Monday, December 12, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011




நண்பர்கள் அனைவரும் டெரர்கும்மி என்ற எங்கள் குழுவை அறிந்திருப்பீர்கள். இணையத்தில் பதிவர்களாக அறிமுகமாகி, பழகி, நட்பால் இணைந்து உருவான குழு அது. டெரர்கும்மி குழுவின் வலைப்பூ தொடங்கப்பட்டு நண்பர்கள், வாசகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒரு ஆண்டினை நிறைவு செய்ததைக் கொண்டாடும் முகமாக இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம். 

பதிவுகளை பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும்  உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தேர்ந்தெடுத்து வையுங்கள். எப்படி எங்களுக்கு அனுப்புவது என்று அறிவிப்பு வந்தவுடன் அதன்படி அனுப்புங்கள். 

ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்  அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்த பரிசுத்தொகை  RS 10000/-




1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
இந்த பிரிவின் கீழ் உங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவை படைப்பு என்று கருதும் எந்த படைப்பையும் இணைக்கலாம்! உங்கள் பதிவுகளை தேர்ந்தெடுக்க இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் தயாராக இருக்கின்றனர்! இன்னும் என்ன தாமதம்? கிளப்புங்கள் பட்டையை :-)

2 . கவிதைகள்
இந்த பிரிவின்கீழ் உங்கள் கவிதைகளை இணைக்கலாம். கவிதை என்றால் அது எந்த வடிவமாக இருந்தாலும் கவலை வேண்டாம் மரபுக் கவிதை, புதுக்கவிதை இப்படி தனித்தனிப் பிரிவுகள் இல்லை.  எப்படிப்பட்ட கவிதையையும் எங்களிடம் தாருங்கள். அதில் இருந்து சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுக்க எங்கள் கவிஞர்கள் தயாராக உள்ளனர்!

3 . விழிப்புணர்வு
இந்தப் பிரிவின் கீழ் உங்கள் விழிப்புணர்வு பதிவுகளை இணைக்கலாம்.. விழிப்புணர்வு என்றால் அது சமூகம், சுற்றுச்சூழல், கல்வி, மொழி இப்படி எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்! உங்கள் பதிவு சமூக மாற்றத்திற்கு சின்ன விதையை விதைக்கும் என்று கருதினால் அதை தயங்காமல் எங்களிடம் இணையுங்கள்! சிறந்ததை தேர்ந்தெடுக்க எங்கள் நடுவர்கள் தயாராக உள்ளனர்!

4 . கதைகள்
இந்தப் பிரிவின் கீழ் சிறந்த கதை என்று நீங்கள் நினைக்கும்  உங்கள் கதைகளை இணைக்கலாம்! கதைக்களன் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்... சமூகம், குடும்பம், க்ரைம், த்ரில்லர் இப்படி.. அப்பறம் என்ன தயக்கம்? உடனே தயாராகுங்கள்! (தொடர்கதைகளுக்கு அனுமதி இல்லை, மன்னிக்கவும்)

5 . அனுபவம்/பயணக்கட்டுரை
இரண்டு பெயர் கொண்ட தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம்.. சிலர் ஒரு கடைக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார்கள்... சிலர் ஒரு இடத்திற்கு போய் வந்தால் அவர்களின் கட்டுரையின் வாயிலாக நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்வார்கள்! உங்கள் பதிவுக்கு இப்படி ஒரு தகுதி உண்டென்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் பதிகளை இந்த பிரிவின்கீழ் இணைக்கலாம்!

6 . அரசியல் கட்டுரை
கடந்த கால அரசியல் ஆகட்டும் சம கால அரசியல் ஆகட்டும், இரண்டைப் பற்றியும் திறம்பட எழுதக்கூடிய பதிவர்கள் நம் பதிவுலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி ஒரு பதிவாக உங்கள் பதிவு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்!

7 . திரை விமர்சனம்
இன்று இயக்குனர்கள் கூட நம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யும் நிலைக்கு நம் பதிவர்களின் விமர்சனம் தரமாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றது! மோசமான திரைப்படத்தின் விமர்சனத்தைக் கூட நல்ல விமர்சனம் என்று சொல்ல வைக்கும் வகையில் எழுதக்கூடியவர்கள் இங்கு அதிகம். இப்படி ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதியிருந்தால் இந்த பிரிவின்கீழ் இணைத்துவிடுங்கள்!

