Tuesday, January 17, 2012

நண்பன்: எனது விமர்சனம், முதல் முறையாக...




முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதலாம் என்றவுடன் எனக்கு கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. பின்னே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சும் இடத்தில் கத்துக்குட்டிகள் நுழைவதற்கு கொஞ்சம் அப்படித்தானே இருக்கும்? நல்ல தெளிவான மனநிலையுடன் விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு அமர்ந்தேன், அப்போதுதானே எல்லா முக்கியமான விஷயங்களையும் சரியாக நினைவில் வைத்து கோர்வையாக எழுதலாம்?

நம்ம பிரண்டு ஒருத்தன் விஜய் ரசிகன். ரொம்ப நல்ல பையன், கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான், ஆனா ஊமைக்குசும்பு அதிகம். திடீர் திடீர்னு ஏதாவது வில்லங்கமா பண்ணிட்டு வந்து நிப்பான். அப்பல்லாம் நாங்க வீக்கெண்ட்ஸ்ல ஈவ்னிங் ஏதாவது படத்துக்கு போவோம், ஷோ முடிஞ்சு வந்த உடனே நல்லதா ஒரு ஹோட்டலுக்கு போய் செமயா சாப்பிடுவோம். சாப்பாடு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை. அதனால ஹோட்டல்கள்ல வெரைட்டியா ஆர்டர் பண்றதுக்கு ஈசியா இருக்கும்.

அப்படித்தான் அவன்கூட பல படங்களுக்குப் போனேன். இந்த மாதிரி பசங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க விஷயம் இருக்கு பாருங்க, அதைவிட ஒலகத்துலேயே கொடுமையான விஷயம் கிடையாதுங்க. ஏதாவது புதுப்படம் வந்தா போதும், இவனுங்க அத பாத்துட்டு வந்து மூணு நாளைக்கு நம்மளையும் தூங்க விடமாட்டானுங்க, சாப்பிட விடமாட்டானுங்க. இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாலு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு லாடம் கட்டிட்டு வந்துடலாம்.

இப்படி போய்ட்டு இருந்தப்போதான் நண்பன் படம் ரிலீஸ் ஆகுச்சு. படம் வேற ரொம்ப நல்லா இருக்கறதா பேச்சு வந்துடுச்சா... நான் கொஞ்சம் கலங்கிட்டேன். பயலை சமாளிக்கிறதுக்குள்ள பெரும்பாடா போச்சு. தினம் ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே வந்து ஆளை. கொஞ்சம் கொஞ்சமா நார்மலாக்கி, அப்புறம் படத்துக்கு போகலாம்னு ப்ளான். இதையெல்லாம் அப்படித்தான் டீல் பண்ணனும் என்ன சரிதானே?

எப்படி இருக்கு என் நண்பன் விமர்சனம்? இருங்க இருங்க நீங்க எந்த நண்பன் விமர்சனம்னு நெனச்சீங்க? நண்பன் பட விமர்சனம்னா? நான் என்ன நண்பன் படம் விமர்சனம்னா சொன்னேன், நண்பன் விமர்சனம்னுதானே சொல்லி இருக்கேன், எங்கே டைட்டிலை மறுக்கா படிச்சுப் பாருங்க?

ரூம் போட்டு அழ விரும்புபவர்கள் உடனே பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்!

நன்றி: கூகிள் இமேஜஸ்!

Monday, January 16, 2012

மேதை: ஒரு சிறப்பு பார்வை....!


இந்த பாருங்கண்ணே, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா...


அங்க என்ன பாக்குறீங்க? 
நான் எங்க பார்க்குறேன், எல்லாம் கருப்பாத்தான் தெரியுது, ஏதோ குத்துமதிப்பா டைரக்டர் சொன்ன பக்கமா நிக்கிறேன்


அப்படியெல்லாம் அவசரப்பட்டு போய்டாதீங்கண்ணே, நீங்களும் போயிட்டா தியேட்டர்ல ஆப்பரேட்டர் மட்டும் தனியா என்னண்ணே பண்ணுவாரு?


