Wednesday, November 28, 2012

ஒலகம் அழியாமல் தடுக்கனுமா.....?




ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சு, உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க. 

முதல்ல டெரர் குதிச்சார், வலைய சரியா பிடிக்காததால கீழ விழுந்துட்டார்,லேசான அடி. 

ரெண்டாவது மாலுமி குதிச்சார். சரியான டைரக்ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இவரும் மிஸ்ஸாகி கீழே விழுந்துட்டார்.

அடுத்தது பாபு வந்து நின்னார், கீழ தீயணைப்பு வீரர்கள் “குதிங்க, குதிங்க”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னார்,
”நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”


*******

+Terror Pandian: இன்னும் கொஞ்ச நாள்ல ஒலகம் அழிய போகுதாமே, அழியாம தடுக்கனும்னா என்ன பண்ணனும்...?

+Ramesh Subburaj: சிம்பிள்...... ஒலகத்துல உள்ள எல்லா அழி ரப்பர்களையும் எடுத்து தீய வெச்சி கொளுத்திடனும்....... அப்புறம் எப்படி அழியும்னு பார்க்கிறேன்......



*********


இரவு ஒரு  பெரிய ஹோட்டலின்  பத்தாவது  மாடில விருந்து நடந்தது, எல்லாரும் செம தண்ணி.....

மறுநாள் காலை மாலுமி,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில்  இருந்ததை  உணர்ந்தார்.அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.அப்போது அவரது நண்பர் வைகை அவரைப் பார்க்க வந்தார்.

அவரிடம் விபரம் கேட்க,அவர் சொன்னார்,''நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே  பறக்கப் போவதாகச் சொல்லி குதிச்சிட்டே...”

உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன்,''அடப் பாவி,நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால்,நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?''என்று நண்பரைக்  கேட்டார்.

நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார்,'நானும் போதையில் இருந்தேனா?அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''

********




திரை அரங்கிற்கு தன் நண்பர்களுடன் சென்ற டெரர் தன் இருக்கையைக் கண்டுபிடித்து உள்ளே நுழையும்போது முன்னாள் அமர்ந்திருந்த ஒருவரின் காலை மிதித்து விட்டார்.

மிதிபட்டவர் அவர் மன்னிப்பு கேட்பார் என்று எதிர் பார்த்தார்.அவரோ தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

இடை வேளையின்போது வெளியே சென்று நண்பர்களுடன் திரும்பிய டெரருக்கு தன் வரிசை எது என்று சரியாகத் தெரியவில்லை.முன்னால் அமர்ந்திருந்தவரிடம்,'சார்,படம் ஆரம்பிக்குமுன் நான் உள்ளே போகும்போது உங்கள் காலை மிதித்துவிட்டேனா?'என்று கேட்டார். இப்போதாவது அவனுக்கு வருத்தம் தெரிவிக்கத் தோன்றியதே என்று எண்ணி அவர்,'ஆமாம்,'என்றார்.

உடனே டெரர் தன் நண்பர்களிடம் சொன்னார்,''டேய்.... நாம உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.... வாங்கடா!''

*********

+Ramesh Subburaj: டேய் டுப்பாக்கி லிங் கொடுத்தேனே பாத்துட்டியா?

+இம்சைஅரசன் பாபு: இல்லடா.. இன்னிக்கு நெட் ஸ்பீடு ஓவரா இருக்கு, அதுனால கொஞ்சம் ஸ்லோவானதுக்கப்புறம் பாக்கலாம்னு இருக்கேன்...

+Ramesh Subburaj:அட நாதாரி ஏண்டா?

+இம்சைஅரசன் பாபு: நெட் ஸ்பீடா இருக்கும் போது படம் பாத்தா படமும் ஸ்பீடா ஓடிருச்சின்னா அப்புறம் ஒண்ணுமே புரியாம போய்டுமே.. அதான்...

+Ramesh Subburaj: ^&^&(^&%%$%#@!!!!


*********




டெரர்: நேத்து உன்கிட்ட பேசிட்டு இருந்தாரே அவர் யாரு?

மாலுமி: 'அவரா, அவர் பீச்ல கடலை விற்பவர்.'

டெரர்: அட, பார்க்க ரொம்ப சிம்பிளா இருக்காரே, இவ்வளவு பெரிய கடலுக்கு அவர்தான் ஓனரா? 

மாலுமி:????



*********

ரமேஷ்: எனக்கு இருக்கறதுலயே பெரிய பீசாவா ஒரு பீசா வேணும்.....

சர்வர்:  எத்தன பீசா சார்?

ரமேஷ்: ஒண்ணு போதும்யா.....

சர்வர்: அத எத்தன பீசா வெட்டனும் சார், எட்டு பீசாவா?

ரமேஷ்: என்னது எட்டா... நோ நோ.... என்னால அவ்ளோ சாப்புட முடியாது, நாலு பீசாவே வெட்டுங்க......!

