Friday, August 26, 2011

பதிவுலக மாமாமேதை சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....





பதிவுலகின் மாமாமேதை (நான் மாமேதைன்னா என்ன விட பெரியாளு மாமாமேதைதானே?) சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களை புகழ்ந்து ஒரு வாழ்த்துப்பா பாடியவாறு தொடங்குகிறேன்.

பதிவுலகம் கண்ட மாமாமேதையே...
உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...
உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...
ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...
அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...
பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...
பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...
பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...
நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?


****************


டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....


****************

ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........


****************


வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?


ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...


வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?


ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....


****************

எலேய்ய்.. அப்படியெல்லாம் குறுகுறுன்னு பாக்கப்படாது...



ரமேஷ்: டேய் என்னடா எல்லாரும் என்னமோ சொல்லிக்கிறாங்க?

இம்சை அரசன் பாபு: இன்னிக்கு ரக்‌ஷாபந்தனாம்யா.... அதான்......

ரமேஷ்: அப்படின்னா....?

இம்சை அரசன் பாபு: கைல ராக்கி கட்டுவாங்க....

ரமேஷ்: ராக்கி சாவந்த எதுக்கு போயி கைல கட்றாங்க?


****************


டெரர்பாண்டியன் : ஹேப்பி ஃப்ரண்ட்ஸ் டே மச்சி...


ரமேஷ் : ஹேப்பி சுறா டே மச்சி...... (எப்பூடி நாங்கள்லாம் யூத்துல?)

டெரர்பாண்டியன்: %^%^*^#*(*@(&$#$......!?!?!

ரமேஷ்: (ஓ... சுறா ப்ளாப் படம்ல, அதான் திட்டுறாம்போல, இப்ப பாரு..) ஹேப்பி காவலன் டே மச்சி...

டெரர்பாண்டியன்: &^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?

ரமேஷ்: சரியாத்தானே சொன்னேன், மறுக்கா எதுக்கு திட்டுறான்...........?



****************

டெரர் பாண்டியன்: டேய் டேய் ஏன்டா.. பில்லோவுக்கு கீழ சக்கரைய அள்ளி போடுற?

ரமேஷ்: என் கேர்ள்பிரண்டு இன்னிக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்னு விஷ் பண்ணாடா, அதுக்குத்தான்.........


****************

ஒருவேள நம்மள வெச்சி காமெடி கீமெடி பண்ணி இருக்காய்ங்களோ?


சிஐடி வேலைக்கு இண்டர்வியூவுக்கு போனாரு சிரிப்பு போலீசு, அங்க

ஆபீசர்: காந்திய கொன்னது யாரு?

சிரிப்பு போலீசு: (ரொம்ப நேரமா யோசிச்சு பாத்துட்டு) சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க

ஆபீசர்: ஓகே, ஆனா ஒரு நாள்தான் டைம்....

உடனே சிரிப்பு போலீஸ் வெளிய வந்தார், அங்க டெரர் பாண்டியன் வெயிட் பண்ணிட்டு இருந்தார்.

டெரர்பாண்டியன்: என்னடா மச்சி இண்டர்வியூ என்னாச்சு?

சிரிப்பு போலீஸ்: கெடச்ச மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........


****************

சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங் கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கன்னார்.

அதுக்கு போலீசு,

முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?


****************


சிரிப்பு போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து வரவேண்டும்னு போட்டிருந்தது.


பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும் போட்டிருந்தாங்க...!


எப்பூடி.... நாங்கள்லாம் தண்ணிலயே தயிரு எடுப்போம்ல....



நன்றி: கூகிள் இமேஜஸ், சில ஜோக்ஸ் மெயிலில் வந்தவையே

!

Wednesday, August 17, 2011

தமிழ்பதிவுலகின் மெகா புதிர் போட்டி இன்று தொடக்கம்...




