாடி அது அந்த தாட்டியாக இருக்குமோ என்று தாமதித்தேன். அதற்குள் பிடி இறுகியது. இது அந்த தாட்டியாக இருக்க வாய்ப்பில்லை. கத்தினேன். என்னவென்று பார்ப்பதற்குள் பின்மண்டையில் அடிவிழுந்தது. கண்விழித்துப் பார்த்தால் லாக்கப்பிற்குள் இருக்கிறேன். 



என்ன நடந்தது என்று அருகில் இருந்த சக கைதி சொன்னார். திருடன் என்று எண்ணி என்னை பிடித்து வைத்திருக்கிறார்களாம். ஒரு எழுத்தாளனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்? எனது வாசகர்கள் பலர் அந்த ஊர்ப்பக்கம்தான், எனவே யாரும் அங்கே இருப்பார்களோ என்று அங்கிருந்த லாக்கப்புகளில் உத்துப் பார்த்தேன். யாரும் இல்லை என்று வருத்தமாக இருந்தது. நமது வாசகர்களுக்கு இன்னும் பயிற்சி போதாது போல. ஒருவேளை இந்த ஏட்டு நம் வாசகராக இருக்க போகிறார் என்று சார் நீங்க ஃபேஸ்புக் பார்ப்பீங்களா என்று கேட்டேன். பளார் என்று அறை விழுந்தது கெட்ட வார்த்தைகளுடன். அவ்வளவுதான் ஃபேஸ்புக்கிற்கே இந்த அடி இனி எழுத்தாளன் என்று சொன்னால் விடிய விடிய லாடம் கட்டிவிடுவார்கள் என்று மூடிக்கொண்டேன் எல்லாவற்றையும். 

அந்த சக கைதி வந்து வாஞ்சையாக தட்டி கொடுத்தான். நீங்க எழுத்தாளரா என்று கேட்டான். எழுத்தாளனை மதிக்க ஒருவனாவது இங்கே இருக்கிறான் என்று நிம்மதியாக இருந்தது. ஆமாம் என்றேன். அதற்கு அவன் நானும் எழுத்தாளன் தான், எழுதுபவர்களுக்கு இது கெட்ட நேரம் என்றான். தமிழ்நாட்டில் எனக்குத் தெரியாமல் ஒரு எழுத்தாளரா என்று எனக்கு வியப்பாக போய்விட்டது. அவனிடமே கேட்டேன். அவன் பெண் ஐடியில் ஃபேஸ்புக்கில் எழுதுபவனாம். அவனை காதலிப்பதாக கூறி சிலர் அவர்களாக அவனுக்கு பணம் அனுப்பினார்களாம், அதனால் அவனை கைது செய்துவிட்டார்கள் என்று கூறினான். வருத்தமாக இருந்தது. எழுதுபவனுக்கும் சுதந்திரமில்லை, காதலிப்பவனுக்கும் சுதந்திரமில்லை. 

அப்போது ஒருவனை அடித்து உதைத்து இழுத்து வந்தார்கள். அவன் முகம் எங்கோ பார்த்த முகமாக இருந்தது. அடேய் அவன் இன்று என்னிடம் அறை வாங்கிய அந்த பன்னாடை அல்லவா? அவனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பஸ்ஸ்டாண்டில் பிச்சை எடுக்கும் சாக்கில் பிக்பாக்கெட் அடித்ததாக சொன்னார்கள். அடப்பாவி அப்போ அவனுக்கு பதிலாகத்தான் என்னை பிடித்துக் கொண்டு வந்தார்களா? சரிதான், உண்மையை விளக்கமாக எடுத்துச் சொல்லி எளிதாக வெளியே வந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டேன். 