8 . தொழில்நுட்பம்
தொழில்நுட்ப பிரிவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் மட்டுமல்லாது, அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் இணைக்கலாம். கணினி சம்பந்தமான அனைவருக்கும் தெரிந்த விளக்கம் அளிக்கும் பதிவுகளாக அல்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் புதிதாக அறிமுகமாகும் கணினி மென்பொருள்களை பற்றி விளக்குவதாகவும்,  அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சம்பந்தமான எல்லோருக்கும் புரியும்படியான கட்டுரைகளாகவும் இருத்தல் நலம்.

9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
நீங்கள் இந்தவருடம் ( 2011 )  ஜனவரி முதல் தேதிக்கு பிறகு பதிவுலகிற்கு வந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை அல்லது அவர்களால் கவனிக்கப்படாமல் போன நல்ல பதிவுகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்! உங்களை அங்கீகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்! இதற்கு நீங்கள் எந்தக் குறிப்பிட்ட இடுகையையும் இணைக்க வேண்டாம். உங்கள் தளத்தின் முகவரியை மட்டும் இணைத்தால் போதுமானது. மற்றதை எங்கள் நடுவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!

10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.
இந்த பிரிவில் நீங்கள் இணைக்கமுடியாது. இது இந்த வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல துறைகளிலும் படிக்க சுவாரஸ்யமான பதிவுகள் தந்த பதிவர் ஒருவரை அடையாளம்  காட்டும்  முயற்சி!  இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்கள் நாங்கள் பதினாறு பேரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து அதில் இருந்து ஒரு சிறந்த பதிவரை  தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இதில் எங்களுக்கு என்று சில விதிகளை வகுத்துள்ளோம். இந்த பிரிவு மட்டும் முழுக்க டெரர் கும்மி முடிவு சார்ந்தது!  

மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது பிரிவான ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!

நன்றியுடன்
டெரர் கும்மிக்காக,
பன்னிக்குட்டி ராம்சாமி

109 comments:

Unknown said...

வணக்கம் மாம்ஸ்! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வணக்கம் ஜீ... எப்படி இருக்கீங்க....?

Unknown said...

நல்லா இருக்கேன்! நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள குறுக்கு வழி ஏதாவது இருக்கா?
@தமிழன்டா..

MANO நாஞ்சில் மனோ said...

டாலர் அல்லது தினார்'தானே தருவீங்க ஹி ஹி...

Unknown said...

வாழ்த்துக்கள் மாப்லைஸ்!...ஏற்கனவே என் பதிவை புரியலன்னு சிலர் சொல்வதால் புரியாத பதிவு எழுதுவோருக்கான விருது ஏதாவது இருக்காய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜீ, இராஜராஜேஸ்வரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள குறுக்கு வழி ஏதாவது இருக்கா?
@தமிழன்டா..////

ங்ணா.....

சக்தி கல்வி மையம் said...

இந்த டெரர் கும்மில யாரை புடிச்சா (?)புரியும்ன்னு நினைக்கிறேன்.. இந்தப் பரிசை ஈசியா வாங்கலாம்@இன்டியண்டா..

K said...

It's a great job! My best wishes thala!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
டாலர் அல்லது தினார்'தானே தருவீங்க ஹி ஹி.../////

உங்களுக்கு எதுல வேணும?

MANO நாஞ்சில் மனோ said...

லஞ்சம் குடுத்து முதல் பரிசு வாங்க யாரை பிடிக்கலாம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
வாழ்த்துக்கள் மாப்லைஸ்!...ஏற்கனவே என் பதிவை புரியலன்னு சிலர் சொல்வதால் புரியாத பதிவு எழுதுவோருக்கான விருது ஏதாவது இருக்காய்யா!////

புரியாத ரேஞ்சுக்கு எழுதுறவங்களுக்கு விருது கொடுக்குற அளவுக்கு நாங்க இன்னும் டெவலப் ஆகலீங்ணா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த டெரர் கும்மில யாரை புடிச்சா (?)புரியும்ன்னு நினைக்கிறேன்.. இந்தப் பரிசை ஈசியா வாங்கலாம்@இன்டியண்டா..////

எங்களுக்குத்தான் எல்லாரையும் புடிக்குமே....

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
லஞ்சம் குடுத்து முதல் பரிசு வாங்க யாரை பிடிக்கலாம்...?"