இதோ பாரும்மா, இந்தப்படத்துக்கு நாந்தான் ஹீரோ, நீ என் கூடத்தான் டூயட் பாடியாகனும் வேற வழி இல்லமா....... சொன்னா புரிஞ்சுக்க....


சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?


டேய்ய் என்ன அப்படி பாக்கிறே...?
பல்ல வெளக்கிட்டு வந்துடுங்கண்ணே..... முடியலண்ணே.....


யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு.....  படத்த  ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....


சார்லிண்ணே, நல்லா பாத்துக்குங்க, நம்ம படம் ரிலீசான உடனே இவங்கதான் படத்த 300 நாள் வரைக்கும் டெய்லி பார்க்க போறவங்க, எல்லாம் பேசி முடிச்சிட்டேன்...


இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க......

நன்றி: கூகிள் இமேஜஸ் மற்றும் http://chennai365.com

Monday, January 9, 2012

சாட் ஹிஸ்டரியும் பிரபல பதிவரும்...


அப்பவே இந்தப்படம் வேணாம்னு சொன்னேனே கேட்டியா....? இனி பார்க்கிறவன்லாம் இவர் கூட நம்மை கம்பேர் பண்ணித் தொலைவானுங்களே...?



நேத்து வேலையெல்லாம் முடிஞ்சு மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன், திடீர்னு ஒருத்தர் சாட்ல வந்தார். அவர் பேரு சங்கராம். எங்கூட கொஞ்சம் பேசனும்னார். யார்னு தெரியல, ஏதாவது பிரபல பதிவரா இருக்கப்போறாரு சும்மா பேசி வைப்போம்னு சாட் பண்ணேன்.. 

சங்கர்: சார் வணக்கம்

பன்னி: வணக்கம்.. 

சங்கர்: எப்படி இருக்கீங்க? உங்க கூட சாட் பண்றதுல ரொம்ப மகிழ்ச்சி சார்

பன்னி: நமக்குள்ள எதுக்குங்க சார் எல்லாம், நான் என்ன கலக்டரா... இல்ல ஜட்ஜா ?

சங்கர்: சரிங்க.. இருந்தாலும் நீங்க எவ்ளோ பெரிய பிரபல பதிவரு என் கூடலாம் சாட் பண்ணுவீங்கன்னு நம்பவே இல்ல...

பன்னி: அட பிரபல பதிவர்னா என்னங்க.. நானும் உங்கள மாதிரி சாதரண ஆளு தாங்க... 

சங்கர்: அப்படியெல்லாம் இல்லைங்க, நான் ரொம்ப நாளா உங்க ரசிகன். 

பன்னி: ஓ அப்படிங்களா..... நன்றி சங்கர்

சங்கர்:  ஆமாங்க, டெய்லி காலைல உங்க பதிவுலதான் கண்ணு முழிப்பேன். அதுக்காக லேப்டாப்ல உங்க ப்ளாக்க ஓப்பன் பண்ணி பக்கத்துல வெச்சிக்கிட்டுத்தான் தூங்குவேன்.

பன்னி: (ங்கொய்யால இவன் என்ன லூசா... இல்ல நக்கல் பண்றானா?) யோவ் ரசிகன்னு சொன்னீங்க சரி, ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவரு...

சங்கர்: ஓவர்தான் இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகனும்...... என்னோட லவ்வரும் உங்க ரசிகைதாங்க, அவ சொல்லித்தான் நானும் உங்க ரசிகர் ஆனேன். இல்லைன்னா என்னைய அவ லவ் பண்ணி இருக்கவே மாட்டா...

பன்னி: (டேய்.. டேய்ய்...  இன்னிக்கு நாந்தானாடா சிக்குனேன்....... ) தம்பி தண்ணியடிச்சிருக்கீங்களா? நாம வேணா அப்புறமா சாட் பண்ணுவோமே?

சங்கர்: இல்லீங்க, நான் தெளிவாத்தான் இருக்கேன், நீங்க தான் நம்ப மாட்டேங்கிறீங்க. இப்ப நான் உங்க கூட சாட் பண்றதுக்குக் கூட அவதான் காரணம்.