அதற்குள் அவன் என்னருகில் வந்தான். நான் தான்யா உன்னை வர சொன்ன ஆளு. மதியம் சாப்பாடு வாங்கி கொடுப்பேன்னுதானேயா உன்னை அங்கே வரச்சொல்லி வெயிட் பண்ணேன், நீ பாட்டுக்கு அடிச்சி தெரத்திட்டு ஜெயிலுக்கு வந்துட்டே? அதான் பிக்பாக்கெட் அடிச்சு, நானும் இங்க வர வேண்டியதா போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்துதான் அடிச்சோம்னு சொல்லிடுறேன்,செண்ட்ரல் ஜெயில்ல ரெண்டு மாசம் போடுவாங்க, உள்ளே போய் நிம்மதியா இலக்கிய விவாதம் பண்ணலாம், நான் உன்கிட்ட நிறைய கேள்விகள் கேட்க வேண்டி இருக்கு என்றான். எனக்கு தலை சுற்றியது. ஏட்டு லத்தியுடன் கோபமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். 


Wednesday, May 15, 2013

பட்டா போய்விட்டார்....

பட்டா போய்விட்டார்....
நக்கல் நையாண்டிகள் முடிந்தது.
பின்னூட்ட போர்கள் ஓய்ந்தன.

இதுவரை முகம் தெரியாமலே இருந்துவிட்டு,
நீ இறந்துவிட்ட பின்பு பார்த்த உன் முகம்
இனி வதைத்துக் கொண்டே இருக்க போகிறது
அதையும் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்.....

என்றாவது ஒருநாள் பழையபடி பதிவுகளில்
ஒன்றாக களம் இறங்கி கலக்குவோம் என்று
காத்திருந்தது கானல் நீராகிவிட்டது...
அத்தனை ஆக்ரோஷமாக அரசியல் பதிவுகள்
எழுதினாலும், எத்தனை எத்தனை நட்புகளை
சம்பாதித்து வைத்திருக்கிறாய்?

எத்தனை பதிவுகள், எத்தனை அஞ்சலிகள்....
உனக்காக சிந்தும் கண்ணீரின் துளியோரம்
கொஞ்சம் பெருமிதமும் எட்டிப் பார்க்கிறது....
உன்னோடு இன்னும் கொஞ்சம் நன்றாக பேசி பழகி
இருக்கலாமோ என்று காலம் கடந்த
ஞானம் வருகிறது இன்று....

இருந்தாலும்...
உன் முகத்தை பார்க்காமலேயே
இருந்திருக்கலாம் கடைசிவரை....

Monday, May 13, 2013

நண்பனே...

இரண்டு மாதங்களாக ப்ளாக்கில் எதுவும் எழுதவில்லை. ஏதாவது எழுதலாம் என்று அவ்வப்போது எண்ணம் வந்து போனாலும் உக்காந்து எழுத முடியாத அளவுக்கு நேரப்பற்றாக்குறையாக இருந்து வருகையில், இன்று இப்படி ஒரு விஷயத்திற்காக எழுத நேர்ந்திருக்கிருக்கிறது என்பதை மிகுந்த வருத்ததுடன் எண்ணிப்பார்க்கிறேன். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னால் ஏதேச்சையாக எதையோ கூகிளில் தேடிய போது வந்து மாட்டியது வெளியூர்க்காரன் ப்ளாக். அங்கே பின்னூட்டம் இடும் போதுதான் அவர் பழக்கமானார். பழக்கம் என்பதைவிட அறிமுகம் என்று சொல்லலாம். யார் இவர் என்று அவருடைய ப்ளாக்கிற்கு சென்று பார்த்துவிட்டு ஆடிப்போனேன். அசாத்திய துணிச்சல், நகைச்சுவை, நக்கல், சமூக பொறுப்பும் கலந்துகட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.மிக எளிமையான வார்த்தைகளில் எழுதுவார். இன்று வரை அவர் எழுதுவது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. ப்ளாக்கில் கும்மியடிப்பது என்றால் என்னவென்று தெரிந்து கொண்டது அங்கேதான். அந்த உந்துதலில் தான் இந்த ப்ளாக்கை ஆரம்பிக்கும் எண்ணமே ஏற்பட்டது. எங்கள் டெரர்கும்மி நண்பர் குழுவே அவரது ப்ளாக்கில் பின்னூட்டம் இடுபவர்களுக்குள் ஏற்பட்ட நட்பில் உண்டானதுதான். 