>>>>>>>>>

டேய் ### உன் புத்தி போகுதா...அதுக்கு தான் சேட்டண்ட சேட்டைகள குறசிக்கன்னு சொன்னேன் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Powder Star - Dr. ஐடியாமணி said...
It's a great job! My best wishes thala!!/////

நன்றீங்.....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள சும்மாதான்..
மற்றபடி அருமையான, பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி..

பாராட்டுகள்+வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது எப்படிப்பாக அடுத்த வாரம் தொழிற் நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்க படுகிறது என்று போர்டு போடுவிங்களா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// MANO நாஞ்சில் மனோ said...
லஞ்சம் குடுத்து முதல் பரிசு வாங்க யாரை பிடிக்கலாம்...?////

அண்ணா ஹசாரேவுக்கு போன் பண்ணி புடிச்சு கொடுத்துடுவேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள சும்மாதான்..
மற்றபடி அருமையான, பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி..

பாராட்டுகள்+வாழ்த்துக்கள்..///

மிக்க நன்றி கருன்....!

K.s.s.Rajh said...

வணக்கம் தலைவா நீண்டநாளுக்கு பிறகு உங்கள் எழுத்துக்களை சந்திக்கின்றேன் உங்கள் முயற்சி சிறப்பானது வெற்றி பெற வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கவிதை வீதி... // சௌந்தர் // said...
இது எப்படிப்பாக அடுத்த வாரம் தொழிற் நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்க படுகிறது என்று போர்டு போடுவிங்களா..../////

எப்பாடு பட்டாகினும் பிற்பாடு விருதுகள் வழங்கப்படும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// K.s.s.Rajh said...
வணக்கம் தலைவா நீண்டநாளுக்கு பிறகு உங்கள் எழுத்துக்களை சந்திக்கின்றேன் உங்கள் முயற்சி சிறப்பானது வெற்றி பெற வாழ்த்துக்கள்/////

வாங்க ராஜ்.. நன்றி...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டு மூன்று பேர் வெற்றிபெற்றால் அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்படுமா அல்லது தலா 10000 வழங்கப்படுமா..?



என்னா பின்னாடி வெட்டு குத்து ஆகக்கூடாது பாருங்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல் சகோ.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை வீதி... // சௌந்தர் // said...
இரண்டு மூன்று பேர் வெற்றிபெற்றால் அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்படுமா அல்லது தலா 10000 வழங்கப்படுமா..?



என்னா பின்னாடி வெட்டு குத்து ஆகக்கூடாது பாருங்க...///

பரிசு அனைத்து வெற்றியாளர்களுக்கும் பிரித்தே அளிக்கப்படும். மொத்தப்பரிசுதான் 10000.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இணைத்து விடுங்கள் இணைத்து விடுங்கள் அப்படின்னு சொல்லிட்டா போதுமா..

எங்க இணைக்கனும்...

RAMA RAVI (RAMVI) said...

சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமையான தகவல் சகோ.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.///

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...
இணைத்து விடுங்கள் இணைத்து விடுங்கள் அப்படின்னு சொல்லிட்டா போதுமா..

எங்க இணைக்கனும்...///

அது பற்றி அடுத்த அறிவிப்பு வரும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//RAMVI said...
சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள்.///

நன்றி..!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...
இணைத்து விடுங்கள் இணைத்து விடுங்கள் அப்படின்னு சொல்லிட்டா போதுமா..

எங்க இணைக்கனும்...///

அது பற்றி அடுத்த அறிவிப்பு வரும்...!
/////


காத்திருக்கிறோம்.....

Yoga.S. said...

வணக்கம்,ப.ரா!சும்மாக்காச்சும் ப்ளாக் தொறந்துட்டு பதிவே போடாம,நானும் "பதிவர்"தானுங்க அப்புடீன்னு பீத்திக்கிட்டு அலையிறவங்களுக்கு கொசுறு மாதிரி ஏதாச்சும் போட்டுக் குடுக்கலாமில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Yoga.S.FR said...
வணக்கம்,ப.ரா!சும்மாக்காச்சும் ப்ளாக் தொறந்துட்டு பதிவே போடாம,நானும் "பதிவர்"தானுங்க அப்புடீன்னு பீத்திக்கிட்டு அலையிறவங்களுக்கு கொசுறு மாதிரி ஏதாச்சும் போட்டுக் குடுக்கலாமில்ல?///

வணக்கம் ஐயா. இதுதானே ஆரம்பம், அடுத்த தடவை கமெண்ட்டாளர்களையும் சேர்த்து கவனிச்சிடுவோம்.... ஹஹஹா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அன்பார்ந்த டெரர் கும்மி நண்பர்களுக்கு...