பன்னி: எப்படி?

சங்கர்: போனவாரம் அவ கிட்ட ஒரே ஒரு கிஸ் கேட்டேங்க, ஆனா அவ உங்க கிட்ட சாட் பண்ணதுக்கு ஆதாரம் கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு சொல்லிட்டா.. அதான் உங்களை தேடி கண்டுபுடிச்சி சாட்டுக்கு வந்தேன்

பன்னி: (வெளங்கிரும்....) தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல, இந்த மாதிரியெல்லாம் பேச வேணாம் சொல்லிட்டேன்

சங்கர்: சரி அத விடுங்க, நீங்க ஏன் உங்களை பத்தியே எழுதிட்டு இருக்கீங்க?

பன்னி: ஏம்பா நீ என் ப்ளாக் படிச்சிருக்கியா, இல்ல குத்துமதிப்பா பேசிட்டு இருக்கியா? இப்போ கொஞ்சநாளா பவர்ஸ்டார்னு ஒருத்தரை வெச்சித்தான் கடைய நடத்திட்டு இருக்கேன்..  தெரியும்ல?

சங்கர்: ஓ அப்படியா.....  படிச்ச மாதிரியே ஞாபகம் இல்லியே... நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானே?

பன்னி: தக்காளி அப்படிப் போடு அருவாள.......... நீ கோக்குமாக்கா பேசும் போதே எனக்கு தெரியும்யா இந்தா மாதிரி ஏதாவது இருக்கும்னு........ ங்கொய்யால இது என்ன அந்தக் காலத்து லேண்ட்லைன் போனா யார்னு தெரியாம கால் பண்றதுக்கு? சாட்ல என்பேர் தான் வந்திட்டு இருக்குல்ல, அதுகூட தெரியாமையா இவ்ளோ நேரம் சாட் பண்ணீங்க?

சங்கர்:  சாரி சார் சின்னத் தப்பு நடந்து போச்சு. 

பன்னி: என்னடா சாரி.... பரதேசி பன்னாட... காலைலேயே மூட் அவுட் பண்ணிட்டியேடா ராஸ்கல்.... இனி ஒரு ஆஃப் அடிச்சாத்தாண்டா தெளியும்... ஆமா.. டேய்ய்.... நீ அந்த சங்கர்தானே? ங்கொக்காமக்கா..... உனக்கேன்டா இந்த வேல?

சங்கர்: அது வந்து சார், அவசரத்துல கவனிக்காம இப்படி பண்ணிட்டேன்

பன்னி: தம்பி நீ யாருன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..... ஒழுங்கா உண்மைய சொல்லிரு.... இல்லேன்னா ஏகப்பட்ட கெட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும், நான் ஒரு பிரபல பதிவர் தெரியும்ல?

சங்கர்: அண்ணே மன்னிச்சிருங்கண்ணே, சிரிப்பு போலீஸ்தாண்ணே இப்படி பண்ண சொன்னாரு......... அஞ்சும் பத்துமா தர்ரேன், ஒவ்வொரு பிரபல பதிவரா சாட் பண்ணு, ஆஹா ஓஹோன்னு சொல்லு, கடைசில நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானேன்னு கேட்டுட்டு வந்திருன்னாரு.....

பன்னி: ம்ம்.... அப்படி வாடி.......... இதான் மேட்டரா... சரி நீ போ... இத நான் டீல் பண்ணிக்கிறேன்.......

அய்யோ ராமா என்ன ஏன் இந்தமாதிரி கழிசடைங்க கூடலாம் கூட்டு சேக்குற....... நல்லா பாத்துக்குங்க மகாஜனங்களே....  இந்தப் பாவத்துக்குலாம் நான் ஆளாகவே மாட்டேன்...  

அய்யய்யோ..... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  ஆள விடுங்கடா சாமி.....!

நன்றி: கூகிள் இமேஜஸ்

Monday, January 2, 2012

பிரபல பதிவர்களின் பயங்கர டேட்டா


ம்ம்... இது யாரா இருக்கும்?