தமிழ்ப் பதிவுலகில் முதல் முறையாக ஒரு ஆன்லைன் புதிர்போட்டி நடத்த இருக்கிறோம். இது டெரர் கும்மி என்ற எங்கள் நண்பர்கள் குழுவினால் நடத்தபடுகிறது. தெரியாதவர்களுக்காகவும், புதியவர்களுக்காகவும் எங்கள் நண்பர்கள் குழு பத்தி கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 2010-ன் மத்திய பகுதியில் பட்டாபட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ் இவர்கள் பதிவுகளில் கமெண்ட்டுகளில் மட்டும் நட்பு பாராட்டி கும்மியடித்துக் கொண்டிருந்த எங்களை டெரர் பாண்டியன் ஒரு கூகிள் போரம் மூலமாக ஒன்றிணைத்தார். அந்த போரத்திற்கு டெரர் கும்மி என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் மேலும் சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு வளர்ர்சியடைந்தது.  பின்னர் அதற்கென்று ஒரு தனி ப்ளாக்கும் தொடங்கப்பட்டது. ப்ளாக்கிற்குச் சென்றால் எங்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் IIM, Indore நடத்திய க்ளூலெஸ் (KLUELESS) என்னும் புதிர்போட்டி பற்றிய ஒரு விவாதத்தின் போது அது போல ஒரு போட்டியை நாமும் நடத்தினால் என்ன என்று எண்ணம் வந்தது. உடனடியாக அதற்கு அனைத்து நண்பர்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு இப்போது உங்கள் முன் ஹண்ட் ஃபாட் ஹிண்ட் (Hunt for Hint) என்ற புதிர் போட்டியாக பிரம்மாண்டமாக நிற்கிறது. இந்தக் கனவை நனவாக்க ராப்பகலாய் கோடிங் எழுதிய நண்பர்களின் கடின உழைப்பினை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும். இந்தப்போட்டியில் விளையாடும் போது நீங்களும் அதை புரிந்து கொள்வீர்கள். 


இந்த புதிர் போட்டியைப் பத்தி பலர் ஏற்கனவே எங்கள் நண்பர்கள் பதிவுகள்/பஸ்கள் மூலமா கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு வெப் பக்கத்துல இருந்து அதில் இருக்கும் க்ளூவைக் கண்டு பிடித்து அடுத்த பக்கத்திற்கு போகனும். இந்த க்ளூக்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஒரு படத்திற்குள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது பேஜ் சோர்ஸ், பேஜ் டைடில், URL நேம், இமேஜ் நேம் இப்படி எதிலாவது அந்தக் க்ளூ இருக்கும். அதைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவோ, அல்லது அதற்கான பாக்சிலோ அல்லது URL நேமை மாற்றவோ செய்தால் அது அடுத்த பக்கத்திற்குச் செல்லும், இப்படியே 25 லெவல்கள் வரை கொடுத்திருக்கிறோம். 

25-வது லெவலை அடையும் முதல் 5 நபர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. 


இன்னிக்கு இந்த போட்டி ஆரம்பிச்சாச்சு. உடனே போய் உங்க பேரை பதிவு பண்ணி போட்டியில் கலந்துக்குங்க, கமான்.... சீக்கிரம்.... முதலில் போட்டியை முடிப்பவர்களுக்கே பரிசுகள்...! போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே பாருங்க.  போட்டியில் கலந்து கொள்ள இங்க போங்க.

ரெடி.. ஸ்டார்ட்...... கோ...................




All the Best from Terror Kummi Friends to All Participants....!

!

Saturday, August 6, 2011

நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற....



என்னது மறுபடியும் பிரச்சாரமா..  ஆளை விடுமய்யா


இன்னும் பயிற்சி வேண்டுமோ?


ஒழுங்கா நடிச்சி நாலு காசு பாத்துட்டு இருந்தேன், உசுப்பேத்திவிட்டு இப்படி ரணகளமாக்கிட்டானுங்களே...?


போதும்யா போதும்.... நான் ஊர்ப்பக்கமா போய் வேற பொழப்ப பாக்கிறேன்....


இனி நம்ம பவர் ஸ்டார் ஸ்பெசல்....


நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற....



வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது.....



போங்க சார்.. அப்படி பாக்காதீங்க, எனக்கே வெக்கமா இருக்கு!



அர்விந்த் சாமி மாதிரி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டாங்களே....?



அதோ அங்க தெரியுது பாரு கோட்டை.. அதை புடிச்சிடனும்...


நன்றி: கூகிள் இமேஜஸ், சவுத் ட்ரீம்ஸ்