நான் பதிவுலகம் வந்த பிறகு மிகவும் ரசித்து படித்தது தற்போது டெரர் கும்மி குழுவில் இருக்கும் அத்தனைபேருடைய சொந்த தளங்களில் தாங்கள் தரும் மொக்கை மற்றும் நகைச்சுவை பதிவுகளை தான்.

ஆனால் கடந்த சில காலங்களாக பதிவுலகைவிட்டு தாங்கள் தள்ளி இருப்போது போல் தோன்றுகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
TERROR-PANDIYAN(VAS)
மங்குனி அமைச்சர்
வெறும்பய
எஸ்.கே
நாகராஜசோழன் MA
இம்சைஅரசன் பாபு..
கோமாளி செல்வா
வைகை

போன்றோருடன் தங்கள் தளத்தையும் மிகுந்த ரசணையுடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

பதிவுகள் மட்டுமின்றி கருத்துச்சண்டையில் மாற்றி மாற்றி தாங்கள் அடிக்கும் லூட்டி தற்போது எங்கு தேடினிலும் கிடைக்கவில்லை.

அதிகநேரம் கூகுள் பஸ்ஸில் மட்டுமே தங்கள் குழுவின் அரட்டை இருக்கிறது. என்னைபோல் கூகுள் பஸ்ஸில் ஆர்வமில்லாதவர்கள் அதையும் கண்டுகளிக்க முடியாமல் போகிறது.

மாதம் 10 அல்லது 15 பதிவுகள் என யாராவது ஒரு தளத்தில் கும்மியடித்த தாங்கள் மாதம் 1 அல்லது 2 என்று குறைத்துக்கொண்டு தற்போது பதிவுலகில் நகைச்சுவை உணர்வு அற்ற தன்மை நீடிக்கிறது...

தங்களின் டெரர் கும்மி குழுவின் அங்த்தினர் பழைய மாதிரி அவரவர் தளங்களில் நகைச்சுவை மொக்கை பதிவுகள் இட்டு இந்த வலைப்பூக்களை பரவசமடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.....

நன்றி...

காட்டான் said...

வணக்கம் ராம்சாமி!
நல்ல விசயம் வாழ்த்துக்கள்.. அதுசரி என்னைப்போல் பின்னூட்டங்கள் போடுவோருக்கு ஏதாவது இருக்காங்கோ..??))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவிதை வீதி... // சௌந்தர் // said...
அன்பார்ந்த டெரர் கும்மி நண்பர்களுக்கு...////

ரொம்ப நன்றி சௌந்தர், என்னுடைய ஆதங்கமும் அதுவே, ஆனால் கூகிள் பஸ் மிக எளிதாக இருப்பதாலேயே நண்பர்கள் அங்கேயே இருக்க நேர்கிறதுன்னு தோணுது. விரைவில் பழையபடி வருவோம்னு நம்புறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//காட்டான் said...
வணக்கம் ராம்சாமி!
நல்ல விசயம் வாழ்த்துக்கள்.. அதுசரி என்னைப்போல் பின்னூட்டங்கள் போடுவோருக்கு ஏதாவது இருக்காங்கோ..??))////

ரொம்ப நன்றிண்ணே.... நீங்களாவது கொஞ்சம் பதிவு போட்டு வெச்சிருக்கீங்க, நம்ம யோகா ஐயாவுக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியல......

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//தங்களின் டெரர் கும்மி குழுவின் அங்த்தினர் பழைய மாதிரி அவரவர் தளங்களில் நகைச்சுவை மொக்கை பதிவுகள் இட்டு இந்த வலைப்பூக்களை பரவசமடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.....//

அவசரபட்டு பேசிட்டிங்க. இனி ரமேஷ் எழுதரத யாராலும் தடுக்க முடியாது.. :))

(கருத்துக்கு நன்றி பாஸ்)

அருண் பிரசாத் said...

குஞ்ஜாங் குஞ்ஜாங்

அருண் பிரசாத் said...

குஞ்ஜாங் குஞ்ஜாங்

அருண் பிரசாத் said...

நான் பிரபலபதிவர் இல்லையா :(

கவிதை வீதி செள்ந்தரை நான் போட்டியில் இருந்து விலக்குகிறேன்
:)

வைகை said...

நான் தீமிதிக்க வந்துட்டேன்.. எங்கப்பா என் காந்தக்கண்ணழகி? :-))

மொக்கராசா said...

nice ..wise...rice

ம.தி.சுதா said...