சர்வர்: ????!!!


*********

பாபு டீக்கடை வெச்சிருந்தார். அங்கே ரமேஷ் ரொம்ப கோபமா வந்து பாபுகூட சண்ட போட்டுட்டு இருந்தாரு.......

பாபு: ரொம்ப கோபமா இருக்கே, மொதல்ல ஒரு டீ சாப்புடு..... அப்புறம் பேசுவோம்.... டேய் ஒரு ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்ரா.....

ரமேஷ்: அதெல்லாம் முடியாது, மொதல்ல நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.......

பாபு: சரி ரொம்ப சூடா இருக்கே, கூலாவாவது ஏதாச்சும் சாப்புடு......

ரமேஷ்: ம்ம்ம்.... சரி கொடு...........

பாபு: டேய் அந்த டீய அப்படியே நல்லா ஆத்தி கொடு.........

ரமேஷ்:!!???%$%






நன்றி: எஸ்கே, ஜோக்குக நெட்டில் சுட்டவையே & நன்றி கூகிள் இமேஜஸ்

34 comments:

நாய் நக்ஸ் said...

ஹா...ஹா,,,,
ரசித்தேன்.....
எங்க நம்ம ஜெய்....???????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும இது.......?

நாய் நக்ஸ் said...

அட கொடுமையே....
மொபைல்-ல லேட் ஆச்சி ஆரு தடவை வந்திருக்கு....

பன்னி ஐந்தை தூக்கவும்...

நாய் நக்ஸ் said...

@ பன்னி
மெயில் பீட் பாக் டிக் அடிக்க முடியலை ...ஏன் ...அத பண்ண போதை இப்படி வந்துடுச்சி....

இப்பவும் பண்ண முடியலை...பிரிவியு ...கொடுத்து போனாலும் ...டிக் அடிக்க முடியலை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நாய் நக்ஸ் said...
@ பன்னி
மெயில் பீட் பாக் டிக் அடிக்க முடியலை ...ஏன் ...அத பண்ண போதை இப்படி வந்துடுச்சி....

இப்பவும் பண்ண முடியலை...பிரிவியு ...கொடுத்து போனாலும் ...டிக் அடிக்க முடியலை..////////

????

நாய் நக்ஸ் said...

Email follow-up comments to nakksabaram2009@gmail.com/////////////

இதுதான் சரியா வரலை...

கமெண்ட் சரியா தூக்களை....
ப்ளாக்-ல ஏன் பேரு மட்டும் காட்டுது...
முழுவதும் தூக்கவும்...


ஆஹா....முகுந்த முயற்ச்சிக்கு பிறகு டிக் அடிச்சிட்டேன்.....
:))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாய் நக்ஸ் said...
Email follow-up comments to nakksabaram2009@gmail.com/////////////

இதுதான் சரியா வரலை...

கமெண்ட் சரியா தூக்களை....
ப்ளாக்-ல ஏன் பேரு மட்டும் காட்டுது...
முழுவதும் தூக்கவும்...


ஆஹா....முகுந்த முயற்ச்சிக்கு பிறகு டிக் அடிச்சிட்டேன்.....
:))))))////////

ஹஹ்ஹா........

நாய் நக்ஸ் said...

வாட் எ டெக்னிகல் எரர்......

google காரன்கிட்ட போன் பேசணும்...!!!!!!!!

பாலா said...

ஜோக்குகளில் வரும் கேரக்டர்களுக்கு நண்பர்கள் பெயரையே வைத்து கலக்கி விட்டீர்கள். :)

Unknown said...

சூப்பர் பன்னிக்குட்டி. உங்களுக்கு கிட்னி சூப்பரா வேலை செய்யுது

dheva said...

பிஸ்ஸா ஜோக்... அப்புறம்... டீய கூலா கொடுக்கச் சொல்ற ஜோக்...

ரெண்டுக்கும் வாய் விட்டு சிரிச்சுட்டேன்....!!!!!

கலக்கல் ஊர்ஸ்...:-)))))

மொக்கராசா said...

///பாபு வந்து நின்னார், கீழ தீயணைப்பு வீரர்கள் “குதிங்க, குதிங்க///

அவரு ஏன் குதிக்கனும்... அவருக்கு பறக்க தெரியாதா...

மொக்கராசா said...

///வலைய சரியா பிடிக்காததால கீழ விழுந்துட்டார்///

அவரு எந்த வலையிலும் சிக்க மாட்டாரு...ஏன்னா ....

மொக்கராசா said...

///மறுநாள் காலை மாலுமி,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும்///

அவரு எவ்வளவு அடிச்சாலும் ரெம்ப ஸ்டெடியா இருப்பாருன்னு நான் கேள்விபட்டேன்....

மொக்கராசா said...

///டேய்.... நாம உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.... வாங்கடா!''///

அவருக்கு மாலை கண் நோய் இருக்குங்க...

மொக்கராசா said...