அவரை பிடித்துப் போனவர்களே எனது நண்பர்கள் வட்டமாக அமைந்தது தற்செயலானது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. அவருடன் வழமையாக சாட்டோ, போன் காலோ செய்ததில்லை. இருப்பினும் நல்ல புரிதல் இருந்தது.  சமீபகாலமாக அவரும் மிக பிசியாக இருந்ததால் முன்பு போல் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை.  இன்று காலை திடீரென வந்த இந்த செய்தி வெறும் வதந்தியாக இருக்கும் என்றே நினைத்தேன். செய்தி உறுதிப்படுத்தப்பட்ட போதும் நம்ப முடியாமல் அது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கவே விரும்புகிறது மனது.  அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் விரைவிலேயே மீண்டு வர வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார். 

எங்கள் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி


Monday, March 4, 2013

அப்ரைசலும் அடங்காத டேமேஜர்களும்........




நம்ம டெரர்பாண்டியன் ஆபீஸ்ல அப்ரைசல் டைம், அந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருந்ததால, ரொம்ப எதிர்பார்ப்போட பாஸ்கிட்ட அது விஷயமா பேச போறாரு........



பாஸ்: இந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருக்கீங்க, அதுனால உங்களுக்கு ரொம்ப முயற்சி பண்ணி ஆவரேஜ் ரேட்டிங் கொடுத்திருக்கோம்...

டெரர்: என்னது.......... ஆவரேஜா..............!!!!!!.... சார், அதான் நல்லா ஒர்க் பண்ணியிருக்கேனே, அப்புறம் எப்படி சார் ஆவரேஜ்?

பாஸ்: ம்ம்.... நீங்க... உங்களுக்கு பிசினஸ் ஸ்கில் குறைவு அதான்..

டெரர்: பட் போன வருசம் நீங்கதானே நான் பிசினஸ் எக்ஸ்பர்ட்னு சொல்லி என்னை இந்த குரூப்புக்கு பிசினஸ் ஸ்பெசலிஸ்ட்  ஆக்குனீங்க.......?

பாஸ்: ஓ... ஆமால்ல...... ஆங்...  உங்களுக்கு ஃபங்சனல் நாலெட்ஜ் இல்லேன்னு சொல்ல வந்தேன்....

டெரர்: என்னது?

பாஸ்: அதான்..... அதாவது நீங்க டெக்னிகல் நாலெஜை டீம் மெம்பர்ஸ் கூட ஷேர் பண்ணிக்க மாட்டேன்றீங்க.....

டெரர்: டெக்னிகல் நாலெஜ்ஜா? சார் மொதல்ல நான் டெக்னிகல் பர்சனே கிடையாது, நான் மேனேஜ்மெண்ட் ஆளு...... டெக்னிகல் மேட்டரை நான் எப்படி ஷேர் பண்ண முடியும்?

பாஸ்: இதான் இதுதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்கல, என்ன சொன்னாலும் பதில் பேசுறீங்க, காரணம் சொல்றீங்க..... 

டெரர்: ???!!!




பாஸ்: ஓக்கே அடுத்து நீங்க உங்க கம்யூனிகேசன் ஸ்கில்லை நிறையவே இம்ப்ரூவ் பண்ணிக்கனும்......

டெரர்: சார் போனவருசம் கம்யூனிக்கேசன் ஸ்கில்ல நம்ம டீமையே நாந்தான் ட்ரைன் பண்ணேன்.... அப்போ நீங்க கூட உக்காந்து டவுட் கேட்டுட்டு இருந்தீங்க....

பாஸ்: ஓ....ம்ம்ம்......... அது நான் என்ன சொல்ல வர்ரேன்னா உங்க சோசியல் அஃபர்மேட்டிவ் ப்ராக்மாட்டிக் கம்யூனிக்கேசன் ஸ்கில்சை டெவலப் பண்ணனும்....