பெயர்                     : பதிவர்

புனைப்பெயர்             : பிரபல பதிவர்

தொழில்                  : பதிவு எழுதுதல்

உபதொழில்               : தனக்கு ஓட்டு, கமெண்ட் போட்டவர்களுக்கு திருப்பி மொய் செய்தல்

தலைவர்                    : தலை இருக்கறவன்லாம் தலைவர்தான்...

துணைத்தலைவர்           : வாக்களிப்பவர்கள் அனைவரும்

பொழுதுபோக்கு             : புது பதிவர்களைத் தேடி ஃபாலோயராக சேர்ந்து தனக்கு ஃபாலோயர்கள் சேர்த்தல்

துணைப்பொழுதுபோக்கு    : உள்குத்து பதிவுகள் போடுதல்

மேலும் பொழுதுபோக்கு    : வில்லங்கமான தலைப்புகளை தேடிப்பிடித்தல்

வயது                        : இன்னும் சைட்டடிக்கும் வயசுதான்

பலம்                        : நண்பர்கள்

பலவீனம்                 : நண்பர்கள்

சமீபத்திய சாதனை         : பதிவர் சந்திப்புகள்

நீண்டகால சாதனை        : ஒருவழியாக காப்பி பேஸ்ட்டுகளை குறைத்தது

சமீபத்திய எரிச்சல்          : சீரியஸ் பதிவர்களின் புலம்பல்கள்

நீண்டகால எரிச்சல்         : ஹிட்ஸ் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்காதது

நண்பர்கள்                   : ரெகுலர் வாக்காளர்கள், கமெண்ட்டாளர்கள்

எதிரிகள்                     : அட்வைஸ் பண்ணும் அனைவரும்

ஆசை                        : எப்போதும் குறையவே குறையாத ஹிட்ஸ்

நிராசை                      : வட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாதது

நம்பிக்கை                   : பிரபல பிரபல பதிவர்

பயம்                         : பதிவுலகிற்கு செலவிடும் நேரம் தாறுமாறாக அதிகரித்து வருவது

லட்சியம்                    : அப்படின்னா?

இதுவரை மறந்தது         : சீரியஸ் வாசிப்புகள்

இனி மறக்க வேண்டியது   : ஹிட்ஸ், ஓட்டு….!

விரும்புவது                 : மொய் செய்யாமலே ஓட்டு, கமெண்ட்டு பெற...

விரும்பாதது                 : அதிக ஹிட்ஸ் கிடைக்கும் நேரம் தவறி பதிவு போடுவதை...

ஆதங்கம்                    : ஞாயிற்றுக்கிழைமை பதிவுலகிலும் ஹிட்ஸ் குறைவாக இருப்பது...

கலங்கித் தவிப்பது          : தனிப்பட்ட நேரம் முழுக்க பதிவுலகிலேயே போவதை நினைத்து...


மகா ஜனங்களே நல்லா பார்த்துக்குங்க... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல....

அறிவிப்பு: டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன. கவலை வேண்டாம், எப்படியும் திருப்பி மொய் செய்யப்படும்....!

பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

  • கலக்கல்
  • சூப்பர் 
  • அருமை
  • நல்ல பகிர்வு
  • ரைட்டு
  • :)
  • பதிவு அருமை
  • ஆஹா சூப்பர்
  • வாழ்த்துகள்
  • அருமை நண்பா
  • எப்படி சார் இப்படி....
  • கலக்குறீங்க தல...
  • ஹா..ஹா.....!

நன்றி கூகிள் இமேஜஸ், மற்றும் பிரபல பதிவர்கள்!

Friday, December 30, 2011

உங்களுக்கு என்ன பிரச்சனை?

உங்களுக்கு முடி உதிர்கிறதா...? தலை வழுக்கையாகிறதா....? முடி அடர்த்தியே இல்லாமல் காணப்படுகிறதா...? அல்லது தலையில் முடியே இல்லையா....?