வணக்கம் அண்ணாச்சி....

நல்ல முயற்சி.. அதிலும் புதிய பதிவர்களை ஊக்குவிக்க தாங்கள் புகுத்தியுள்ள திட்டம் மிகவும் சிறப்பானது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//தங்களின் டெரர் கும்மி குழுவின் அங்த்தினர் பழைய மாதிரி அவரவர் தளங்களில் நகைச்சுவை மொக்கை பதிவுகள் இட்டு இந்த வலைப்பூக்களை பரவசமடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.....//

அவசரபட்டு பேசிட்டிங்க. இனி ரமேஷ் எழுதரத யாராலும் தடுக்க முடியாது.. :))

(கருத்துக்கு நன்றி பாஸ்)//

சிங்கம் ஒன்று புறப்பட்டதே :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
நான் பிரபலபதிவர் இல்லையா :(

கவிதை வீதி செள்ந்தரை நான் போட்டியில் இருந்து விலக்குகிறேன்
:)///

என் பேரும்தான் இல்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மொக்கராசா said...
nice ..wise...rice//

லஞ்ச் டைம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//♔ம.தி.சுதா♔ said...
வணக்கம் அண்ணாச்சி....

நல்ல முயற்சி.. அதிலும் புதிய பதிவர்களை ஊக்குவிக்க தாங்கள் புகுத்தியுள்ள திட்டம் மிகவும் சிறப்பானது...//

வணக்கம் சுதா, ரொம்ப நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//தங்களின் டெரர் கும்மி குழுவின் அங்த்தினர் பழைய மாதிரி அவரவர் தளங்களில் நகைச்சுவை மொக்கை பதிவுகள் இட்டு இந்த வலைப்பூக்களை பரவசமடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.....//

அவசரபட்டு பேசிட்டிங்க. இனி ரமேஷ் எழுதரத யாராலும் தடுக்க முடியாது.. :))

(கருத்துக்கு நன்றி பாஸ்)//

சிங்கம் ஒன்று புறப்பட்டதே :))///


(அ)சிங்கம் ஒன்று புறப்பட்டதே :))

ஓடு ஓடு... நிக்காம ஓடு........

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
TERROR-PANDIYAN(VAS)
மங்குனி அமைச்சர்
வெறும்பய
எஸ்.கே
நாகராஜசோழன் MA
இம்சைஅரசன் பாபு..
கோமாளி செல்வா
வைகை///

பெரிய பெரிய யானைகளுக்கு நடுவில் என்னைபோன்ற எறும்பையும் குறிப்பிட்டதுக்கு நன்றி பாஸ்.. ஆனா அந்த லிஸ்ட் நடுவுல இம்சைஅரசன் பாபுன்னு போட்ருக்கே.. யாரு பாஸ் இது? ஓ.. கைதவறி இந்த பேர டைப் பண்ணிட்டிங்களா? :-))

ராஜி said...

எனக்கில்லை, எனக்கில்லை. ஒண்ணா, ரெண்டா? 1000 ரூவாச்சே. யாரோ அடிச்சுக்கிட்ட் போகப்போறாங்களோ!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
அருண் பிரசாத் said...

நான் பிரபலபதிவர் இல்லையா :(

கவிதை வீதி செள்ந்தரை நான் போட்டியில் இருந்து விலக்குகிறேன்
:)

/////////


நான் பொதுவாக சொல்லியிருக்கிறேன் அருண்...

மேலும் தாங்கள் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் மட்டுமே போடுவதால் தாங்கள் கணக்கில் வரவில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////////
TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//தங்களின் டெரர் கும்மி குழுவின் அங்த்தினர் பழைய மாதிரி அவரவர் தளங்களில் நகைச்சுவை மொக்கை பதிவுகள் இட்டு இந்த வலைப்பூக்களை பரவசமடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.....//

அவசரபட்டு பேசிட்டிங்க. இனி ரமேஷ் எழுதரத யாராலும் தடுக்க முடியாது.. :))

(கருத்துக்கு நன்றி பாஸ்)

/////////

இதைத்தான் எதிர்பார்த்தேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
நான் பிரபலபதிவர் இல்லையா :(

கவிதை வீதி செள்ந்தரை நான் போட்டியில் இருந்து விலக்குகிறேன்
:)///

என் பேரும்தான் இல்ல.....

////////////


அதில் உள்ள வரிகளை சரியாக படியுங்கள் பன்னிக்குட்டியாரே...

