Thursday, August 22, 2013

மாநிற அண்ணாவும் மாநிற எம்ஜிஆரும்......




டாகுடர் தலைவா ரிலீஸ் ஆகிவிட்ட களிப்பில்  நல்லா சாப்புட்டு மப்பும் மந்தாரமுமா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். அப்போ உள்ளே டைரக்டர் விஜய் வர்ரார்.

டைரக்டர் விஜய்: அண்ணே... அண்ணே...

டாகுடர்: வாங்கண்ணா... வணக்கங்கண்ணா எப்படிங்ணா இருக்கீங்க.. ?

டைரக்டர்: வணக்கம்ணே....உங்க புண்ணியத்துல நல்லாருக்கேண்ணே...

டாகுடர்: அப்புறங்ணா....?

டைரக்டர்: உங்களை வெச்சி இன்னொரு படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டு வந்திருக்கேண்ணே...

டாகுடர்: என்னாது உங்கூட இன்னொரு படமா? சரி விடுங்ணா, நாமல்லாம் என்ன தெய்வத்திருமகன் மாதிரி படத்துலயா நடிக்க முடியும்? என் பேர வெச்சிருந்தப்பவே நெனச்சேன் நீங்களும் டுபாக்கூராத்தான் இருப்பீங்கன்னு.... சரி கதைய சொல்லுங்ணா.......

டைரக்டர்: ஒப்பனிங் சீன், அது ஒரு வில்லேஜ், திருவிழா நடந்திட்டு இருக்கு, எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....

டாகுடர்: ஸ்டாப் ஸ்டாப், ஸ்டாப், இதெல்லாம் நானும் எங்க நைனாவும் பாத்துக்கிறோம், மொதல்ல நீங்க க்ளைமேக்ஸ் பைட் பத்தி சொல்லுங்ணா.....

டைரக்டர்: அது செம சீனுங்கண்ணா, உங்களுக்காகவே ஒரு மாசம் உக்காந்து யோசிச்சது...




டாகுடர்: அட சொல்லுங்ணா..........

டைரக்டர்: ஒரு பெரிய பில்டிங்க், 20-25 மாடி ரேஞ்சில புடிக்கிறோம். நீங்க வில்லனுங்க எல்லாரையும் அடிச்சி துவைச்சி தூக்கு கொண்டு போய் அந்த பில்டிங்கோட லிப்ட் முன்னாடி போடுறீங்க, எல்லாருக்கும் திக்கு திக்குங்குது, என்ன பண்ண போறீங்கன்னு...

டாகுடர்: செமையா இருக்கே..... அடிச்சு தூக்கி போட்டுட்டு அடுத்து என்னங்ணா பண்றேன்...

டைரக்டர்: அங்கதாண்ணே பெரிய டிவிஸ்ட்டே வெச்சிருக்கேன், ஹாலிவுட்டே அசந்திடுவானுங்கண்ணே.... இந்த சீனுக்காக நாம ஹாலிவுட் போய் எடுக்க வேண்டி இருக்கும்ணே, பெரிய ப்ரொடியூசரா போடுங்கண்ணே......

டாகுடர்: அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், நீங்க மேட்டருக்கு வாங்ணா....

டைரக்டர்: ஒவ்வொருத்தனா அடிச்சி, முடிச்சி கடைசில மெயின் வில்லனையும் அடிச்சு கொண்டு வந்து போடுறீங்க. லிப்ட் கதவை ஓப்பன் பண்ணி, எல்லாரையும் உள்ள தூக்கி போடுறீங்க, போட்டுட்டு உள்ள போய் டாப் ப்ளோர் பட்டனை அமுக்கிட்டு வெளில வந்துடுறீங்க....

டாகுடர்: ஆஹா........ சூப்பர்........ அப்புறம்.......



டைரக்டர்: லிப்ட் மேல போக முன்னாடி செம ஸ்பீடா படிக்கட்டுல ஏறி மொட்டமாடிக்கு போயி....

டாகுடர்: போயி........

டைரக்டர்:  லிப்டுக்கு நேர மேல இருக்க கூரையை உடைச்சி எடுத்துடுறீங்க, கீழ இருந்து செம ஸ்பீடா வர்ர லிப்ட் அப்படீயே மேல ராக்கெட் மாதிரி பறக்குது... 100 அடி ஹைட் போயி வெடிச்சி சிதறுது..... பின்னாடி தீப்பிழம்பு தெறிக்க ஸ்லோ மோசன்ல நீங்க உங்க வழக்கமான ஸ்டைல்ல கேமராவ பாத்து நடந்து வர்ரீங்க.. அப்படியே ப்றீஸ் பண்ணி படத்தை முடிக்கிறோம்... அந்த இடத்துல ஏதாவது நச்சின்னு கேப்சன் ஒண்ணு புடிச்சு போட்டுடலாம்.....

