Friday, September 14, 2012

சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு...!




ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க. 




கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.



அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு. 



இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில. 



இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..... 




நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!

!

Wednesday, September 12, 2012

கெளம்புங்கண்ணே கெளம்புங்க......


























என்ன பாக்குறீங்க.......... நம்ம ஹண்ட் ஃபார் ஹிண்ட் கேம் (Hunt for Hint-2) தொடங்கிருச்சுங்கோ.... உடனே கெளம்புங்கங்கோ..........






நன்றி: கூகிள் இமேஜஸ்..............
!

Friday, September 7, 2012

சைக்கிளும், அழகியும் பின்னே டெரர் பாண்டியனும்.....!




டெரர் பாண்டியன்,  இம்சை அரசன் பாபு, சிரிப்பு போலீசு ரமேஷ், மாலுமி நாலு பேரும் ஒரு டப்பா கார்ல எங்கேயோ போய்ட்டு இருந்தாங்க, திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு, என்னென்னமோ பண்ணியும் ஸ்டார்ட் ஆகலை. சரி நாலு பேரும் நடந்தே போகலாம்னு முடிவு பண்ணாங்க, அப்போ ரமேஷ் வெறுங்கையோட நடக்கறதுப் பதிலா கார்ல இருந்து எதையாவது எடுத்துக்கிட்டோம்னா காட்டுக்குள்ள போகும் போது உதவியா இருக்கும்னு சொன்னார். அத நம்பி(?) எல்லாரும் கார்ல இருந்து ஆளுக்கொண்ணா எடுத்துக்கிட்டாங்க.

டெரர் பாண்டியன் கார் ரேடியட்டரை எடுத்துக்கிட்டார். இம்சை அரசன் பாபு  கார் சீட்டை கழட்டிக்கிட்டார்.  சிரிப்பு போலீசு ரமேஷ்  கார் கதவை கழட்டி வெச்சிக்கிட்டார். மாலுமி உடனே கார் சாவிய எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டார். எல்லாருக்குமே குழப்பம், ஒவ்வொருத்தரும் ஏன் அந்த பொருளை எடுத்தாங்கன்னு. அதுனால காரணம் சொல்லிக்கிட்டாங்க. 

டெரர் பாண்டியன் : காட்டுக்குள்ள போகும் போது தாகம் எடுத்தா ரேடியேட்டர்ல இருந்து எடுத்து குடிச்சுக்குவேன்....

இம்சை அரசன் பாபு:  நான், டயர்டாகிட்டா இந்த கார் சீட்டை கீழ போட்டு உக்காந்துக்குவேன்....

சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்...........

மாலுமி: நடந்து போயிட்டு இருக்கும் போது கார் சாவிய வெச்சி ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டே வருவேன், திடீர்னு ஸ்டார்ட் ஆகிட்டா நடக்க வேண்டியதில்லைல....?


********




டெரரு ஒரு சைக்கிள்ல போயிட்டு இருந்தாரு, அப்போ எதிர்த்தாப்ல ரமேஷ் வந்தார், 


ரமேஷ்: டேய் சைக்கிள் நல்லாருக்கே, இது எப்படி உனக்கு கெடச்சது?


டெரர்: ஒரு அழகான பொண்ணு, இந்த சைக்கிள்ல வந்துட்டு இருந்தா.. என்ன பார்த்து டபுள்ஸ் வர்ரியான்னு கூப்புட்டா, நானும் சேர்ந்து போனேன். தனியா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயி திடீர்னு ட்ரெஸ்ஸ அவுத்து போட்டுட்டா.... 

ரமேஷ்: அய்யய்யோ... அப்புறம்.......?

டெரர்: நான் பயந்துட்டேன், அத பாத்துட்டு அவ சொன்னா உனக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோன்னு....

ரமேஷ்: நீ என்ன பண்ணே.....?

டெரர்: நான் உடனே நல்லதா போச்சுன்னு இந்த சைக்கிளை எடுத்துட்டு வந்துட்டேன்... எப்பூடி?

ரமேஷ்: ஆமாமா.... அவ ட்ரெஸ்ஸு உனக்கு சைஸ் சரியா வராதுல... நீ சரியாத்தான் பண்ணி இருக்கே.....!