டெரர்: ???!!!*** என்ன அது..........?




பாஸ்: தெரியல பாத்தீங்களா, அதுக்குத்தான் உங்களை அதை பத்தி தெரிஞ்சுக்க சொல்லலாம்னு சொன்னா நீங்க சொல்லவே விடாமே எதிர்கேள்வி கேட்கிறீங்க.....!

டெரர்: ..........(<>)(<>)............

பாஸ்: அப்புறம் உங்க ரெக்ரூட்மெண்ட் ஸ்கில்சையும் நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்கனும்... நீங்க ரெக்ரூட் பண்ண ஆளுக எல்லாரும் ஒரே மாசத்துல ஓடிட்டானுங்க.....

டெரர்: சார்.... அது நீங்க அவனுங்க சீட்பக்கத்துலயே உக்காந்து எல்லா ஒர்க்கையும் டெய்லி செக் பண்ணுவேன்னு சொன்னதால வந்தது. அதுல 2-3 பேரு சூசைட் அட்டம்ப்ட் வேற பண்ணதா கேள்வி......

பாஸ்: ஓ.....அது.... வந்து.........  எப்படியோ எல்லாத்துக்கு மேலேயும் உங்களுக்கு பெட்டர் ரேட்டிங் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணியிருக்கேன், பட் நம்ம ரேட்டிங் சிஸ்டம்  ஆவரேஜ்தான் கொடுத்திருக்கு......

டெரர்: அது எப்படி சார், போன வருசத்தவிட இந்த வருசம் நல்லாவே பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன், போன வருசம் எக்சலண்ட் ரேட்டிங்கும், இந்த வருசம் ஆவரேஜ் ரேட்டிங்கும் வந்திருக்கு? அப்படி என்ன ரேட்டிங் சிஸ்டம் சார் அது?

பாஸ்: அது ரொம்ப காம்ப்ளிகேட்டட் ப்ராசஸ்....... உங்களுக்கு புரியாது, நீங்க கேட்கவும் விரும்ப மாட்டீங்க....

டெரர்: பரவால்ல சொல்லுங்க சார், நான் கேட்கிறேன்...

பாஸ்: அது...... அதாவது மேனேஜர்கள்லாம் ஏதாவது மீட்டிங் ரூம்ல உக்காந்து அவங்கவங்க குரூப் ஆளுக பேரை பேப்பர்ல எழுதி தூக்கி மேல போடுவோம்...... எது தரைல விழுகுதோ அவங்க ஆவரேஜ், டேபிள்ல விழுந்தா குட், எங்களால கேட்ச் பண்ண முடிஞ்சது எல்லாம் எக்சலண்ட், ஏதாவது மேல சீலிங்லயே ஒட்டிக்கிட்டா அவுட்ஸ்டேண்டிங் இப்படி ரேட்டிங் கொடுப்போம்....

டெரர்: அப்போ பூவர் ரேட்டிங் யாருக்கு கொடுப்பீங்க?

பாஸ்: அது நாங்க எழுத மறந்த ஆளுகளுக்கு.......!




டெரர்: (அட அயோக்கியப்பயலுகளா........!) இது என்ன சார் முட்டாள்தனமான சிஸ்டமா இருக்கு?

பாஸ்: என்னதிது, நம்ம கம்பெனியோட 25 வருச அப்ரைசல் சிஸ்டத்த கேள்வி கேக்கிறீங்க, இதெல்லாம் ரொம்ப தப்பு..... போய் உங்க வேலைய பாருங்க............

டெரர் மயங்கி விழுகிறார்.............

பாஸ்: (என்ன இதுக்கே மயங்கிட்டான்...... அடுத்த வருசம் இவனையும் மேனேஜர் ஆக்கி விட்ரவேண்டியதுதான், இவன் தான் இதுக்கு சரியான ஆளு.............)



(ஈமெயில்ல வந்ததுதான், முடிஞ்சளவு தமிழ்ப்படுத்தி இருக்கேன்.....)

நன்றி: கூகிள் இமேஜஸ்....