இனி கவலையே படவேண்டாம். எங்கள் எருமை மாட்டின் ஆயில் தேய்த்தால் எல்லா பிரச்சனையும் தீரும். உலகப்புகழ் பெற்ற அமேசன் காட்டு புதரில் வாழும் எருமை மாடுகளின் சாணியில் இருந்து எங்கள் ஆராய்ச்சியாளர்களால் பல்லாண்டு காலம் ஆய்ந்து கண்டறியப்பட்டு அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்த எருமை மாட்டின் ஆயில்.

தேய்க்க ஆரம்பித்து மூன்றே மணிநேரத்தில் கொத்துக் கொத்தாக முடி முளைத்துவிடும். என்ன அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், இது அதிசயம் ஆனால் உண்மை. எங்கள் வாடிக்கையாளர்கள் பலர் பயன்படுத்தி பயனடைந்ததைப் பாருங்கள்!

எண்ணை உபயோகிக்கும் முன்



எங்கள் எருமை மாட்டின் எண்ணையை உபயோகித்து மூன்றே நாட்களில்


15999 ரூபாய் மதிப்புள்ள இந்த அற்புதமான எண்ணை உங்களுக்காக வெறும் 5999 ரூபாய்க்கே.

போனை எடுங்க உடனே அழைங்க, இந்தச் சலுகை இன்று மட்டுமே.

அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234 
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)


**************


ஜிம்முக்கு போகாமல் இடையை ச்சீ எடையை குறைக்க வேண்டுமா? தினமும் 20 நிமிடம் வீட்டிலேயே இருந்து எங்கள் கார்ப்பிட் சைக்கிளிங் மெசினில் எக்சர்சைஸ் செய்தால், இரண்டே நாளில் சிக்ஸ் பேக், எய்ட் பேக் அனைத்தும் கரைந்து சிங்கிள் மூட்டையாகிவிடும். பின் உங்கள் கவர்ச்சி எக்கச்சக்கமாக அதிகரித்து நீங்கள் ஒரு சினிமா கதாநாயகன் ஆவது உறுதி. 


கார்ப்பிட் சைக்கிள்


இந்த கார்ப்பிட் சைக்கிளை உபயோகிப்பது மிகவும் எளிதானது. ஸ்டாண்டு போட்டு நிறுத்தி ஏறி உக்கார்ந்து பெடலை அழுத்தினால் போதும். அந்த நாள் முதல் இந்த நாள் வரை பாடலை உங்கள் லேப்டாப்பில் போட்டுக்கொண்டு பெடலை அழுத்த ஆரம்பித்தால் பாடல் முடிவதற்குள் நீங்கள் ஆளே மாறிப்போய்விடுவது உறுதி!

கார்ப்பிட் சைக்கிளை உபயோகித்து அழகான தோற்றம் பெற்று சினிமாவில் கதாநாயகனாகிய எங்கள் வாடிக்கையாளர்


59, 999 ரூபாய் மதிப்புள்ளே இந்த கார்ப்பிட் சைக்கிள் உங்களுக்காக வெறும் 9,999 ரூபாய்க்கே....!
உடனே அழைப்பீர். சலுகை இன்று மட்டுமே.


அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234 
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)


***********



தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால் உங்களால் எதுவுமே முடியலியா? உடல் சிறுத்துப் போய் சோர்வாக தோற்றமளிக்கிறீர்களா? உற்சாகமே இல்லாமல் இருக்கிறதா? சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா? கை நடுங்குகிறதா? பயமாக இருக்கிறதா? வேதனைகளும் சோதனைகளும் கைகோர்த்து வருகிறதா?

கவலையே வேண்டாம், ஆறு தலைமுறைகளாக சேலத்திலேயே இருந்து ஆராய்ச்சி செய்து கண்டறிந்த வைத்தியமுறையால் உங்கள் அனைத்து பிரச்சனைகளும் ஐந்தே நிமிடத்தில் குணமடையும். 

எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி. 

சாதா ட்ரீட்மெண்ட்: ரூ 5999



ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 9,999

சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 15,999


அடுத்த விளம்பரத்தில் எங்களிடம் கயிறு வாங்கி தொங்கியவர்களின் பேட்டி எடுத்துப் போடப்படும், தவற விடாதீடாமல் பார்த்து மகிழுங்கள்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012!