********



ஒரு வக்கீலு, கொலக்கேசு ஒண்ணுல வாதாடிட்டு இருந்தாரு. கேசு முடிஞ்சு தீர்ப்பு சொல்ற டைம் வந்துடுச்சு. கேஸ் தோத்து போற நெலமை. சரி கடைசியா ஒரு முயற்சி பண்ணி பார்க்கலாம்னு தன்னோட பிரம்மாஸ்திரத்த எடுத்து விட்டார்.

வக்கீல்: கனம் கோர்ட்டார் அவர்களே, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இன்னும் 5 நிமிடத்திற்குள் கோர்ட்டிற்கு வந்து ஆஜராகுவார்....!

எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, சைலண்ட்டா 5 நிமிசம் வெயிட் பண்ணாங்க, யாரும் வரலை. 

ஜட்ஜ்: என்ன நீங்க சொன்ன மாதிரி யாரும் வரலையே?

வக்கீல்: ஆனா நான் அப்படி சொன்னதும் நீங்க எல்லாரும் கோர்ட் வாசலையே பாத்துட்டு எதிர்பார்த்து காத்திருந்திங்க, சோ அவன் உயிரோட வர வாய்ப்பிருக்குன்னு நம்பி இருக்கீங்க, அப்படின்னா அந்த கொலை மேல உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு, அந்த சந்தேகத்தின் அடிப்படையில் என் கட்சிக்காரரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை கேட்ட உடனே எல்லாரும் அதிர்ச்சியாகிட்டாங்க. ஜட்ஜ் சிரிச்சிக்கிட்டே தீர்ப்பை வாசிச்சார். கொலை நிரூபணம் ஆகி, ஆயுள் தண்டனைன்னு தீர்ப்பாகிடுச்சு. உடனே நம்ம வக்கீல், அது எப்படின்னு மறுபடியும் வாதாடுனார்.

ஜட்ஜ்: நீங்க அவர் உயிரோட வருவார்னு சொன்னதும் நாங்க எல்லாரும் எதிர்பார்ப்போட வாசலை பார்த்துட்டு இருந்தது உண்மைதான், ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......?

வக்கீல்:???!!!!



நன்றி: கூகிள் இமேஜஸ், ஜோக்குகள் மெயிலில் வந்தவையே

!

Tuesday, September 4, 2012

நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!




எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும் அப்படி கருத்தா பேசுவாப்ல. அவனுக்கும் (?) ஒருநாள் கல்யாணம் நிச்சயமாகுச்சு. ஊருக்கு போய்ட்டு வந்தான். வரும் போது பொண்ணோட செல்நம்பரையும் வாங்கிட்டு வந்துட்டான். அங்க ஆரம்பிச்சது பிரச்சன. அட அதுல எனக்கென்ன பிரச்சனைங்கிறீங்களா? அத ஏன் கேட்கிறீங்க, நைட்டு விடிய விடிய எஸ்.எம்.எஸ் வந்துட்டே இருக்கும், இவரும் அனுப்பிக்கிட்டே இருப்பாரு. ராத்திரி பூரா செல்லு க்கீ.. கீன்னு கத்தி கதறிட்டே கெடக்கும். டேய் சைலண்ட்ல வைடானா கேட்கவே மாட்டான். ஒருவாட்டி சத்தமில்லாம ஆள் கக்கூஸ்ல இருக்கற நேரமா பாத்து நான் அதை சைலண்ட்ல போட்டு வெச்சேன். கொஞ்ச நேரம்தான். பழையபடி ஆரம்பிச்சிட்டான். அந்த நாதாரிக்கு செல் கத்துறது அந்தப்புள்ள பேசுற மாதிரியே இருந்திருக்கும் போல. டெய்லி நைட்டு செல்போன் சிணுங்கிட்டே இருக்கறதும், நான் திட்டுறதுமா இருந்து இருந்து எனக்கும் அலுத்து போச்சு, நைட்டு தூக்கமும் போச்சு. 