///////
இம்சைஅரசன் பாபு..
கோமாளி செல்வா
வைகை

போன்றோருடன் தங்கள் தளத்தையும் மிகுந்த ரசணையுடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
/////////


கடைசியாக தங்கள் தளத்தையும் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்...

”நீங்கள் ஜனங்களை மகிழ்விக்கிற கலைஞன்...”

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////////

யோவ் நாங்க சும்மா ஜாலி பண்ணிட்டு இருக்கோம்......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
ராஜி said...

எனக்கில்லை, எனக்கில்லை. ஒண்ணா, ரெண்டா? 1000 ரூவாச்சே. யாரோ அடிச்சுக்கிட்ட் போகப்போறாங்களோ!
/////////

மேடம் சரியா பாருங்க...
பரிசு 10000

அனுஷ்யா said...

சூப்பர் அண்ணே..நீங்க எனக்கு கொஞ்சம் சிபாரிசு பண்ணீங்கன்னா...:):)

பதிவுகள் சிலவற்றுடன் காத்திருக்கிறேன்..

அனுஷ்யா said...

ஒரு வெளம்பரம்ம்ம்ம்... ..குறும்(பு)படம்...அண்ணே..வாங்கண்ணே...வந்து பாத்துட்டு போங்கண்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராஜி said...
எனக்கில்லை, எனக்கில்லை. ஒண்ணா, ரெண்டா? 1000 ரூவாச்சே. யாரோ அடிச்சுக்கிட்ட் போகப்போறாங்களோ!///

மேடம் மேடம் பரிசு பத்தாயிரம் ரூபாய்...... மறந்துடாதீங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மயிலன் said...
சூப்பர் அண்ணே..நீங்க எனக்கு கொஞ்சம் சிபாரிசு பண்ணீங்கன்னா...:):)

பதிவுகள் சிலவற்றுடன் காத்திருக்கிறேன்..///

வாங்க வாங்க.....

வெளங்காதவன்™ said...

ஏம்பா சவுந்தரு(நீ ஏன் பாக்குற? நான் சொல்லுறது கவிதா வீதிய)... இவிங்க பிளாக்கு பக்கம் வராம இருக்கறதால, இப்போ பிளாக்ஸ் படிக்கறப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு!! ஆனா, மறுபடியும் வந்தாங்க... பொறவு, பழையகுருடி கதவைத் தொரடி கதைதான்...

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மயிலன் said...
சூப்பர் அண்ணே..நீங்க எனக்கு கொஞ்சம் சிபாரிசு பண்ணீங்கன்னா...:):)

பதிவுகள் சிலவற்றுடன் காத்திருக்கிறேன்..///

வாங்க வாங்க.....////

நீர்தான் பன்னிக்குட்டி ராமசாமி என்பவரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மயிலன் said...
ஒரு வெளம்பரம்ம்ம்ம்... ..குறும்(பு)படம்...அண்ணே..வாங்கண்ணே...வந்து பாத்துட்டு போங்கண்ணே...//

பாத்திடுவோம்..

M.R said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே

மருத்துவ பதிவெல்லாம் இதுல சேர்ப்பில்லைங்களா ?!!

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை வீதி சௌந்தர் கேட்டதுனால் . இனி இந்த பாபு ப்ளாக் எழுதுவாருன்னு சொல்லி கொள்கிறேன் ...

வெளங்காதவன்™ said...

///இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை வீதி சௌந்தர் கேட்டதுனால் . இனி இந்த பாபு ப்ளாக் எழுதுவாருன்னு சொல்லி கொள்கிறேன் ..////

அடப் பாவிங்களா!!!!

#யோவ், கவிதை வீதி... சொன்னேன் கேட்டீரா??? ஒருத்தர் ஆரம்பிக்கப் போறாரு!!!!

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001

செல்வா said...

போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள் :))

சசிகுமார் said...