நன்றி: கூகிள் இமேஜஸ், பவர் ஸ்டார்
!

Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - இன்றுமுதல் பதிவுகளை இணைக்கலாம்!

அனைவருக்கும் வணக்கம்,
சுனாமி என்ற ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடி 7 அண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இயற்கையின் ஆக்ரோஷ சக்தியை முழுமையாக உணர்ந்த தருணங்கள் அவை. சுனாமியால் வந்த பேரிழப்புகளும், துயர் துடைக்க நீண்ட ஆதரவுக்கரங்களும் என்றென்றும் மறக்கமுடியாதவை. 

இனி நம் டெரர் கும்மி விருதுகள் பற்றிய இன்றைய அறிவிப்பினைக் காண்போம்.

முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.



முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளை இணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.

                                                                                      




நன்றி..!

Wednesday, December 21, 2011

மாங்கா மரத்துல ஆப்பிள்....!

பாபுவும் ரமேசும், போன நூற்றாண்டுல சின்னப்பசங்களா இருந்தப்ப நடந்தது இது. ரமேசு அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த ஒரு மாங்கா மரத்துல வேக வேகமா ஏறுனான்..... அங்க ஏற்கனவே பாபு ஏறி மாங்கா களவாண்டுக்கிட்டு இருந்தாரு. ரமேசைப் பார்த்துட்டு

பாபு: டேய்.. டேய்ய்... இங்க ஏன்டா வந்தே?

ரமேஷ்: ஆப்பிள் சாப்பிட.......

பாபு: அடிங்க...... இது மாமரம், இதுல மாங்கா தான் இருக்கும்....

ரமேஷ்: பரவால்ல.... இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் கையோட ஆப்பிள் கொண்டு வந்திருக்கேன்.....

பாபு: ??!!**???

**********


டெரர் பாண்டியன் அப்போ ஸ்கூல் (!)  படிச்சிட்டு இருந்தார்.

டீச்சர்: கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?

டெரர்: நல்ல வேள நான் அதுக்கு முன்னாடி பிறக்கலை, இல்லேன்னா மூச்சு முட்டி செத்திருப்பேன்...

டீச்சர்: ?*?

**********


வைகை கணக்குப்பாடம் படிச்சிட்டு இருந்தாரு. அப்போ

டீச்சர்: டேய் ஏன் தரைல உக்காந்து கணக்கு போடுறே?

வைகை: நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?


**********


டீச்சர்: டேய் ரமேஷ்... ஏன் இங்க வந்தே, உன்னை லைன் கடைசில தானே நிக்க சொன்னேன்?

ரமேஷ்: லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்........

டீச்சர்: ??!!??**!


**********


டெரரும் செல்வாவும் காட்டுப்பக்கமா நடந்து போய்ட்டு இருந்தாங்க, அப்போ அந்தப்பக்கமா வந்த ஒரு சிங்கம் அவங்களைப் பாத்து உறுமுச்சு. பார்த்தா சிங்கம் ரொம்ப பசியாவும், கோபமாவும் அவங்களை தாக்க தயாராகிட்டு இருந்துச்சு. உடனே செல்வா வேக வேகமா பேக்ல வெச்சிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டிக்கிட்டான்.

டெரர்: டேய்.. செல்வா.. ஏன்டா இந்த டைம்லேயும் இப்படி காமெடி பண்றே... ஷூவ போட்டுக்கிட்டா சிங்கத்தவிட வேகமா ஓடிடுவியா?

செல்வா: இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?


**********


வைகை: என்னடா உன் சாக்ஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கு, அந்தக் காலு செகப்பாவும் இந்தக்காலு பச்சை கலராவும் இருக்கு?

ரமேஷ்: ஆமாடா எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு, புதுசா இப்படி வந்திருக்கு போல, இது மட்டுமில்ல, இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!


**********




இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?


நன்றி: ஜோக்குகளும் படமும் மெயிலில் வந்தவையே.....!