Friday, October 14, 2016

ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....




ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்போம்... 

இதுவர வந்த நிச்சயமான பொண்ண காதலிச்சு மனச மாத்துற படங்கள்ல அந்த மாப்பிள்ளைய கெட்டவனாக காட்டி, அது நியாயம்னு அழகா எடுத்து சொல்லி இருப்பாங்க... அதே மாதிரி ரெமோவுலயும் அந்த மாப்ள ஏற்கனவே ஓரு பொண்ண கழட்டிவிட்டுட்டு வர்ரதாதான் சொல்றாங்க... அதுவும் இல்லாம அவனை பாத்தா நமக்கே புடிக்கல... ஒரு புடவை விஷயத்துலயே அந்த பொண்ணு மனச நோகடிச்சிருக்கானே... அவனை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு நிம்மதியா வாழுமா...  க்ளைமேக்ஸ்ல கூட கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறான் அந்த மாப்ள. ஹீரோயினை காதலிச்சது மூலமா அவளுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கார் ஹீரோ. சோ படத்தை பத்தின நெகடிவ் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. 

படத்துல ஏகப்பட்ட லாஜீக் மீறல்கள் இருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. படத்துல நடிக்க சான்ஸ் கேக்கிறதுக்காக பொம்பள வேஷம் போடுறாரு சிகா. மொதோநாளு ஒரு வெள்ளக்கார தொர வந்து பொம்பள மேக்கப் போட்டுவிட்டாப்புல..... ஆனா அடுத்த நாளும் பொம்பள வேஷத்துல ஹீரோயின பாக்க போறாரு.... அப்போ யாருய்யா போட்டுவிட்டது.... சினிமா ஷூட்டிங்ல டெய்லி மேக்கப் போட காசு குடுத்து ஆள் வெச்சிருக்கானுங்களே அவனுங்க எல்லாம் கேனையனுங்களா...... அதுவும் தனக்குத்தானே மேக்கப் எப்படி அந்தளவுக்கு போட முடியும்? இதாவது பரவால்ல..  பர்த்டே விஷ் பண்ணும் போதும், க்ளைமேக்ஸ் ஃபைட் சீன்லயும் 10 செகண்டுல பொம்பள வேஷத்துல இருந்து ஆம்பளையா மாறுறாரு... அது எப்படி சாத்தியம்..... சும்மா வெறும் தண்ணில மூஞ்சிய கழுவவே 30 செகண்டாவது ஆகுமே? 

அப்புறம் நர்ஸ்னா டாக்டர் பின்னாடி போறதுதான் வேலையா... ஊசி போடாம எத்தன நாள்யா சமாளிக்க முடியும்..... டெம்பரேச்சர் பாக்கனும், பல்ஸ் பாக்கனும், பிரெசர் செக் பண்ணனும், கட்டுப்போடனும்..... இதுல நர்சிங் சூபர்வைசருக்கே சந்தேகம் வருது.... கூடவே இருக்க டாக்டர் ஹீரோயினுக்கு சந்தேகம் வராதா...? அந்த நர்சிங் சூபர்வைசர் ரெமோ நர்ஸ்தானானு செக் வேற பண்ணுது, அதான் அப்பவே சொதப்புறான்ல, அதுக்கப்புறம் அத என்னன்னு பாக்கவே மாட்டாங்களா.... படத்துல லாஜிக் மீறல் இருக்கலாம்.... ஆனா படமே லாஜீக் மீறலா இருந்தா எப்படி...? 

இது காமெடிப்படம்னு பரவலா எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆனா படத்துல ஒரு காமெடி சீன் கூட இல்ல..... தியேட்டர்ல கூட யாரும் சிரிக்கிற சத்தம் கேக்கல..... பட் க்ளைமேக்ஸ்ல காவியா நோவியான்னு ஒரு சாங் வருது.... அது படத்துல பாத்தீங்கன்னா சிரிப்புக்கு 100% கேரண்டி. காமெடி சீன் இல்லாத குறைய இந்த பாட்டுதுதான் போக்குது, தேங்ஸ் அனிருத். 


அம்மாவ வர்ர சரண்யா..... பாவம்... சிகா பண்ற ப்ராடு வேலைய பாத்து திட்டுறவங்க, கீர்த்தி சுரேஷ் அழக(?) பாத்ததும் அப்படியே சேஞ்ச் ஆகிடுறாங்களாம்... என்ன பிராடுத்தனம் பண்ணாலும் பரவால்ல, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க....  தியேட்டர்ல படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்....  சதீஷ் காமெடியனா வர்ராராம்... பட் படத்துல காமெடி சீனே இல்லாம எதுக்கு காமெடியனை போட்டிருக்காங்கன்னு புரியல... அவராவது பரவால்ல. மொட்டை ராஜேந்திரனும் கூடவே வர்ரார். அது அவருக்கே ஏன்னு புரிஞ்சிருக்காது. சோ அதை கேள்வி கேட்பது நியாயம் இல்லை. 

கல்யாணம் நிச்சயமான பொண்ண மனசை கெடுத்து காதலிக்கிறத புல்டைம் ஜாபா வெச்சிருக்கார் சிகான்னு கலாச்சார காவலர்கள் பலரும் இணையத்துல குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வெச்சிருக்கேன்... படத்துல ஹீரோயின் நிச்சயார்த்த மோதிரத்த கழட்டுற சீன்ல நச்னு வீணை மியூசிக் போட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாத்தையும் தனியாளா தூக்கி நிறுத்தி இருக்கார் நம்ம அனிருத்...  நம் கலாச்சார காவலர்கள் என்னதான் படத்தை திட்டினாலும் அட்லீஸ்ட் அனிருத்தையாவது பாராட்டி இருக்கனும்... 

ஹீரோயினை பத்தி எதுவுமே சொல்லலியான்னு கேக்குறீங்க அதானே..... படத்துல வர்ர யதார்த்தமான ஒரே கேரக்டர் அதுதான். ஹீரோயின் கேரக்டர் டாக்டராவே இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணத்தை மீறாம லூசுத்தனமாதான் காட்டி இருக்காங்க. அதுக்காக அவங்க கேரக்டரை டைரக்டர் பாத்து பாத்து செதுக்கி இருக்கார் போல. டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி கேனையா இருக்கேன்னு படத்துல ஒரு இடத்துல கூட நமக்கு தோனவே இல்ல... அதுவே இந்த கேரக்டரின் வெற்றி.... 

படத்துல இத்தனை லாஜிக்மீறல்கள், கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் கிளைமேக்ஸ்ல ஹீரோ, வில்லன்கூட நேருக்கு நேர் கையால சண்டை போட்டு ஜெயிப்பதை பார்ப்பது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..... கமர்சியல் சினிமாவுல கூட இப்படி வெகு யதார்த்தமான சீன் வைப்பது தமிழ்சினிமாவில் மட்டுமே சாத்தியம்....... 

மொத்தத்தில் ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு...!



(படம் பார்த்துட்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களா போட்டத ஒருங்கிணைத்து பட்டி டிங்கரிங் பண்ணி விமர்சனமா மாத்தி இருக்கேன்.... ஹி....ஹி..... )

5 comments:

'பரிவை' சே.குமார் said...

ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு.....
வித்தியாசமான பார்வை...

சிகரம் பாரதி said...

படம் ரொம்பக் கொடுமையா இருக்கும் போலிருக்கே?

ஷங்கர் said...

Arambichiyittiya

ஷங்கர் said...

Arambichiyittiya

விஸ்வநாத் said...

வணக்கோ கவுண்டரே ;