என்ன பத்தாயிரமா!! சொக்கா எங்கடா போன

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மயிலன் said...
சூப்பர் அண்ணே..நீங்க எனக்கு கொஞ்சம் சிபாரிசு பண்ணீங்கன்னா...:):)

பதிவுகள் சிலவற்றுடன் காத்திருக்கிறேன்..///

வாங்க வாங்க.....////

நீர்தான் பன்னிக்குட்டி ராமசாமி என்பவரோ?////

எப்படியும் ஈவ்னிங்குக்குள்ள தெளிஞ்சிடுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// M.R said...
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே

மருத்துவ பதிவெல்லாம் இதுல சேர்ப்பில்லைங்களா ?!!//

தொழிநுட்பம் பிரிவில் நீங்கள் அனுப்பலாம் நண்பரே.... வாழ்த்துக்களுக்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
கவிதை வீதி சௌந்தர் கேட்டதுனால் . இனி இந்த பாபு ப்ளாக் எழுதுவாருன்னு சொல்லி கொள்கிறேன் ...///

உங்க ப்ளாக் எதுன்னு ஞாபகம் இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாய் சேகர் said...
http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001///

ஏன் இந்த வேல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சசிகுமார் said...
என்ன பத்தாயிரமா!! சொக்கா எங்கடா போன////

வாங்க வாங்க, போனா வராது, வந்தா போகாது.......

aalunga said...

ஓராண்டு நிறைவடைந்தமைக்கு வாழ்த்துகள் அண்ணே..

என்னைப் போன்ற புதியவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்!! அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

shanmugavel said...

நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

எங்கே போனீங்க இத்தனை நாளா?? சரி சரி வந்துட்டீங்க!! வரவேற்கிறோம்... வந்து கலந்துக்கிறோம். பாத்து போட்டுக் கொடுங்கைய்யா :-)

Madhavan Srinivasagopalan said...

இந்தப் போட்டியில நானும் கந்துக்கனும்னா என்ன செய்யணும் ?

Philosophy Prabhakaran said...

சிறந்த புதுமுக பதிவர் விருதுக்கு நான் கடந்து வந்த சிலரை பரிந்துரைக்கலாமா...

Philosophy Prabhakaran said...

சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், பரதேசித்தமிழன், மங்காத்தாடா, நாய் சேகர் - இந்தமாதிரி நிறைய பேர் இருப்பதால் சிறந்த Spoof பதிவர்ன்னு ஒன்னு வச்சிருக்கலாம்...

Unknown said...

Romba nalla visayam.. Ungaludaya muyarchi sirapaga vitri pera valthukkal..

Riyas said...

நல்ல விடயம்..

இது இந்திய பதிவர்களுக்கு மட்டுமானதா.. இல்லை எல்லோருக்குமா..?

திண்டுக்கல் தனபாலன் said...

என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

paaraattukkal...

Sivakumar said...

//Philosophy Prabhakaran said...
சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், பரதேசித்தமிழன், மங்காத்தாடா, நாய் சேகர் - இந்தமாதிரி நிறைய பேர் இருப்பதால் சிறந்த Spoof பதிவர்ன்னு ஒன்னு வச்சிருக்கலாம்...//

யோவ்.. ஒனக்கு விருது வேணும்னு ஸ்ட்ரைட்டா கேளுய்யா. அதை ஏன் சாம் மார்த்தாண்டன் (எ) பா.ரா.கிட்ட பம்மிட்டு கேக்குற?

Unknown said...

வெற்றி பெற போகும் சக பதிவர்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள், புதிய முயற்சியை முன்னெடுக்கும் டெரர் கும்மி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

Astrologer sathishkumar Erode said...

கலக்கல்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆளுங்க (AALUNGA) said...
ஓராண்டு நிறைவடைந்தமைக்கு வாழ்த்துகள் அண்ணே..

என்னைப் போன்ற புதியவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்!! அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!///

நன்றி.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// shanmugavel said...
நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்.//

நன்றி பாஸ்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எம் அப்துல் காதர் said...
எங்கே போனீங்க இத்தனை நாளா?? சரி சரி வந்துட்டீங்க!! வரவேற்கிறோம்... வந்து கலந்துக்கிறோம். பாத்து போட்டுக் கொடுங்கைய்யா :-)////

வாங்க பாஸ், வந்து கலந்துக்குங்க, ஆமா யார்கிட்ட போட்டுக்கொடுக்கனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Madhavan Srinivasagopalan said...
இந்தப் போட்டியில நானும் கந்துக்கனும்னா என்ன செய்யணும் ?////

கெணத்துல குதிக்கனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Philosophy Prabhakaran said...
சிறந்த புதுமுக பதிவர் விருதுக்கு நான் கடந்து வந்த சிலரை பரிந்துரைக்கலாமா...///

சம்பந்தப்பட்டவர்களை போட்டியில் கலந்து கொண்டு வலைப்பூவை பதிந்து கொள்ள சொல்லலாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Philosophy Prabhakaran said...
சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், பரதேசித்தமிழன், மங்காத்தாடா, நாய் சேகர் - இந்தமாதிரி நிறைய பேர் இருப்பதால் சிறந்த Spoof பதிவர்ன்னு ஒன்னு வச்சிருக்கலாம்...////

அதான் நகைச்சுவை இருக்குல்ல, அதுல சப்மிட் பண்ணுங்கப்பு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலகில் பாபு said...
Romba nalla visayam.. Ungaludaya muyarchi sirapaga vitri pera valthukkal..///

வாங்க பாபு வாழ்த்திற்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Riyas said...
நல்ல விடயம்..