//// பார்க்க ரொம்ப சிம்பிளா இருக்காரே, இவ்வளவு பெரிய கடலுக்கு அவர்தான் ஓனரா? ////

இதே மாதிரி தாங்க.... இண்டர்வியூவில் ஆன்சர் சொல்லி வேலை வாங்கிருக்காரு......

மொக்கராசா said...

///என்னால அவ்ளோ சாப்புட முடியாது, நாலு பீசாவே வெட்டுங்க......!.///

வெறும் நாலு பிஸ்ஸான்னு சொல்லி ரமேஷ்ஷை ரெம்ப கேவலபடுத்துறேங்க..அவர் ரேஞ்ச்சுக்கு 15 அல்லது 20 சொல்லனும்....

மொக்கராசா said...

/// அப்படியே நல்லா ஆத்தி கொடு..///

நல்லா கூலா இருக்குற டீயை குடிச்சுட்டு அப்பறம் சூடா இருக்குற டீயும் வேணும்ன்னு சொல்ல்லிருப்பாரோ.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்து நகைச்சுவை துணுக்களும் ரசித்து சிரிக்கும்படிஇருந்தது...

நன்று....

Yoga.S. said...

வணக்கம் ப.ரா சார்!நலமா?////யோவ்,நலமா இருக்கிறதால தானே போஸ்ட் போட்டிருக்கேன்!////ஜோக்குகள் அருமை!!!

tech news in tamil said...

அருமை..........

Anonymous said...

ஹா...ஹா,,,,
ரசித்தேன்...



http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ROFL

செங்கோவி said...

jokes Super!

//நன்றி: எஸ்கே, ஜோக்குக நெட்டில் சுட்டவையே & நன்றி கூகிள் இமேஜஸ்//

அப்போ இந்தப் பதிவும் காப்பி-ன்னு தான் வரலாறு சொல்லுமா?

M (Real Santhanam Fanz) said...

ஹீ ஹீ...

M (Real Santhanam Fanz) said...

////செங்கோவி said...

jokes Super!

//நன்றி: எஸ்கே, ஜோக்குக நெட்டில் சுட்டவையே & நன்றி கூகிள் இமேஜஸ்//

அப்போ இந்தப் பதிவும் காப்பி-ன்னு தான் வரலாறு சொல்லுமா?///
இல்லண்ணே, இது இம்ப்ரூவ்ட் ட்ரான்ஸ்லேஷன்னு நினைக்கிறன்...

செங்கோவி said...

// Real Santhanam Fanz (General) said...

////செங்கோவி said...

jokes Super!

//நன்றி: எஸ்கே, ஜோக்குக நெட்டில் சுட்டவையே & நன்றி கூகிள் இமேஜஸ்//

அப்போ இந்தப் பதிவும் காப்பி-ன்னு தான் வரலாறு சொல்லுமா?///
இல்லண்ணே, இது இம்ப்ரூவ்ட் ட்ரான்ஸ்லேஷன்னு நினைக்கிறன்...
//

ஓ...நல்ல பேருய்யா.

பட்டிகாட்டான் Jey said...

சிரிச்சி சிரிச்சி வயறு வலிச்சிடுச்சி.....

கலக்கல் பதிவு நண்பா......

நச் பதிவு தல, எப்படி இப்படியெல்லாம்?

பதிவு அருமை... தொடரவும்!

சூப்பர் பதிவு தல, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா....

சிரிக்க வைக்கும் பதிவு (த.ம.1, இண்ட்லி 2, உடான்ஸ் 2)

அடேடே இது ரொம்ப எளிதா இருக்கே (த.ம.2)


நல்ல பதிவு, பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். (தமிழ் மணம் -0, இண்ட்லி -0, உடான்ஸ் -0, பதிவ மொதல்ல திரட்டில சப்மிட் பண்ணுடா மூதேவி)


டிஸ்கி : பன்னி நீ என் பதிவுல தனித்தனியா போட்ட பின்னூட்டம்ஸ்தான் இது. பாவம்னு ஒரே பின்னூட்டத்துல போட்ருக்கேன் :-)))


Unknown said...

அந்த கடலை விக்கின்றவரை பார்க்கணும்

Yoga.S. said...

Gnanam Sekar said...
அந்த கடலை விக்கிறவரை பார்க்கணும்!/////அது...........மெரீனா புகழ் "தாத்தா" தான்.////இனிமேலும் கேப்பீங்க?

அன்பு துரை said...

sema comedy la..

ReeR said...

உங்கள் ராக்ஸ் அருமை ...

நன்றி.

tamil online job site > CLick www.padugai.com

Unknown said...

சிரிப்போ....சிரிப்பு..!

உணவு உலகம் said...

//நாய் நக்ஸ் said...
வாட் எ டெக்னிகல் எரர்......

google காரன்கிட்ட போன் பேசணும்...!!!!!!!!//

அன்னியோட அழிஞ்சான் கூகுள்காரன். :)