டாகுடர்: வாவ் செம சூப்பருங்ணா............ உடனே பூஜைய ஆரம்பிங்ணா...... விஸ்வரூபம்-2 கூட சேர்த்தே ரிலீஸ் பண்ணி கலக்குவோம்....

எஸ்.ஏ.சி: ஆங் டைரக்டர் தம்பி.. எல்லாம் நல்லாருக்கு பட் ஒரு விஷயம்.....

டைரக்டர்: சொல்லுங்கண்ணே.....

எஸ்.ஏ.சி: பட டைட்டில்ல மாநிற அண்ணா, மற்றும் மாநிற எம்ஜிஆர் வழங்கும்னு போடனும், ஓக்கேவா....?




டைரக்டர்: போயாங்க்........................ இதுக்கு நான் எங்கூரு பக்கமா போயி புண்ணாக்கு வித்து பொழச்சிக்குவேன், ஆளை விடுங்கடா சாமி..........



நன்றி: கூகிள் இமேஜஸ்!


Saturday, August 3, 2013

பதிவர் சந்திப்பில் பன்னியின் நூல் வெளியீடு...?

வர இருக்கிற பதிவர் சந்திப்புல பதிவர்கள்லாம் நூல் வெளியிடலாம்னு சொன்னதுல இருந்து வாசகர் கடிதங்கள் இருமடங்காகிடுச்சு. சொல்லி வெச்ச மாதிரி அத்தனை கடிதங்கள்லயும் நீங்க ஏன் இந்த பதிவர் சந்திப்புல ஒரு நூல் வெளியிடக் கூடாதுன்னு அடம்புடிக்கிறதாவே இருக்கு. இன்னும் சிலர் கட்டாயம் நீங்க ஒரு நூல் வெளியிட்டே ஆகனும்னு சொல்லிட்டாங்க. பட் நூல் வெளியிடனும்னா அதுக்கு முதல்ல நூல் தயாரா இருக்கனுமே? 

நம்ம பதிவுகள் எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா ஒரு நூலா வெளியிட்டுடலாம்னு ஒரு வாசகர் சொன்னார். ரொம்ப பெருசா வருமேன்னு கேட்டதுக்கு, ரெண்டு வால்யூமா போட்டுடலாம்னுட்டார். ரெண்டு வால்யூம்னா ரெண்டு வாட்டி வெளியிடனுமான்னு தெரியலை. கமெண்ட்டுகளையும் சேத்து வெளியிடனும், கமெண்ட்ஸ் இல்லேன்னா பதிவுகள் எதுக்குமே செல்ப் எடுக்காது. அப்படின்னா குறைஞ்சது பதினேழு வால்யூம் வரைக்கும் வரும்னு ஒரு நிபுணர் சொன்னார். அப்போ பதினேழு பதிவர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கும். அதுனால பதிவுகளை புத்தகமா வெளியிடுறதை பத்தி விவாதிக்க தனியா ஒரு வாசகர் சந்திப்பை நடத்தி அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

இப்போ பதிவர் சந்திப்புக்கு என்ன நூல் வெளியுடுறது? பேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாத்தையும் போட்டு ஒரு குறுநூல் வெளியிட்டுடலாமா? இல்ல, உக்காந்து கவிதையா எழுதி பக்காவா ஒரு நூலை ரெடி பண்ணிடலாமான்னு ஒரே குழப்பம். என்ன பண்ணலாம்னு நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்கிட்ட ஆலோசனை கேட்டேன். அவர் நல்லா யோசிச்சு ரெண்டு நாள்ல சொல்றேன்னு சொல்லிட்டார்.

சொன்ன மாதிரியே ரெண்டுநாள் கழிச்சு மெயில் பண்ணி இருந்தார். ஒண்ணு இல்ல, ரெண்டு நூலா ரிலீஸ் பண்ணிடுவோம். உங்களுக்கு புடிச்சிருக்கா பாருங்கன்னு நூல்களை அட்டாச் பண்ணி வேற அனுப்பி இருந்தார். பார்த்த உடனே எனக்கு பிடிச்சுட்டுது. உங்களுக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு நூல்களுக்கும் நல்ல பேர் வெச்சி பதிவர் சந்திப்புல என் சார்பாக நாய்நக்ஸ் நக்கீரனையே வெளியிட சொல்லிடலாம்னு இருக்கேன். 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


என்ன சார் நம்ம நூல்கள் உங்களுக்கு புடிச்சிருக்கா?


நன்றி: கூகிள் இமேஜஸ்