இது இந்திய பதிவர்களுக்கு மட்டுமானதா.. இல்லை எல்லோருக்குமா..?///

தமிழில் எழுதும் அனைவருக்கும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////திண்டுக்கல் தனபாலன் said...
என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"////

நிச்சயமா சேர்த்துக் கொள்வோம் நண்பரே, போட்டி அனைவருக்கும் பொதுவானது. அடுத்த அறிவிப்பை தொடர்ந்து உங்கள் பதிவுகளை அனுப்புங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
paaraattukkal...///

நன்றி பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ! சிவகுமார் ! said...
//Philosophy Prabhakaran said...
சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், பரதேசித்தமிழன், மங்காத்தாடா, நாய் சேகர் - இந்தமாதிரி நிறைய பேர் இருப்பதால் சிறந்த Spoof பதிவர்ன்னு ஒன்னு வச்சிருக்கலாம்...//

யோவ்.. ஒனக்கு விருது வேணும்னு ஸ்ட்ரைட்டா கேளுய்யா. அதை ஏன் சாம் மார்த்தாண்டன் (எ) பா.ரா.கிட்ட பம்மிட்டு கேக்குற?//////

வெளங்கிருச்சு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இரவு வானம் said...
வெற்றி பெற போகும் சக பதிவர்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள், புதிய முயற்சியை முன்னெடுக்கும் டெரர் கும்மி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்////

நன்றி, உங்களுக்கும் கால்ந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நல்ல நேரம் சதீஷ்குமார் said...
கலக்கல்...//

நன்றி தல....!

Anonymous said...

நன்றாக நடத்தும், வாழ்த்துக்கள் ஆமா என்னது இது.

<<< பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply To This Comment]

/// ஆரூர் முனா செந்திலு said...
அந்த பொண்ணு நோக்கினாள் என்றால் ஒரு அர்த்தம் இருந்தது, அவள் அம்மாவும் நோக்கினால் என்றால்? உமக்கும் ஆன்ட்டியோநோக்கியோ வியாதி இருக்கா? ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு.////

இதுக்கும் ஒரு சங்கமே இருக்கும் போல? >>>

சங்கத் தலைவரே நீர் தானய்யா, நாலு பேர் முன்னாடி உம்முடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாதுன்னு மறைச்சா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆரூர் முனா செந்திலு said...
நன்றாக நடத்தும், வாழ்த்துக்கள் ஆமா என்னது இது.

<<< பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply To This Comment]

/// ஆரூர் முனா செந்திலு said...
அந்த பொண்ணு நோக்கினாள் என்றால் ஒரு அர்த்தம் இருந்தது, அவள் அம்மாவும் நோக்கினால் என்றால்? உமக்கும் ஆன்ட்டியோநோக்கியோ வியாதி இருக்கா? ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு.////

இதுக்கும் ஒரு சங்கமே இருக்கும் போல? >>>

சங்கத் தலைவரே நீர் தானய்யா, நாலு பேர் முன்னாடி உம்முடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாதுன்னு மறைச்சா எப்படி?////////

யோவ் தலைவர்னா அப்படித்தான்யா இருப்பாரு, நீங்கதான்யா மக்களுக்கு எடுத்துச் சொல்லனும்......

Anonymous said...

சங்கத் தலைவர் வாழ்க, சும்மாவே வந்து அமர்ந்த சங்கத்தலைவன் வாழ்க, உடல் ஆன்ட்.. சே பழக்க தோஷம், உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல முயற்சி, டெரர் கும்மி தனது அடுத்த படிக்கட்டில்.......வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி சிபி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வடை கொடுப்பீங்களோ?...
:-)

ஆமினா said...

நல்லதொரு முயற்சி சகோ

வெற்றி பெற வாழ்த்துகள்.......

கலந்துக்கொள்ளபோகும் அனைவருக்கும் வாழ்த்துகள் :-)