இப்படி போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் நைட்டு என் மொபைலுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து மெசேஜ், ஹாய்னு... நானும் பதிலுக்கு ஹாய்னு அனுப்பிச்சேன். உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். பக்கத்துல திரும்பி பாத்தா நம்ம ரூம்மேட்டு அவரு வுடுப்பீக்கு தாறுமாறா மெசேஜ் டைப் பண்ணிட்டு இருந்தாரு. தக்காளி எப்படியும் இவன் இன்னிக்கும் நம்மளை தூங்க விடப்போறதில்ல,  அதுனால அந்த புது நம்பர்கூட கொஞ்ச நேரம் வெளையாடுவோம்னு  நான் 24 வயசு பொண்ணு, டெல்லில ஒரு ஸ்டார் ஹோட்டல் ரிசப்சனிஸ்டா இருக்கேன், இப்போ நைட் டூட்டில இருக்கேன்னு ரிப்ளை போட்டேன்.






அந்த மெசேஜ பாத்துட்டு பய ஆடிப் போயிட்டான், ஆஹா சூப்பர் டிக்கட்டு ஒண்ணு சிக்கிருச்சுன்னு மளமளமளன்னு மெசேஜா அனுப்ப ஆரம்பிச்சான். சமாளிக்கவே முடியல. கொஞ்ச நேரத்துல கடுப்பாகிடுச்சு, இவனை என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒரு ஐடியா வந்துச்சு. உடனே செல்ல எடுத்து இது என்னோட ஆஃபீஸ் நம்பரு, அதுனால என்னோட பர்சனல் நம்பருக்கு மெசேஜ் பண்ணுன்னு நம்ம ரூம்மேட் நம்பரை அந்த புது நம்பர் பார்ட்டிக்கு அனுப்பிட்டேன்....... அப்புறம் பார்க்கனுமே நம்ம ரூம்மேட்ட..... ஏற்கனவே வுடுப்பிகிட்ட இருந்து நிக்காம மெசேஜா வந்து கொட்டிட்டு இருந்துச்சு, இப்போ நான் இவனையும் வேற கோர்த்துவிட்டுட்டேனா....... பயலுக்கு ரெண்டு கையும் பத்தல. கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். அப்பாடான்னு நானும் நிம்மதியா தூங்குனேன். 




அடுத்த நாள் காலைல அவன் மறுபடியும் செல்ல ஆன் பண்ணி 1 நிமிசம்தான், அந்த புதுநம்பர் பார்ட்டி மறுபடி மெசேஜ் கொடுக்க ஆரம்பிச்சிட்டான். ரொம்ப ஆபாசமா மெசேஜ் அனுப்பி இருப்பான் போல, இவனால தாங்க முடியல. செல்ல ஆஃப் பண்ணவும் விரும்பல (வுடுப்பி மெசேஜோ, காலோ பண்ணிட்டா?), மெசேஜை படிக்கவும் முடியாம திருதிருன்னு முழிச்சிட்டு உக்காந்திருந்தான். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி என்னடா ஆச்சு, ஒரு மாதிரி உக்காந்திருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டு ஒருமாதிரியா என்னைய பார்த்தான், நான் சரி சரி சீக்கிரம் ஆபீசுக்கு போறவழிய பாருன்னு சொல்லிட்டு சட்டுன்னு எஸ்கேப் ஆகிட்டேன்.

அன்னிக்கு பூரா அவனுக்கு அந்த புதுநம்பர்ல இருந்து கன்னாபின்னான்னு மெசேஜ் வந்திருக்கு. எனக்கே பாவமாத்தான் இருந்துச்சு. கடைசில அந்த மெசேஜ் தொந்தரவு தாங்க முடியாம ஒருவழியா அந்த புதுநம்பருக்கு போன் பண்ணி பேசிட்டான். அவன்கிட்ட வெவரமா நான் பொண்ணு இல்லை இனிமே இப்படி மெசேஜ் பண்ணப்படாதுன்னு கெஞ்சி இருக்கான். நல்லவேளையா அதுக்கப்புறம் அந்த மெசேஜ் வரலை. இவனும் விடியவிடிய மெசேஜ் பண்ற பழக்கத்தை விட்டுட்டான்........!

நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!

பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!

நன்றி: கூகிள் இமேஜஸ்

!